Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
ஜெயானந்தமூர்த்தியின் மலட்டு அரசியலை எல்லோரும் புரிந்து கொள்வர்: - கனடா நக்கீரன்!
[Monday, 2012-09-03 10:56:55]
News Service

வெளிநாட்டில் இருந்து கொண்டு தேர்தல் காலத்தில் அறிக்கைகளை விட்டு தனது இருப்பை விளம்பரப்படுத்துவது ஜெயானந்தமூர்த்திக்கு வாடிக்கையாகப் போய்விட்டது. அவரது அறிக்கை அவர் இப்போதும் ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

  

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தவன் என்கிறார். யார் இல்லை என்றது? அதற்காக ததேகூ எனக்குத்தான் சொந்தம் என்று இலண்டனில் இருந்து கொண்டு அறிக்கை அரசியல் நடத்தும் ஜெயானந்தமூர்த்தி சொல்லலாமா? இது வீடு கட்டின கொத்தனார் தனக்குத்தான் வீடு சொந்தம் என்று சொன்னது மாதிரி இல்லையா?

இந்த அறிக்கையை வாசிப்பவர்கள் ஜெயானந்தமூர்த்தியின் மலட்டு அரசியலைப் புரிந்து கொள்வார்கள்.

தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு புறக்கணித்தால்தான் தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையிலேயே உறுதியுடன் உள்ளனர் என்பதைத் தெளிவுபடுத்த முடியும் என்றும் உளறுகிறார். 2008 இல் நடந்த மாகாணசபைத் தேர்தலை ததேகூ பாதுகாப்புக் காரணமாகப் புறக்கணித்த படியால்தான் பிள்ளையான் முதலமைச்சர் ஆனார் என்ற எளிய அரசியல் உண்மை கூடவா இவருக்குப் புரிய மாட்டேன் என்கிறது? இது குழப்ப அரசியலின் உச்ச கட்டம் இல்லையா?

1994 ஆம் ஆண்டு வி.புலிகள் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்த போதுதான் டக்லஸ் தேவானந்தா 12,000 வாக்குகளோடு 9 இடங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் போக நேர்ந்தது. அமைச்சராகவும் முடிந்தது. பதினேழு ஆண்டுகள் கழித்தும் சிங்கள எசமானர்களுக்கு சேவகம் பார்க்கவும் முடிந்தது. இதைத்தான் ஜெயானந்தமூர்த்தி விரும்புகிறாரா?

2005 இல் நடந்த ஆட்சித் தலைவர் தேர்தலை வி.புலிகள் உத்தியோகப் பற்றற்ற முறையில் புறக்கணித்தார்கள். வேண்டும் என்று அவர்கள் பிழைவிடவில்லை. ஆனால் போட்ட கணக்குப் பிழைத்துவிட்டது. விளைவு? மகிந்த இராசபக்சே வெறுமனே 180,786 வாக்குகளால் வெற்றி பெற்றார். ஆட்சிக் கட்டில் ஏறிய வி.புலிகளையும் ஒழித்துக் கட்டினார். அதன்பின் நடந்த ஆட்சித்தலைவர் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத்தேர்தல் என்று எல்லாத் தேர்தல்களிலும் வெற்றிபெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு இன்று கோலோச்சுகிறார்.

சிங்களவர்கள் அவரை நவீன துட்டகைமுனு எனக் கொண்டாடுகிறார்கள். அரசியலில் ஒன்று ஈணத் தெரிய வேண்டும் அல்லது நக்கத் தெரிய வேண்டும். இரண்டும் தெரியாவிட்டால் யாருக்கு என்ன பயன்? இப்படித்தான் யாழ்ப்பாண மாநகரசபை, ஆட்சித்தலைவர் தேர்தல் (2010 சனவரி) களைப் புறக்கணிக்குமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பரப்புரை செய்தார். பின் அவரே நாடாளுமன்றத் தேர்தலில் (2010 ஏப்ரில்) போட்டியிட்டு கட்டுக்காசையும் இழந்தார். 2004 பொதுத் தேர்தலில் கிடைத்த விருப்பு வாக்குகள் மாயமாய் மறைந்துவிட்டன.

இப்போது நடக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கஜேந்திரகுமாரோ அவரது ததேமமு கேட்கவில்லை. அந்தளவில் அவருக்கு அரசியல் ஞானம் பிறந்திருக்கிறது. ஜெயானந்தமூர்த்திதான் எப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் பாடம் படிக்கமாட்டேன் நான் மக்கு மாணவன் என அடம் பிடிக்கிறார். பஞ்சபாண்டவர் எத்தனை பேர் என்று கேட்டால் கட்டில்கால் போல் நான்கு என்கிறார்.

அது சரி. மட்டக்களப்பு மக்கள் என்று ஒருமுறைக்குப் பலமுறை சொல்கிறாரே? திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களை ஏன் விட்டுவிட்டார்? அவை அவரது சொந்த மாவட்டம் அல்ல என்பதாலா?

புலம்பெயர் நாடுகளில் உள்ள ஒருசிலர் (முன்ளாள் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள்) கூட்டமைப்புக் கிளைகளை அமைத்துக் கொண்டு கூட்டமைப்புக்கு புலம் பெயர் தமிழ் மக்கள் ஆதரவு எனக் கூறிவருவதும் அறிக்கைகள் விடுவதையும், கூட்டங்கள் நடத்துவதும் மாகாணசபைத் தேர்தலுக்கு கூட்டமைப்பு செல்வதே சிறந்த சிந்தனை என்று கூறுவதையும் எமது தாயக மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்று கடிக்கிறார். அவர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் முன்னாளில் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் பின்னாளில் வி.புலிகள் ஆதரவாளர்கள். சரி அதையாவது அவர்கள் செய்கிறார்கள். ஜெயனந்தமூர்த்தி என்ன செய்கிறார்? தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் இலண்டனில் அமைப்பை நிறுவி தனித் தமிழீழத்துக்குப் போராடுகிறாரா?

ஏற்கனவே சொல்லியது போல ஒன்றில் ஈணத் தெரிய வேண்டும் இல்லையேல் நக்கவாவது தெரிய வேண்டும். இரண்டும் தெரியாவிட்டா அது சுத்த 'வேஸ்ட்! மாகாணசபை ஒன்றுக்கும் உதவாது என்றால் ஒற்றையாட்சி சிறீலங்கா நாடாளுமன்றமும் உதவாதுதான். 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் ததேகூ உறுப்பினர்கள் தொகை 13 மட்டுமே! எமது மக்கள் எமது மக்கள் எனச் சொல்லுகிறாரே அந்த எமது மக்கள் யார்?' நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியனேந்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், பொன் செல்வராசா அப்படிச் சொன்னால் கூட அதில் பொருள் இருக்கிறது. காரணம் அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள்! ஜெயானந்தமூர்த்தி எந்த மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்று சொல்ல முடியுமா?

தேசியத்தலைவர் படத்தை எரித்த கூட்டத்துக்கு தலைமை தாங்கி புகழ் பெற்ற ஜெயானந்தமூர்த்தி இலண்டனில் பத்திரமாக இருந்து கொண்டு எனக்குத்தான் எல்லாம் தெரியும், நான்தான் அரசியல் ஞானி, ததேகூ தலைவர்கள், ஆதரவாளர்கள் அறிவிலிகள் என அறிக்கை விடுவது அவருக்கு 'ஓவராக' த் தெரியவில்லையா? என் போன்றோருக்கு அப்படித்தான் தெரிகிறது!

புலத்தில் பத்திரமாக இருந்து கொண்டு அய்யகோ இந்த ததேகூ தனிநாட்டுக் கோரிக்கையை விட்டுவிட்டது அடுக்குமா இந்த அநினயாயம் என்று புலம்புகிறா ஜெயானந்தமூர்த்தி இலங்கை சென்று தமிழீழக் கோரிக்கையை முன்வைக்க அணியமாக இருக்கிறாரா?

முடிவாக சென்ற காலம் போல் அரசியல் செய்ய முடியாது. நாம் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறோம். எமது மண் பறிக்கப்படுகிறது. வடக்கும் கிழக்கும் இராணுவமயப்படுத்தப் படுகிறது. பவுத்த மயப்படுத்தப்படுகிறது. சிங்கள மயப்படுத்தப்படுத்தப் படுகிறது. இன்று எமது கையில் வாக்கு என்ற ஒரே ஆயுதம்தான் இருக்கிறது. அதனைப் பயன்படுத்த வேண்டும். அற்பசொற்ப அதிகார மையங்களை நாம் கைப்பற்ற வேண்டும். பிரதேச சபைகளை ததேகூ முற்றாக கைப்பற்றியிருப்பது எமக்குப் பலமா? இல்லையா?

மாகாணசபை நோஞ்சானாக இருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் துரும்பும் பல்லுக்குத்த உதவும். பற்றையில் இருக்கிற இரண்டு பறவைகளைவிட கையில் இருக்கிற ஒரு பறவை மேலானது. மகிந்த இராசபக்சே காணி அதிகாரத்தை மாகாணசபைகளிடம் இருந்து புடுங்க முனைந்தபோது வட மத்திய மாகாணம்தான் மறுத்தது. இல்லாவிட்டால் தனியார் காணிகள் கூட திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் பொருளாதார, சமூக, வரலாறு, தொலியல், சுற்றுச்சூழல் மற்றும் சமய நோக்கங்களுக்கு (The legislation gives the central government to take over lands within municipal and urban areas for economic, social, historical, archaeological, environmental and religious purposes) அரசு கேட்டுக் கேள்வியின்றி எடுத்திருக்க வழிபிறந்திருக்கும்.

இதற்கு மேல் ஜெயானந்தமூர்த்தியின் சொத்தை வாதங்களுக்கு பதில் கூறுவது நேர மெனக்கேடு என நினைக்கிறேன்.

-நக்கீரன்-

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கான நான்காம் ஆண்டு நினைவேந்தல், மயிலாடுதுறை - உலக தமிழர் பாதுகாப்பு இயக்கம்!Top News
[Monday, 2013-05-20 21:10:53]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுன்தினம் மயிலாடு துறையில் இடம்பெற்றது (18 05 2013). இதில் ஏராளமான தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டதோடு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலிகளையும் செலுத்தியுள்ளனர்.



நெதர்லாந் நாட்டில் இடம்பெற்ற தமிழினவழிப்பின் 4ம் அண்டு நினைவு நாள். Top News
[Monday, 2013-05-20 20:22:03]

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின் உச்சக்கட்டமே 18. வைகாசி 2009ம் ஆண்டாகும். வைகாசி 18ம் திகதியை உலகெங்கும் வாழ்கின்ற தமிழீழ உறவுகள் ஓர் துயரநாளாகவும் தமிழீழ மண்ணை மீட்டெடுக்க வேண்டுமென உறுதியெடுக்கின்ற நாளாகவும் எழுச்சிப்பூர்வமாக நினைவுகூர்ந்து வருகின்றார்கள்.



லயன் எயார் விமானம் தொடர்பில் கிளம்பியது புதிய சந்தேகம் - சுட்டு வீழ்த்தப்பட்டதா? கடத்தப்பட்டதா என குழப்பம்!
[Monday, 2013-05-20 19:51:45]

இரணைதீவுக் கடலில் 1998ம் ஆண்டில் வீழ்ந்த லயன் எயர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது கடத்தப்பட்டதா என்ற சந்தேகம், அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இரணைதீவுக் கடலில் இந்த மாதம் 4ம் நாள் தீவிரவாத புலனாய்வுப் பிரிவின் வழிகாட்டலில், லயன் எயர் விமானத்தின் சிதைவுகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டனர். கடலில் 25 அடி ஆழத்தில் இருந்த சுழியோடிகளால் விமானத்தின் இரண்டு இறக்கைகள், மூன்று சக்கரங்கள் உள்ளிட்ட பல பாகங்கள் மீட்கப்பட்டன. இரண்டு நாட்கள் நீடித்த இந்த மீட்புப் பணியின் போது, பெண் ஒருவரின் தேசிய அடையாள அட்டை, செயற்கைப் பல், மற்றும் மனித எலும்புகள் சிலவும் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது.



வேலைநிறுத்த போராட்டத்தின் போது ஏதாவது ஒரு காரியாலயம் மூடப்பட்டால் நான் பதவி துறப்பேன்: பிரதியமைச்சர்
[Monday, 2013-05-20 19:04:39]

மின்சார கட்டண அதிகரிப்பிற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்த போராட்டத்தின் போது ஏதாவது ஒரு காரியாலயம் மூடப்பட்டால் நான் பதவிதுறப்பேன் என்று பிரதியமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரசாங்க காரியாலயங்கள் அல்லது எந்தவொரு தனியார் காரியாலயமும் நாளை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டால் நான் பதவிதுறப்பேன். என்று பெருந்தோட்ட கைத்தொழில் பிரதியமைச்சர் ஏர்ல் குணசேகர தெரிவித்துள்ளார். கம்பளை ரத்னாசார விஹாரையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு சவால் விடுத்தார்.



ஆட்கொணர்வு மனுவை மீளப்பெறுமாறு காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு படையினர் அச்சுறுத்தல்!
[Monday, 2013-05-20 19:00:15]

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெறுமாறு மனுதாரர்களுக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் 2009 ம் ஆண்டு மே 18ம் திகதி இராணுவத்தினரின் அறிவித்தலுக்கு அமைய சரணடைந்திருந்தனர். இதன் பின்னர் சரணடைந்தவர்கள் அவர்களது உறவினர்களின் கண்ணெதிரே படையினரால் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். எனினும் அதன் பின்னர் அவர்களது நிலை என்னவென்று தெரியா நிலையில் அவர்களது உறவினர்கள் உள்ளனர்.



மக்கள் எழுச்சியைக் கண்டு ராஜபக்ஷ ரெஜிமென்ட் பயந்துவிட்டது - ரணில்!
[Monday, 2013-05-20 18:42:18]

ராஜபக்ஷ ரெஜிமென்ட் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்துள்ள நிலையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய தொழிற்சங்க போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தற்போதைக்கு வழங்கப்படத் தேவையில்லை - டக்ளஸ்!
[Monday, 2013-05-20 18:27:33]

தற்போதைக்கு மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் இரண்டு பிரதான இன சமூகங்களுக்கு இடையில் சரியான புரிந்துணர்வு எட்டப்படும் வரையில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்குவது தொடர்பிலான தீர்மானத்தை சற்றே ஒத்தி வைக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். வட மாகாணசபைக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சிங்கள மக்கள் அது குறித்து கவனம் செலுத்துவர், இந்த அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் தமிழ் மக்கள் அது குறித்து கவனம் செலுத்துவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



மீண்டும் த.தே.ம.மு உறுப்பினர்களை விசாரணைக்கு அழைத்தது குற்றத்தடுப்பு பொலிஸ்!
[Monday, 2013-05-20 18:17:34]

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொதுச் செயலாளர் உட் பட்ட 4பேர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று மீளவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் யாழ்.வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 18ம் திகதி மன்னாரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சமயம் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் இளைஞரணி தலைவர் எஸ்.சத்தியசீலன் உட்பட 15பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் நள்ளிரவு விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் முன்னணியின் உபதலைவர் சி.கஜேந்திரகுமார், மற்றும் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.வசந்தரூபன் ஆகியோர் இன்று காலை 9மணிக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.



இராணுவத்தினால் காணி சுவீகரிப்பு - தடுக்குமாறு நாமல் எம்.பிக்கு கடிதம்!
[Monday, 2013-05-20 18:13:18]

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காணியினை அரசாங்க அதிபர் குழுவினர் சுவீகரிக்க முயற்சிப்பதாகவும் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சிசாலை ஊழியர்கள் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 12 ஏக்கர் காணியில், முதற்கட்டமாக வனவள திணைக்களத்திற்கும், சிறுவர் பூங்காவிற்கும், இராணுவத்தினரின் புனித பூமிக்குமாக எமது காணி சுவீகரிக்கப்பட்டது.



வடக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரவில்லை: தயா மாஸ்டர்
[Monday, 2013-05-20 17:51:40]

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எந்தவொரு கட்சியையும் அணுகவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு எந்தவொரு அரசியல் கட்சியிடமும் கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட தயா மாஸ்டர் சந்தர்ப்பம் கோரியதாகவும் அதனை நிராகரித்ததாகவும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார். எனினும், இவ்வாறான எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



வவுனியாவில் 7 வயதுச் சிறுமி மீது பாலியல் வல்லுறவு - நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டம்!Top News
[Monday, 2013-05-20 15:33:34]

வவுனியா நெடுங்கேணி சேனைப்பிலவில் 7 வயது சிறுமியொருவரைப் பாலியல் பலாத்காரம் செய்தவரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக்கோரி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பேரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் எதிராக நடத்தப்படுகின்ற சித்திரவதைகள் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றனர்.



பாராளுமன்றத்திற்கு செல்வது போன்று அடிக்கடி 4ம் மாடிக்கும் செல்கின்றோம் - அரியநேந்திரன் எம்.பி!
[Monday, 2013-05-20 15:21:41]

எப்போதும் தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை கிடைக்கின்றதோ அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பிரார்த்தனை செய்யும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கணடவாறு கூறினார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,



கோவையில் நடைபெற்ற மே 18 போர்க்குற்றநாள் நிகழ்வில் பெருமளவு ஈழ விடுதலை ஆதரவாளா்கள் பங்கேற்ப்பு. Top News
[Monday, 2013-05-20 10:26:35]

கோவையில் நேற்றையதினம் (18 05 2013) முள்ளிவாய்க்கால் இனப்படுகொல போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவான தமிழீழ விடுதலை ஆதரவாளா்களும் செயற்ப்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.



ஜனாதிபதி மஹிந்த சீனாவுக்கு ஆறாவது தடவையாக விஜயம்!
[Monday, 2013-05-20 09:16:57]

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் 22ம் நாள் தொடக்கம் 26ம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். எனினும் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர், சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் ஆறாவது பயணம் இதுவாகும். அண்மையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர், சிறிலங்கா அதிபர் நடத்தவுள்ள முதல் சந்திப்பு இதுவாகும்.



கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் நடைபெற்ற தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வு Top News
[Monday, 2013-05-20 09:15:07]

"ஈழத் தமிழ் மக்களுக்கான தீர்வு சுதந்திர இறைமை உடைய தமிழீழ அரசே"
- தமிழீழ சுதந்திர சாசன முரசறைவில் பிரதமர் உருத்திரகுமாரன் வலியுறுத்தினார்.

"தமிழீழ மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி அமைய விருக்கும் தமிழீழ அரசு ஜனநாயக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். சுதந்திர இறைமை உடைய அரசே தமிழ் மக்களுக்கு அவசியம். மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு சட்டமியற்றி, அதனை அமுல்படுத்தும் உரிமை இருக்கும். சட்டத்தின்முன் தமிழீழ மக்கள் அனைவருமே சரிசமமாக நடாத்தப்படுவார்கள். தமிழீழ அரசாங்கம் மதசார்பற்றதாக இருக்கும். தமிழ், முஸ்லீம் மக்களது தனித்துவம் பேணப்படும்.



கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் இம்மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம்: - சிவாஜிலிங்கம்
[Monday, 2013-05-20 09:12:26]

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. இதற்கான பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ரெலோவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.



கனடாவின் நகர்வுகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என்கிறது இலங்கை அரசு!
[Monday, 2013-05-20 09:11:55]

கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் கனடா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என்பது குறித்து கவனிக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடத்தப்படுவது குறித்து கனடாவும் பஹாமாஸூம் அண்மையில் நடாத்திய பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டின் உண்மையான நிலைமைகள் குறித்து அந்தந்த நாடுகளுக்கு தெளிவுபடுத்துமாறு வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.



அரசின் யுத்த வெற்றிவிழா ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இரத்தக் கண்ணீரால் எழுதப்பட்ட ஒரு துக்க தினம். - ஜனா
[Monday, 2013-05-20 09:06:05]

யுத்த வெற்றிவிழா இலங்கை அரசைப் பொறுத்தவரை கொண்டாட்ட நிகழ்வாக இருக்கும். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இரத்தக் கண்ணீரால் எழுத்தப்பட்ட ஒரு துக்க தினம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவிக்கிறார். யுத்த வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறுவது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நோர்வே அரசு அதிர்ச்சி!
[Monday, 2013-05-20 08:52:13]

இலங்கை நீதிமன்றின் தீர்ப்புகள் தமக்கு அதிர்ச்சியளிப்பதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என கொழும்பு நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது. கொழும்பு மேலதிக நீதவான் அமாலி ரணவீர இந்த உத்தரவினை பிறப்பித்திருந்தார். முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமான சகவாழ்வு மன்றத்தின் தலைவர் குமார் ரூபசிங்கவினால் நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உறுதிமொழி அளிக்கப்பட்டதனைப் போன்று நிதி உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நோர்வேயின் முன்னாள் தூதுவர் ஹில்டே ஹரால்ஸ்டட் மற்றும் இரண்டு அதிகாரிகள் 98.5 மில்லியன் ரூபாவினை வழங்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



பௌத்த பிக்குகள் பொறுமையுடனும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டும் - பிரதமர்
[Monday, 2013-05-20 08:39:20]

பௌத்த பிக்குகள் மிகவும் பொறுமையுடன் செயற்பட வேண்டுமென பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். சிலர் வேற்று மதங்களுடன் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். இதனால் நாட்டின் பெரும்பான்மை இனத்திற்கு அதிக அழிவு ஏற்படும். இதனை பௌத்த மாநாயக்கத் தேரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பௌத்த மதத் தலைவர்கள் பொறுமையுடனும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டும். மக்களின் மனதுகளை வென்றெடுக்கக் கூடிய மதத் தலைவர்கள் இல்லையென்றால், எத்தனை பெரிய விஹாரைகள் அமைத்தாலும் அதில் பயன் கிடையாது என பிரதமர் தெரிவித்துள்ளார். களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
INNSYS-20120930
RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
NIRO-DANCE-100213
Ramans2011
Canada Kanthasamy Kovil
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com