Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 21, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
லட்சுமிராய் நடித்த படங்களை விட அவரைப்பற்றிய கிசுகிசுக்கள் தான் அதிகம்.
[Friday, 2012-09-28 15:06:49]
News Service

லட்சுமிராய் சினிமாவில் பெரிய அளவிலான படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவரைப்பற்றிய வதந்திகள் பெரிய அளவில் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் எப்போதும் அவர் மார்க்கெட்டில் பிசியாக இருப்பது போன்றே தெரியும்.

  

ஆனால் தன்னைப்பற்றிய இல்லாததையும், பொல்லாததையும் பரப்பி விடுகிறார்கள் என்று சிலர் மீது அவர் குற்றம் சாட்டுகிறார். அதன் முதல்கட்டமாக தன்னைச்சுற்றியிருந்த தனது அதிருப்தியாளர்கள் சிலரை தற்போது களை எடுத்துள்ளாராம். உதவியாளர்கள் என்று சொல்லும் இவர்கள்தான் குறித்த நாளில் லட்சுமிராய் சம்பளம் தரவில்லை என்றால் அவரைப்பற்றி தவறான செய்திகளை பரப்பி விடுபவர்களாம். இப்போது தனது நலம் விரும்பிகளையே தன்னுடன் வைத்திருக்கும் லட்சுமிராய் இனிமேல் என்னைப்பற்றி வதந்திகள் வர வாய்ப்பில்லை என்கிறார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

அஜீத் - தமன்னா நடிக்கும் படத்தில் கானா பாலாவின் பாடல்
[Tuesday, 2013-05-21 18:02:41]

நடுக்கடலில கப்பலை இறங்கி தள்ள முடியுமா? என்று அட்டகத்தி படத்தில் பிரபலமடைந்த கானா பாலா தொடர்ந்து பல படங்களில் பாடல்களை எழுதி பாடி வருகிறார். தற்போது இவர் பாடிய உதயம் என்.ஹெச் 4, சூதுகவ்வும் ஆகிய படங்களின் பாடல்களும் ஹிட் ஆகியுள்ளன. இந்த நிலையில் அஜீத் நடிக்கும் படத்தில் கானா பாலா பாடல் பாடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் - தமன்னா நடிக்கும் படத்தில் தன்னுடைய டிரேட் மார்க் பாடலை கானா பாலா பாடப்போகிறாராம். 'தல' படத்தில் பாடவேண்டும் என்பது தன்னுடைய கனவு அது இப்போது நிறைவேறப்போகிறது என்று மகிழும் பாலா அவரது ஸ்டைலுக்கு ஏற்ப பாடல்களை எழுது பாடுவேன் என்கிறார்.



தெனாலிராமனின் கதையில் உருவாகும் படத்தில் வடிவேலுவிற்கு ஜோடியான மீனாட்சி
[Tuesday, 2013-05-21 17:59:15]

இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிக்கும் படம் தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும். இப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கிறார் மீனாட்சி தீக்ஷித். கிருஷ்ணதேவராயர் அரசவையில் இருந்த மதியூகியும் மந்திரியுமான தெனாலிராமனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் இது. இப்படத்திற்கு கஜபுஜ புஜகஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என தலைப்பு வைத்துள்ளனர். இதற்காக வடபழனி ஸ்டூடியோக்களில் பல லட்சம் செலவில் மன்னர் காலத்து அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். இதில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க முதலில் பார்வதி ஓமன குட்டனிடம் பேசினார்கள். அவருக்கு ரூ.70 லட்சம் வரை சம்பளம் தர முன்வந்ததாக கூறப்பட்டது. ஆனால் வடிவேலு ஜோடியாக நடிக்க விருப்பமில்லை என்று முதலில் கூறிய பார்வதி, பின்னர் 1.5 கோடி வரை சம்பம் கேட்டாராம். இதையடுத்து தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துள்ள சினேகா உல்லலை அணுகினர். அவரும் வடிவேலுவுடன் நடிக்க விரும்பவில்லை என கூறிவிடவே, இறுதியாக நடிகை மீனாட்சி தீட்சித் தெரிவாகி உள்ளார். இவர் தெலுங்கு படங்களில் குத்தாட்டம் ஆடியுள்ளார். தமிழில் விஜயகாந்த் கடைசியாக இயக்கி நடித்த விருத்தகிரி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



விஜய்யின் பிறந்த நாளில் 'தலைவா' ஆடியோ வெளியீடு
[Tuesday, 2013-05-21 17:50:47]

'ஸ்ரீ மிஸ்ரி புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரித்து வரும் படம் 'தலைவா'. 'தாண்டவம்' படத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் விஜய், அமலா பால் ஜோடியாக நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யராஜ், சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்த நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22- ஆம் தேதி நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தினை கேரளாவில் வெளியிடும் உரிமையை 'தமீன்ஸ் ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் ஷிபு என்பவர் பெற்றுள்ளார்.



இளை‌ஞர்‌களை‌ கவரும்‌ சுவரா‌ஸ்‌யமா‌ன தி‌ரை‌க்‌கதை‌யில் உருவாகும் 'உன்‌ வருகை‌க்‌கா‌க லா‌லி‌""'
[Tuesday, 2013-05-21 17:42:40]

கொலிவுட்டில் நா‌ர்‌த்‌ ஈஸ்‌ட்‌ பி‌லி‌ம்‌ பே‌க்‌டரி‌ மற்‌றும்‌ ரங்‌கீ‌லா‌ எண்‌டர்‌பி‌ரை‌சஸ்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌த்‌துள்‌ள படம்‌ "உன்‌ வருகை‌க்‌கா‌க லா‌லி‌" '. பு‌துமுகம்‌ மெ‌ளரி‌யா‌, சோ‌னி‌யா‌ சூ‌ரி‌, ஜெ‌ய்‌லா‌னி‌, லக்‌ஷா‌ உட்‌பட பலர்‌ நடி‌க்‌கும்‌ இந்‌தப்‌ படத்‌தை ‌ரெ‌ங்‌கரா‌ஜன்‌ இயக்‌குகி‌றா‌ர்‌.. கதை‌, தி‌ரை‌க்‌கதை‌, வசனத்‌தை‌ பி‌.சி‌த்‌தி‌ரை‌ச்‌செ‌ல்‌வன்‌ எழுதி‌ உள்‌ளா‌ர்‌. கவி‌யரசு வை‌ரமுத்‌து, தா‌மரை‌ இருவரும்‌ பா‌டல்‌கள்‌ எழுத பி‌.சி‌.சி‌வன்‌ ஸ்ரீரா‌கவ்‌ இருவரும்‌ இசை‌யமை‌த்‌துள்‌ளனர்‌. கே‌.சி‌.ரவி‌தே‌வன்‌, ஜி‌.மதன்‌, ஐ.பி‌ரசா‌த்‌ ஆகி‌ய மூ‌வரும்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌க்‌கும்‌ இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ செ‌ன்‌னை‌யி‌ல்‌ தொ‌டங்‌கி‌ மலே‌சி‌யா‌வி‌ல்‌ இருபது நா‌ட்‌களும்‌, தெ‌ன்‌ கொ‌ரி‌யா‌வி‌ல்‌ பத்‌து நா‌ட்‌களும் நடை‌பெ‌ற்றது. இதன் படப்பிடிப்பு தற்‌போ‌து கே‌ரளா‌வி‌ல்‌ உள்‌ள ஆலப்‌பு‌ழா‌வி‌ல்‌ நடை‌பெ‌ற்‌று வருகி‌றது. ஆந்‌தி‌ரா‌வி‌ல்‌ உள்‌ள ரா‌மோ‌ஜி‌ரா‌வ்‌ பி‌லி‌ம்‌ சி‌ட்‌டி‌யி‌ல்‌ இறுதி‌கட்‌ட படப்‌பிடி‌ப்‌‌பு‌ நடை‌பெ‌ற உள்‌ளது.



"ஹாய் பேஸ்புக்கை லாக்கின் பண்ணு"... - என பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்
[Tuesday, 2013-05-21 17:34:56]

எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் சர்வானந்த். அதையடுத்து, தமிழில் இருந்து 50க்கும் மேற்பட்ட கதைகளை கேட்டும், எந்த கதையும் தனக்கு பிடிக்கவில்லை என்று மறுத்து வந்தவர், இப்போது ஜேகே என்னும நண்பனின் வாழ்க்கை என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் இப்போது படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. இப்படத்தில் கணினி மூலம் காதல் செய்யும் விதத்தில் ஒரு பாடலை படமாக்கியுள்ளார்களாம். ஹாய் பேஸ்புக்கை லாக்கின் பண்ணு என்று தொடங்கும அந்த பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், மேகா இருவரும் பாடியுள்ளார்களாம். 25 லட்சம் ரூபாய் பொருட்செலவில் உருவாகியுள்ள அந்த பாடல் காட்சியில் சர்வானந்துடன் அவானா, மேக்னா என்ற இரு மும்பை மாடல் அழகிகள் நடனமாடியுள்ளார்களாம். பேஸ்புக்கிலேயே சதா கடலை போடும் இன்றைய இளைஞர், இளைஞிகளின் மனநிலையை பதிவு செய்யும் விதமாக இப்பாடல் உருவாகியுள்ளதாம்.



சினிமாவை விட சைடு பிஸ்னஸில் அதிகம் சம்பாதிக்கும் சோனியா அகர்வால்
[Tuesday, 2013-05-21 17:27:50]

டைரக்டர் செல்வராகவனால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர் சோனியா அகர்வால். அதையடுத்து இவர்கள் இருவரும காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தனர். அதையடுத்து செல்வராகவன் மறுமணம் செய்து கொண்டபோதிலும், சோனியாஅகர்வால் அந்த மாதிரி துணையை தேடிக்கொள்ளவில்லை. மீண்டும் ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரியாகி தற்போது பரவலாக நடித்துக்கொண்டிருக்கிறார். பாலக்காட்டு மாதவன் என்ற படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார் சோனியாஅகர்வால். இந்த நிலையில், சினிமாவை மட்டுமே அவர் முழுசாக நம்பிக்கொண்டிருக்கவில்லை. தனது தம்பியைக்கொண்டு இசைப்பள்ளி ஒன்றை நடத்தி வருபவர், அழகுக்கலை பயிற்சி பள்ளி உள்பட சில சுயதொழில்களிலும் ஈடுபட்டுள்ளாராம். அதனால், சினிமாவில் சம்பாதிப்பதைவிட சைடு பிஸ்னஸ்களில்தான் சோனியா அகர்வாலுக்கு தற்போது நல்ல வருமானமாம். இப்படியே தொடர்ந்து எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபர் பட்டியலில் சோனியா அகர்வால் இடம்பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள்.



சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் - பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்
[Tuesday, 2013-05-21 17:22:43]

மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். டி.எம்.சவுந்தரராஜன் சென்னை மந்தவெளியில் உள்ள அவருடைய வீட்டில் இருந்தபோது, கால் தவறி கீழே விழுந்தார். அதில், அவருடைய தலையில் அடிபட்டு காயம் அடைந்தார். அதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர், வீடு திரும்பிய அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிஎம்எஸ்-ஐ பரிசோதித்த டாக்டர்கள், அவருடைய கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தார்கள். இதற்காக அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். கடந்த 20 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்றபின், டி.எம்.சவுந்தரராஜன் குணம் அடைந்தார். இதையடுத்து அவர் வீடு திரும்பினார்.



நேரம் வரும் போது, திருமணச் செய்தியை நானே அறிவிப்பேன் - சமந்தா
[Monday, 2013-05-20 18:56:56]

கோலிவுட்டில் எங்கு பார்த்தாலும் சித்தார்த் - சமந்தா காதல் கிசிகிசுக்கள் தான். இந்நிலையில் மீண்டும் ஒரு பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக சமந்தா எந்த புது படங்களையும் ஒத்துக் கொள்ளாத காரணத்தால், விரைவில் திருமணம் நடக்க போவதாக பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து சமந்தா அளித்துள்ள ஒரு பேட்டியில், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., நாக சைதன்யா உள்ளிட்டோருடன் நடிக்கும் படங்கள் உட்பட மூன்று படங்கள் என் கைவசம் உள்ளன. தமிழில் லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளேன். இந்த படங்களை முடிப்பதற்கே, இன்னும் ஒரு ஆண்டு ஆகும். இதனால் தான், இந்தாண்டில் வேறு படங்களை ஒத்துக் கொள்ளவில்லை. இதற்கும், திருமணத்திற்கும் முடிச்சு போடுவது சரியல்ல. நேரம் வரும் போது, திருமணச் செய்தியை நானே அறிவிப்பேன் என டென்ஷனுடன் கூறுகிறார் சமந்தா.



சிம்புவை புரட்டிப்போட்ட ஹன்சிகா!
[Monday, 2013-05-20 18:50:42]

ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை பார்ப்பவர்களெல்லால் இது நம்ம சிம்புதானா..? என கேட்கும் அளவுக்கு சாந்தமாக மாறிவிட்டார். அலட்டல் இல்லை. தேவையில்லாமல் அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதில்லை. யாரையும் எடுத்தெரிந்து பேசுவது, கோபப்படுவது என எந்த விதமான பந்தாவும் இல்லாமல் தான் உண்டு நடிப்பு உண்டு என இருக்கிறார். அது மட்டுமில்லாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியானம், யோகா வகுப்புகளுக்கும் சென்று வருகிறாராம். இப்படி ஒரு மாற்றத்தை சிம்புவிடம் யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த அதிரடி மாற்றத்துக்கு ஹன்சிகாதான் காரணம் என்கின்றனர். அவர் அன்புடன் சொல்லும் அறிவுரை மனதுக்கு திருப்தியாக இருப்பதால், இனிமேலும் கூட ஹன்சிகாவின் ஆலோசணைப்படியே நடந்து கொள்வது என தீர்மானிமானித்திருக்கிறாராம் சிம்பு.



தானாகவே முன்வந்து குத்தாட்டம் போட்ட லட்சுமிராய்..
[Monday, 2013-05-20 18:42:11]

ஒன்பதுல குரு படத்திற்குப் பின்பு கோடம்பாக்கத்தை காலி செய்துவிட்டு பெங்களூர், மும்பை என்று இடம்பெயர்ந்து விட்டார் லட்சுமிராய். தற்போது சில கன்னட படங்களில் நடித்து வரும் லட்சுமிராய், இந்தி படங்களை கைப்பற்றவும் தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறாராம். ஏற்கனவே சில பாலிவுட் நடிகர்களின் நட்பு இருப்பதால், அவர்களின் சிபாரிசின் பேரிலும் புதிய வாய்ப்புகளுக்கு போராடிக் கொண்டிருக்கிறாராம். இந்நிலையில் தெலுங்கில் ரவிதேஜாவுக்கு ஜோடியாக அஞ்சலி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் பலுபு என்ற படத்தில் குத்து பாடல் ஒன்று வருகிறதாம்.



பட தலைப்பு பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்த அமீர்..
[Monday, 2013-05-20 18:36:03]

கதைக்கு யோசிக்கிறார்களோ இல்லையோ படத்தின் தலைப்புக்கு அதிகம் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் தமிழ்ப் பட இயக்குனர்கள். தினம் தினம் இப்பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் தவித்து வருகிறது இயக்குனர்கள் சங்கம். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, இயக்குனர் அமீர் தன் தலைமையி‌ன் கீழ், இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பிரபு சாலமன், பாலாஜி சக்திவேல், வெற்றிமாறன், எஸ்.எஸ்.ஸ்டேன்லி ஆகியோர் அடங்கிய ஒரு கமிட்டியை நியமித்து தீர்வு காண முன்வந்திருக்கிறார். இதற்கு முன் ஒவ்வொரு இயக்குனர்களும் ஒற்றை சாளர முறைப்படி பதிவு செய்யும் வகையில், மற்ற பதிவு அமைப்பான தயாரிப்பாளர்கள் சங்கம், கில்டு, சேம்பர் ஆகியவற்றுக்கு கடிதம் எழுதினார். அங்கிருந்து எந்த விதமான பதில் கடிதமும் வராத காரணத்தால் தான் இந்த கமிட்டியை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்கிறார் அமீர்.



பத்திரிகை நிரூபர்கள் மீது கடும் கடுப்பிலுள்ள ஸ்ருதிஹாசன்..!
[Monday, 2013-05-20 18:27:32]

தமிழ் பத்திரிகை நிரூபர்கள் எதாவது ஒரு நடிகையைப் பற்றி எழுதி நோகடிப்பது தான் அவர்களின் ஆசையோ என்னவோ என்று ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். எந்த நடிகையாக இருந்தாலும் அவர்களைப் பற்றிய விடயம் உண்மையா, பொய்யா என்று தெரியாமலையே இப்படியெல்லாம் செய்து வருகிறார்கள். சமீபத்தில் ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவுக்கு முழுக்குப் போட்டு விட்டார். இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டார் என்று எழுதுகிறார்கள். நான் எப்போதாவது அப்படி பேட்டி கொடுத்தேனா?... யூகம் அடிப்படையில் எழுதுவதை முதலில் நிறுத்துங்கள். 3 படத்திற்கு பின்பு தமிழில் நடிக்கவில்லை என்பது உண்மை தான். காரணம் தெலுங்கில் பலுபு, ஏவடு, ராமையா வஸ்தாவையா, ரேஸ்குராம் என நான்கு படங்களில் நடித்து வருகிறேன். அதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்திப் படங்களிலும் நடித்து வருகிறேன். அதனால் தான் தமிழ் படங்களுக்கு கவனம் செலுத்த முடியவில்லை என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார்.



சிவகார்த்திகேயன் ப்ரியா ஆனந்தை சேர்த்து வைத்த நிருபர்..!
[Monday, 2013-05-20 18:16:39]

"எதிர்நீச்சல்" படத்தில் இணைந்து நடித்த ப்ரியா ஆனந்துக்கும், சிவகார்த்திகேயனுக்கு ஏதோ ஊடல் போலும். "எதிர்நீச்சல்" படத்தின் சக்ஸஸ் மீட் வடபழனி பசுமை பூங்கா ஹோட்டலில் நடந்தபோது ப்ரியா ஆனந்த் மீடியாக்களுக்கு வெளியே பைட்ஸ் கொடுத்தால், சிவகார்த்திகேயன் உள்ளே இருந்தார், அவர் உள்ளே இருந்தால் இவர் வெளியே வந்து பேட்டி கொடுத்தார். ஆனால் "எதிர்நீச்சல்" படத்தின் மற்றொரு நாயகி நந்திதாவோ சிவகார்த்தியுடன் ஒட்டி உரசியபடி இருந்தார். எல்லோரும் மேடையில் வீற்றிருந்தபோதும் இதை கதை!



சந்தானத்துடன் டூயட் பாடும் சுனைனா..
[Monday, 2013-05-20 18:11:49]

சமீபகாலமாக பழைய படங்களின் தலைப்புகளை இப்போதைய படங்களுக்கு வைப்பதில் பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மதகஜராஜா படத்துக்கு எம்.ஜி.ஆர் என்றே சுருக்கமான டைட்டீலை வைத்தார் சுந்தர்.சி. எல்லாம் ஒரு பப்ளிசிட்டிக்காகத்தான். அதன்காரணமாகவே அந்த படத்தில் எம்.ஜி.ஆர் பற்றிய ஏதோ விசயங்கள் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நண்பன், பாகன் படங்களையடுத்து ஸ்ரீகாந்த் நடிக்கும் படத்திற்கு நம்பியார் என்று பெயர் வைத்துள்ளனர். மாஜி வில்லன் நம்பியாரின் பெயர் என்பதால், படத்திற்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என்று இப்படியொரு பெயரை வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த படத்தில் ஸ்ரீகாந்த் நாயகன் என்றபோதும், காமெடி வில்லனாக நடித்துள்ள சந்தானத்துக்குத்தான் இந்த நம்பியார் பெயராம். டைட்டீல் கேரக்டரில் தான் நடிப்பதால் அப்படத்தில் நடிக்க டபுள் ஓ.கே சொல்லிவிட்டாராம் அவர்.



தெனாலிராமனிற்காக பாடகர் அவதாரம் எடுத்த வடிவேலு!
[Monday, 2013-05-20 18:07:53]

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தெனாலிராமன் படத்தில் நடிகர் வடிவேலு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். கடந்த சட்டபை தேர்தல் பிரசாரத்தில் திமுக சார்பில் களமிறக்கப்பட்ட வடிவேலு, தேர்தலில் திமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இரண்டு ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு, இப்போது யுவராஜ் இயக்கும் கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் வடிவேலு தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இமான் இசையில் பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார். இந்த தகவலை இசையமைப்பாளர் இமானே தெரிவித்துள்ளார். இந்தப் படத்துடன் மேலும் 3 படங்களில் நடிக்க வடிவேலு தயாராகி வருகிறாராம்.



ஜில்லா படத்தில் தங்கை நிஷா அகர்வாலை களமிறக்கியுள்ள காஜல்..!
[Monday, 2013-05-20 18:00:53]

காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். விமல் நடித்த இஷ்டம் படத்தில் நாயகியாக நடித்தவர். முதல்படமே தோல்வி என்பதால் அதையடுத்து நிஷாவை கோடம்பாக்கம் கண்டுகொள்ளவில்லை. அதனால் தெலுங்குக்கு சென்று ஒரு படத்தில் நடித்தார். அந்த படமும் விசேஷமாக போகவில்லை. அதனால், தங்கையை எப்படியாவது ஆளாக்கி விட வேண்டும் என்ற வெறியில் திரியும் காஜல், இப்போது தமிழில் தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஜில்லா படத்தில் இறக்கி விட்டுள்ளார். ஆரம்பத்தில் என் தங்கை சிறிய வேடத்தில் நடித்தால் அவரது இமேஜ் போய் விடும் என்று தயங்கிய காஜல், இப்போது தங்கை நிஷாவை அப்படத்தில் நடிக்க வைத்துள்ளார். அதோடு, தற்போது மதுரையில் முகாமிட்டுள்ள அவர், தான் நடிக்கிற காட்சிகளைப்பார்த்து தங்கை பயிற்சி பெற வேண்டும் என்பதற்காக அவரையும் அழைத்து சென்றுள்ளாராம்.



மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ள விஜய்..
[Monday, 2013-05-20 17:53:44]

கடந்தாண்டு வெளிவந்த படங்களில் பாக்ஸ்ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்த படங்களில், முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படமும் ஒன்று. விஜய்க்கும் சரி, முருகதாஸ்க்கும் சரி வணிக ரீதியாக பெரும் வெற்றியை கொடுத்த படம் இது. அதுமட்டுமின்றி சமீபத்தில் விஜய் டி.வி., சார்பில் வழங்கப்பட்ட விருத‌ில், இப்படத்திற்கு ஐந்து விருதுகள் கிடைத்தன. இந்நிலையில் துப்பாக்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸூம், விஜய்யும் சேர்ந்து ஒரு படம் பண்ண உள்ளனர் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளன. அது எந்த மாதிரியான படம், யாரும் ஹீரோயின் என்ற விபரம் எல்லாம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இவர்கள் மீண்டும் இணையவுள்ள இப்படத்திற்கு கொலவெறி அனிரூத் மட்டும் இசையமைக்க இருப்பது உறுதியாகியுள்ளது.



கௌதமுடன் ஜோடி சேர முடியாததால் வருத்தத்தில் நித்யா மேனன்..
[Sunday, 2013-05-19 20:26:48]

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி கலக்கியவர் நித்யாமேனன். மலையாள பெண்ணாக இருந்தாலும் பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்பத்தில் தெலுங்கு, கன்னட படங்களில் தான் அதிகமாக நடித்தார். அதன்பிறகு தமிழ், மலையாளம் என்று வளர்ந்தார். இப்படி நான்கு மொழி நடிகையாகி விட்டபோதிலும் எந்த மொழியிலும் அவரால் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தான் தமிழில் ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தில் எங்கேயும் எப்போதும் சர்வானந்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதில் ஆட்டோகிராப் படத்தில் கோபிகா நடித்தது போன்ற கவிதைத்தனமான கதாபாத்திரமாம். அதனால், இந்த படத்திற்கு பிறகு கோபிகா இடத்தை பிடித்து விடுவேன் என்று கூறினாலும், மனதளவில் சிறிய வருத்தத்தில் இருக்கிறாராம். அதாவது, தெலுங்கில் நித்யா மேனன் நாயகியாக நடித்த படமான அல மொதலைந்தி தமிழில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் கடல் கௌதம் நாயகனாக நடிக்கிறார், இதில் வாய்ப்பு கிடைக்காததே காரணம் என்கிறார்.



தன்னை காதலிப்பவர்களை விஷாலால் தடுக்க முடியாதாம்..
[Sunday, 2013-05-19 20:22:37]

நடிகர் விஷால் தற்போது சொந்த பட நிறுவனம் தொடங்கி 'பாண்டிய நாடு' என்ற படத்தை தயாரிப்பதுடன் ஹீரோவாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியது:



ஆர்யா - நயன் திருமண அழைப்பிதழ் நடந்தது என்ன?
[Sunday, 2013-05-19 20:17:15]

நயன்தாராவுக்கும், ஆர்யாவுக்கும் திருமணம் நடக்கப் போவதாக பத்திரிகை அலுவலகங்களுக்கு சில தினங்களுக்கு முன்பு திருமண அழைப்பிதழ் வந்தது. 'ஆர்யா வெட்ஸ் நயன்தாரா' என்ற ஆங்கில வாசகத்துடன் நயன்தாரா விரலில் ஆர்யா மோதிரம் அணிவிப்பது போல் படமும் அதில் இடம்பெற்று இருந்தது. இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு தொலைக்காட்சி சேனல்கள் செய்தி வெளியிட்டன. இதனால் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரித்த போது 'ராஜாராணி' படத்தின் விளம்பரத்துக்கு அது வெளியிடப்பட்டது தெரிய வந்தது. இருவரும் ஜோடியாக நடிக்கும் இப்படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்காக போலி திருமண அழைப்பிதழை ஏ.ஆர்.முருகதாஸ் அச்சிட்டு வெளியிட்டிருந்தார்.


Canada Kanthasamy Kovil
Mahesan supramaniyam 031109
Ramans2011
Suresh-remax-2013-01-01
RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
TamilsGuid-191012-2013
INNSYS-20120930
NIRO-DANCE-100213
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com