Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 23, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
உள் முரண்பாடுகள் ௭ழுவதை தவிர்ப்பதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும்: - இரா. துரைரட்ணம்
[Tuesday, 2012-10-16 14:18:30]
News Service

தமிழ் மக்கள் அனைத்துக்கட்சிகளையும் நிராகரிக்க தயாராக இருக்கின்றார்கள். இதில் ௭துவித வேற்றுக் கருத்தும் இருக்க முடியாது. கட்சி அரசியல் செய்ய முயன்றால் மாற்றீடான கட்சி அரசியல் வரும் ௭ன்பதற்காகவும் உள்ளுக்குள் முரண்பாடுகள் ௭ழுவதை தவிர்ப்பதற்கும் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் ௭ன கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் தெரிவித்தார்.

  

கொக்கட்டிச்சோலை, கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், நான் இந்த தேர்தலில் வெல்லவில்லை. தமிழ்த் தேசியம் இந்த தேர்தலில் வென்றுள்ளது.

இலங்கை அரசின் கொடுங்கோல் ஆட்சிக்கு ௭திராக, சர்வதேசத்தின் குரலுக்காக நாங்கள் இணைந்து வென்றுள்ளோம். கூட்டு உழைப்பு மத்தியிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியளித்துள்ளது. இது ஒரு கூட்டு முயற்சி. யாருடைய தனிப்பட்ட முயற்சியல்ல. யாரும் விலை பேசவும் முடியாது. தனி நபராக விலை பேசும் உரிமையும் இல்லை. வாக்களித்த மக்கள் முகம் தெரியாமல் வாக்களித்துள்ளனர்.

நாமம் தெரியாமல் வாக்களித்துள்ளனர். அதற்கு காரணம் தமிழ்த் தேசியம் பலப்படுத்தப்பட வேண்டும். அது போற்றப்பட வேண்டும் ௭ன்பதற்காகத்தான் அந்த வாக்குகளுக்கு யாரும் உரிமை கோர முடியாது. மக்கள் ௭ந்த நோக்கத்துக்காக வாக்குகளை அளித்தார்களோ அந்த நோக்கம் நிச்சயம் பாதுகாக்கப்படும். அதற்கான கௌரவத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். அந்த கௌரவத்துக்காக நாங்கள் உழைப்போம்.

இங்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் ௭மது இலட்சியம் நிறைவேறும் வரையில் உறுதியுடன் செயற்படுவோம் ௭ன்று இங்கு கூறிக் கொள்கின்றேன். தேர்தல் ௭ன்பது ஒரு மனிதனின் ஜனநாயக உரிமையை நிலை நாட்டுவதற்காக நடத்தப்படுகின்றது. தமிழ் மக்களை பொறுத்த வரையில் ஜனநாயக தேர்தல்களுக்கு மதிப்பளிப்பதில்லை. காரணம் நாங்கள் வாக்களிப்பதில்லை.

பலருக்கு வாக்களிக்க தெரியாது. கடந்த கால ஆயுதப் போராட்டங்கள் காரணமாக தேர்தல்களை நாங்கள் சலுகைக்காக மட்டுமே பயன்படுத்தி வந்தோம். அதனை தமிழ் மக்களும் சலுகைக்காக பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகவே பார்த்தனர். ஆனால் இன்று அது மாற்றமடைந்து சர்வதேச ரீதியாக மாற்றமடைந்தது. இலங்கையில் மாற்றமடைந்து வடகிழக்கில் மாற்றமடைந்து தேர்தல் ஊடாகத்தான் மக்கள் பிரதி நிதிகளை தெரிவு செய்ய வேண்டும்.

அவர்கள் ஊடாகத்தான் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் ௭ன்று ஐ.நா. தொடக்கம் சர்வதேச சமூகம் வரையில் உறுதியாக இருக்கின்றன. அந்த வகைக்குள் நாங்கள் உட்படுத்தப்பட்டுள்ளோம். நாங்கள் திணிக்கப்பட்டுள்ளோம். இதில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும். தேர்தல் ஊடாகத்தான் நாங்கள் சாதிக்க முடியும் ௭ன்ற சூழ்நிலைக்கு நாங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். ஆகவே நாங்கள் தேர்தல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

௭மது சமூகத்தில் சிலர் வாக்குப் போட்டு விட்டோம். இனி அவர்கள் வரமாட்டார்கள் ௭ன்று நினைப்பது உண்டு. அவை நேர்மையுள்ள நாகரிகமுள்ள அரசியல்வாதிகளுக்கு பொருந்தாது. போர்காண கட்ட அரசியல் செய்யும் மக்கள் பிரதி நிதிகளுக்கும் கப்பம் பெறும் அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் அது பொருந்தும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு அது பொருந்தாது. காரணம் நீங்கள் தமிழ்த் தேசியத்துக்காக வாக்களித்துள்ளீர்கள். அந்த வகையில் அதில் நாங்கள் உறுதியாக இருப்போம். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாகிய நாங்கள் இங்கு பல்வேறு பாரிய சுமைகளை கொண்டுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற நிலைமைகள் வேறு வடமாகாணத்தில் உள்ள நிலைமைகள் வேறு. வடக்கு மாகாணம் தமிழ்மக்களுக்கு உரிய மாகாணம். கிழக்கு மாகாணம் ௭ன்பது மூவின மக்களும் வாழும் மாகாணம். இந்த மாகாணத்தில் அரசியல் அதிகாரம் ௭ன்பது ௭மது கையில் இல்லை. இந்த அரசியல் அதிகாரம் இல்லாத வேளையில் இந்த அரசியல் அதிகாரத்தை நிலை நாட்ட நாங்கள் ௭வற்றை செய்ய வேண்டும் ௭ன்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தே ஆக வேண்டும். அது மட்டுமல்ல, மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியில் கல்குடா மற்றும் படுவான்கரை கல்வி வலயங்கள் பின் தங்கியுள்ளன.

இதனை வளர்ப்பதற்காக நாங்கள் செய்ய வேண்டிய நடவடிக்கையென்ன? நாங்கள் நீர்வளம் இல்லாத பகுதியில் இருந்து நீர்வளம் உள்ள பகுதிக்கு நீரைக் கொண்டு செல்கின்றோம். இது தான் இன்றைய திட்டமிடல், முகாமைத்துவம், அது ௭வ்வளவு பலவீனமாக இருக்கின்றது ௭ன்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும். பல விடயங்களில் நாங்கள் பின் தங்கிய நிலைகளிலேயே இருக்கின்றோம்.

கிழக்கு மாகாண சபையின் அதிகாரம் ௭மது கையில் இல்லை. கல்வி ௭மது கையில் இல்லை. வியாபாரம் ௭மது கையில் இல்லை. விவசாயமும் கால் நடையும் மட்டுமே ௭ம்மிடம் உள்ளன. அவையும் இன்று சீரழிந்து செல்லக்கூடிய நிலை உருவாகியுள்ளது. நாங்கள் இருப்பது மிகவும் ஆபத்தான நிலையில். இதனை ஈடு செய்வதற்கு ௭ங்களால் ௭ன்ன செய்ய முடியும்.

நாங்கள் இருப்பது கிழக்கு மாகாண சபையின் ௭திர்க்கட்சியில். ௭னது அனுபவத்தின் மத்தியில் கூறுகின்றேன் இம்முறை கிழக்கு மாகாண சபையில் ஆளும் தரப்பினர் பலமுள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றக்கூடிய பலமுடன் இருக்கின்றனர். அதனை தோற்கடிக்கக்கூடியபலம் ௭ம்மிடம் இல்லை. ௭திர்க்கட்சியில் இருந்து கொண்டு நாங்கள் செய்ய வேண்டியவற்றை பேசியேயாக வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் விகிதாசார வேலை வாய்ப்பு, நிதியொதுக்கீடு ௭மக்கு கிடைக்காத பட்சத்தில் பிரதேச ரீதியான அபிவிருத்தியில் நாங்கள் புறக்கணிக்கப்படுவோம். அதற்காக நாங்கள் உழைக்க வேண்டும். ௭திர்க்கட்சியில் இருந்து கொண்டு செயலாற்றக்கூடிய பல வழிகள் ௭மக்கு இருக்கின்றன.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இலங்கையின் உட்கட்டமைப்பு பணிகளுக்கு 580 மில்லியன் டொலர்களை வழங்குகின்றது சீனா!
[Thursday, 2013-05-23 20:51:13]

இலங்கையின் பிரதான உட்கட்டமைப்பு பணிகளுக்கு உதவும் வகையில் சீனா 580 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. கடன் அடிப்படையில் வழங்கப்படும் இந்த நிதியுடன் இலங்கைக்கு சீனா வழங்கும் கடன் தொகை 1.4 பில்லியன் டொலர்களாக உயர்வதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் சீனா, இலங்கைக்கு வழங்கும் இந்த நிதியுதவி இந்திய நலன்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



மே 18 போர்க்குற்ற நாள் ஸ்ரார்ஸ்பூர்க் நகரில் அனுஷ்டிப்பு!Top News
[Thursday, 2013-05-23 20:30:51]

18.05.2013 அன்று, தமிழினவழிப்புக்கு பிரான்சு அரசிடம் அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும, தமிழ்மக்களின் பாதுகாப்பைக் கோரியும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்றிருந்தது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து, சிங்கள பேரினவாத அரசினால் படுகொலைசெய்யப்பட்ட எமது மக்களினதும், மாவீரர்களினதும் குறிக்கோள்கள் நிறைவேறவேண்டி 19.05.2013 அன்று, பல்லினமக்கள் கூடி வேண்டுதல் வணக்க நிகழ்வும் செய்திருந்தனர். மேலும் 22.05.2013 அன்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் அனைத்துலக சுயாதீன விசாரணையை முன்னெடுக்க வலியுறுத்தியும், தமிழீழத்தை ஏற்றுக்கொள்ளக்கோரியும் ஒன்றுகூடல் நடைபெற்றது. ஐரோப்பியப் பாராளுமன்ற பிரதிநிதிகளை ஐரோப்பியத் தமிழர் ஒன்றிய உறுப்பினர்கள் சந்தித்து, பல இலட்சம் மக்களைக் காவு கொண்ட இனப்படுகொலை நடந்தேறி நான்கு ஆண்டுகளாகியும் தமழ்மக்களுக்கான நீதி பெற்றுக்கொடுக்கப்படவில்லை.



மத்திய மாகாணத்தில் முதலமைச்சர் உட்பட 4 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ்!
[Thursday, 2013-05-23 20:05:14]

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட நால்வருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று வியாழக்கிழமை வாபஸ் பெற்றப்பட்டது. இதனையடுத்து அந்த குற்றச்சாட்டுகளிலிருந்து நால்வரும் விடுதலைச்செய்யப்பட்டனர். கண்டியிலுள்ள பாடசாலையில் பிள்ளையொன்றை சேர்க்குமாறு அந்த பாடசாலையின் அதிபர் மீது செல்வாக்கு பிரயோகித்ததாக அவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் குற்றஞ்சாட்டப்பட்டது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம் இன்று மனுவொன்றை சமர்ப்பித்தே வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.



சிலாவத்தையில் புதிய நிர்வாகம் - பறிபோனது டக்ளஸின் பதவி!
[Thursday, 2013-05-23 19:43:49]

கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் சிலாவத்தை கிராம அபிவிருத்திச் சங்க உத்தியோகத்தர்கள் தெரிவு நீண்டகால இழுபறியின் பின்னர் நேற்று முன்தினம் முறையாக இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கரைதுறைப் பற்று பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கரைதுறைப்பற்று கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மகளிர் அபிவிருத்திச் சங்கங்களின் சமாசத் தலைவர் ஆகியோர் முன்னிலையில் தெரிவு இடம் பெற்றது. இந்தத் தெரிவின்போது சிலாவத்தை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவராக இருந்து புதிய நிர்வாகத் தெரிவுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தார் என மக்கள் குற்றஞ்சாட்டிய திருச்செல்வம் டக்ளஸ் பங்குபற்றவில்லை.



கட்சிக்கு நிதி கிடைக்கப் பெறும் வழிகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!
[Thursday, 2013-05-23 19:38:44]

கட்சி நிதி தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். எந்த வழிகளில் கட்சிக்கு நிதி கிடைக்கப் பெறுகின்றது என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் நோக்கில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தற்போது கட்சி நிதி மூலங்கள் பற்றி கேள்வி எழுப்பப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கட்சி உறுப்பினர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்ட போதிலும், நாளாந்த அடிப்படையில் காவல் நிலையத்திற்கு ஆஜராகுமாறு அழைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.



தற்போதைய ஆட்சிக்கு எதிராக நாம் அனைவரும் துணிந்து ஒன்று திரண்டுள்ளோம் - அநுர குமார
[Thursday, 2013-05-23 19:27:52]

தற்போதைய ஆட்சிக்கு எதிராக நாம் அனைவரும் இன்று வீதி ஆர்ப்பாட்டத்திற்கு துணிந்து ஒன்று திரண்டு இறங்கியுள்ளோம் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜே.வி.பி.யினால் மின் கட்டண உயர்வை இரத்துச் செய்யுமாறு அரசை வலியுறுத்தி இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கசங்கம்(பிரான்ஸ்) ஏற்பாட்டில் இலவச பாட வகுப்புக்கள் ஆரம்ப நிகழ்வு!Top News
[Thursday, 2013-05-23 19:09:07]

இன்று(புதன் கிழமை) மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியும் எல்லைப்புற பகுதியுமான 40 வட்டை விபுலானந்தா வித்தியாலயத்தில் இலவச பாடவகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான நிகழ்வுகள் பி.பகல் 2 மணியளவில் பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கத்தின் ஆலோசகர் திரு.பி.தயாபரன் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.க.பாஸ்கரன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.அத்தோடு, மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் (நிர்வாகம்) திரு.ஞா.சிறிநேசன் , பட்டிப்பளை பிரதேச கோட்டக்கல்வி அதிகாரி திரு.ந.தயாசீலன், 40 வட்டை விபுலான்ந்தா வித்தியால அதிபர் மற்றும் மாவடிமுன்மாரி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் பிரதிஅதிபர் ஆகியோர். அதிதிகளாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.



"ராஜபக்ஷ எந்தநாளும் விளையாடாதே" - மின் கட்டண உயர்வை கண்டித்து ஜே.வி.பி. நடாத்திய ஆர்ப்பாட்டம்!
[Thursday, 2013-05-23 18:58:50]

அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தினை இரத்துச் செய்யுமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி ஜே.வி.பி.யினால் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவ் ஆர்ப்பாட்டப் பேரணி பொரளையிலிருந்து ஆரம்பமாகி மருதானையூடாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை இடம்பெற்றது. இதில் ஜே.வி.பி.யின் முக்கியஸ்தர்களான ரில்வின் சில்வா, விஜித ஹேரத், கே.டி.லால்காந்த, சுனில் ஹந்துன்நெத்தி, இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். "ராஜபக்ஷ எந்தநாளும் விளையாடாதே", "மக்கள் மீது சுமையை ஏற்றுவதை நிறுத்து", "உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை இரத்துச் செய்", "அமைச்சர்களின் மின் கட்டணம் அப்பாவி மக்களின் தலையில்" போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இலங்கை சர்வதேசத்தின் முன்னால் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றது - மங்கள சமரவீர!
[Thursday, 2013-05-23 18:29:22]

ராஜபக்ஷ அரசாங்கம், நாட்டை சர்வாதிகார ஆட்சியை நோக்கி கொண்டு சென்றுக்கொண்டிருப்பதாகவும் சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேசத்திற்கு மத்தியில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாததால், சர்வதேச முன்னால், இலங்கை அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். குடும்ப நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக நாட்டில் இருந்த ஜனநாயக நிறுவனங்கள் அனைத்தையும், ராஜபக்ஷ அரசாங்கம், வலுவிழக்க செய்துள்ளது. இதன் காரணமாக நாட்டு மக்களின் உரிமைகளில் பல இல்லாமல் போயுள்ளன எனவும் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதியை சந்திக்க சென்ற 3 பாடசாலை மாணவிகள் பொலிஸாரால் கைது!
[Thursday, 2013-05-23 18:27:53]

ஜனாதிபதியை சந்திக்கும் நோக்கில் பெற்றோரிடம் தெரிவிக்காமல் கொழும்பு நோக்கிப் பயணம் செய்த 2 பாடசாலை மாணவிகள் குருநாகல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



வடக்கு தேர்தலுக்கு அஞ்சும் நீங்கள், தமிழர்களின் அச்சம் பற்றி சிந்தித்ததுண்டா? இனவாதிகளிடம் மனோ கேள்வி!
[Thursday, 2013-05-23 18:22:13]

வடக்கு மாகாண சபை கூட்டமைப்பின் கரங்களுக்கு போவது தொடர்பில் சிங்கள மக்களுக்கு அச்சம் உள்ளது என்று திரும்பத் திரும்பக் கூறுகின்றீர்கள். ஆனால் தமிழர்களின் அச்சம் பற்றி என்றாவது சிந்தித்துப் பார்த்தீர்களா? நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அதிகாரத்தையும், பலமிக்க நாடாளுமன்றத்தையும், முப்படைகளையும் வைத்திருக்கும் உங்களுக்கு அச்சம் இருந்தால் இன்று தமிழர்களுக்கு, தமது எதிர்காலம் தொடர்பில் எந்தளவு அச்சம் இருக்கும் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கின்றீர்கள்? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன். கொழும்பில் நேற்று இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:



31 புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!
[Thursday, 2013-05-23 18:01:03]

புகலிடம் கோரி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் இன்று (23ம் திகதி) நாடு திரும்புகின்றனர். 31 இலங்கையர்கள் இவ்வாறு நாடு திரும்புவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தீவில் இருந்து இவர்கள் இலங்கை - கொழும்புக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி கடந்த வருடம் ஒகஸ்ட் தொடக்கம் இதுவரை 1161 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்பட்டதாகவும் அவர்களில் 950 பேர் சுய விருப்பின் பேரில் அனுப்பப்பட்டதாகவும் பிரன்டன் ஒ கொன்னர் தெரிவித்துள்ளார்.



நேற்று சிவசக்தி ஆனந்தனுக்கு நாளை எனக்கா? - நான்காம் மாடி விசாரணை குறித்து சம்பந்தன் சபையில் கேள்வி!
[Thursday, 2013-05-23 17:26:47]

"சிவசக்தி ஆனந்தனை நேற்று விசாரணை செய்தீர்கள். நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா? ஏன் நீங்கள் இப்படி தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றீர்கள்? தமிழர்களும், அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனிதர்களே தானே" இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இன்று வியாழக்கிழமை சிறிலங்கா அமைச்சர்கள் முன்னிலையில் கேள்வி எழுப்பினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்றுப் புதன்கிழமை நான்காம் மாடியில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரினால் இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.



7 வயதுச் சிறுமி மீது பாலியல் பலாத்காரம் - இராணுவ வீரர் கைது!
[Thursday, 2013-05-23 17:26:35]

வவுனியா நெடுங்கேணி பகுதியில் 7 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் இராணுவ வீரர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 14.05.2013 அன்று வவுனியா நெடுங்கேணி சேனைப்புலவு என்ற கிராமத்தில் ஏழுவயதான பள்ளிச் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார். இச்சம்பவமானது அப்பிரதேசத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் தாமதித்தமையால், கடந்த திங்கட்கிழமை பிரதேச மக்களால் குறித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.



ஜனாதிபதி அறிவித்தவாறு எதிர்வரும் செப்டம்பரில் வடமாகாண சபைத் தேர்தல்!
[Thursday, 2013-05-23 17:13:02]

இலங்கையின் வடமாகாண சபைக்கான தேர்தல் ஜனாதிபதி அறிவித்துள்ளபடி எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அரசு தெரிவித்துள்ளது. அந்தத் தேர்தலை ஒத்திப் போடும் எண்ணம் அரசுக்கு கிடையாது என்று வாராந்திர அமைச்சரவை முடிவுகள் குறித்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அதன் பேச்சாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அதே போல மாகாண சபைகளை உருவாக்கி அதற்கு காணி மற்றும் போலிஸ் அதிகாரங்களை வழங்கிய அரசியல் அமைப்பின் 13 ஆவது சட்டத் திருத்ததில் மாறுதலையும் கொண்டுவரவோ அல்லது அதை ரத்து செய்யவோ அரசாங்கத்துக்கு எந்த எண்ணமும் இல்லை என்றும் அமைச்சர் யாப்பா இந்தக் கூட்டத்தில் அறிவித்தார்.



விடுதலைப்புலிகளின் தலைவரை கோழை என தெரிவித்த அமைச்சர் நாராயண சாமிக்கு எதிராக முறைப்பாடு!
[Thursday, 2013-05-23 16:55:38]

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக அமைச்சர் வி.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கைபற்றி முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையானது தமிழ்பேசும் இந்தியர்களுக்கும் தமிழர் அல்லாதோருக்கும் இடையில் பகைமையை தோற்றுவித்தது என, நியாயதுரந்திரர் சி.ரமேஷ் தெற்குவலய பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்றை தொடுத்துள்ளார். கடந்த 20ம் திகதி அமைச்சர் நாராயணசாமி விடுத்த அறிக்கையில்,



'இந்திய அரசின் வீட்டுத் திட்டமா? இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா?' மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தவர்கள் கைது!
[Thursday, 2013-05-23 11:38:36]

மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுகாமம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வின்போது துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் இருவரை கரடியனாறு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுகாமம் பிரதேசத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இவர்களிடமிருந்து மேற்படி துண்டுப்பிரசுரங்களை கைப்பற்றியுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.



கனடா - பிரித்தானியா - பிரான்ஸ் : தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வரங்கும் ! Top News
[Thursday, 2013-05-23 11:26:46]

தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை மையாக கொண்டு முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டுப் பெருவலியினை கூட்டுநினைவு கொள்ளும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வுகள் கனடா, பிரித்தானியா, பிரான்சு ஆகிய நாடுகளில் இடம்பெற்றுள்ளன. தமிழீழ சுதந்திர சாசன முரசறைவின் பிரதான நிகழ்வு அமெரிக்காவில் இடம்பெற்றிருந்த சமவேளை, பிரித்தானியா, கனடா (ரொறன்ரோ) மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் ஒன்றுகூடிய தமிழர்கள் உணர்வுபூர்வமாக சுதந்திர சாசனத்தினை முரசறைந்து நினைவேந்திக் கொண்டிருந்தனர்.



கிழக்கில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர் என்பதற்கான அடையாளமே இந்திய வீடமைப்புத் திட்டம் - பஷில்
[Thursday, 2013-05-23 11:23:49]

கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு அடையாளமாகவே இந்திய வீடமைப்புத் திட்டம் விளங்குகிறது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.



13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை - அரசாங்கம்
[Thursday, 2013-05-23 11:17:01]

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜே.என்.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரியிருந்தன. 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனித்து தீர்மானம் எடுக்க மாட்டார் என அரசாங்க பதில் பேச்சாளர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பில் இதுவரையில் எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்காக ஜே.என்.பி.யும் ஜாதிக ஹெல உறுமய கட்சியும் பல்வேறு வழிகளில் முயற்சி எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


TamilsGuid-191012-2013
RoyaShades-l2011(04-12-11)
Ramans2011
Suresh-remax-2013-01-01
TDE_Computers2011
Canada Kanthasamy Kovil
AJRwindows22.05.13
INNSYS-20120930
Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com