Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 26, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
முடிந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்துவிட்டு தெரிவுக்குழுவுக்கு அழைக்கட்டும்:
[Wednesday, 2012-05-23 21:57:21]

எங்களை தெரிவுக்குழுவில் பங்குபற்றவைப்பதற்கு முயற்சி செய்யும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முடிந்தால் முதலில் நல்லெண்ண அடிப்படையில் ஐந்து தமிழ் கைதிகளையாவது விடுதலைசெய்துவிட்டு தெரிவுக்குழுவிற்கு அழைக்கட்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.


  

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுள்ளது என்றும் எனவே கூட்டமைப்பு விரைவில் அரசாங்கம் அமைக்கவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் எனக் கூறப்பட்டுள்ள செய்தி தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்று மூன்றாண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் இன்று அந்த யுத்தத்தை முன்னின்று நடத்திய இராணுவத்தளபதி சரத்பொன்சேகா விடுதலைசெய்யப்பட்டுள்ளார் ஆனால் கடந்த பலவருடங்கலாக எந்தவித விசாரணைகளும் இன்றி சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் இன்றுவரை விடுதலை செய்ய முயற்சிக்கவில்லை எனவே பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பை இணைக்க முயற்சிக்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முதலில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும்.

ஏனெனில் 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு முன்வைத்த முதல் கோரிக்கை அரசாங்கம் பேச்சுவார்த்தையை தொடர்வதற்கான நல்லெண்ண முயற்சியாக குறிப்பிட்ட அரசியல் கைதிகளையாவது முதலில் விடுதலை செய்யவேண்டும் எனக்கேட்டிருந்தோம.; ஆனால் அந்தக் கோரிக்கையை கூட அரசாங்கம் இன்றுவரை நிறைவேற்றவில்லை இன்நிலையில்தான் தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பை இழுப்பதற்கு சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் பலர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் அவ்வாறு செயற்படுபவர்கள் அரசாங்கத்தையும் நல்லெண்ண அடிப்படையில் செயற்பட வைக்க முயற்சிக்கவேண்டும் குறிப்பாக ஐந்து தமிழ் அரசியல் கைதிகளையாவது இவர்களால் விடுவிக்கமுடியுமா? அல்லது சிறையில் வாடிக்கொண்டிருக்கும் பெண்கைதிகளை விடுவிக்கமுடியுமா? அல்லது அங்கவீனமாக இருக்கும் கைதிகளை விடுவிக்க முடியுமா? இவர்களில் யாராவது ஐவரை விடுதலை செய்துவிட்டு கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு வருமாறு இவர்கள் கூறுவார்கள் என்றால் அதனை நாங்கள் வரவேற்கலாம்.

அதைவிட்டு விட்டு சிறையில் இருப்பவர்கள் சிறையிலேயே இருக்கவேண்டும், கடத்தல்காரர்கள் தொடர்ந்து கடத்திக்கொண்டு இருக்கவேண்டும், இராணுவ மயமாக்கல் தொடர்ந்துகொண்டு இருக்கவேண்டும், தமிழர்களின் நிலங்களை அபகரிப்பது தொடர்ச்சியாக நடக்கவேண்டும், பல்கலைகழக மாணவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுவது நடந்துகொண்டிருக்கும், விடுதலை செய்யப்பட்ட முன்னால் போராளிகள் மீண்டும் கைதுசெய்யப்படுவார்கள் ஆனால் இவற்றையேல்லாம் பார்த்துக்கொண்டு கூட்டமைப்பு மட்டும் அரசாங்கத்துடன் பேசவேண்டும் என்றால் அது எந்தவகையில் நியாயமாகும்.

பேச்சுவார்த்தையில் ஈடுபடும் இரண்டு தரப்புக்களும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவேண்டும் அந்தவகையில் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என்றால் கடைசி தமிழ் அரசியல் கைதிகள் சிலரையாவது அரசாங்கம் விடுதலைசெய்ய வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும் என்றார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
தமிழ்நாட்டை தனிநாடாக்கி இலங்கையை ஆபத்தில் தள்ள வேண்டாம்.
[Wednesday, 2013-04-03 17:18:26]

தமிழ் நாட்டை தூண்டி விட்டு இந்திய மத்திய அரசை நெருக்கடியில் தள்ளி, இலங்கையை ஆபத்தில் தள்ள வேண்டாம் என இலங்கை அரசாங்கத்தையும், சிங்கள-பெளத்த தீவிரவாத கட்சிகளையும் கோருகிறேன். இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்தியா துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என தேசிய தேசப்பற்று இயக்க தலைவர் குணதாச அமரசேகர என்ற பல் வைத்தியர் இந்தியாவை நோக்கி சாபம் போடுகிறார். விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவகவின் தலைவர் ஓமல்பே சோபித தேரரும் தமிழகத்தை திட்டி தீர்க்கிறார்கள். போதாக்குறைக்கு கிரிக்கட் வீரர் குமார் சங்கக்காரவும் சின்ன ஒரு தமிழ்நாடு என்பது மிகப்பெரிய இந்தியா இல்லை என்று கிண்டல் செய்கிறார். நீங்கள் எல்லோரும் சேர்ந்து உங்கள் முட்டாள்தனமான சிங்கள பெளத்த தீவிரவாதம் மூலம் எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டை சீண்டி விட்டு, அதை தனிநாடு ஆக்கிவிட வேண்டாம்.

இனவாதிகளின் செயற்பாடுகளாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவெடுத்தது.
[Wednesday, 2013-03-27 18:02:18]

கடும்போக்குடைய இனவாதிகளின் செயற்பாடுகளினாலே ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு உருவெடுத்தது என இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் அமைந்துள்ள அசாத் சாலி மன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிராந்திய அதிகாரமாக திகழும் இந்தியாதான் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்திருக்க வேண்டும்.
[Wednesday, 2013-03-20 10:35:02]

தென்னாசியப் பிராந்திய அதிகாரமாக திகழும் இந்தியாதான், ஐ.நா மனித உரிமைச சபையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தினை கொண்டு வந்திருக்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த திங்கட்கிழமை இணையவழி காணொளியூடாக இடம்பெற்றிருந்த ஊடக மாநாட்டிலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கருத்தினை தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்திய சிறிலங்கா விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானதொரு விடயமாக கருத்தபடுவதோடு, இந்தியா மத்திய அரசினை நோக்கிய அழுத்தங்கள் தமிழகத்தின் பல்வேறு மட்டங்களில் வலுத்தவரும் நிலையில், பிரதமர் வி.உருத்திரகுமாரனது இக்கருத்து வெளிவந்துள்ளது.

ஈழத் தமிழர்கள் மகிழ்வாக, நிம்மதியாக வாழ்வதற்கு தமிழ் ஈழம் தான் தீர்வு..
[Monday, 2013-03-18 09:38:49]

ஈழத்தமிழர்கள் மகிழ்வாக, நிம்மதியாக வாழ தமிழ் ஈழம் தான் தீர்வு. அது நிலைநாட்டப்படும் வரை மத்திய அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து நடத்தும் என அக்கட்சியின் நிறுவன தலைவர் ஆர். சரத்குமார் தெரிவித்தார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையை காப்பாற்றும் முயற்சிகளில் இந்தியாவால் இனி ஈடுபட முடியாது.
[Saturday, 2013-02-23 11:45:03]

கடைசி கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசை, கேடயமாக இருந்து இந்திய மத்திய அரசு காப்பாற்றியது. இந்நிலையில் இன்று அத்தகைய ஒரு முயற்சியை இந்திய மத்திய அரசு விரும்பினாலும்கூட செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான முழுமையான பொறுப்பையும், இந்தியாவுக்கும், உலகத்துக்கு அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் காற்றில் பறக்க விட்ட இலங்கை அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும் என என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பொதுஜன அபிப்பிராயம் இன்று இந்தியாவில் அகில இந்திய மட்டத்தில் ஏற்பட்டு வருகிறது. இதை இந்தியாவின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும் இன்று எதிரொலிக்கின்றன.

பௌத்த அடிப்படைவாத குழுக்கள் நாட்டில் இனமுரண்பாட்டை ஏற்படுத்த தீவிரம்.
[Wednesday, 2013-02-20 06:44:52]

முஸ்லிம் மக்கள் மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹிரியாலை மற்றும் குருநாகல் பகுதிகளில் மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமிய மதத்தவர் மீதான தாக்குதல்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் விசேட உரையாற்றியுள்ளார்.

இலங்கையில் பேச்சளவில் மாத்திரம் தான் சுதந்திரம் உள்ளது.
[Monday, 2013-02-04 09:53:58]

நாட்டு மக்களுக்கு தற்போது அனைத்துத் துறைகளினதும் சுதந்திரம் என்பது வாக்குறுதிகளிலும் பேச்சளவிலுமே காணப்படுகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக் குடியரசின் 65ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு.
[Tuesday, 2013-01-15 09:50:24]

யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு நடைபெற்று வருகிறது. எமது அருமந்த இளைஞர்களும், யுவதிகளும் சீரழிந்த ஒரு வாழ்க்கை முறைக்குத் திட்டமிட்டு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். இவ்வாறு தெரிவித்தார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். நேற்றுத் திங்கட்கிழமை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமைக் காரியாலயக் கட்டடத் திறப்புவிழா இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர், சட்டத் தரணி க.சுகாஷ் தலைமையில் நடைபெற்றது.

ஆட்கடத்தல்காரர்கள் மூலம் கனடா வர முயல்பவர்கள் தங்களது வாழ்க்கையையே தொலைக்கிறார்கள்:
[Monday, 2013-01-07 10:28:08]

இன்று கொழும்பிலுள்ள சினமன் கிராண்ட் கோட்டலில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கனடிய குடிவரவு மற்றும் பல்கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனி அவர்கள் ஆட்கடத்தல்காரர்கள் மூலம் கனடா வர முயல்பவர்கள் தங்களது வாழ்க்கையையே தொலைக்கிறார்கள் என்று தெரிவித்தார். ஆட்கடத்தல்க் காரர்கள் மூலம் கனடா வர விரும்புபவர்களிற்கு நாங்கள் விடுக்கும் காட்டமான செய்தி யாதெனில், தயவு செய்து அப்படியான வழிகளில் கனடா வரும் எண்ணத்தைக் கைவிட்டு விடுங்கள்.

அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சைக் குழப்பியது அரசு தரப்புதான்!
[Sunday, 2013-01-06 15:27:04]

அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சைக் குழப்பியது அரசு தரப்புதான் என்பதை அடித்துக் கூறுகின்றோம். அத்துடன் திராணியற்ற இந்த மஹிந்த அரசு அமைத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்க் கூட்டமைப்பு கலந்துகொண்டிருந்தால் இன்று பிரதம நீதியரசர் ஷிராணி எதிர்நோக்கும் சவால்களை நாமும் சந்தித்திருப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

TDE_Computers2011
TamilsGuid-191012-2013
RoyaShades-l2011(04-12-11)
Ramans2011
Mahesan supramaniyam 031109
INNSYS-20120930
Canada Kanthasamy Kovil
NIRO-DANCE-100213
Suresh-remax-2013-01-01
AJRwindows22.05.13
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com