Untitled Document
March 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
டொரொண்டோவில் முதல் தமிழர் மரபு மாநாடு - 2017 Top News Top News
[Saturday 2017-02-04 08:00]

உலகிலேயே தமிழர் மரபுக்கான மாநாடு முதல் முறையாக கனடா டொரொன்டோவில் கடந்த சனிக்கிழமை ஜனவரி 28ம் தேதி கனடா கிறித்துவ கல்லூரி அரங்கில் "தமிழர் மரபு மாநாடு 2017" இரண்டு நிகழ்வுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த விழாவில் கலந்து சிறப்பிக்க தமிழ்நாட்டில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு.ஆளூர் ஷாநவாஸ் அவர்களும் மற்றும் பிரபல மென்பொருள் மனிதவள நிறுவனர் திரு.பிரபாகரன் முருகையா அவர்களும், சன் டிவி-விஜய் டிவி அசத்த போவது யாரு புகழ் கலைஞர்களான திரு.வெங்கடேஷ், திரு.கிறிஸ்டோபர், திரு.சசி மற்றும் திரு.சுட்டி அரவிந்த் என இரண்டு பேச்சாளர்களும் நான்கு நகைச்சுவை கலைஞர்களும் ஜனவரி 25ம் தேதி இரவு டொரொண்டோ வந்து இறங்கினர்.

ஜனவரி 28ம் தேதி சனிக்கிழமை காலை 11:30 மணிக்கு மாநாடு தொடங்கியது. கனடிய தேசியகீதம், தமிழ்தாய் வாழ்த்து பாடியபின், திருமதி.பார்வதி வள்ளிக்கண்ணன், திருமதி.நிரோதினி பரராஜசிங்கம், திருமதி.மணிமொழி வரதராஜன், திரு.வள்ளிக்கண்ணன் மருதப்பன், திரு.சங்கர் நல்லதம்பி, திரு.ஆளூர் ஷாநவாஸ் மற்றும் திரு.பிரபாகரன் முருகையா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டை ஆரம்பித்து வைத்தனர். பின்பு திரு.ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் தமிழ் மரபு, கலாச்சாரம், பண்பாடு என்ற தலைப்பில் சிறப்பான உரையாற்றினார். அவர் தன் உரையின் போது அழிந்து வரும் தமிழ் மரபுகளை மீட்டுஎடுக்க அணைத்து தமிழர்களும் ஒன்றாக போராடவேண்டும் என்றும் தமிழ் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினார்.

அவரின் பேச்சு அனைவரையும் மிகவும் கவர்ந்தது. தாய் தமிழகத்தில் வாழும் 7 கோடி தமிழர்களுக்கு கிடைக்காத உரிமைகளையும் கனடா அரசாங்கம் இந்த தமிழர்களுக்கு தமிழ் மரபு திங்கள் என அறிவித்து முக்கியத்துவம் கொடுத்திருப்பதை பெரிதும் பாராட்டினார். தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் சிறப்பாக தொழில் செய்து வரும் பிரபல தொழிலதிபர் திரு.பிரபாகரன் முருகையா தமிழர்களுக்கு தொழில் முக்கியத்துவம் குறித்து தன் அனுபவங்களுடன் உரையாற்றினார். அவரின் பேச்சு இளைய தலைமுறைக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மேலும் திருமதி.நிரோதினி பரராஜசிங்கம், திரு.ஆளூர் ஷாநவாஸ் மற்றும் திரு.பிரபாகரன் முருகையா ஆகியோருக்கு "தமிழ் மரபு காவலர்" என்ற பட்டமளித்து கௌரவிக்கப்பட்டனர்.

அன்று மாலை 4:30 மணிக்கு சன் டிவி-விஜய் டிவி அசத்த போவது யாரு புகழ் கலைஞர்களான திரு.வெங்கடேஷ், திரு.கிறிஸ்டோபர், திரு.சசி மற்றும் திரு.சுட்டி அரவிந்த் ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சியும் இந்திய டொரொண்டோ பாடகர்கள் கலந்து கொண்ட லத்தன் ப்ரதர்ஸ் இசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. அணைத்து நிகச்சிகளையும் திரு.சுதாகரன் மற்றும் திருமதி.சுஹாசினி இருவரும் தொகுத்து வழங்கினார்கள். இந்த விழா ஏற்ப்பாட்டை தலைமையேற்று திரு.வள்ளிக்கண்ணன், திரு.வரதராஜன் மற்றும் விழாக்குழு சிறப்பாக செய்துயிருந்தார்கள். இந்த விழாவில் அணைத்து ஊடகங்களும், மற்ற சங்கங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த "தமிழர் மரபு மாநாடு 2017" உலக தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அது மிகையாகாது. அடுத்து வரும் வருடங்களில் இந்த மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தமிழர்கள் மத்தியில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா