Untitled Document
April 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பிரித்தானியாவில் நடைபெற்ற மாசி மாத மாவீரர் நினைவு வணக்க நிகழ்வு! Top News
[Thursday 2017-03-02 23:00]

லெப் கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ், லெப் கேணல் கௌசல்யன், கடற்புலிகளின் துணைத்தளபதி லெப் கேணல் விநாயகம், மகளிர் படையணி லெப் கேணல் புவிதா, வான் க௫ம்புலி கேணல் ரூபன், வான் க௫ம்புலி லெப் கேணல் சிரித்திரன், ஈகைப்பேரொளி முருகதாசன் உட்பட இம்மாதத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும், பேரன்னை பார்வதியம்மா, மாமனிதர் சந்திரரேரு மற்றும் அன்னிய சிறீலங்கா படைகளினால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்குமான நினைவுவணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றது.

தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் அமைந்துள்ள (Oxford) உலகத் தமிழர் வரலாற்று மைய மாவீரர் மண்டபத்தில் இந்த நிகழ்வு கடந்த (26-02-2017) ஞாயிறு மாலை 4:00 மணிக்கு இடம்பெற்றது. இம்முறை, சவுத்ஹோல் அருணோதயம் தமிழர் சனசமூக மேம்பாட்டு நிலையத்தின் சார்பில் இயங்கி வரும் அருணோதயம் தமிழாலயத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஒன்றிணைந்து இம் மாத நிகழ்வை நடாத்தியிருந்தனர்.இந்த நிகழ்வில் பொதுச் சுடரினை அருணோதயம் தமிழாலயத்தின் ஆசிரியர் திருமதி. பிரபாநந்தினி ரமேஸ் அவர்கள் ஏற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமானது.

அடுத்து, பிரித்தானியத் தேசியக் கொடியை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மறைந்த நாடாளமன்ற உறுப்பினர் மாமனிதர் அமரர் திரு சந்திரநேரு அவர்களுடைய மகன் சந்திரகாந்தன் அவர்கள் ஏற்றி வைக்க, தமிழீழத் தேசியக் கொடியை தாயக தேசியக் கவிஞ்ஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் மகன் திரு சோபிதன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மேஜர் தாரகை அவர்களின் சகோதரிகள் திருமதி. தயாளினி தர்மராஜா திருமதி. ஐங்கரன் சுமங்கலி ஆகியோர் மாவீரர்களுக்கான பொது நினைவுத் தூபிக்கான ஈகச்சுடரினை ஏற்றி மலர்மாலையினை அணிவித்தார்.

ஈகைப் பேரொளி முருகதாசனின் தாயார் திருமதி. வர்ணகுலசிங்கம் அவர்கள் மக்களுக்கான பொது நினைவுத் தூபிக்கான ஈகச்சுடரினை ஏற்றி மலர்மாலையினை அணிவித்ததைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழீழதேசத்தின் விடியலின் அடித்தளமாக விளங்கிய பேரன்னை திருமதி பார்பதியம்மாவின் திருவுருவப்படத்திற்கு திருமதி லதா சதா அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி மலர்மாலையினை அணிவிக்க, மகளிர் படையணி லெப்.கேர்ணல் புவிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு திருமதி கவி பிரதீபன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்மாலையினை அணிவித்தார்.

லெப. கேணல் பொன்னம்மான் அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு கைவிக்கம் தமிழ்க்கல்விக்கூடத்தின் தலைமை ஆசிரியர் திரு .ஐவன் தெய்வேந்திரம் சின்னப்பு அவர்கள் ஈகைச்சுசுடரேற்றி மலர்மாலை அணிவிக்க, மேஜர் கேடில்ஸ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு கரும்புலி கப்டன் மேகலாவின் சகோதரன் திரு பாஸ்கர் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்மாலையினை அணிவித்தார். மட்டு அரசியல்துறைப்பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு சவுத்ஹோல் அருணோதயம் தமிழர் சனசமூக மேம்பபாட்டு நிலையம் அருணோதயம் தமிழாலயம் இயக்குனர்களான திரு .திருமதி. ஜெயக்குமார் ஜெயசித்திரா ஆகியோர் ஈகைச்சுடரேற்றி மலர்மாலை அணிவித்தனர்.

தமிழீழ வான் கரும்புலிகளான லெப். கேணல் சிரித்திரன், கேணல் ரூபன் ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு திரு . கிருஸ்ணா அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்மாலை அணிவித்தவர். தமிழீழ இசைச்சிகரம் சாந்தன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மூன்று மாவீரர்களின் தாயாரான திருமதி. இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்கள் ஈகைசச்சுடரேற்றி மலர்மாலையினை அணிவித்தார்.

இந் நிகழ்வில், அருணோதயம் தமிழாலயத்தின் சார்பில் நடைபெற்ற அரங்க நிகழ்வுகளாக, அருணோதயம் தமிழாலய நடன ஆசிரியை செல்வி. வாஷினி ஜெயக்குமாரன் அவர்கள் நெறியாள்கையில் "புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்துவாருங்கள்" "இராஜகோபுரம் எங்கள் தலைவன்" ஆகிய பாடல்களுக்கு அருணோதயம் தமிழாலயத்தின் மாணவிகளான செல்விகள்- ஆதவி பிரபாகரன், பானுகா ஜீவகன், ஆர்னிகா ஜீவகன், லேனிகா நவனீதன், தர்ஷாயினி ஜெயக்குமாரன், கனீபா கவிதன், ரிஷானா கவிதன், ஆகியோர் நடனத்தை வழங்கியிருந்தனர்.

கவிதைகளை பிரபானந்தினி ரமேஸ், அனுஷா சிவனேசன் ஆகியோர் வழங்க, நோத்தம்ரன் தமிழ்க்கல்விக்கூடத்தின் மாணவி செல்வி உகாஷினி சேனாதிராஜா அவர்கள் மாவீரத்திலகங்கள் என்னும் தலைப்பில் உரையாற்றினார். எழுச்சி கானங்களை அருணோதயம் தமிழாலய ஆசிரியர்களான திருமதி. குமுதினி பாலேந்திரன், திருமதி. மனோகரி சிறீதரன் மற்றும் திரு. மைக்கல், திரு. சுரேஸ், திரு. சிவா, திரு. ரட்ணம் ஆகியோர் வழங்க நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது. குறிப்பாக பலர் தமது குடும்பங்களோடு வந்து கலந்துகொண்டிருந்தமையும், அதிகமான சிறுவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமையும், இன் நிகழ்வை ஒரு தமிழ் பாடசாலை முன்னின்று நடாத்தியமையும் மன நிறைவையும், தமிழீழ விடுதலை நோகிய எதிர்காலத்தை குறித்துக்காட்டுவதாகவும் அமைந்திருந்தது.

மண்டபம் நிறைந்த மக்களோடு நடைபெற்ற இந்த நிகழ்வில் உறுதியேற்போடு கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் மாலை 6:00 ற்கு நிறைவு பெற்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா