Untitled Document
March 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வெற்றியின் இரகசியம்..
[Wednesday 2017-03-15 20:00]

வெற்றியை எப்ப‍டி நாம் நேசிக்கிறோமோ அதேபோல் தோல்வியையும் நேசிக்க‍க் கற்றுக்கொள்ள‍ வேண்டும். வாலிபமாக இருந்தாலும் சரி, வயோதிகமாக இருந்தாலும் சரி, நீங்கள் வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் என்றாலும், சுயமாக வேலைதொடங்க எண்ணி இருந்தாலும் உங்கள் நம்பிக்கையில், காரியத்தில் வெற்றிபெற ஒரே தாரக மந்திரம் தான் இருக்கிறது. அதன் பெயர் முயற்சி. ஆனால் வெற்றிக்கு பல வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன?

எண்ணித் துணிக கருமம் என்று கூறியிருக்கிறார்கள் மூதாதையர்கள். சிந்தனை செய்யாமல் தொடங்கும் எந்தக் காரியமும் வீண். செயலில் குதிக்கும்முன் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஒன்றுக்கு பலமுறை திரும்பத் திரும்பச் சிந்திக்க வேண்டும். நேர்மறையாக நல்ல முடிவை எதிர்பார்த்து மட்டுமே செயல்படாமல், எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கவும், லாபம் போல நட்டத்தை சமாளிக்கவும் மனோதைரியத்தை வரவழைத்துக் கொண்டு திடமான முடிவெடுக்க வேண்டும்.

விவேகமில்லாவிட்டால் எல்லாமே வீண் துணிந்தபின் விவேகம்தான் இரண்டாவது தேவை. செய்யலாமா? வேண்டாமா? என்றுமுடிவெடுப்பதற்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு செயலில் இறங்கியபிறகு பின்வாங்கவோ, திகைக்கவோ கூடாது. வேகத்தைவிட விவேகம் முக்கியம். சிறுசிறு முயற்சியாக முன்னோக்கியே அடியெடுத்து வைக்கவேண்டும். ஒவ்வொரு முயற்சிக்கும் ஒரேமாதிரியான யுக்திகளை கையாள்வது தோல்விக்கே வழிவகுக்கும். எனவே பிரச்சினையின் தன்மையை ஆராய்ந்து அதற்குப் பொருத்தமாக யோசித்து அதன்படி செயற்படுவதே வெற்றியைத்தரும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும்

புதிய புதிய சிந்தனைகள் வெற்றியை தேடித்தரும் அடுத்த வழியாகும். எல்லா தொழில்களிலும் போட்டி உண்டு. பழைய பேப்பர், பலசரக்கு வியாபாரம் முதல்பங்குச்சந்தை, தகவல் தொழில்நுட்பம்வரை எல்லாம்போட்டிதான். பரபரப்பான இயக்கத்தில் நாமும் ஒருபந்தயக்குதிரை என்று எண்ணவேண்டும். நமக்கு கடிவாளம் கட்டப்பட்டு இருந்தாலும் இலக்கு ஒன்றே குறி. ஆனால் வழிகள் பல உண்டு. புதிதாக சிந்தித்து செயல்படுத்தவேண்டும். போட்டியாளருக்கு ஏற்ப வாடிக்கையாளருக்கு சலுகை அளிக்கவேண்டும். தரமானபொருட்களை வழங்க வேண்டும்.

தொலைநோக்கு சிந்தனை நிலைநிறுத்தும்

தொலைநோக்கு சிந்தனையே நம்மை நிலை நிறுத்தும். காலம் ஒரு சுழற்சி முறைக்கு உட்பட்டது. இருந்தாலும் பல புதிர்களைக் கொண்டது. ஆகையால் எதிர்காலத்தைக் கணிப்பது கடினம்தான். ஆனால் நாளைய தேவையையும், மாற்றத்தையும் யூகித்து அறிந்துசெயல்பட்டால் வெற்றி கைகூடும். காற்றடிக்கும் நேரத்தில் மாவு விற்கவும் கூடாது, ஊசி தேவைப்படும் இடத்தில் நூல் விற்கவும் கூடாது. காலம், தேவை இரண்டையும் கவனத்தில் கொண்டால் வெற்றி என்பது உங்கள் கைகளில் தவழும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா