Untitled Document
April 20, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
உயர் ரத்த அழுத்த அழுத்தத்தைப் போக்க ஆயுர்வேத மருத்துவம்
[Friday 2017-03-17 21:00]

கறிவேப்பிலைகளை நீர் விட்டு அரைத்துச் சாறு எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். ரத்த அழுத்தம் என்பது சுத்த ரத்த நாளங்களில் உருவாகும் அழுத்த நிலை. இதயத்தால் வெளியேற்றப்பட்ட ரத்தம் ஆர்டெரிஸ் என்று சொல்லக்கூடிய சுத்த ரத்த நாளங்களில் ஏற்படுத்துகிற ஒரு அழுத்த நிலையை ஹைபர்டென்சன் என்கிறோம். இது இரண்டு எண்ணிக்கையில் குறிப்பிடப்படுகிறது. ஒன்று சிஸ்டோலிக் பிளட்பிரஷர். இது மேலே உள்ள எண்ணைக் குறிக்கும். அடுத்தது டயஸ்டோலிக் பிளட் பிரஷர். இது கீழே உள்ள எண்ணைக் குறிக்கும். உதாரணமாக மருத்துவர்கள் 120/80 mm of hg என்று எழுதுவார்கள். இதில் ஒன்றோ, இரண்டோ அல்லது இரண்டுமே அதிகமாக இருக்கலாம்.

பொதுவாக ஒரு மனிதனுக்கு 120/80 என்று ரத்த அழுத்தம் இருக்கும். இந்த ரத்த அழுத்தம் 140/90 என மாறும்போது ஹைபர்டென்சன் என்று குறிப்பிடப்படுகிறது. சிலர் இதை பிரீ ஹைபர்டென்சன் என்று குறிப்பிடுவதும் உண்டு. ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதய நோய் உள்ளதா, சிறுநீரக நோய் உள்ளதா, பக்கவாதம் வரும் வாய்ப்புள்ளதா என்பதையெல்லாம் மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள்.

காரணங்கள் :

உயர் ரத்த அழுத்தத்துக்குப் பல காரணங்கள் உள்ளன. உடலில் சேருகிற நீர், உடலில் சேருகிற உப்பு, சிறுநீரகம், நரம்பு மண்டலம், ரத்த நாளங்கள் வேலை செய்கிற விதம், ஹார்மோன்கள் வேலை செய்கிற விதம் போன்றவை முக்கியமானவை. வயது ஆக ஆக ரத்த அழுத்தம் சற்று அதிகரிக்கும். உயர் ரத்த நாளங்கள் கனமாவதே இதற்குக் காரணம். உயர் ரத்த அழுத்தத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் பக்கவாதம், அதனால் பேச்சுத் தடை, மாரடைப்பு, இதயப் பலவீனம், சிறுநீரக நோய், ஏன் மரணம்கூட ஏற்படலாம்.

உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் உள்ளவர்களுக்கு, படபடப்பு உள்ளவர்களுக்கு, அதிகமாக மது அருந்துபவர்களுக்கு, உப்பு, ஊறுகாய், வடகம், வத்தல் போன்றவற்றை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, குடும்பத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, புகைபிடிப்பவர்களுக்கு, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கெல்லாம் ரத்த அழுத்த நோய் வரலாம். சிலருக்கு எந்தக் காரணத்தால் வருகிறது என்பது தெரியாது. இதை எசன்சியல் ஹைபர்டென்ஷன் என்று குறிப்பிடுவார்கள். சில நேரம் மற்ற உறுப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்பால் ரத்த அழுத்தம் அதிகமாகும்.

மறைமுக ரத்த அழுத்தம்

1. சிறுநீரகக் கோளாறுகள்

2. அட்ரீனல் சுரப்பி பிரச்சினைகள்

3. பாரா தைராய்டு சுரப்பி அதிகமாகச் சுரத்தல்

4. கர்ப்பக் காலத்தில் உண்டாகும் நோய், கர்ப்பத் தடுப்பு மாத்திரைகள், சாதாரண ஜலதோஷத் துக்குப் பயன்படும் மாத்திரைகள், தலைவலிக்குப் பயன்படும் மாத்திரைகள், பிறவியிலேயே சிறுநீரகத்துக்குச் செல்லும் சுத்த ரத்தக் குழாய்கள் சுருங்கி இருத்தல்.

பல நேரம் உயர் ரத்த அழுத்தத்துக்கு எந்த அறிகுறியும் இருக்காது. இதைக் கருவி மூலம் கண்டுபிடித்தால் மட்டுமே முடியும். பல நோயாளிகளும் தலைவலி இல்லை, தலை சுற்றுவதில்லை என்று சொல்வார் கள். முக்கியமாக நோயாளிகள் தெரிந்துகொள்ள வேண்டியது, பல நேரம் ரத்த அழுத்தத்துக்கு எந்த அறிகுறியும் காணப்படுவ தில்லை. சில நேரம் மாரடைப்பு வந்த பிறகு, சிறு நீரக நோய் வந்த பிறகு, பக்கவாதம் வந்த பிறகுதான் ரத்த அழுத்தம் இருப்பது தெரிய வரும். அதுவரை ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்திருக்க மாட்டார்கள். மேலிகனென்ட் ஹைபர்டென்ஷன் என்று ஒரு நோய் உண்டு. இதில் மிக அதிக நிலையில் ரத்த அழுத்தம் காணப்படும்.

இவர் களுக்கு வேண்டு மானால் அதிகத் தலைவலி, வாந்தி, பார்வையில் வேறுபாடு, மூக்கில் இருந்து ரத்தம் ஒழுகுதல் போன்றவை ஏற்படலாம். ஒரு நோயாளியைப் படுக்க வைத்து, உட்கார வைத்து, நிற்க வைத்து, இரு கைகளிலும் ரத்த அழுத்தத்தைப் பார்க்க வேண்டும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் ரத்த அழுத்தப் பரிசோதனையை மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது செய்துகொள்ள வேண்டும். விவரங்களை ஒரு தாளில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கிட்னியில் இருந்து புரதம் வெளியேறுகிறதா, கண் பார்வை சரியாக உள்ளதா, கொழுப்புச் சத்து எவ்வாறு உள்ளது என்பதைப் பரிசோதிக்க வேண்டும். இ.சி.ஜி., எக்கோ போன்றவற்றை எடுத்துக்கொண்டால் நல்லது. நவீன மருத்துவத்தில் உயிர் காக்கும் மருந்துகள் உள்ளன.

ஆயுர்வேத அணுகுமுறை :

ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொண்டால் வாழ்க்கை முறை மாற்றம் அவசியம். எளிமையான உணவு வகைகளை ஆயுர்வேதம் வலியுறுத்து கிறது. பொட்டாசியம் கலந்த உணவுகள், நார்ச்சத்து கலந்த உணவுகள், அதிகமாகத் தண்ணீர் பருகுதல், உடற்பயிற்சி செய்தல், நம் உள்ளே இழுக்கும் மூச்சையும் வெளியே விடும் மூச்சையும் உற்று நோக்குதல், ஆகியவை பரிந்துரைக் கப்படுகின்றன.

புகைபிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவதைக் கட்டாயமாக நிறுத்த வேண்டும், ஒரு நாளைக்கு 1.5 கிராம் அளவுக்கு உப்பைக் குறைத்தல், மனதை அமைதிப் படுத்துதல், தியானம் செய்தல், உடல் எடையைக் குறைக்கச் சொல்லுதல் போன்றவற்றைப் பரிந்துரைக்கலாம். சில நேரம் மாரடைப்பு, பார்வைத் திறன் இழத்தல், காலுக்கு ரத்தம் போவது தடைபடுதல் போன்றவை எல்லாம் வரும் என்பதால் நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். அடிக்கடி மருத்துவரிடம் சென்று ரத்தக் கொதிப்பைப் பரிசோதிக்க வேண்டும்.

ஆயுர்வேத மருந்துகள் :

கறிவேப்பிலைகளை நீர் விட்டு அரைத்துச் சாறு எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஜடமாஞ்சி வேர், கற்பூரம், லவங்கப்பட் டைகளை நன்றாக இடித்துப் போட்டு நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் குறைந்த ரத்த அழுத்தம் மாறும்

பசும் பாலில் 2 பல் பூண்டை நசுக்கிப் போட்டுக் காய்ச்சி இரவில் குடித்து வந்தால் ரத்தக் கொதிப்பும், கொழுப்பும் குறையும்.

டீ, காப்பிக்குப் பதிலாக ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சைச் சாறு பிழிந்து சாப்பிட் டுவந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.

எலுமிச்சை சாறு, இஞ்சிச் சாறு, பூண்டுச் சாறு, ஆப்பிள் பழச் சாறு ஆகிய சாறுகளில் தலா ஒரு கப் வீதம் எடுத்து ஒன்றாகக் கலந்து மிதமான சூட்டில் சூடாக்கி இறக்க வேண்டும். ஆறிய பின் அதனுடன் மூன்று மேசைக் கரண்டி தேன் கலந்து ஒரு கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். அதை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு குறைந்து ரத்தக் கொதிப்பும் குறையும்.

முருங்கை இலை சூரணம் :

பாலில் இரண்டு வேளை வெண்தாமரை பொடி இஞ்சி, முசுமுசுக்கை, சர்ப்பகந்தா சூரணம் 3 கிராம் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

வெண்தாமரை சூரணம், முருங்கை இலை சூரணம் கலந்து கொடுக்க வேண்டும்.

நெருஞ்சில் முள் கஷாயத்தில் கடுக்காய் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

சாரணை வேர் கஷாயத்தில் தான்வந்தரக் குளிகையும், வெண்தாமரை மாத்திரையும் சேர்த்துக் கொடுக்க ரத்த அழுத்தம் குறையும்.

வெள்ளரி, நெல்லி, கேரட், தக்காளி, திராட்சை, கொத்தமல்லி, அன்னாசி, பேரீச்சை, ஆரஞ்சு, முளைகட்டிய தானியங்கள், முருங்கை, வெங்காயம், பூண்டு, இளநீர், வாழைத்தண்டு, கோதுமைப்புல் சாறு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சாப்பிட உயர் ரத்த அழுத்தம் குறையும்.

நெல்லி வற்றலும், பச்சைப் பயிறும் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் இட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி காலை, மாலை 100 மில்லி வீதம் சாப்பிட்டுவந்தால் ரத்த அழுத்தம் குறையும்.

அகத்திக் கீரை, சுண்ட வத்தல் ஆகியவற்றைச் சமைத்து அடிக்கடி உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.

  
  
   Bookmark and Share Seithy.com



தினமும் இரவில் குளித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
[Friday 2024-04-19 16:00]

காலையில் குளிப்பதை விட இரவில் தூங்கும் முன்பு குளித்தால் ஏற்படும் நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உடலின் பாகங்களை தூய்மையாக வைத்திருக்க தினமும் குளிப்பது மிகவும் அவசியமாகும். உடல் சூட்டையும் சரி செய்ய உதவுகின்றது. தினமும் தலைக்கு குளிப்பதால் சிலருக்கு தலைவலி மற்றும் சைனஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். நாம் காலையில் குளிப்பதை விட இரவு நேரத்தில் குளித்தால் பல நன்மைகள் கிடைக்கும்.



ஆஸ்துமா ஏற்படுவதற்கான காரணம் என்னனு தெரியுமா?
[Thursday 2024-04-18 18:00]

ஆஸ்துமா நோய் எவ்வாறு ஏற்படுகிறது இதற்கான அறிகுறிகள் என்ன? இதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த நோயை வீசிங் இளைப்பு போன்ற பெயர்களால் அழைப்பார்கள். இது சுவாசப் பாதைக்குள் காற்று நுழையும் போது காற்றில் உள்ள தூசிகள் போன்றவற்றை நமது நாசிகளுக்குள் உள்ள ரோமங்கள் தடுக்கின்றன.



கோடை காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
[Wednesday 2024-04-17 15:00]

கோடை காலத்தில் தண்ணீர் எவ்வளவு பருக வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நமது உடலில் ஏறத்தாழ 70 சதவீதம் அளவுக்கு நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. நம் உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாகவும், வியர்வை மூலமாகவும் வெளியேற்றுவதற்கு இந்த நீர்ச்சத்து உதவியாக இருக்கின்றது. கோடை காலத்தில் அதிக வெயில் காரணமாக நீரிழப்பு ஏற்படுகின்றது. உடம்பில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டாமல் இருக்க அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.



காலை உணவாக சாதம் சாப்பிடலாமா?
[Tuesday 2024-04-16 18:00]

காலை உணவுக்கு அரிசி சாதம் சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு பதில் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இன்று பலரும் காலை உணவாக சாதம் எடுத்துக் கொள்ளும் நிலையில், இதனால் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அதிகமாகவே இருக்கின்றது. பல நன்மைகளை நமக்கு அளித்தாலும் காலை உணவாக சாதம் சாப்பிடுவது நல்லதல்ல என்று கூறப்படுகின்றது. அப்படி சாப்பிட்டால் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம்.



மாம்பழம் சாப்பிட்டால் தீங்கா?
[Monday 2024-04-15 18:00]

இயற்கை மற்றும் செயற்கை முறையில் பழுத்த மாம்பழங்களை எளிதாக கண்டுபிடிக்க சில டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம். முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழத்தை பழங்களின் ராஜா என்றும் கூட அழைப்பார்கள். கோடை காலத்தில் மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று ரசாயனங்கள் தெளித்து பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.



கல்லீரலை சுத்தப்படுத்தும் கோவக்காய் குழம்பு!
[Sunday 2024-04-14 18:00]

கோவக்காய் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக காணப்படுகின்றது. இது கல்லீரலை பாதுகாப்பதில் முக்கியமாக ஒரு காயாக பார்க்கப்படுகின்றது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உணவுகளில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் வெளியேறி கல்லீரல் வீக்கம் குறைக்க பெரிதும் துணைப்புரிகின்றது. இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற தாதுக்கள் கோவக்காயில் அதிகமாக இருக்கிறது. இவை எலும்பு வளர்ச்சி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது.



செரிமான கோளாறுக்கு தீர்வு கொடுக்கும் பூண்டு ஊறுகாய்!
[Saturday 2024-04-13 18:00]

பொதுவாகவே அனைவரும் சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் இன்றியமையாத பொருளாக பூண்டு காணப்படுகின்றது. பூண்டு உடலுக்கு மிகவும் நல்லது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல மருத்துவ குணங்கள் உள்ளமை அனைவரும் அறிந்ததே. பூண்டானது நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது. வாயுத் தொல்லை, நெஞ்சுக்குத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரும்.



சுண்டைக்காய்க்குள் மறைந்திருக்கும் ரகசியம்!
[Friday 2024-04-12 18:00]

காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்று சொன்னால் மிகையாகாது. கசப்பு சுவை கொண்ட இந்த சுண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.சுண்டை வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றி உடலை கட்டுக்கோப்புடன் காத்துக்கொள்ள உதவுகிறது.



தொப்பை பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் கறிவேப்பிலை குழம்பு!
[Thursday 2024-04-11 16:00]

பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையைக் குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், என்னதான் முயற்சி செய்தாலும் பலருக்கு தொப்பையை குறைக்க முடியவில்லையே என்ற கவலை இருக்கத்ததான் செய்கின்றது. அப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமாக முறையில் தொப்பையை குறைக்கம் கறிவேப்பிலை குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



கொரியன் பெண்களின் அழகு ரகசியம் என்னனு தெரியுமா?
[Wednesday 2024-04-10 18:00]

சரும பராமரிப்பு என்பது இப்போது பரவலாக காணப்படுகின்றது. இந்த பராமரிப்பு ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்த சரும அழகுக்குறிப்புக்களை கொரியன் பெண்கள் எந்த விதமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



தினமும் ஒரு துளி எண்ணெய் தொப்புளில் விட்டால் என்ன பயன் தெரியுமா?
[Tuesday 2024-04-09 18:00]

நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நோய் வருவதற்கும் நாம் தான் காரணமாக இருக்கின்றோம். நமது உடலில் ஒரு பிரச்சனை வருவதற்கு முன்னர் அதை இல்லாமல் செய்வதற்கு நம்மிடம் இருக்கும் இயற்கையான விஷயங்களை செய்ய வேண்டும். அப்படியான ஒரு விஷயத்தை தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். தேங்காய் எண்ணெயை தொப்புளில் விடுவதால் என்ன நன்மை கிடைக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளலாம்.



அரிசி தண்ணீரை வைத்து இவ்வளவு விஷயங்கள் செய்யலாமா?
[Monday 2024-04-08 18:00]

பொதுவாகவே அனைவரும் வீட்டில் அரிசி கழுவிய தண்ணீரை கீழே ஊற்றிவிடுவோம். ஆனால் நம்மில் பலரும் அறியாத அளப்பரிய நன்மைகளை இந்த அரிசி கழுவிய தண்ணீர் கொண்டுள்ளது. கூந்தல், சருமம், முகம் ஆகிய அனைத்திற்கும் அழகு சேர்க்கும் ரகசியங்களை நாம் அன்றாடம் வீணாக்கும் அரிசி தண்ணீர் கொண்டுள்ளது. இதனை சரும பொலிவுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் எவ்வாறு பயன்படுத்தலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



குழந்தைகளை ஏசி-அறையில் தூங்க வைக்கலாமா?
[Sunday 2024-04-07 16:00]

கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏசி போட்டு தூங்க வைக்கும் பெற்றோர்களுக்கான பதிவே இதுவாகும். கோடை காலம் நடந்து கொண்டிருப்பதால் வெயிலின் தாக்கமும் அதிகமாகவே இருந்து வருகின்றது. இதனை சமாளிக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தவித்து வருகின்றனர்.



வெள்ளி கொலுசு அணிவதன் நன்மைகள்!
[Saturday 2024-04-06 16:00]

பொதுவாகவே நமது முன்னோர்கள் எதையும் காரணம் இல்லாமல் சொல்லி வைக்கவில்லை. அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் துல்லியமான அறிவியல் காரணம் கட்டாயம் இருக்கும். அந்த வகையில் கலாசாரத்தில் பெண் குழந்தைகள் காலில் வெள்ளி கொலுசு அணியும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. எப்போதும் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழர்கள் காலில் அணியும் கொலுசு வெள்ளியில் தான் அணிய வேண்டும் என கூறியமைக்கு என்ன காரணம் என சிந்தித்திருக்கின்றீர்களா? வெள்ளியில் கொலுசு அணிவதனால் ஏற்படும் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.



சரும பொலிவிற்கான அழகுக்குறிப்புக்கள்!
[Saturday 2024-04-06 07:00]

பெண்கள் அழகாக இருப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் நேரத்தை செலவு செய்கின்றனர். செலவு செய்யும் அந்த நேரத்தை கொஞ்சம் பயனுள்ளதாக எப்படி மாற்றலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இதற்காக நீங்கள் வீட்டில் காணப்படும் சமயலறை பொருட்களை உபயோகித்தால் போதும். இந்த வீட்டு அழகுக்கு பொருட்கள் மூலம் முகம் பளீச் என்று காணப்படுகின்றது.


Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா