Untitled Document
April 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
திறப்பு விழாவிற்கு தயாராகிறது உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோருக்கான அலுவலகத்தினுடனான தொழிற்பயிற்சி கட்டடம்: Top News
[Monday 2017-03-20 19:00]

வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரினாலும் விபத்துக்களாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் பெரும் சவால்களின் மத்தியில் வாழ்வினை கொண்டு செல்லும் உறுப்பினர்களின் நலனை கவனிக்க அவர்களாலேயே உருவாக்கப்பட்டு இயங்கி வரும் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிபுற்றோர் அமைப்பு தன்பணிகளை விரிவாக்கி செயற்பட அமையவிருக்கும் அலுவலகத்தினுடனான தொழிற்பயிற்சி கட்டிட நிர்மாணவேலைகள் வெறும் 2 மாதங்களிலேயே முடிவடைந்து 30.03.2017 பிரமாண்டமாக திறந்து வைப்பதற்கான வேலைகள்நடைபெற்று வருகின்றன.

கட்டிடத் தொகுதி நிர்மாணத்திற்கான முழுப்பொறுப்பை கனடா வாழ் ஈழ உறவுகளும் ஏனைய நல்லுள்ளம் கொண்ட உறவுகளும் ஏற்றிருந்தனர். கனடா பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தினரும் பிரம்ரன் தமிழ் முதியோர் அமைப்பினரும் கனடா வாழவைப்போம் , கனடா உறவுகளான V.அஜந்தன் , S.துசிதா , தாஸ் கதிரமலை ஆகியோரும் சுவிஸ் வலே தமிழ்சங்கம் , பிரான்ஸ் ஈழவர் இணைந்து இதற்கு தேவையான 55 லட்சத்திற்கு மேற்பட்ட தொகையை திரட்டிவழங்கியுள்ளனர். இதற்காக பங்களிப்பு நல்கிய அனைத்து நல்லுள்ளங்களின் ஆதரவுக்கரங்களையும் அன்புடன் பற்றிக்கொள்வதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கழுத்துக்கு கீழே இடுப்புக்கு கீழே இயக்கம் அற்றவர்கள் இவ்வமைப்பால் பராமரிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்தைதீவு வவுனியா மன்னார் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகியமாவட்டங்களில் நிர்வாக பொறுப்பாளர்களைக் கொண்டு அவ்வாறு பாதிப்புற்றுள்ளோரை இவ்வமைப்பு தனது கவனப்பிற்குள் கொண்டுவந்து அவர்களுக்கான செயற்திட்டங்களான சிறுதுளி செயற்திட்டம் , நம்பிக்கை செயற்திட்டம் , மாணவர்களுக்கான கல்வி செயற்திட்டம் என்று பல்வேறு செயற்திட்டங்களை புலம்பெயர் உறவுகள் அமைப்புகள் இடம் இருந்து உதவிகளை பெற்று சிறப்பாக செயற்படுத்தி வருகின்றனர் இச்செயற்பாடுகளை இணைக்கும் தலைமையகமாகவும் பாதிப்புற்றோருக்கான சுயதொழில் பயிற்சிகளை வழங்குதல் முதல் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் இங்கிருந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

கட்டிடம் தயாராகியுள்ள நிலையில் தொழில் பயிற்சி உபகரணங்களை பெற்றுக்கொள்ளல் மற்றும் பாடநெறிகள் போன்றவை முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு தேவையான மேலதிக நிதியை தமிழ் நலனில்அக்கறையுள்ள தமிழ் உறவுகள் அனைவரும் தந்துதவுவார்கள் என்றும் இப்பணியை விரைந்து முடிக்க அனைவரின்ஒத்துழைப்பையும் வேண்டி நிற்பதாக உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர் அமைப்பினர் தெரிவித்தனர்.இதற்கான பணியை அனைவரிடமும் கேட்டு இருப்பதாக தெரியப்படுத்தினார்கள் இப்புனிதப்பணியில் தம்மையும் இணைத்து பங்களிப்பு செய்ய விரும்பும் நல் உள்ளம் கொணடவர்கள் அனைவரையும்உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு 30.03.2017 காலை திறப்புவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.தொடர்புக்கு அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம் :- 0213900202, 0774761192

அல்லது மின்னஞ்சல் முகவரி :- uyirilaisci.org@gmail.com ​

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா