Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
டென்மார்கில் நடைபெற்ற் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு: Top News
[Sunday 2017-05-14 20:00]

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்துடன் மாலதி தமிழ்க் கலைக்கூடம் இணைந்து நடாத்திய இசை, நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு 13.05.2017 சனிக்கிழமை அன்று டென்மார்க்கின் கேர்ணிங் நகரில் இடம்பெற்றது. தொடக்க நிகழ்வாக பொதுச்சுடரேற்றமும் நடராஜருக்கான விளக்கேற்றமும் இடம்பெற்றதனை தொடர்ந்து தாயக மீட்புப் போரிலே தங்களை வித்தாக்கிச் சென்ற மாவீரர்களுக்கான அகவணக்கம் இடம்பெற்றது. வரவேற்பு உரையினை மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் தலைமை நிர்வாகி திரு. அருளானந்தராசா அவர்கள் வழங்கினார்.

ஆற்றுகைத் தேர்வின் முதல் நிகழ்வாக வாய்ப்பாடுத் தேர்வு இடம்பெற்றது. இத்தேர்வில் நாதஸ்வரூப இசைக்கல்லூரி நிறுவன இசை ஆசிரியர் திருமதி. தர்மவதி இராமச்சந்திர மூர்த்தி அவர்களின் மாணவி திருமதி தாண்யா துஷந்தன் அவர்களும், இரண்டாம் நிகழ்வாக நாதோபாஷனா நிறுவன வயலின் ஆசிரியர் திருமதி. காயத்ரி சண்முகம் அவர்களின் மாணவி செல்வி விபேக்கா கலாதரன் அவர்களும், மூன்றாம் நிகழ்வாக கீதாலய பரதக் கலைக்கல்லூரி நிறுவன நடன ஆசிரியர் திருமதி. கிர்ஸ்ணபிரியா கோபிநேசன் அவர்களின் மாணவி திருமதி. சிவதர்சினி பாஸ்கரன் அவர்களும், இறுதி நிகழ்வாக சாகித்ய ஸ்ருதி லயா இசைக்கல்லூரி நிறுவன இசை ஆசிரியர் திருமதி. குமுதினி பிறித்விராஜ் அவர்களின் மாணவி செல்வி சாய்சிந்து தங்கராஜா அவர்களும் பங்குபற்றியிருந்தனர்.

இவர்களுக்கான பக்கவாத்தியங்களையும், குரலிசைகளையும் பிரபல்யமான சங்கீத வித்துவான்களும், பக்கவாத்திய கலைஞர்களும் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாணவர்களும் தமது துறையில் கற்ற அனைத்து விடயங்களையும் தமக்கு கொடுக்கப்பட்ட குறித்த நேரத்தில் ஒப்புவித்து நடுவர்களின் பாராட்டுதல்களைப் பெற்றிருந்தனர். அத்துடன் நிகழ்வில் பங்கு கொண்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர், நண்பர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்கியிருந்தனர்.

நிகழ்வின் சிறப்புரையை அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் பொறுப்பாளர் திரு. சங்கர் அவர்களும் டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தின் பொறுப்பாளர் திரு. மகேஸ்வரன் அவர்களும் ஆற்றியிருந்தார்கள். ஒவ்வொரு நாடுகளிலும் இப்பணியை அர்ப்பணிப்புடன் நேர்த்தியாகவும், திறம்படவும் செய்து வருகின்ற செயற்பாட்டாளர்களுக்கும், உறுதுணையாக இருக்கும் தமிழர் அமைப்புகளுக்கும் இவர்கள் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்கள்.

இறுதியாக நன்றியுரையினை மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திருமதி அபிராமி விசாகன் அவர்கள் வழங்கியதுடன், ஆற்றுகைத் தேர்வு இனிதே நிறைவு பெற்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா