Untitled Document
April 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பாலியல் கொடுமை செய்த சாமியார் உறுப்பை வெட்டிய பெண்ணுக்கு குவியும் பாராட்டு!
[Saturday 2017-05-20 18:00]

தனது தந்தையை குணப்படுத்துவதாக கூறி வீட்டுக்குள் நுழைந்து தன்னையும், தனது தாயையும் சாமியார் சீரழித்துவிட்டதாக அந்த பெண் கூறியுள்ளார் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஹரிசுவாமி. 54 வயதாகும் இவர், கொல்லம் நகரிலுள்ள ஆசிரமத்தை சேர்ந்த சாமியாராகும். இவரது ஆணுறுப்பை 23 வயதாகும் சட்டக் கல்லூரி மாணவி வெட்டி எறிந்துவிட்டார். இந்த சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரிசுவாமியை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிலர் அனுமதித்தனர். அப்போது அவரது முக்கிய உறுப்பு 90 சதவீதம் அறுக்கப்பட்டிருந்தது. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும்உறுப்பை மீண்டும் பொருத்த முடியாது என டாக்டர்கள் கை விரித்து விட்டனர்.

ஹரிசுவாமிக்கும் ஒரு பெண்மணிக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே கள்ள உறவு இருந்துள்ளது. இந்த நிலையில், அவ்வப்போது பெண்மணியின் வீட்டுக்கு வந்த சென்ற சாமியார் ஒருகட்டத்தில் தாயுடன் நிறுத்திக் கொள்ளாமல் அந்த பெண்ணின் மகளையும் பாலியல் உறவில் ஈடுபடுத்தியுள்ளார். அந்த மகள்தான் இப்போது கோபத்தில் ஹரிசுவாமி ஆணுறுப்பை வெட்டிவிட்டார்.

போலீசாரிடம் மாணவி கொடுத்த வாக்குமூலத்தில், தான் 12ம் வகுப்பு படிக்கும்போது தனது தந்தைக்கு பக்கவாதம் ஏற்பட்டதாகவும், பில்லி, சூனியம் போன்றவற்றால் அவருக்கு இப்படி ஆனதாக நம்பி தனது தாயார் ஹரிசுவாமிவை வீட்டுக்கு அழைத்து வந்து பூஜைகள் செய்ய வைத்ததாகவும் கூறியுள்ளார்.

தனது தந்தை பக்கவாதத்தில் இருந்ததால், தனது தாய், ஹரிசுவாமியுடன் கள்ள உறவு கொண்டதாகவும், அதன்பிறகு தன்னையும் சாமியார் பலாத்காரம் செய்ய தொடங்கியதாகவும் வேதனையுடன் கூறியுள்ளார் அந்த மாணவி.

மாணவி 12ம் வகுப்பு படிக்கும்போது இருந்தே சாமியார் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதாக புகார் கூறியுள்ளதால் பாஸ்கோ சட்டத்தின் கீழ் (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன்னை கற்பழிக்க முயன்ற சாமியாரின் உறுப்பை துண்டித்த அந்த இளம்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகிறது. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் இளம்பெண்ணின் தீரச்செயலை பாராட்டி உள்ளார்.

இதேபோலத்தான் சமூக வலைத்தளங்களிலும் இருவேறுபட்ட கருத்துக்கள் உலவுகின்றன. மாணவி முன்கூட்டியே சட்ட உதவியை நாடியிருக்க வேண்டும், சட்டத்தை கையில் எடுப்பது சரியான உதாரணம் கிடையாது, யார் வேண்டுமானாலும் இதுபோல செய்துவிட்டு பொய்யாக கூட பழிபோட்டுவிட முடியும் என்று சிலர் கூறுகிறார்கள். சிலரோ, சட்ட உதவியை நாடியிருந்தாலும் அந்த பெண்ணுக்கு அது கிடைத்திருக்குமா என்பது தெரியாது என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள். இந்த சம்பவம் கேரளத்தில் வாத, விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா