Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு லண்டனில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்: Top News
[Thursday 2017-08-31 08:00]

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் நேற்றைய தினம் புலம்பெயர் தமிழர்களினால் அறவழியில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட குறித்த போராட்டமானது பிரித்தானிய பிரதமரின் காரியாலயத்திற்கு முன்பாக நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் காணாமல் போனவர்கள் எங்கே ?? அவர்கள் தொடர்பான பதில்களை வழங்கு ??ஐநாவே ஏன் இந்த அமைதி?? பிரிட்டன் அரசே இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடு ??என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியும் புலிக்கொடியினை ஏந்தியவாறும் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் காலநிலை இடையூறு விளைவித்ததையும் பொருட்படுத்தாது உணர்வு பூர்வமான கோஷங்களை எழுப்பினார்கள்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசு விரைவில் பதில்களை வழங்க பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரிட்டன் பிரதமரிடம் மகஜர் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா