Untitled Document
March 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நல்லூரில் தியாகதீபம் திலீபனுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி! Top News
[Tuesday 2017-09-26 19:00]

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

திலீபன் வீரச்சாவடைவடைந்த நல்லூர் ஆலய வடக்கு வீதியில், வீரச்சாவு நிகழ்ந்த நேரமான காலை 10.48 மணியளவில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதையடுத்து, நல்லூர் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில், ஈகச்சுடர் ஏற்றி, மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் கலந்து கொண்டு திலீபனுக்கு வணக்கம் செலுத்தினர்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலத்துக்குப் பின்னர், தியாகதீபம் திலீபனின் நினைவு நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டமை இதுவே முதல்முறையாகும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா