Untitled Document
April 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அனைவரையும் அழித்துவிடுவேன்,மூதூர் கிழக்கு மக்களை அச்சுறுத்திய ஆளுநரின் மனைவி! - காளியம்மா காப்பாற்று என்று கதறிய தமிழ் மக்கள் Top News
[Saturday 2017-12-30 09:00]

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கூனித்தீவு கிராம சேவகர் பிரிவுள்ள மத்தளமலை ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்களை கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி அச்சுறுத்தியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் முன்னிலையிலேயே மத்தளமலையில் அமைந்துள்ள ஆலய வளாகத்தில் இருந்த பெண்கள் உட்பட தமிழர்களை கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டித் தீர்த்து அனைவரையும் அழித்துவிடுவதாகவும் அச்சுறுத்தி இருக்கின்றார்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சூடைகுடா கிராமத்தில் காணப்படும் குன்றத்தூர் மத்தளமலை திருக்குரமன் ஆலயத்திற்கு சென்ற கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவியான தீப்தி போகொல்லாகம, அங்கிருந்த மக்களுடன் முறுகலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த வெள்ளிகிழமை இடம்பெற்றுள்ளது. மத்தளமலை திருக்குரமன் ஆலயம் அமைந்துள்ள பகுதியில், பௌத்த விகாரை இருந்ததாகத் தெரிவித்தே ஆளுநரின் மனைவி பிரச்சினைப்படுத்தியிருக்கின்றார்.

இதன்போது குறித்த பிரதேசம் தமிழ் பிரதேசம் என்றும் இங்கு நீண்டகாலமாக தாங்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் மக்கள் தெரிவித்து எதிர்ப்பை வெளியிட்ட கிழக்கு மாகாண ஆளுநருடன் சென்றிருந்த ஆளுநரின் மனைவி மக்களை தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்ததுடன், மக்களை அடிக்கவும் முயன்றுள்ளார்.

இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டபோது அங்கிருந்த பொங்கல் பானைக்கு முன்பு போடப்பட்டிருந்த கோலத்தை செருப்பால் மிதித்து பொங்கல் பானையையும் உதைத்துத் தள்ள முற்பட்டார். ஆனால் அடுப்பில் இருந்த பொங்கல் பானையை காலால் உதைக்க முடியாதவாறு மக்கள் தடுத்தனர்.

கிழக்கிலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை போகும் போகும் மக்கள் இந்த கோவிலில் வழிப்பாட்ட பின்னரே போய்வந்ததாக தெரிவிக்கும் சூடைகுடா கிராம மக்கள் இந்த நிலையில் திடீரென பௌத்த பிக்குகள் இருவர் கடந்தவாரம் கோயிலுக்கு வந்துசென்றத அடுத்து பிரச்சனை ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

சூடைகுடா கிராமத்தில் காணப்படும் குன்றத்தூர் மத்தளமலை திருக்குரமன் ஆலயம் மற்றும் அதனை ஒட்டியதாக இருக்கம் பாதாள வைரவர் ஆலயம் என்பன 1974 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே இருப்பதாகவும், அங்கு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் ஆலய பரிபாலன சபை பொருளாளர் சந்திரமோகன் ஐ.பி.சி தமிழுக்குத் தெரிவித்தார்.

யுத்தம் காரணமாக இந்த கோவிலை பதிவு செய்யவில்லை என்ற போதிலும் நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த கோவிலை பதிவுசெய்து, அதன்பின்னர் அரச நிதி உதவிகளுடன் கட்டுமாணப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோவில் வளாகம் போதுமானதாக இல்லை என்பதால் கோயில் வளாகத்தை சூழ அமைந்துள்ள 10 மீற்றருக்கு உட்பட்ட பகுதிகள் டிசெம்பர் 6 ஆம் திகதி துப்புரவுசெய்து, மூதூர் பிரதேச சபையின் உதவியுடன் கோயில் இருக்கும் இடத்தில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் கிணறு தோண்டப்பட்டதாகவும் ஆலய பரிபாலன சபை அறிவித்துள்ளன.

அதேவேளை ஆலயத்திற்கு வருவதற்காக 81 படிகளும் அமைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் செவ்வாய் அன்று பௌத்த பிக்குமார் இருவர் அங்கு வந்து சென்றதை அடுத்து அன்றைய தினம் மாலை அங்கு வந்த பொலிஸார் கிணறை தோண்டுவதற்கும், ஆலயத்தை துப்புரவு செய்வதற்கம் தடை விதித்துள்ளனர்.

இதற்காக மூதூர் நீதவான் நீதிமன்றில் தடை உத்தரவொன்றையும் பொலிசார் பெற்றிருந்ததாகவும் சூடைக்காடு கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை இந்த சம்பவத்தை அடுத்து, கல்வி, வனஇலாகா, தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளும் வந்து ஆலயம் அமைந்துள்ள பகுதி தங்களுக்குரியது என்று உரிமை கோரியும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 22 ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் அங்கு வந்த கிழக்கு மாகாண ஆளுந ரோஹித்த போகொல்லாகம ஆலய வளாகத்தில் புதிதாக மேற்கொள்ளப்படும் கட்டுமாணப் பணிகளை நிறுத்தமாறு கேட்டுக்கொண்டதுடன் தொல்பொருள் திணைக்களத்துடன் கதைத்து பிரச்சனைக்கு முடிவு காண்பதாகக் கூறியுள்ளார்.

ஆளுநர் இவ்வாறு ஆலய பரிபாலசபை மற்றும் கிராம மக்களுடன் கதைத்துக்கொண்டிருக்கையில், அங்கு வந்திருந்த ஆளுநரின் மனை கிராம மக்களை அச்சுறுத்திச் சென்றிருக்கின்றார். இதற்கு எதிராக பொலிசார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்ததாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா