Untitled Document
April 19, 2024 [GMT]
டூத்பேஸ்ட்டை விட தேங்காய் எண்ணெய் தான் சிறந்தது என்கின்றனர் அயர்லாந்துகாரர்கள்!
[Tuesday 2016-02-09 23:00]

அயர்லாந்தில் உள்ள ஏத்லோன் தொழில்நுட்ப மையம் நடத்திய ஆராய்ச்சியில் நீங்கள் பயன்படுத்தும் டூத்பேஸ்ட்டை விட ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் நல்ல பயனளிக்கிறது என கண்டறியப்பட்டது.

தேங்காய் எண்ணெய் எப்படி?

தேங்காய் எண்ணெய் உங்கள் பற்களில் சுத்தப்படுத்தவும், சொத்தை போன்ற சேதம் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

பக்கவிளைவுகள்..


பூண்டுடன் பால் சேர்த்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
[Monday 2016-02-08 07:00]

சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு பல்வேறு நோய்களை விரட்டும் மருந்தாக செயல்படுகிறது. பூண்டு இதயநோயுடன் போராடி இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது, மேலும் ஜலதோஷத்தை குணமாக்க உதவி புரிகிறது. நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறுதுணையாய் நிற்கும் பூண்டு புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது. பூண்டில் விட்டமின்கள் ஏ, பி1, பி2, பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, தாமிரசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களும் நிரம்பி உள்ளன. இந்த பூண்டுடன் பால் சேர்த்து குடித்தால் சிலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.


இந்திய தாம்பத்ய வாழ்வியல் கலாசாரப்படி..! வயதில் மூத்த மனைவி வாழ்க்கைக்கு வரமா!
[Sunday 2016-02-07 19:00]

இந்திய தாம்பத்ய வாழ்வியல் கலாசாரப்படி திருமணத் தம்பதிகளில் பெண்ணிற்கு வயது குறைவாகவும், ஆணிற்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டன. தன்னோடு வாழ்க்கையில் இணையும் பெண்ணை ஆண்தான் வழிநடத்தவேண்டும் என்பதாலும், உலக அனுபவம் ஆண்களுக்கு அதிகம் என்பதாலும் கணவர், மனைவியைவிட வயதில் சற்று அதிகமானவராக இருக்கவேண்டும் என்ற நியதி வகுக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அப்போதும் பெண்கள் சிந்திக்கும் திறன் படைத்தவர்களாகவே இருந்தபோதிலும் அவர்களின் சிந்தனையை அவ்வளவாக அங்கீகரிக்கவில்லை. எதிர்த்து கேள்வி கேட்பதை தடுத்தார்கள். எப்போதும் அடங்கி நடக்கவேண்டும் என்றார்கள். அதனால் வயதிலும் தன்னைவிட பெண் குறைவாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அதற்காகத்தான் தங்களைவிட வயது குறைந்த பெண்களை திருமணம் செய்தார்கள் என்ற கருத்தொன்று உண்டு.


இரவு உணவுக்கு பின் வாழைப்பழம்..!
[Saturday 2016-02-06 07:00]

இரவு உணவினை அதிகமாக சாப்பிட்டுவிட்டால், அந்த உணவு செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக வாழைப்பழத்தை சாப்பிட்டு தூங்கச்செல்வார்கள். மேலும், மலச்சிக்கல் பிரச்சனைக்கும் வாழைப்பழம் தான் சிறந்தது என்று அனைத்து மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள். இரவு உணவிற்குப் பின் எந்த பழமும் சாப்பிடுவது நல்லது கிடையாது. அதிலும் குறிப்பாக வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்தது இல்லை. ஏனென்றால், அதில் உள்ள Fructose என்ற சர்க்கரை சத்து கொழுப்பாக மாறி நமது உடலில் நிரந்தரமாக தங்கி விடும். இதன் காரணமாக உடலில் கலோரி அதிகமாகும். உடல் எடை அதிகரிக்கும். ஒரு சிலர் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதை பழக்கமாக கொண்டவர்கள் சாப்பிட்ட உடனே வாழைப்பழம் சாப்பிடக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் கழித்து சாப்பிடலாம்.


சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன?
[Friday 2016-02-05 07:00]

சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர். மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.


குழந்தை வரம் பெற ஆலோசனைகளும் கை வைத்திய முறைகளும் !
[Friday 2016-02-05 00:00]

குழந்தையில்லாதவர்களுக்கு மாதவிடாய் ஆன ஐந்து தினங்களிலும் ஒரு வெள்ளைப்பூண்டு சிறிது வேப்பங்கொழுந்து ஒரு சிறிய விரலி மஞ்சள் துண்டு வைத்து அம்மியில் அரைத்து சாப்பிடச்சொல்வார்கள். இப்படி சில மாதம் சாப்பிட்டு தீட்டு நின்று கர்ப்பம் தரித்துவிடும். குழந்தை வேண்டுவோர் பாலமுருகன் அல்லது முருகக்கடவுளை வணங்கச்சொல்வார்.மேற்படி எளிய முறையில் மருந்து சாப்பிட்ட அனேகருக்கு குழந்தை பிறந்துள்ளது. சில எளிய பாட்டி வைத்திய முறையும் , பயனுள்ளதாக இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். சித்தர்களின் மூலிகை மருத்துவத்திலும் இதைப் பற்றிய பல குறிப்புகள் கிடைக்கப் பெறுகிறோம்.. அருகம்புல் சாறு காலை உணவுக்கு முன் குடிக்கவும்.செவ்வாழை பழம் மதிய உணவுக்கு பின் சாப்பிடவும். மாதுளம்பழச் சாறு இரவு உணவுக்கு பின் குடித்து வர குழந்தை பேறு கிடைக்கும்.


அத்திப் பழம் பற்றிய மருத்துவக்குறிப்பு:
[Thursday 2016-02-04 19:00]

1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,

2.மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,

3.நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.


சிறுநீரகத்தை காக்கும் உணவுமுறை..
[Wednesday 2016-02-03 07:00]

நம் உடலின் சுத்திகரிப்புத் தொழிற்சாலை எது?' எனக் கேட்டால்


தினம் ஒரு பேரிக்காய் சாப்பிடுங்கள் எலும்புகளுக்கு வலிமைபெருகும் !
[Tuesday 2016-02-02 23:00]

எலும்புகளுக்கு வலிமை தரும் பேரிக்காய் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். அடங்கியுள்ள சத்துக்கள் 100 கிராம் பழத்தில் 3.1 கிராம் நார்ச்சத்து, விட்டமின் சி, பீட்டா கரோட்டீன், லுட்டின் மற்றும் ஸி-சான்தின் போன்ற சத்துக்களும், தாமிரம், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாது உப்புகளும், ஏ, பி, பி2 போன்ற விட்டமின்களும் பேரிக்காயில் கணிசமாக உள்ளன. இவை தவிர பி- குழும விட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின் மற்றும் போலேட் போன்றவையும் மிகுதியாக காணப்படுகின்றன.


தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்க முருங்கைக்கீரை உகந்தது:
[Tuesday 2016-02-02 12:00]

இலைகள் மிகவும் சத்தான பகுதியாகும். இலைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளது. இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருப்பதால் வளரும் நாடுகளில் இது ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது. பொதுவாக உடலில் இரத்தணுக்கள் குறைவாக இருந்தால், இரத்த சோகை ஏற்படும். இத்தகைய இரத்த சோகையானது ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது. இரத்த சோகை குழந்தைகளுக்கு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலமானது வலுவிழந்து, சருமம், சுவாசப் பாதை, செரிமான மண்டலம் போன்றவற்றில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.


அன்றாடம் பாவிக்கும் குளியல் சோப்..! இத்தனை வகையா?
[Sunday 2016-01-31 15:00]

உங்கள் அழகான சருமத்தில் தினமும் குறைந்தது இரண்டு தடவையாவது சோப்பு தேய்க்கிறீர்கள். நுரை வருகிறது.. மணம் தருகிறது.. என்று சொல்லும் பலருக்கும் அதில் என்னென்ன மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றோ, தனது சருமத்திற்கு அது பொருத்தமானதுதானா என்றோ தெரிவதில்லை.

சோப்பின் ரகசியங்களை தெரிந்துகொள்ளுங்கள்:

* ஒருவகை உப்புதான் சோப்பின் மூலப்பொருள். அதில் காரத்தன்மை பொருந்திய ஆல்கலைனையும், தாவர கொழுப்புகளையும் சரியான விகிதத்தில் சேர்க்கும்போது குளியல் சோப் தயாராகிறது. நிறத்திற்கான பொருளும், வாசத்திற்கான பொருளும் அதில் சேர்க்கப்படுகிறது.

சிக்கனுக்கும், எலுமிச்சை பழத்திற்கும் என்ன சம்பந்தம்?
[Saturday 2016-01-30 20:00]

உணவே மருந்து, மருந்தே உணவு


அப்பிள் நிறுவனம் தனது புதிய iPadல் பல்வேறு வசதிகளை புகுத்தியுள்ளது!
[Saturday 2016-01-30 19:00]

தனது ஒவ்வொரு அறிமுகம் மூலமும் மக்களை திரும்பி பார்க்கவைக்கும் அப்பிள் நிறுவனம் தனது புதிய iPadல் பல்வேறு வசதிகளை புகுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை போன்று ஐபேடும் வாடிக்கையாளர்களை நன்கு கவர்ந்துள்ளது. இதன் காரணமாகவே iPad 1, 2,3,4 மற்றும் iPad Air,2 என ஏராளமான வகைகளை அப்பிள் நிறுவனம் அறிமுகம்படுத்தியது. கடைசியாக கடந்த நவம்பர் மாதம் தனது iPad Pro மொடலை அறிமுகப்படுத்தியது அப்பிள் நிறுவனம். ஆனால் அதன் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் தற்போது அடுத்த மாடலான iPad Air 3யின் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


செவ்வாழையும் மகப்பேறுக்கு அருமருந்து: - தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர கருத்தரிக்குமாம்!
[Saturday 2016-01-30 19:00]

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.


சரஸ்வதி மூலிகை என்று அழைக்கப்படும் வல்லாரையும் முதன்மை நோய் நிவாரணியே!
[Friday 2016-01-29 22:00]

எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை. இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும். காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம். இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.


இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் ஆயுள் பெருகும்:
[Friday 2016-01-29 19:00]

* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். * இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும். * பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். * எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும். * ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும். * பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும். * விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.


கோவிலுக்கு செல்லும் பொழுது தங்க நகை அணிய வேண்டும் ஏன் தெரியுமா?
[Thursday 2016-01-28 23:00]

கோவில்கள் அமைந்திருக்கும் இடம், அமைப்பு, உள் கட்டமைப்பு, கதவுகள், கொடிமரம், மூலஸ்தானம், கோபுர கலசங்கள், உள்பிரகார பாதை என, ஒவ்வொன்றும் அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம் தொடர்புடையவை. பொதுவாக, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள், ஆழ்ந்த இடங்கள் தான், கோவில் கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இங்கு தான் காந்த அலைகள், நேர்மறையான எண்ண அலைகள், அதிகமாக பரவியிருக்கும். வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது, மக்கள் பாதுகாப்பாக இருக்க, பிரமாண்டமான கோவில்கள் தான் பயன்பட்டன. மிக மிக அதிகமான காந்த அலைகள் பரவியிருக்கும் இடத்தில், செப்பு தகடுகளை பதித்து, அதன் மீது சிலையை அமைத்து, மூலஸ்தானம் உருவாகும். அதன்பின் தான் கோவில் கட்டப்படும். அந்த செப்பு தகடுகளின் தன்மை, பல நல்ல அலைகளை கிரகித்து, அதை பல மடங்காக, அந்த சிலை மூலம் வெளிக்கொணரும்.


காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்! -
[Thursday 2016-01-28 19:00]

* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல

* தன் காயம் காக்க வெங்காயம் போதும்


செக்ஸ் மூலமும் பரவக்கூடியதாம் ஜிக்கா வைரஸ்: - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!
[Thursday 2016-01-28 19:00]

தென் அமெரிக்க நாடுகளில் கொசுக்கள் மூலம் பரவும் ஜிக்கா வைரஸ் உடலுறவு மூலமும் பரவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.தென் அமெரிக்க நாடுகளில் கொசுக்கள் மூலம் ஜிக்கா வைரஸ் பரவி வருகிறது. ஜிக்கா வைரஸால் கருவில் உள்ள குழந்தைகளின் மூளை வள்ர்ச்சி பாதிப்பு அடைந்து அவர்கள் சிறிய தலையுடன் பிறக்கிறார்கள். இதனால் தென் அமெரிக்க நாடுகளில் வசிக்கும் பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில் ஜிக்கா வைரஸ் உடலுறவு மூலமும் பரவுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தென் பசிபிக் கடலில் 118 தீவுகளை உள்ளடக்கிய பிரெஞ்சு பாலினேசியாவைச் சேர்ந்த 44 வயது நபரின் விந்தணுவில் ஜிக்கா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கொலரடோவைச் சேர்ந்த விஞ்ஞானியான பிரையன் டி. ஃபாய் செனகலுக்கு சென்று வந்த பிறகு அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது.


நாட்டு மருந்து மூலம் அல்சரை விரட்டலாமா.?
[Thursday 2016-01-28 06:00]

அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.


பெண்களின் கைகளை வைத்தே அவர்களை பற்றி சொல்லிவிடலாமாம்!
[Wednesday 2016-01-27 22:00]

பெண்களின் கைகளது அமைப்பை வைத்து அவர்களது குணாதிசயங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

மிருதுவான கைகள் :

கைகள் மிருதுவாக இருந்தால், அத்தகைய பெண்கள் முயலும் எல்லா வேலைகளும் தடையின்றி நிறைவேறும். லாபமும் கிடைக்கும். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.

வறட்சியான கைகள் :

கைகள் வறட்சியாகவும், நரம்புகள் வெளியே தெரியும்படியும் அமைந்திருந்தால், அவளது குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அதிகமிருக்கும். கணவனும், பிள்ளைகளுமே கூட விரோதியாவார்கள்.


மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது , மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா!
[Wednesday 2016-01-27 22:00]

மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது , மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா காலங்காலமாக, நாகரிகமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள அறிவு மேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக்கிறார்கள். ஆனால், மனித தத்துவங்களிலிருந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலிருந்தும் எண்ணிலடங்கா கோட்பாடுகளும் கட்டுக்கதைகளும்தான் மிஞ்சியிருக்கின்றன. நமக்கு இரண்டு உடல்கள் உள்ளன. நமக்குத் தெரிந்த இந்த பூத உடல் உன்று. மற்றொன்று கண்ணுக்குப் புலப்படாத சூட்சம உடல் ஆகும். நாம் இறந்த பின் நாம் வேறு ஏதோ உலகுக்குப் பயணிக்கிறோம். நமது நன்மை, தீமைகளுக்கு ஏற்ப சொர்க்கமோ நரகமோ செல்கிறோம் எனவே மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை உண்டு என்பது நம்ப்பிக்கை,


"அடடா இந்த ரூமுக்கு ஏன் வந்தோம்?" - ஞாபகமறதி..? மூளையை சுறுசுறுப்பாக்க என்ன வழி ?
[Wednesday 2016-01-27 19:00]

"அடடா இந்த ரூமுக்கு ஏன் வந்தோம்?" "என்னாச்சு! அம்மா கடைக்குப் போகச் சொன்னாங்க, கடைக்கு வந்துட்டோம், என்ன வாங்கணும்னு மறந்திடுச்சே..." "இன்னிக்குத்தானே படிச்சோம் அதுக்குள்ளே மறந்துபோச்சே!" "வண்டி சாவிய எங்க வச்சேன்னு ஞாபகம் இல்லியே!" அன்றாடம் இதுபோன்ற எண்ணங்கள் நமக்குத் தோன்றியோ அல்லது மற்றவர்கள் சொல்லியோ நாம் கேட்டுகொண்டிருக்கிறோம். பயப்பட வேண்டாம். இது நோய் இல்லை. எல்லோருக்கும் ஏற்படக்கூடியதுதான். அதற்காக இதை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று இல்லை. ஞாபகமறதியைக் கட்டுப்படுத்த, மூளை சுறுசுறுப்பாக இயங்க நான்கு வழிகளைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்கள். 1. மெமரி டயட் அட! இது என்னடா புது டயட்டா! எனத் தலைப்பைப் படித்துவிட்டுச் சோர்ந்துவிடாதீர்கள். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள் சாப்பிட்டால், ஞாபகமறதியைத் தவிர்க்கமுடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.


திருமணம் செய்த புது மாப்பிள்ளைகள் கட்டாயம் சேர்க்கக்கூடாத உணவுகள்!
[Sunday 2016-01-24 20:00]

புதிதாக திருமணம் ஆன ஆண்கள் சில வகையான உணவு களை சில காலம் தவிர்த்து விடுவது நல்ல‍து. காரணம் கீழ்க்காணும் உணவுகளை அவர்கள் உட்கொள்ளும் பொருட் டு அவர்களின் பாலியல் உணர்வினை சிதைத்து வீரியத்தையும் குறைத்து விடும். ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போ ஹை டிரேட், கொழுப்பு, வைட்ட மின்கள், தாதுப்பொருட்கள் செறி ந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக்கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலி யல் திறனும் சிதைந்துவிடும். சர்க்கரை, மதுபானங்கள், காப் பியில் உள்ள காஃபின் முதலியவை, ஊட்டச்சத்து உணவை, உடல் உட்கிரகிக்க விடாது. இதனால் ஆரோக்கியம் குறைந்து ஆண்மையும் குறையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதேசமயம் அதீத காதல் உணர்வு களால் கஷ்டப்படுபவர்கள் இனிப்பு, சோயா நிறைந்த உணவு களால் இச்சையை ஒரளவாவது கட்டுப் படுத்திக் கொள்ளலாம். என்கின்றனர் நிபுணர்கள்.


பூமியை விட 10 மடங்கு பெரிய கிரகம்! - சந்தேகத்தை தீாக்க நாசா தீவிரம்
[Thursday 2016-01-21 22:00]

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் ஒன்றான புளூட்டோ மொத்தம் உள்ள 9 கிரகங்களிலும் மிகச்சிறியது.புளூட்டோ சூரியனிலிருந்து 4.6 பில்லியன் மைல்கள் தொலைவில் அது உள்ளது. புளூட்டோதான் நமது சூரியக் குடும்பத்தில் கடைசி என்பது நாம் ரொம்ப காலமாக கூறி வருவது. ஆனால் இப்போது அதையும் தாண்டி ஒரு புதிய கிரகம் இருக்கலாம் என் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போதைய புதிய கிரகமானது சூரியனிலிருந்து 20 பில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அது பூமியை விட 10 மடங்கு பெரிதானது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இது சூரியனை ஒருமுறை சுற்றி வரவே குறைந்தது 10,000 முதல் அதிகபட்சம் 20,000 வருடங்கள் வரை ஆகலாம் என்று நம்பப்படுகிறது.


சீரற்ற இதயத்துடிப்பால் ஆண்களை விட பெண்களுக்கே அதிகளவான ஆபத்து!
[Wednesday 2016-01-20 22:00]

சீரற்ற இதயத்துடிப்பால் ஆண்களை விட பெண்களுக்கே அதிகளவான ஆபத்து இருப்பதாக நாற்பது லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளிடம் நடத்தப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட சோதனைகளை ஆய்வுசெய்ததில் தெரியவந்துள்ளது. ஏட்ரியக் குறு நடுக்கம் அல்லது ஆங்கிலத்தில் ஏட்ரியல் ஃபிப்ரில்லேஷன் எனப்படும் இதயத் துடிப்பு பாதிப்பு உள்ளவர்களுக்கு, உயிராபத்து மிக்க இதய நோய்களும் மூளையின் ஒரு பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைப்படுகின்ற ஸ்ட்ரோக்-உம் ஏற்பட கிட்டத்தட்ட இரட்டை மடங்கு வாய்ப்பு அதிகம் என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது. ஆனால், பெண்களுக்கு ஏற்படும் சீரற்ற இதயத்துடிப்பு பிரச்சனை ஆண்களை விட மிகவும் தாமதமாகவே கண்டுபிடிக்கப்படுவதும் இதற்கு ஒரு காரணம் என்றும் ஆக்ஸ்ஃபார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏட்ரியக் குறு நடுக்கத்தை தடுப்பதற்கான மருந்துகள் அந்தப் பெண்களுக்கு பலனளிக்காமல் போவதும் இன்னொரு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.


கருவில் இருக்கும் குழந்தையிடம் எப்படி பேசலாம்..?
[Wednesday 2016-01-20 13:00]

கருவில் இருக்கும் குழந்தையானது இந்த உலகத்தை பார்க்கத் தான் 10 மாதங்கள் வேண்டும். ஆனால் இந்த குழந்தை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தாயுடன் வாழ்ந்து தான் வருகிறது. தாயானவள் ஒவ்வொரு நாளும் இந்த குழந்தையின் அசைவையும் உணருவாள். மருத்துவ ஆய்வின் படி, குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்துவிடுமாம். மேலும் இதனால் எல்லாவற்றையுமே புரிந்து கொள்ளவும் முடியுமாம். ஆகவே அப்போது குழந்தையிடம் தாயானவள் என்னென்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள் .

கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதற்கு சில டிப்ஸ்


அதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படும் மணி பிளாண்ட் என்றால் என்ன?
[Tuesday 2016-01-19 22:00]

கொடிவகை செடியான இதனை காணாதவர்களே இருக்க முடியாது. இரண்டில் ஒரு வீட்டில் கண்டிப்பாக மணி பிளாண்ட் வளர்க்க தவறுவதில்லை. அதனால் பல வீடுகளில் செழிப்பாக வளர்ந்த நிலையில் மணி பிளாண்ட்டை காண நேரிடலாம். அதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படும் மணி பிளாண்ட் சொத்து, சுகம், ஆரோக்கியம் மற்றும் சந்தோஷத்தை பெருகச் செய்யும் என்று நம்பப்படுகிறது. மணி பிளாண்ட்டை மலபார் செஸ்ட்நட் அல்லது சபா நட என்றும் அழைப்பார்கள். மணி பிளாண்ட்டை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளது. மணி பிளாண்ட்டை வீட்டில் வளர்க்க பல காரணங்கள் உள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ஃபெங் சூயி சாஸ்திரப்படி அதிர்ஷ்டம் ஏற்படுத்தி கொடுக்கும் செடியாக கருதப்படுகிறது மணி பிளாண்ட்.

Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா