Untitled Document
April 16, 2024 [GMT]
கீர்த்தி சுரேஷின் தேங்காய் பிரார்த்தனை..
[Thursday 2017-03-16 19:00]

கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர் வாங்கிக்கொண்டு வந்து டூட்டி பார்த்துகொண்டிருக்கிறார். அவ்வப்போது ஸ்பெஷல் டூட்டியில் தெலுங்கு திரையுலகிற்கும் டெபுடேஷன் டூட்டி பார்க்கிறார். இவரது சம்பளம் இப்போது ஒரு கோடி ரூபாயை நெருங்கிவிட்டதாக தகவல்.. இன்று மகள் உயர்ந்திருக்கும் நிலையையும், சம்பாதிக்கும் வருமானத்தையும் பார்த்து அக மகிழ்ந்து போயிருக்கும் அவரது அம்மா மேனகா தான், ஒரு காலத்தில் கீர்த்தியை நடிக்க அனுப்பமாட்டேன் என தடை போட்டவர். அந்த தடையை நீக்குவதற்காகவும் சினிமாவில் நடிப்பதற்காகவும் கீர்த்தி என்ன பண்ணினார் தெரியுமா....?


மீனை கொடுமைப்படுத்தவில்லை என சான்றிதழ் வாங்கிய சிபிராஜ்
[Thursday 2017-03-16 19:00]

சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், நடித்துள்ள படம் கட்டப்பாவ காணோம். விண்ட் சைம்ஸ் மீடியா எண்டர்டைன்மெண்ட் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார் வெங்கடேஷ், லலித் இணைந்து தயாரித்துள்ளனர். அறிவழகன் உதவியாளர் மணி சேயோன் இயக்கி உள்ளார். இந்தப் படம் ஒரு மீனை சுற்றி நடக்கிற கதை. அதற்கும் விலங்கு நல வாரியத்திடமிருந்து சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள். இதுகுறித்து இயக்குனர் மணி சேயோன் கூறியதாவது:


சினிமாவை காப்பாற்றவே தேர்தலில் போட்டியிடுகிறோம் - விஷால்
[Thursday 2017-03-16 19:00]

சினிமா துறையை காப்பாற்றவே தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று நடிகர் விஷால் கூறினார். திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடர்பாக ஆதரவு திரட்டுவதற்காக நடிகர் விஷால் கோவை வந்தார். அவருடன் இயக்குனர்கள் மிஷ்கின், எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் உதயா, நந்தா ஆகியோரும் வந்திருந்தனர். பின்னர், நடிகர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:-


ஏ.ஆர்.ரகுமானின் புதிய முயற்சி..
[Thursday 2017-03-16 19:00]

இந்தியாவிலேயே ஏ.ஆர்.ரகுமான் புதுமையான ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஆஸ்கர் அடையாளமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்திய திரை இசையில் புதுமைகளை புகுத்தி இந்திய திரையுலகை சர்வதேச அளிவிற்கு உயர்த்தியவர். இவரது இசைக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது. இசையில் புதுமை வெளிகொண்டு வருவதில் வித்தகரான ஏ.ஆர்.ரகுமான் தற்போது மற்றொரு புதுமையையும் ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.


பிரபுதேவாவுடன் இணைய நயன்தாரா மறுப்பு..
[Thursday 2017-03-16 19:00]

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் 'YSR FILMS' பட நிறுவனத்தின் தயாரிப்பில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வரும் படம் 'கொலையுதிர்காலம்'. பில்லா-2 படத்தை இயக்கிய சக்ரி டோலேட்டி இப்படத்தை இயக்கி வருகிறார். கொலையுதிர்காலம் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்குள் ஹிந்தியிலும் இப்படம் ரீ-மேக் ஆகிறது. தமிழில் நயன்தாரா நடிக்கும் கேரக்டரில் ஹிந்தியில் தமன்னா நடிக்கிறார். தேவி படத்துக்கு பிறகு தமன்னாவுடன் நெருக்கமாக இருந்து வரும் பிரபுதேவா, கொலையுதிர் காலம் படத்தின் ஹிந்தியி ரீமேக்கில் நடிக்கிறார்.


'பாகுபலி-2' வின் சாட்டிலைட் உரிமையை வாங்கியது விஜய் டி.வி.
[Thursday 2017-03-16 19:00]

எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'பாகுபலி-2' திரைப்படத்தின் வெளியீட்டை தென்னிந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது! இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாவதாக சொல்லப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக இன்று அதிகாலையிலேயே பாகுபலி-2 டிரைலர் வெளியாகிவிட்டது. யார் வெளியிட்டார்கள் என்று படக்குழுவினர் ஆராய்ச்சிகளை ஒரு பக்கம் மேற்கொள்ள இன்னொரு பக்கம் அதிகாரபூர்வமாகவும் வெளியிட்டுவிட்டனர். பாகுபலி-2 தமிழ் பதிப்பின் டிரைலருக்கு குறுகிய நேரத்திலேயே 3 லட்சத்திற்கும் மேலான ஹிட்ஸ் கிடைத்து நிமிடத்துக்கு நிமடம் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது!


கொஞ்சும் குமரி கே.ஆர்.இந்திரா காலமானார்
[Thursday 2017-03-16 19:00]

கொஞ்சும் குமரி, பெற்றால் தான் பிள்ளையா உள்ளிட்ட பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை கேஆர் இந்திரா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 68. காஞ்சிபுரத்தை பூர்வீமாக கொண்ட இந்திரா, 14 வயதில் சென்னைக்கு வந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1963-ம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‛கொஞ்சும் குமரி' படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இந்திரா, தொடர்ந்து பெற்றால் தான் பிள்ளையா, சுமைதாங்கி, பாத காணிக்கை, ஹலோ ஜமீன்தார், கந்தன் கருணை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். ரஜினியுடன் பணக்காரன், மன்னன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.


நான் அதுக்கு செட் ஆகுவனா? - நடிகை கெளசிகா
[Wednesday 2017-03-15 22:00]

துணை முதல்வர் படத்தில் பாக்யராஜின் தங்கையாக நடித்தவர் கெளசிகா. தற்போது இணையதளம் படத்தில் ஸ்வேதாமேனனின் தங்கையாக நடித்துள்ளார். துணை முதல்வர் படத்தைப்போலவே இந்த படத்திலும் எனக்கு லவ்ட்ராக் உள்ளது என்று கூறும் கெளசிகா, நான் கிளாமருக்கு செட்டாவேன் என்ற டைரக்டர்கள் சொன்னால் கண்டிப்பாக கதைக்கேற்ற கிளாமரை வெளிப்படுத்துவேன் என்கிறார். அவர் மேலும் கூறுகையில், இணையதளம் படத்தில் ஈரோடு மகேசுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். எனது ரோல் வித்தியாசமானது. ஸ்வேதாமேனனின் தங்கச்சி நான். ஈரோடு மகேஷ், கணேஷ் வெங்கட்ராம், ஸ்வேதாமேனன் போலீசாக நடித்துள்ளார்கள்.


ஐஸ்வர்யா ராஜேசுடன் நடித்த அனுபவம் - மனம் திறந்தார் சிபிராஜ்
[Wednesday 2017-03-15 22:00]

தேசிய விருதுபெற்ற ஐஸ்வர்யா ராஜேசுடன் நடித்தபோது தனக்கு பதட்டமாக இருந்ததாக சிபிராஜ் கூறியுள்ளார். சிபிராஜ்- ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம்


பிரபல நடிகையின் கணவர் தற்கொலை
[Wednesday 2017-03-15 22:00]

முன்னாள் எம்.எல்.ஏ.,வும்,பிரபல தெலுங்கு நடிகையுமான ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் , இன்று (மார்ச்-14)மும்பையில் கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். நிதின் கபூருக்கு வயது 58. இரண்டு மகன்கள் உள்ளனர். தெலுங்கு திரைப்பட துறையில் பணிபுரிந்த நிதின் கபூர்,1985 ஆம் ஆண்டு நடிகை ஜெயசுதாவை திருமணம் செய்து கொண்டார். நிதின் கபூர், மாஜி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜிதேந்திராவின் உறவினர்.கடுமையான மன அவதியால், சில நாட்களாக மன நோய் சிகிச்சை பெற்று வந்ததாக வதந்திகள் பரவியுள்ளது.


1 கோடி பார்வையை கடந்தது பைரவா 'பாப்பா...பாப்பா' பாடல்
[Wednesday 2017-03-15 21:00]

விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவந்த பைரவா படம் பட்டையைக் கிளப்பும் என்று வெளியீட்டிற்கு முன்பு சொன்னார்கள். ஆனால், தமிழ்நாட்டு அரசியல் அதிர்வுகளால் பைரவா படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போனது. அதன்பின் வினியோகஸ்தர்கள் தரப்பில் பைரவா படம் நஷ்டத்தைக் கொடுத்த படம் என்ற அறிவிப்பும் வெளியானது. பைரவா படத் தோல்விக்கு படத்தின் பாடல்களையும் ஒரு காரணமாக அப்போது விமர்சகர்கள் பலரும் குறிப்பிட்டிருந்தார்கள். பொதுவாக விஜய் நடிக்கும் படங்கள் என்றாலே பாடல்கள் சூப்பர் ஹிட் வரிசையில் இடம் பெறும் பாடல்களாகவே இருக்கும்.


கமலின் உருவபொம்மை எரிக்க முயற்சி..
[Wednesday 2017-03-15 21:00]

ஈரோட்டில் நடிகர் கமல்ஹாசன் உருவபொம்மையை எரிக்க முயற்சி செய்த இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். நடிகர் கமல்ஹாசன் இந்துக்களின் புனித நூலான மகாபாரதம் மற்றும் இந்துக்களின் கலாசாரத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசி வருவதாக கூறி இந்து மக்கள் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்ட இந்து மக்கள் கட்சியினர் ஈரோடு எம்.ஜி.ஆர். சிலை அருகில் நடிகர் கமல்ஹாசனின் உருவபொம்மையை நேற்று எரிக்க முயன்றனர். ஈரோட்டில் நடிகர் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரிப்பதற்காக இந்து மக்கள் கட்சியினர் ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.


கமர்சியல் படமாக உருவாகிவரும் 'மகளிர் மட்டும்'
[Wednesday 2017-03-15 21:00]

திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நடித்த படம் 36 வயதினிலே. மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த ஹவ் ஓல்டு ஆர் யூ -என்ற படத்தில் ரீமேக்கான இந்த படம் ஜோதிகாவுக்கு நல்லதொரு ரீ-என்ட்ரியாக அமைந்தது. அதனால் அதை யடுத்து வருடம் ஒரு படத்தில் நடித்தாலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ஜோதிகா. சில டைரக்டர்கள் சொன்ன கதை பிடிக்காததால் நேரடியாகவே கதை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு நல்ல கதைகளுக்காக காத்திருந்தபோதுதான் குற்றம் கடிதல் படத்தை இயக்கிய பிரம்மா சொன்ன மகளிர் மட்டும் கதையை ஓகே செய்தார் ஜோதிகா.


நயனின் இடத்தைப் பிடித்தார் அமலாபால்..
[Wednesday 2017-03-15 18:00]

இயக்குநர் ஏ.எல்.விஜய்யை விவகாரத்து செய்த பிறகு மீண்டும் பிசியாகிவிட்டார் அமலாபால். இவருக்கு ஆதரவுக்கரம் நீட்டிய தனுஷ், வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். அதோடு, வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வரும் வட சென்னை படத்திலும் அமலாபாலை கதாநாயகியாக்கினார். தொடர்ந்து, திருட்டுப் பயலே உட்பட வரிசையாக நிறைய படங்களை கையில் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார் அமலா பால். அடுத்து மலையாள பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்கவிருக்கிறார்.


வித்யாபாலனிடம் தவறாக நடக்க முயன்ற ரசிகர்
[Wednesday 2017-03-15 18:00]

ரசிகர் ஒருவர் வித்யாபாலனிடம் தவறான நடக்க முயன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது..


சந்தானத்தை சரணடைந்த நடிகை..
[Wednesday 2017-03-15 18:00]

சந்தானம் ஹீரோ அவதாரமெடுத்த முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கோலிவுட் நடிகைகளுக்கு அழைப்பு விடுத்தபோது, காமெடியன் என்பதால் தயக்கம் காட்டினர். அதனால் புனேயில் இருந்து ஆஷ்னா சவேரியை அழைத்து வந்தனர். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் என்ற இரண்டு படங்களிலும் நாயகியாக நடித்தார். பின்னர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்த மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் நடித்த ஆஷ்னா சவேரி, தற்போது ஆரி நடிக்கும் நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்து வருகிறார்.


[Wednesday 2017-03-15 18:00]

பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகிவரும்


அமலாபாலின் தம்பி ஹீரோவாக அறிமுகம்
[Tuesday 2017-03-14 21:00]

அமலாபாலின் தம்பியான அபிஜித் பால் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறாராம். அமலாபாலின் தம்பி அபிஜித் பால். இவர் ஏற்கெனவே ஒருசில மலையாள படங்களில் நடித்துள்ளார். மோகன்லால்-அமலாபால் இணைந்து நடித்த


லாரன்ஸின் மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் நீக்கம்..
[Tuesday 2017-03-14 20:00]

ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் மொட்ட சிவா கெட்ட சிவா. இந்தப் படத்தில் இயக்குனர் சாய்ரமணி ராகவா லாரன்சுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை டைட்டில் கார்டில் போட்டிருந்தார். "ரஜினிக்கு கலைப்புலி தாணு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து வரலாற்றில் இடம் பிடித்த மாதிரி லாரன்சுக்கு நான் மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தேன். இதனை லாரன்சுக்கு தெரியாமலேயே செய்தேன்" என்று சாய்ரமணி கூறினார்.


நடிகர் விஜயகுமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு
[Tuesday 2017-03-14 20:00]

நடிகர் விஜயகுமாருக்கு தனியார் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கவுள்ளதையடுத்து நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. நடிகர் விஜயகுமாருக்கு எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்து அவரை கௌரவிக்க உள்ளது. டாக்டர் பட்டம் பெற்ற விஜயகுமாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் குறிபிட்டுள்ளதாவது;


1 கோடிக்கு உயர்ந்தது கீர்த்தி சுரேஷ் சம்பளம்..
[Tuesday 2017-03-14 20:00]

தமிழ்த் திரையுலகில் இப்போது யார் நம்பர் 1 நடிகை என்று கேட்டால் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. நல்ல கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிக்கும் நடிகை நம்பர்-1 ஆ, அல்லது அதிக சம்பளம் வாங்கும் நடிகை நம்பர் 1-ஆ, என்று கேட்டால் அதிக சம்பளம் வாங்கும் நடிகைதான் நம்பர் 1 என்று சொல்வார்கள். அப்படிப் பார்த்தால் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாராதான் என்று கோலிவுட்டில் சொல்கிறார்கள். சுமார் 3 கோடி ரூபாய் வரை நயன்தாரா சம்பளம் வாங்குகிறார் என்று ஒரு தகவல் உள்ளது. அவருக்கு அடுத்து சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் 2 கோடி வரையும், ஸ்ருதிஹாசன் 1 கோடி வரையும் வாங்குகிறார் என்கிறார்கள்.


காமெடி மசாலாவாக உருவாகி வரும் ஜெயிக்கிற குதிரை
[Tuesday 2017-03-14 18:00]

இங்கிலீஸ்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஷக்தி சிதம்பரம். இவர் இயக்கும் புதிய படம் ஜெயிக்கிற குதிர. இதில் ஜீவன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக டிம்பிள் சோப்டே, சாக்ஷி அகர்வால், அஸ்வினி என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவை சரளா, லிவிங்ஸ்டன், யோகிபாபு, படவா கோபி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆஞ்சி ஒளிப்பதிவு செய்கிறார், கே.ஆர்.கவின் சிவா இசை அமைக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் படத்தை தற்போது மீண்டும் தூசி தட்டி எடுத்திருக்கிறார் ஷக்தி சிதம்பரம்.


கட்டப்பாவ காணோம் எனது அதிர்ஷ்டம் : ஐஸ்வர்யா ராஜேஷ்
[Tuesday 2017-03-14 18:00]

கட்டப்பாவ காணோம் படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அதிர்ஷ்டமான படமாக அமைந்துள்ளது. சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக் களத்தில் உருவாகி இருக்கும் 'கட்டப்பாவ காணோம்'. இப்படம் வருகிற மார்ச் 17-ஆம் தேதி அன்று வெளியாகின்றது. அறிமுக இயக்குநர் மணி சேயோன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறும்போது,


ராணாவின் புதிய கெட்டப்
[Tuesday 2017-03-14 14:00]

கழுகு, சவாலே சமாளி, சிவப்பு ஆகிய படங்களை இயக்கியவர் சத்யசிவா. தற்போது தெலுங்கு நடிகர் ராணா நடிப்பில் மடை திறந்து என்றொரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிப்படமாக உருவாகிறது. பாகுபலிக்குப்பிறகு ராணா நடிப்பில் வெளியான காஸி படம் தமிழ்நாட்டில் நல்ல வசூல் சாதனை புரிந்ததோடு, விரைவில் பாகுபலி-2வும் வெளியாகயிருப்பதால், இந்த படத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் தானும் மார்க் கெட்டை பிடித்து விடலாம் என்று உறுதியாக நம்புகிறார் ராணா. மேலும், தனது படங்கள் ஒவ்வொன்றிலுமே ஒரு அழுத்தமான விசயத்தை பதிவு செய்யும் சத்யசிவா, இந்த மடைதிறந்து படத்தை சுதந்திரப் போராட்டம் நடை பெற்ற காலகட்டத்துக்கதையில் உருவாக்கி வருகிறார்.


தன் திருமணம் பற்றி மனம் திறந்தார் அஞ்சலி
[Tuesday 2017-03-14 14:00]

இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று அஞ்சலி திட்டவட்டமாக கூறியுள்ளார். ஜெய்-அஞ்சலி இருவரும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக செய்திகள் உலா வருகின்றன. சமீபத்தில் ஜெய் தோசை சுட்டு அஞ்சலிக்கு கொடுத்த படமும், அதை வரவேற்று இருவரும் தெரிவித்த கருத்துக்களும் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு


தன் திடீர் மாற்றத்திற்கு காரணம் கூறினார் விஷால்
[Tuesday 2017-03-14 14:00]

நடிகர் சங்கத்தேர்தலில் போட்டியிட்டபோது, நடிகர்களுக்கு நல்லது செய்வேன், நடிகர் சங்கம் கட்டுவேன் என்பது உள்ளிட்ட பல வாக்குறுதி களை வழங்கித்தான் ஓட்டு வாங்கி வெற்றி பெற்றது விஷால் அணி. ஆனால் அதில் ஓரிரு விசயங்கள் தவிர இன்னும் எந்த முக்கிய விசயங்களையும் அவர்கள் செய்யவில்லை என்பதுதான் நடிகர் நடிகைகளின் கருத்தாக உள்ளது. முக்கியமாக, நடிகர் சங்கம் கட்ட இன்னும் ஒரு செங்கலைகூட எடுத்து வைக்காத நிலையில், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம் என்று விஷால் கூறி வருவதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.


இணையதள சர்ச்சையிலிருந்து தப்பிக்க காஜலின் அதிரடி முடிவு
[Tuesday 2017-03-14 14:00]

அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் 61வது படங்களில் நாயகியாக நடித்து வரும் காஜல்அகர்வால், தெலுங்கில் ராணா நடிக்கும் நானே ராஜா நானே மந்திரி படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக அந்த ஏரியாவில் மழை கொட்டியதால், காஜல்அகர்வால், ஆடிப்பாடும் பாடல் காட்சியொன்றை நிஜமான மழையிலேயே படமாக்கியிருக்கிறார்கள். மேலும், முன்பெல்லாம் அவுட்டோர்களுக்கு சென்றால், அங்கு தன்னை பார்க்க வரும் ரசிகர்களுடன் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து வந்த காஜல்அகர்வால், இப்போது யாரையுமே தன்னை நெருங்க விடுவதில்லையாம். கார ணம், ரசிகர்கள் என்று சொல்லி தன்னுடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்பவர்கள், பின்னர் அவற்றை தவறான கோணத்தில் சித்தரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுகிறார்களாம்.


படவாய்ப்பு தருவதாக கூறி, பலாத்காரம் செய்ய முயன்ற தயாரிப்பாளரை சூட்சுமமாக தாக்கிய 'இளம்பெண்'
[Monday 2017-03-13 20:00]

நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கன்னட திரைப்பட தயாரிப்பாளருக்கு தர்ம அடி கிடைத்துள்ளது. கன்னட திரையுலகை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் விரேஷ். இவர் கன்னடத்தில் நிறைய படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில், பெங்களூரில் ஐடி கம்பெனியில் வேலை செய்யும் இளம்பெண் ஒருவருக்கு திரைப்படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு கதை விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது, அந்த பெண்ணிடம் இரட்டை அர்த்தம் கொடுக்கும்படியான வார்த்தைகளை அந்த பெண்ணிடம் பேசியுள்ளார். மேலும், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா