Untitled Document
April 20, 2024 [GMT]
காரில் இருந்தபடியே பிறந்த குழந்தையைத் தெருவில் எறிந்துவிட்டுச் சென்ற பெண் !
[Thursday 2018-06-07 15:00]

காரில் இருந்தபடியே ஒரு பெண் பிறந்த குழந்தையை தெருவில் விட்டுச் செல்லும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி வைரலாகி வருகிறது.


பெற்ற மகனை தாக்கியவரை கத்தியால் குத்திய தந்தை!
[Thursday 2018-06-07 08:00]

பெங்களூரு கோணனகுண்டே சரகத்திற்குட்பட்ட சவுடேஸ்வரி லே அவுட் 2வது கிராஸ் சம்பந்தஹள்ளியை சேர்ந்தவர் வினோத். இவரது நண்பர் சிவு (18). கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு இந்த கருத்துவேறுபாடு மோதலாக மாறியது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.இதனால் ஆத்திரமடைந்த வினோத்தின் தந்தை, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து சிவுவை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சிவு சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.


வைகோவின் உயரத்தை யாரும் எட்ட முடியாது: - நாஞ்சில் சம்பத்
[Thursday 2018-06-07 08:00]

ம.தி.மு.க-வில் இருந்து விலகியபோது வைகோ-வை சாரைப்பாம்பு என வர்ணித்ததற்கான புது காரணத்தை நாஞ்சில் சம்பத் இப்போது தெரிவித்துள்ளார்.ம.தி.மு.க-வில் வைகோவுடன் பயணித்து அ.தி.மு.க, தினகரன் அணி என சென்ற நாஞ்சில் சம்பத், தினகரன் அணியிலிருந்தும் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியேறிவிட்டார். கட்சி அரசியலை விட்டு விட்டதாகவும், தத்துவ அரசியலை மட்டும் விடவில்லை என்று தெரிவித்திருந்தார்.


கணவரின் சகோதரரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட பெண்!
[Thursday 2018-06-07 08:00]

இந்தியாவில் மனைவியை விவாகரத்து செய்யாமலே வேறு ஒருவரை கணவன் திருமணம் செய்ததோடு, கணவரின் சகோதரரால் பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவை சேர்ந்தவர் குனல் பஜிநாத். இவருக்கும் இளம் பெண் ஒருவருக்கும் கடந்த 2013-ல் திருமணமான நிலையில் 2015-ல் பெண் குழந்தை பிறந்துள்ளது.


காதலனுக்காக மொபைல் போன்களை திருடிய கல்லூரி மாணவிகள்: - அதிர்ச்சி வாக்குமூலம்
[Thursday 2018-06-07 08:00]

ஒரே காதலனுக்காக இரண்டு கல்லூரி மாணவிகள் 38 மொபைல் போன்களை திருடி காவல்துறையினரிடம் சிக்கிய வினோதமான சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையின் மின்சார ரயில்களில் பெண் பயணிகளின் மொபைல் போன்கள் காணாமல் போகும் சம்பவங்கள் கடந்த 2 மாதங்களில் அதிகரித்து வந்தது.


இளம்பெண்ணை மிரட்டி நிர்வாணப் புகைப்படம் எடுத்த கார் ஓட்டுநர்: - அதிர்ச்சி சம்பவம்
[Tuesday 2018-06-05 13:00]

இந்தியாவில் இளம்பெண்ணொருவரை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்த கார் ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் ஜேபி நகரைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணொருவர், கடந்த 1ஆம் திகதி விமான நிலையம் செல்ல ஓலா காரை வரவழைத்தார்.


கணவர் கொடுமைப்படுத்தியதால் உயிரை விட்ட இளம்பெண்!
[Tuesday 2018-06-05 13:00]

இந்தியாவில் கணவரும், அவர் சகோதரரும் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் பெண் உயிரிழந்துள்ள நிலையில் அது தற்கொலையா அல்லது கொலையா என விசாரிக்கப்பட்டு வருகிறது. கொல்கத்தாவை சேர்ந்தவர் மிராகாங்கோ ராய் (37). இவர் மனைவி பயில் சக்கரபோர்டி (33).


நான் பேசிய விவகாரம் தவறாக சித்தரிக்கப்படுகிறது: - ரஜினிகாந்த் வேதனை
[Tuesday 2018-06-05 07:00]

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக நான் பேசிய விவகாரம் தவறாக சித்தரிக்கப்படுகிறது என நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நான் பேசியதை இணையதளங்களில் பார்க்க முடியும். அதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.


ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞர்: - குடும்பத்தார் செய்த நெகிழ்ச்சி செயல்
[Tuesday 2018-06-05 07:00]

இந்தியாவில் காதலுக்காக கெளரவ கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தார் இப்தார் விருந்து அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த அங்கித் சக்சேனா என்பவர் ஷெஸாதி என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு ஷெஸாதி குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் திகதி அவர் குடும்பத்தினர் அங்கித்தை கொலை செய்தனர்.


நாடு சுடுகாடு ஆவதற்கு புரட்சி வெடிக்காது: - ரஜினியை நேரடியாக தாக்கிய நடிகர் சத்யராஜ்
[Tuesday 2018-06-05 07:00]

எல்லாத்திற்கும் போராட்டம் செய்து கொண்டிருந்தால் நாடே சுடுகாடாகி விடும் என்று நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறியிருந்தார். இந்நிலையில் இவரின் இந்த கருத்துக்கு நடிகர் சத்யராஜ் நேரிடியாக பதிலடி கொடுத்துள்ளார். பெரியார் திடலில் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஆசிரியர்!
[Monday 2018-06-04 16:00]

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமைகள் பெரும்பாலும் இந்தியாவின் வடமாநிலங்களில் அதிகமாக நடைபெற்று வருகிறது.


டெல்லியில் இருட்டு அறையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!
[Monday 2018-06-04 07:00]

டெல்லியில் 5 மாத கர்ப்பிணி பெண்ணை மாமியாரும்-கணவரும் சேர்ந்து கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். வரதட்சணை கேட்டு கணவரும் மாமியாரும் சேர்ந்து மருமகளை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.


குழந்தையை ஒரு கையால் தூக்கி வைத்திருந்த நடிகரை திட்டி தீர்த்த மக்கள்!
[Monday 2018-06-04 07:00]

பாலிவுட் நடிகர் Tusshar Kapoor தனது மகனின் Laksshya இரண்டாவது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார். ண்பர்கள் மற்றும் உறவினர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தை பிறந்த அன்று எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லட்டு, நீ எனது வாழ்வில் வந்ததால் அனைத்தும் மாறிவிட்டது என பதிவிட்டுள்ளார்.


அரசியல் ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் ரஜினி!
[Monday 2018-06-04 07:00]

வரும் டிசம்பருக்குள் புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பதற்கான பணிகளில் நடிகர் ரஜினிகாந்த் தீவிரமாக இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தை அடுத்து, அரசியல்ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திவருகிறார்.


அவர்களுக்கு விருது கொடுங்கள்: - விஜய் விருதில் கொந்தளித்த பார்த்திபன்
[Monday 2018-06-04 07:00]

விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கொந்தளிப்புடன் பேசினார். 10வது ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், சிவகுமார், தனுஷ், நயன்தாரா உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


கர்ப்பிணி மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவர்!
[Sunday 2018-06-03 17:00]

இந்தியாவில் குழந்தை கண்முன்னால் கர்ப்பிணி மனைவியை கொலை செய்துவிட்டு கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுடெல்லியை சேர்ந்தவர் உமேஷ் குப்தா. இவர் மனைவி ஜோதி (26). தம்பதிக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் ஜோதி மீண்டும் கர்ப்பமானார்.


எரித்து கொல்லப்பட்டது சென்னை பெண்: - காதலன் கைது
[Sunday 2018-06-03 17:00]

செங்கல்பட்டு அருகே எரித்து கொலை செய்யப்பட்டவர் சென்னை பெண் என்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவரது காதலன் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த மே 28ஆம் தேதி காஞ்சிபுரம் செங்கல்பட்டு அருகே பழவேலி என்கிற ஊரில் அடையாளம் தெரியாத நிலையில் பெண்ஒருவர் எரித்து கொல்லப்பட்டு கிடந்தார். இந்நிலையில் அது கேரளாவில் காணாமல் போன மாணவியாக இருக்கலாம் என்கிற நோக்கில் செங்கல்பட்டு போலீசார் கேரளா போலீசாரை வரவழைத்தனர்.


காதலியைக் கிண்டல் செய்த நண்பனை கொடூரமாக கொலை செய்த சிறுவன்!
[Sunday 2018-06-03 08:00]

சென்னை கோயம்பேட்டியில் காதலியைக் கிண்டல் செய்த காரணத்தால் நண்பனையே 17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம், கோயம்பேடு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் கணேஷ் என்பவர் தனது நண்பன் ரமேஷின் (17) காதலியை கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து காதலி தனது காதலனிடம் புகார் அளித்துள்ளார்.


கிண்டலடித்ததால் பிறந்த குழந்தையை தேவாலயத்தில் விட்டுச் சென்ற பெற்றோர்!
[Sunday 2018-06-03 08:00]

இந்தியாவின் கேரள மாநிலத்தில் 4-ஆவது குழந்தை பிறந்ததால் கிண்டலுக்கு ஆளான தம்பதி, பிறந்த குழந்தையை தேவாலயத்தில் விட்டுச் சென்றதால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொச்சி பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில், பச்சிளம் குழந்தையை ஒரு தம்பதி அனாதையாக விட்டுச் செல்லும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகின.


காலா படம் ரிலீஸ் ஆக வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து மக்களே முடிவு எடுக்கட்டும்: - ரஜினிகாந்த்
[Sunday 2018-06-03 08:00]

கர்நாடகத்தில் காலா படம் ரிலீஸ் ஆக வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து மக்களே முடிவு எடுக்கட்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினி நடிப்பில் வரும் 7-ஆம் திகதி காலா திரைப்படம் வெளியாகிறது. காவிரி விவகாரத்தில் ரஜினி கர்நாடகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நிலையில் படம் வெளியானால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று கூறி அப்படத்தை கர்நாடகாவில் திரையிட விநியோகஸ்தர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.


இரு பிள்ளைகளை கொன்று தாய் தற்கொலை: - தகாத உறவால் வந்த வினை
[Saturday 2018-06-02 15:00]

தமிழகத்தில் சாப்பாட்டில் விஷம் கலந்து கொண்டு இரு பிள்ளைகளை கொன்ற தாயின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டின் சென்னிமலை எம்பிஎம் காலனியை சேர்ந்தவர்கள் உமா மகேஸ்வரி- சுந்தர்ராஜூ தம்பதி. இவர்களுக்கு 14 வயதில் யுவராஜா என்ற மகனும், 12 வயதில் பூஜா என்ற மகளும் இருக்கிறார்கள்.


பாலியல் தொழிலில் ஈடுபட்ட மகள்: - ஆதார புகைப்படங்களுடன் கண்ணீர் விட்ட தாய்
[Saturday 2018-06-02 15:00]

தமிழ்நாட்டில் கல்லூரி மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக பெண்ணொருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார். நாகர்கோவிலில் இருக்கும் ஏழ்மையான கல்லூரி மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக புகார் கூறியுள்ள அப்பெண் அது சம்மந்தமான சில புகைப்படங்கள் அடங்கிய சிடிக்களையும் பொலிசாரிடம் அளித்துள்ளார்.


காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்ற கணவன்!
[Saturday 2018-06-02 07:00]

தமிழ்நாட்டில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் கணவரால் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பானுபிரியா, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சதீஷ் என்ற இளைஞரை பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.


பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கிய காதலன்!
[Saturday 2018-06-02 07:00]

தமிழகத்தின் திருப்பூர் அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கியதாக கூறி 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருப்பூரில் குடியிருக்கும் 11-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த மே மாதம் 29 ஆம் திகதி மாயமானதாக கூறப்படுகிறது. குறித்த மாணவி தொடர்பில் தீவிரமாக தேடியும் பலனில்லாதது கண்டு, அவரது பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.


முதல் திருமண நாளன்று காதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன்!
[Saturday 2018-06-02 07:00]

சென்னையில் முதல் திருமண நாளன்று காதல் மனைவியை குத்திக் கொன்று விட்டு கணவனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது. ஆவடி அருகே பட்டாபிராமம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், இவரது மனைவி மதுமிதா. இவர்கள் கடந்தாண்டு யூன் மாதம் 1ம் திகதி பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.


மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் குழந்தையைத் தரையில் அடித்துக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை!
[Friday 2018-06-01 18:00]

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் குழந்தையைத் தரையில் அடித்துக்கொன்ற தந்தைக்கு, ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது, பெரம்பலூர் நீதிமன்றம். பெரம்பலூர் மாவட்டம், கைகளத்தூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், பாலமுருகன். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2013-ம் ஆண்டு நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அந்தோணிசாமியின் மகள் வெண்ணிலாவை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.


அந்தக் சமூக விரோதிகள் யார்? - ரஜினிக்குத் திருமாவளவன் ஆலோசனை
[Friday 2018-06-01 08:00]

திருப்பூரில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று திருப்பூர் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ``தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகள் குறித்துப் பேசுவதற்கான வாய்ப்பு சட்டப்பேரவையில் தி.மு.க உறுப்பினர்களுக்கு மறுக்கப்படுவதால், அந்தக் கட்சியினர் மாதிரி சட்டப்பேரவை கூட்டத்தை நடத்துகிறார்கள்.


பாதிக்கப்பட்டவர்கள் ஒருநபர் ஆணையத்தில் அச்சமின்றி உண்மையைத் தெரிவிக்க வேண்டும்: - சரத்குமார்
[Friday 2018-06-01 08:00]

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஒருநபர் ஆணையத்தில் அச்சமின்றி உண்மைகளைத் தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து சரத்குமார் ஆறுதல் கூறிவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா