Untitled Document
April 20, 2024 [GMT]
காணாமல் போன நடிகர் சித்தார்த்: - தோழியின் உருக்கமான கோரிக்கை
[Friday 2018-03-30 08:00]

பிரபல பாலிவுட் கொமடி நடிகர் சித்தார்த் சாகர் கடந்த 4 மாதங்களாக காணாமல் போயுள்ள நிலையில் அவரின் தோழி உருக்கமான பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இந்தி தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகள் பலவற்றில் நடித்துள்ளவர் சித்தார்த் சாகர்.


மார்க்கெட்டில் கணவர் கண் முன்னால் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட மனைவி: - அதிர்ச்சி சம்பவம்
[Friday 2018-03-30 08:00]

இந்தியாவில் இளம் பெண் ஒருவர் மார்க்கெட்டில் கணவர் கண் முன்னால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியின் கோவிந்தபுரி பகுதியை சேர்ந்த உமேஷ் துபி என்பவர் தனது மனைவி சுமன் (26) என்பவருடன் அங்குள்ள மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அஜய் (23) மற்றும் பிஜேந்தர் (24) என்ற இரு இளைஞர்கள் சுமனை உரசியபடி நின்று அவரிடம் சில்மிஷம் செய்துள்ளனர்.


அனைவரும் தற்கொலை செய்வோம்: - மாநிலங்களவையில் அ.தி.மு.க எம்.பி ஆவேசம்
[Wednesday 2018-03-28 18:00]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வோம் என அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன் பேசியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட கெடு நாளையுடன் முடிவடையவுள்ளது. இதனால் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், வாரியத்துக்கான பணிகள் எந்தநிலையில் இருக்கின்றன என்பது குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை.


கைகொடுத்து சிறுமியை நெகிழவைத்த கருணாநிதி!
[Wednesday 2018-03-28 16:00]

தி.மு.க தலைவர் கருணாநிதி கட்சி நிர்வாகியின் குழந்தையுடன் கைகுலுக்கி அறிமுகப்படுத்திக் கொள்ளும் வீடியோ தற்போது வைரல்.சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வில் இருக்கும் தி.மு.க தலைவர் கருணாநிதியை கட்சி நிர்வாகிகளில் குடும்பத்தினர் அவ்வப்போது சந்தித்து அவருடன் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ச்சியாகப் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் தி.மு.க நிர்வாகி ஒருவரின் குடும்பத்தினர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.


டாக்டரை கைது செய்ய வேண்டும்: - உயிரை மாய்த்துக்கொண்ட நர்ஸின் உறவினர்கள் கொந்தளிப்பு
[Wednesday 2018-03-28 16:00]

தனியார் மருத்துவமனை ஒன்றில் இரவுப் பணியின்போது, சக ஆண் பணியாளருடன் பேசிக்கொண்டிருந்ததை டாக்டர் கண்டித்ததால் வேதனையடைந்த இளம்வயது நர்ஸ் ஒருவர் மருத்துவமனையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.


ஏன் திருமணம் செய்துகொண்டேன்: - மனம்திறந்த சசிகலா புஷ்பா
[Wednesday 2018-03-28 16:00]

நாடாளுமன்ற அ.தி.மு.க உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் ராமசாமி ஆகியோர் ஏன் திருமணம் செய்துகொண்டனர் என்பது பற்றி இருவரும் விளக்கமளித்துள்ளனர். அ.தி.மு.க-வின் மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பாவுக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சட்ட ஆலோசகர் ராமசாமி என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. ராமசாமியின் மனைவி சத்யபிரியா தொடர்ந்த வழக்கில், அவர் இன்னொரு திருமணம் செய்யக் கூடாது என மதுரை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால், தடையைமீறி சசிகலா புஷ்பா - ராமசாமி திருமணம் டெல்லியில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், இவர்கள் ஏன் திருமணம் செய்துகொண்டனர் என்பது பற்றி இருவரும் விளக்கமளித்துள்ளனர்,


எங்களுக்கு சாப்பாட்டுக்குக்கூட காசு இல்லை: - கலங்கும் ஆராயி மகன்கள்
[Wednesday 2018-03-28 16:00]

அரசு அறிவித்த நிதியுதவி இன்னும் கைக்குக் கிடைக்காததால், சாப்பாடு வாங்கக்கூட வழியில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர், வெள்ளம்புத்தூர் ஆராயி குடும்பத்தினர்.விழுப்புரம் மாவட்டம், வெள்ளம்புத்தூர் காலனியைச் சேர்ந்த ஆராயி, கடந்த 21-ம் தேதி இரவு, தனது 10 வயது மகன் மற்றும் 14 வயது மகள் ஆகியோருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டுக்குள் புகுந்த சில மர்ம நபர்கள், மூன்று பேரையும் கொடூரமாகத் தாக்கியதோடு, 10 வயது சிறுவனை அடித்துக் கொன்றனர்.


அறுவைசிகிச்சையால் மீண்ட சர்ச்சை சாமியார்: - சிறுநீர் கழிக்க முடியாமல் 280 நாள்கள் அவதி
[Wednesday 2018-03-28 16:00]

கடந்த மே மாதம், கேரள மாநிலம் திருவனந்தபுரம் கண்ணமுலாவில் உள்ள ஒரு பெண் வீட்டுக்கு பூஜை செய்வதற்காக ஸ்ரீஹரி என்ற கணேஸானந்தா தீர்த்தபதா ஸ்வாமி என்கிற சாமியார் சென்றார். வீட்டில் இருந்த 23 வயது பெண்ணை சாமியார் பாலியல் வன்கொடுமை செய்ய முயல, அந்தப் பெண்ணோ... கத்தியைக்கொண்டு சாமியாரின் ஆண் உறுப்பை அறுத்துவிட்டார். பலத்த காயமடைந்த சாமியார், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்த அவருக்கு, அறுவைசிகிச்சை மூலம் ஆணுறுப்பு திரும்ப பொருத்தப்பட்டது.


மனைவியை வைத்து சூதாட்டம் ஆடிய கணவர்: - பஞ்சாயத்து வழங்கிய விபரீத தீர்ப்பு
[Tuesday 2018-03-27 18:00]

மனைவி மற்றும் குழந்தைகளை வைத்து சூதாட்டத்தில் கணவரே ஈடுபட்டுள்ள சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. பஞ்சாயத்து வரை சென்ற இந்த விவகாரம், குழந்தைகளை மட்டும் சூதாட்டத்தில் வெற்றிபெற்றவரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருப்பது மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.


மதுவுக்காக பெற்ற தாயைக் அடித்து கொன்ற மகன்!
[Tuesday 2018-03-27 18:00]

வீட்டில் வாங்கி வைத்திருந்த மதுபானத்தை தாய் எடுத்துக் குடித்ததால் ஆத்திரமடைந்த மகன், அவரைக் கொலை செய்துள்ளார். சென்னை டி.பி.சத்திரம், சிமென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர், வெங்கடேசன். இவரது மனைவி கலாவதி. இவரது மூன்றாவது மகன், நீலகண்டன். வெங்கடேசன் இறந்துவிட்டதால், தாயும் மகனும் ஒரே வீட்டில் குடியிருந்துவந்தனர். நீலகண்டன், பெயின்டர் வேலை செய்துவந்தார். நேற்றிரவு கலாவதிக்கும் நீலகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடக்கும் என்பதால், பக்கத்து வீட்டினர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.


மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: - கமல்ஹாசன்
[Tuesday 2018-03-27 18:00]

என்னை தடுக்க பல தடைகள் வருகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார். என்னை தடுக்க பல தடைகள் வருகிறது - கமல்ஹாசன் நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து தீவிரமாக அரசியல் பிரவேசம் செய்து வருகிறார். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் மத்தியில் இன்று பேசியுள்ளார்.


உயிரிழந்த தந்தையின் உடலை கை வண்டியில் இழுத்துச் சென்ற ஊனமுற்ற மகன்!
[Tuesday 2018-03-27 18:00]

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உயிரிழந்த தந்தையை ஊனமுற்ற மகன் கை வண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு வந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் வாகனத்தில் செல்ல பணம் இல்லாத காரணத்தால் சுமார் 8 கிலோ மீட்டர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு தனது தங்கை மஞ்சுவின் உதவியுடன் ராஜ்குமார் கை வண்டியில் வைத்து இழுத்துச் சென்றார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மன்சாரமில் இருந்து திரிவேணிங்கில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு கை வண்டி மூலம் அழைத்து வந்தார். இதனையடுத்து மருத்துவர் வரும் வழியிலேயே உயிரிழந்தார் என்பதை தெரிவித்துவிட்டு வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு கூறினார். உடலை தனியார் வண்டியில் கொண்டு செல்ல பணம் இல்லாத காரணத்தால் கை வண்டி மூலம் வீட்டிற்கு கொண்டு வந்தார்.


தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட மருத்துவர்!
[Tuesday 2018-03-27 18:00]

உத்தரப்பிரதேசம் மாநிலம் தலைநகரான லக்னோவில் ஒருவரின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக நேற்று இரவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டது லக்னோவின் பலகன்ஜி பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் அஸ்கார் அலி(45) என்பது தெரியவந்தது. அவரை அடையாளம் தெரியாத நபர்கள் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.


வீடு தீப்பிடித்து எரிந்ததில் பரிதாபமாக உயிரிழந்த மூன்று குழந்தைகள்!
[Tuesday 2018-03-27 18:00]

உத்தர பிரதேச மாநிலம் சோனிபத்ரா மாவட்டம் தெண்டு கிராமத்தில் நேற்று இரவு கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த போது தீப்பிடித்ததால் சிறிது நேரம் கழித்தே தீயின் தாக்கத்தை உணர்ந்தனர். அந்த வீட்டில் வசித்த பெண், தன் குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஒரு குழந்தையை காப்பாற்றி வெளியே கொண்டு வந்துள்ளார்.


அவளை அங்க கொன்னுட்டாங்க: - ஆணவக்கொலையால் கதறும் ராணுவ வீரர்
[Monday 2018-03-26 18:00]

கோழிக்கோடு அருகே உள்ள கொயிலாண்டி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தலித் சமூகத்தைச் சார்ந்த பிரிஜேஷுக்கும், ஈழுவச் சமூகத்தைச் சேர்ந்த ஆதிராவுக்கும் திருமண ஏற்பாடுகள் படுஉற்சாகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. திருமணத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார். பெண்ணுக்குத் திருமணப் புடவையும் தாலியும் மட்டுமே வாங்க வேண்டும். திருமணத்துக்கு ஒரு நாள் முன்னதாக உறவினர்களுடன் சென்று மணமகளுக்கான பட்டுப்புடவையும் தாலியும் வாங்கிக்கொண்டிருந்தார் மாப்பிள்ளை பிரிஜேஷ். உறவினர்கள், திருமண வேலைகளில் மும்முரமாக இருந்தனர். அப்போது டிவி-யில் ஸ்க்ராலிங் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.


எந்தக் கொடியையும் ஏந்த மாட்டேன்: - நாஞ்சில் சம்பத் சபதம்
[Monday 2018-03-26 18:00]

எந்தக் கொடியையும் ஏந்த மாட்டேன்; எந்தத் தலைவர் நிழலிலும் ஒதுங்க மாட்டேன் என நாஞ்சில் சம்பத் அதிரடியாக அறிவித்ததுமட்டுமில்லாமல் தமிழக அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தார்.அரியலூர் மாவட்டம், திருமழப்பாடியில் வைத்தியநாதன் சுவாமி கோயில் திருவிழாவில் இலக்கிய சொற்பொழிவுக்கு வந்த நாஞ்சில் சம்பத் அரியலூர் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், ''தமிழக அரசின் செயல்பாடுகளால் மக்கள் கொதிப்பில் உள்ளனர்.


கூட்டு வன்கொடுமை செய்த குற்றவாளிகளைப் செருப்பால் அடித்த பொதுமக்கள்!
[Monday 2018-03-26 08:00]

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், இளம் பெண் ஒருவரைக் கூட்டு வன்கொடுமை செய்த குற்றவாளிகளைப் பொதுமக்கள் செருப்பால் அடித்தனர். மத்தியப்பிரதேச மாநிலத்தில், கடந்த சனிக்கிழமை அன்று முன்னாள் காதலன் மற்றும் அவரின் நண்பன் இணைந்து ஒரு பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், இருவர் இந்தச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இது தொடர்பாக வெளியே சொன்னால் உன்னையும் உன் குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளனர்.


திருமண பரிசை திறந்தபோது வெடித்த குண்டினால் பறிபோன புதுமாப்பிள்ளையின் உயிர்: - நீடிக்கும் மர்மம்
[Monday 2018-03-26 08:00]

ஒடிஷாவில் திருமண பரிசை திறந்தபோது குண்டு வெடித்ததில், மணமகன் மற்றும் அவரது பாட்டி ஆகிய இருவரும் உயிரிழந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், இன்று வரை அந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பது குறித்து தெரியவரவில்லை. பிப்ரவரி 18ஆம் தேதியன்று சௌமியா ஷேகர் என்பவருக்கும் ரீமா சாஹூ என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு முடிந்த ஒருசில நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு ஒரு திருமண பரிசு வந்திருந்தது.


பிரசவ நாளன்று பாம்பு கடித்து உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்!
[Monday 2018-03-26 08:00]

தஞ்சை மாவட்டம், இனாம்கிளியூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் தனலட்சுமி பிரசவ நாளன்று பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வலங்கைமான் அருகே உள்ள இனாம்கிளியூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரின் மனைவி தனலட்சுமி. கர்ப்பிணிப் பெண்ணான இவர், பிரசவத்துக்காக மருத்துவமனைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த தருணத்தில் வீட்டின் பின்புறம் உள்ள புதர் ஒன்றில் இருந்து வந்த நல்லபாம்பு கடித்ததால் தனலட்சுமி வலி தாங்காமல் அலறியிருக்கிறார்.


சொந்த மகளை கொடூரமாக கொன்ற தந்தை: - அதிர்ச்சி காரணம்
[Monday 2018-03-26 08:00]

இந்தியாவின் கேரள மாநிலத்தில், அடுத்த நாள் திருமணம் என மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த இளம்பெண்ணை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொயிலாண்டியை சேர்ந்தவர் பிரிஜேஷ். ராணுவ வீரரான் இவர் உத்தர பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் பணியாற்றி வருகிறார்.மலப்புறம் அருகிலுள்ள பூவதி கண்டியை சேர்ந்த ராஜன் என்பவரின் மகள் ஆதிரா. மஞ்சரி பகுதியில் உள்ள மெடிக்கல் கல்லூரியில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.


பாக்நீரிணையை 8.25 மணி நேரத்தில் நீந்திக் கடந்த போலீஸ்: - புதிய சாதனை
[Sunday 2018-03-25 17:00]

தலைமன்னார் - தனுஷ்கோடி இடையேயான பாக்நீரிணை கடல் பகுதியை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காவலர் ஒருவர் 8.25 மணி நேரத்தில் நீந்தி கடந்து புதிய சாதனை படைத்தார்.வெளிநாடுகளில் உள்ள சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் போன்றவற்றை நீந்தி கடப்பதை போல் இந்தியா - இலங்கை இடையேயான பாக்நீரிணை பகுதியையும் நீந்திக் கடந்து சாதனைச் செய்யும் முயற்சிகளில் நீச்சல் வீரர்கள் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.


துபாயில் இறந்த கணவன்: - வறுமையால் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
[Sunday 2018-03-25 17:00]

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆலமுத்து என்பவர் துபாயில் பணியாற்றி வந்துள்ளார். இவரது வருமானத்தை நம்பியே, மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருந்துள்ளனர். கணவர் அனுப்பும் பணத்தை வைத்து, தமிழரசி தனது இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்துள்ளார் இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஆலமுத்து இறந்துவிட்டார். இவர் அங்கு சேமித்து வைத்திருந்த பணத்தை வைத்து இந்தியா கொண்டுவரப்பட்டார்.


விருதை ஏற்க மறுத்த பிரபல பெண் பொலிஸ் அதிகாரி!
[Sunday 2018-03-25 17:00]

நேர்மையான அதிகாரிகளை கவுரவிக்கும் விதமாக வழங்கப்பட்ட சிறப்பு விருதை பிரபல பெண் பொலிஸ் அதிகாரி ரூபா ஏற்க மறுத்துள்ளார்.சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, சிறைக்குள் பல நவீன வசதிகளை பெறுவதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியுள்ளார் என கூறி இந்திய அரசியலில் புயலை கிளப்பியவர் தான் ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா.


தமிழர்களுக்கு காவிரி நதிநீர் உயிர் பா.ஜ.க-விற்கு அது அரசியல்: - கொந்தளிக்கும் சீமான்!
[Sunday 2018-03-25 09:00]

ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் இருக்கும் போது காவிரி பங்கீட்டுகுழுவை மத்திய அரசு அமைத்தது ஒரு கண் துடைப்பு நாடகம் என நாகர்கோவிலில் சீமான் தெரிவித்தார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தனியார் கலை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நாகர்கோவில் வந்தார். அப்போது சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் தமிழர்களுக்கு உயிர், ஆனால் பா.ஜ.க-விற்கு அது அரசியல். நீதிமன்ற உத்தரவு காலம் முடிவதால் பா.ஜ.க-வினர் மாற்றி மாற்றி கருத்து கூறி வருகின்றனர். காவிரி நதிநீர் பங்கீட்டு குழு என்று தற்போது கருத்து கூறும் தமிழிசை சௌந்தரராஜன் அனைத்து கட்சி கூட்டத்தில் ஏன் இந்த கருத்தை கூறவில்லை.


அழைத்தால் நான் வருவேன்: - நடிகர் கமல்ஹாசன்
[Sunday 2018-03-25 09:00]

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக நடந்து மக்கள் போராட்டத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது. இதனால், ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆனால் இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆலை வெளியிடும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 41 நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று கண்டன பொதுக்கூட்டம் நடத்தினர்.


போதைக்காக பெட்ரோல் பெவிக்கால் பயன்படுத்தும் மாணவர்கள்!
[Sunday 2018-03-25 08:00]

இந்தியாவில் போதைப் பொருள் மற்றும் மதுப்பழக்கம் காரணமாக தினமும் 10 பேர் தற்கொலை செய்து கொள்வதாக கடந்த இரு வருடங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்தது. தற்கொலை செய்து கொள்பவர்களின் பட்டியலில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் முதல் நான்கு இடத்தில் உள்ளன.கேரளா சிறிய மாநிலமாக இருந்தாலும் இங்கு போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போதைப் பொருள் பயன்படுத்துபவர்களில் இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு அடுத்த படியாக கொச்சி நகரம் இரண்டாவது இடத்தில் உள்ளது.


எதற்காக பேட்டரி வாங்கிக்கொடுத்தார் என்பது பேரறிவாளனுக்குத் தெரியாது: - ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம்
[Sunday 2018-03-25 08:00]

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையைத் திரும்பப்பெற வேண்டும் எனப் பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. வழக்கு விசாரணையின்போது எதற்காக பேட்டரி வாங்கிக்கொடுத்தார் என்பது பேரறிவாளனுக்குத் தெரியாது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் வழக்கறிஞர் சிவக்குமார்.


ஐந்தாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரம்!
[Saturday 2018-03-24 17:00]

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டம், லாலங் கோன் பகுதியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்துள்ளார். பெற்றோர் வேலைக்கு சென்றதால் அவள் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த 21 வயது வாலிபர் மற்றும் இரண்டு சிறுவர்கள் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவரது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா