Untitled Document
March 29, 2024 [GMT]
பெற்றோரின் சண்டையைத் தடுக்கச்சென்ற மகளை வெட்டி கொன்ற தந்தை!
[Monday 2018-02-19 16:00]

தாய், தந்தையிடையே ஏற்பட்ட சண்டையைத் தடுக்கச் சென்ற பத்து வயது சிறுமி வெட்டப்பட்டு பலியானச் சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த தாய், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தப்பி ஓடிய தந்தையைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


திராவிட அரசியலைப் பின்பற்றி வெற்றி பெற்று காட்டுவேன்: - விஜயகாந்த்தைச் சந்தித்த பின் கமல் பேட்டி!
[Monday 2018-02-19 16:00]

திராவிட அரசியலைப் பின்பற்றி வெற்றி பெறுவேன் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரின் அரசியல் வருகையை அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இருவரும் தங்கள் மக்கள் மன்றத்தின் மூலம் அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ரஜினியைக் காட்டிலும் கமல்ஹாசன் வேகமாகச் செயல்பட்டு வருகிறார். அதன்படி நாளை மறுநாள் அரசியல் சுற்றுப் பயணத்தை ராமநாதபுரத்தில் தொடங்க இருக்கிறார். அன்றே மதுரையில் பொதுக்கூட்டத்தையும் நடத்த உள்ளார். அரசியல் பயணத்தைத் தொடங்க உள்ள நிலையில் தனக்கு பிடித்தமான மனிதர்களைச் சந்திக்கிறேன் என்று கூறி இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் நல்லகண்ணுவைச் சந்தித்த அவர் தொடர்ந்து,


நட்பே பிரதானமானது: - ரஜினியுடனான சந்திப்பு குறித்து நெகிழ்ந்த கமல்
[Sunday 2018-02-18 15:00]

அரசியல் பயணத்தைத் தொடங்க உள்ள நடிகர் கமல்ஹாசன், சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசினார்.


வாலிபரின் தலையை பேருந்து நிறுத்தத்தில் வீசிச் சென்ற கொலையாளிகள்: - அதிர்ச்சி சம்பவம்
[Sunday 2018-02-18 14:00]

சாயல்குடி அருகே வாலிபரின் தலையைத் துண்டித்து அரியமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் வைத்து சென்ற கொடூர கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எஸ்.கீரந்தை கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் மணி என்ற மணிகண்டன் (25). இவர் சில கொலை வழக்குகளில் சம்பந்தபட்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில், மணிகண்டன் மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.


பெண் கைதியின் கன்னத்தில் அறைந்த காவல் ஆணையர்!
[Sunday 2018-02-18 14:00]

ஹைதராபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பெண் கைதியை போலீஸ் கமிஷ்னர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடிக்கு கேக் ஊட்டிய இன்ஸ்பெக்டர்: - சர்ச்சையை ஏற்படுத்தும் புகைப்படம்
[Sunday 2018-02-18 14:00]

சேலத்தில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடிக்கு இன்ஸ்பெக்டர் கேக் ஊட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பாடசாலை கழிப்பறையை வெறும் கையால் சுத்தம் செய்த எம்.பி!
[Sunday 2018-02-18 14:00]

மத்தியப்பிரதேச மாநிலத்தின் ரேவா மாவட்டத்தில் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த பள்ளிக் கழிப்பறை ஒன்றை பா.ஜ.க. எம்.பி. ஒருவர் வெறும் கையால் சுத்தம் செய்த நிகழ்வு நடந்துள்ளது.


முதலாளி மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த வாலிபரின் கண்ணில் ஆசிட் செலுத்தி குருடாக்கிய கொடூரம்!
[Sunday 2018-02-18 09:00]

பீகார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டம் பாராவுனி கிராமத்தை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் அதே பகுதியில் உள்ள பண்ணையில் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்தார்.அப்போது அப்பண்ணை முதலாளியின் மனைவிக்கும், வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து மகிழ்ந்தனர். அதை அறிந்த முதலாளி மனைவியை கண்டித்தார்.


மாத்திரை போடுவதற்கு குடிநீருக்கு பதிலாக ஆசிட் கொடுத்த மருத்துவமனை பணியாளர்: - பெண் பரிதாப பலி
[Saturday 2018-02-17 16:00]

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள கோருல் கிராமத்தை சேர்ந்தவர் சியாமளி தேவி (60). இவருக்கு சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை நடந்தது. அதை தொடர்ந்து அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை சியாமளி தேவி மாத்திரை போடுவதற்காக மருத்துவமனை பணியாளரிடம் தண்ணீர் கேட்டுள்ளார்.


இறுதிச் சடங்கு செய்யப் பணமில்லாததால் மகனின் உடலைத் தானம்செய்த ஏழைத் தாய்!
[Saturday 2018-02-17 16:00]

சத்தீஸ்கர் மாநிலத்தில், விபத்தில் சிக்கி உயிரிழந்த மகனின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப் பணமில்லாததால், உடலைத் தானமாக வழங்கிய நிகழ்வு நடந்துள்ளது.


பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி!
[Saturday 2018-02-17 14:00]

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கஜ்ராஜ் சிங் ஜடேஜா. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் மரணம் அடைந்த போது திருமணமாகாத கோடீஸ்வரரான அவரிடம் 40 ஆண்டுகளாக வேலை செய்து வந்த வினு பாய் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜடேஜாவின் பங்களாவை விட்டு வெளியேறி, வேறு யாரிடம் போய் வேலை தேடுவது என்று போக்கிடம் தெரியாமல் திண்டாடி வந்தனர்.


எனது வெற்றிக்கு என் மனைவிக்கும் பெரிய பங்கும் உள்ளது: - இந்திய அணியின் கேப்டன் கோலி
[Saturday 2018-02-17 14:00]

`எனது வெற்றிக்கு என் மனைவிக்கும் பெரிய பங்கும் உள்ளது' என இந்திய அணியின் கேப்டன் கோலி, மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.


தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி: - பிரதமர் மோடி
[Saturday 2018-02-17 08:00]

சமஸ்கிருதத்தைவிட தமிழ் மிகவும் தொன்மையான மொழி. அதை கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி பேசினார். மாணவர்களின் தேர்வு பயத்தை போக்குவதற்காக, டெல்லி தால்கோத்ரா ஸ்டேடியத்தில்


திருமாவளவனைக் கைது செய்ய வாரன்ட் பிறப்பித்த நீதிமன்றம்!
[Saturday 2018-02-17 08:00]

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. அங்கு நடைபெற்று வந்த வழக்கு ஒன்றில் பல வருடங்களாக திருமாவளவன் நேரில் ஆஜராகாத காரணத்தினால் அவர் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது. திருமாவளவன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மேலும் மூன்று பேருக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


செல்போன் உபயோகிக்க தாய் மறுப்பு: - தற்கொலை செய்துகொள்ள வீட்டைவிட்டு சென்ற 10ம் வகுப்பு சிறுமி
[Saturday 2018-02-17 08:00]

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு உட்பட்ட அவாத்பூரி பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி ஒருவர் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டே இருந்துள்ளார். இதை அவரது தாய் கண்டித்தும் அந்த சிறுமி தொடர்ந்து போன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த தாய், சிறுமியின் செல்போனை பிடுங்கி அதிலிருந்த சிம்கார்டை எடுத்து உடைத்து போட்டுள்ளார்.


மகளின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட தந்தை!
[Friday 2018-02-16 14:00]

மகள் காதல் திருமணம் செய்து கொண்டது பிடிக்காததால் ஆத்திரம் அடைந்த தந்தை தன் மகளின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதோடு அதனை வெளியிட்டதாக மகளின் காதல் கணவர் மீது போலீசில் புகார் கொடுத்தது அம்பலமாகி உள்ளது.


குப்பை அள்ளும் வண்டியில் எடுத்துச்செல்லப்பட்ட பெண்ணின் உடல்: - அதிர்ச்சி சம்பவம்
[Friday 2018-02-16 13:00]

ராமேஸ்வரத்தில் நேற்று தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்த வடமாநிலப் பெண் யாத்திரீகரின் உடலைக் குப்பை அள்ளும் டிராக்டரில் எடுத்துச் சென்ற அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நடத்தையில் சந்தேகப்பட்டதால் பச்சிளம் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாய்!
[Friday 2018-02-16 08:00]

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ளது வெய்க்காலிபட்டி கிராமம். இங்குள்ள இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சாத்தாக்குட்டி (வயது 27), கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (24). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் லட்சுமி மீண்டும் கர்ப்பமானார்.


சேலத்தில் களைகட்டிய மயானக் கொள்ளைத் திருவிழா: - ஆடு, கோழிகளை உயிருடன் கடித்து வேண்டுதல்
[Friday 2018-02-16 07:00]

சேலம் காக்காயன் சுடுகாட்டில் மாசி மயானக் கொள்ளை திருவிழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. சேலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாமியாடிக் கொண்டு வந்தவர்கள் உயிரோடு கோழி, ஆடுகளை வாய்களால் கடித்து இரத்ததால் உடல் நனைந்து சுடுகாட்டு சாம்பலை அள்ளி பூசி தங்கள் ஆவேசத்தை அடக்கினார்கள். இதைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.


திருமணமான பெண்ணின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர்!
[Friday 2018-02-16 07:00]

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 22). இவருக்கு சென்ற ஆண்டு தான் திருமணமானது. இவர் கடந்த சில நாட்களாக பெற்றோருடன் தங்கியுள்ளார். இந்நிலையில், காதலர் தினமான நேற்று முன்தினம் (14-ம் தேதி) மெடிக்கலுக்கு சென்று மருந்து வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பிய அவரை ஒரு மர்ம நபர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த கொலை தொடர்பாக ஆயுதங்களுடன் வாலிபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள மோடிநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று சரண் அடைந்தார்.


அடிவயிற்றில் மிதித்ததால் குழந்தையை இழந்த கர்ப்பிணி பெண்!
[Friday 2018-02-16 07:00]

கேரளாவில் நிலத்தகராறில் கர்ப்பிணி பெண்ணை அடிவயிற்றில் எட்டி உதைத்ததால் அவர் கருக்கலைப்பு செய்ய வேண்டிய கொடூர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேலாம்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்னா சிபி (வயது 28). இவருடைய கணவருக்கும் அண்டை வீட்டாருக்கும் இடையே கடந்த ஜனவரி 28-ம் தேதி எல்லைத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில் தொடர்புடைய அந்தப் பகுதி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் தம்பி உள்பட 6 பேர் ஜோஸ்னா சிபியின் கணவருடன் தகராறு செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றி இருதரப்புக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கணவருக்கு ஆதரவாக ஜோஸ்னா சிபி பேசியுள்ளார். ஜோஸ்னா அப்போது 4 மாத கர்ப்பமாக இருந்தார்.


ஆசிட் வீச்சில் பார்வை பாதிக்கப்பட்ட தனக்கு உறுதுணையாக இருந்தவரை கரம் பிடித்த பெண்!
[Wednesday 2018-02-14 19:00]

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள ஜகத்பூரில் 9 ஆண்டுகளுக்கு முன்பு பிரமோதினி என்ற 17 வயது இளம் பெண் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசினர். அவர் கல்லூரிக்கு சென்று திரும்பிக் கொண்டிருக்கும் போது இச்சம்பவம் நடந்தது. இதில் பிரமோதினி 80 சதவீத தீக்காயங்களுடன், கண் பார்வையையும் இழந்தார்.


வீட்டை விட்டு சென்ற மனைவியைக் கண்டுபிடிக்க 600 கி.மீ தூரம் தெருத்தெருவாக சைக்கிளில் சுற்றிய தொழிலாளி!
[Wednesday 2018-02-14 18:00]

மகர சங்கராந்தி அன்று காணாமல்போன தன் மனைவியைக் கண்டுபிடிக்க மிதிவண்டியில் சுமார் 600 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோகர் நாயக். ஒடிசா மாநிலத்தில் தினசரி ஊதியத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வரும், 42 வயதான மனோகர் நாயக் ஜார்கண்ட் மாநிலம், மூசாபனி பாலிகுடா கிராமத்தில் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். இவரின் மனைவி அனிதா, மனநலம் மற்றும் பேசும் திறனில் குறைபாடுடையவர். அனிதா, ஜனவரி 14-ம் தேதி அன்று, மகர சங்கராந்தி விழாவுக்காகக் குமரசால் கிராமத்தில் உள்ள தன் தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.


சிறுவனைக் கொன்று சூட்கேஸில் அடைத்த கொடூரம்: - வாலிபரை சிக்கவைத்த எலி
[Wednesday 2018-02-14 18:00]

யு.பி.எஸ்.சி தேர்வுக்குப் பயின்றுவரும் அவ்தேஷ் என்னும் இளைஞர், 7 வயது சிறுவனைக் கொன்று சடலத்தை சூட்கேஸில் மறைத்து வைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லி, ஸ்வரூப் நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில்தான் இந்தக் கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தன் 7 வயது மகனைக் காணவில்லை என்று தந்தை கரண் சயினி என்பவர் கடந்த ஜனவரி மாதம் 7-ம் தேதி மாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். காவல் நிலையத்துக்கு கரண் சயினி உடன் அவ்தேஷ் சக்யா என்ற 27 வயது இளைஞரும் சென்றிருந்தார். அவர் கரண் சயினியின் கீழ் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர்.


கூச்சலிட்ட படி காதலர்களைக் கலங்கடித்த பஜ்ரங் தள் அமைப்பினர்!
[Wednesday 2018-02-14 18:00]

பஜ்ரங் தள் அமைப்பினர் 'ஜெய் ஸ்ரீராம்' என்று கூச்சலிட்டபடி, அகமதாபாத்தில் சபர்பதி ஆற்றங்கரையருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த மக்களை மிரட்டி ரகளை செய்தனர். உலகம் முழுக்க இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதைக் கொண்டாடுவதற்கு சிவசேனா மற்றும் சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் சபர்பதி ஆற்றங்கரையில் உள்ள பூங்காவில் இன்று காதல் ஜோடிகள் மற்றும் பொதுமக்கள் கூடி இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் தடிகளுடன் வந்த பஜ்ரங் தள் அமைப்பினர், 'ஜெய் ஸ்ரீராம்' என்று கூச்சலிட்டபடி, ஆற்றங்கரையருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த மக்களை மிரட்டி ரகளை செய்தனர். ஆற்றங்கரையில் நின்றுகொண்டிருந்த சிலரை விரட்டியடித்தனர். பயந்துபோன காதல் ஜோடிகள் அங்கிருந்து ஓடினார்கள். 10 நிமிடங்கள் அவர்கள் அந்தப் பகுதியில் கலாட்டா செய்தனர்.


மக்கள் சேவையில் என் உயிர் பிரியட்டும்: - கமல் உருக்கம்
[Wednesday 2018-02-14 18:00]

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள


கருணைக் கொலை செய்ய கோரி திருநங்கை உருக்கமாக கடிதம்!
[Wednesday 2018-02-14 08:00]

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி கிடைக்காததை அடுத்து திருநங்கை ஷனாவி, தன்னை கருணை கொலை செய்யக் கோரி நாளிதழ் ஒன்றுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடித்ததில், திருநங்கை என்பதை காரணம் காட்டி எனக்கு கிடைக்க வேண்டிய வேலை மறுக்கப்படுகிறது. நான் திருநங்கை என்பதால் வரிகளில் ஏதாவது தள்ளுபடி செய்கிறார்களா? இல்லையே, நான் வரிகளை செலுத்திக் கொண்டு தானே இருக்கிறேன். என்னிடம் தகுதி இருக்கிறது, வேலை பார்த்த அனுபவமும் இருக்கிறது. எனினும் என்னுடைய பாலியல் தன்மையை காரணம் காட்டி எனக்கு கிடைக்க வேண்டிய வேலை மறுக்கப்படுகிறது. இதற்கடுத்து வேறு எந்தவொரு விமான நிறுவனத்திலும் நான் வேலை தேடப்போவதில்லை.


பணி முடிந்து வீடு சென்ற சென்னை ஐ.டி பெண்ணுக்கு நடந்த கொடூரம்!
[Tuesday 2018-02-13 17:00]

பணி முடிந்து வீடு திரும்பிய சென்னை ஐ.டி ஊழியரின் செல்போன், நகை, டூவீலர் ஆகியவற்றை பறித்ததோடு அவரிடம் சிலர் அத்துமீறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரும்பாக்கம் - தாழம்பூர் சாலையில் போலீஸார் நேற்றிரவு ரோந்து சென்றனர். அப்போது சாலையின் ஓரத்திலிருந்து பெண் ஒருவரின் முனகல் குரல் கேட்டது. உடனே போலீஸார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது தலையில் பலத்த காயத்துடன் ரத்தம் வடிந்த நிலையில் இளம்பெண் ஒருவர், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார், அந்தப் பெண்ணை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்தப் பெண் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா