Untitled Document
April 23, 2024 [GMT]
மணமகன் தாடியை எடுத்துவிட்டு வந்தால் தான் திருமணம்: - அடம்பிடித்த மணமகள்
[Friday 2018-03-16 18:00]

மணமகன் தாடியை எடுத்துவிட்டு வந்தால் தான் திருமணம் செய்து வைப்போம் என பெண் வீட்டார் கூறிய சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் கந்தவா பகுதியில் மங்கல் சௌகான் என்பவருக்கும், ரூபாலி என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தது. முகூர்த்த நேரத்தில், மணமகன் தனது தாடியை எடுத்துவிட்டு வந்தால் தான் பெண்ணை திருமணம் செய்து வைப்போம் என மணமகள் வீட்டார் கூறியுள்ளனர்.


வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தையை பலாத்காரம் செய்த கொடூரன்!
[Friday 2018-03-16 18:00]

டெல்லியில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தை பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியின் Preet Vihar எனும் பகுதியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.நேற்று முன்தினம் மாலை குழந்தையின் தாயார் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார், அப்போது அவரின் பக்கத்து வீட்டுக்காரரான அஸ்லம் வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்தான்.


தமிழகத்தில் சுதந்திரமாக வெளியே சென்று வர முடியாத நிலை: - ரஜினிகாந்த்
[Friday 2018-03-16 12:00]

அரசியல்வாதியாக 100 சதவீதம் சிறப்பாக செயல்பட இருப்பதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் ரிஷிகேஷ், தயானந்த் சரஸ்வதி ஆசிரமத்தில் வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆன்மிக புத்தகங்கள் படிப்பதற்காகவும், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் மக்களை சந்திப்பதற்காகவும், இங்கு வந்திருப்பதாக தெரிவித்தார். தாம் இன்னும் முழு நேர அரசியல்வாதியாக மாறவில்லை என்றும் அவர் கூறினார்.


இன்சூரன்ஸ் பணத்திற்காக மகனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி!
[Friday 2018-03-16 09:00]

தமிழகத்தில் இன்சூரன்ஸ் பணத்திற்காக மகனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தர்மபுரியில் உள்ள நேதாஜிநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதேசன்(45), ஜவுளிக்கடை உரிமையாளரான இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 27-ஆம் திகதி தர்மபுரி -கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையின் செண்டர் மீடியனில் மாதேசன் சடலமாக கிடந்துள்ளார்.


காதல் விவகாரத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்!
[Friday 2018-03-16 09:00]

இந்தியாவில் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தின் கடப்பாவை சேர்ந்தவர் யண்ணம் விஜய் குமார் (18). இவர் அதே பகுதியை சேர்ந்த மனிஷா (15) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்த நிலையில் இதை மனிஷாவின் மாமா ரெட்டி பார்த்துள்ளார்.


கர்ப்பிணி மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்த பெற்றோர்!
[Friday 2018-03-16 09:00]

இந்தியாவில் கர்ப்பிணி மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த பெற்றோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் சொனாரியா கிராமத்தை சேர்ந்த நய்னா பானுபாய் (25) என்ற பெண் தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த நவம்பரில் பிரகாஷ் பிரேம்ஜி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் தனது வீட்டாருக்கு தெரியாத வகையில் கணவர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.


இலங்கை அரசின் புதிய சட்டத்தை தடுத்து தமிழக மீனவர்களை காத்திட வேண்டும்: - மக்களவையில் அன்வர்ராஜா
[Thursday 2018-03-15 17:00]

இலங்கை அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தின் பிடியிலிருந்து தமிழக மீனவர்களை காத்திட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வாயிலாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எம்.பி. அன்வர்ராஜா நாடாளுமன்ற மக்களவையில் விதி எண் 377-ன் கீழ் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


தரமற்ற இனிப்புகளை சாப்பிட்ட 2 பேர் உயிரிழப்பு: - 5 பேருக்கு தீவிர சிகிச்சை
[Thursday 2018-03-15 17:00]

ராஜஸ்தான் மாநிலம் பிகானெர் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் நேற்று பார்மர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பினர். வழியில் அவர்கள் தரமற்ற கலப்பட பொருட்களால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை சாப்பிட்டதாக தெரிகிறது.


இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட நபர் எழுந்த அதிசயம்!
[Thursday 2018-03-15 17:00]

இந்தியாவில் இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட நபர், பிரேத பரிசோதனைக்கு முன்பாக எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹிமான்சு பரத்வாஜ், இவர் கார் விபத்தில் சிக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரத்வாஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.


நகைக்காக நண்பருடன் சேர்ந்து தாயை கொன்ற மகள்!
[Thursday 2018-03-15 08:00]

இந்தியாவில் நண்பருடன் சேர்ந்து நகைக்காக வளர்ப்பு தாயை கொலை செய்த மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்தவர் விஜயம்மா (55), அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகாத நிலையில் சோனு சிங் (29) என்ற பெண் இவரின் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார்.


யாராவது என்னை காப்பாற்றுங்க: - 10 வயது சிறுவனின் கதறல்
[Thursday 2018-03-15 08:00]

தமிழகத்தில் பூட்டப்பட்ட அறையில் பத்து வயது சிறுவன் யாராவது என்னை காப்பாற்றுங்க என்று கதறிய சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன், கூலித் தொழிலாளியான இவருக்கு வேல்முருகன்(10) என்ற மகன் உள்ளார்அங்கிருக்கும் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் சிறுவன் நேற்று வழக்கம் போல பள்ளிக்குச் சென்றுள்ளான்.


ரவிச்சந்திரனின் பரோல் காவல் செலவை அரசு ஏற்க வேண்டும்: - உயர் நீதிமன்றம்
[Wednesday 2018-03-14 17:00]

சிறையில் தான் சம்பாதித்த பணத்தைகூட ரவிச்சந்திரன் நன்கொடையாக வழங்கியுள்ளார். தற்போது கொடுக்கப்பட்ட பரோலின் விதிகளின்படி அந்தச் செலவுகளை அரசுதான் ஏற்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


விடுதலை புலிகளின் அனுதாபி பேரறிவாளன்: - உச்ச நீதிமன்றம்
[Wednesday 2018-03-14 17:00]

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் பேரறிவாளனுக்குத் தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்கமுடியும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உட்பட ஏழு பேரை குற்றவாளிகள் என கடந்த 1999-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கு நடைபெற்று 10 வருடங்களுக்கு மேலாகியும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தற்போது வரை சிறையில் உள்ளனர்.


கிணற்றுக்குள் பாய்ந்த கார்: - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஐவர்
[Wednesday 2018-03-14 17:00]

திருப்பூர் மாவட்டம் அருகே நடைபெற்ற விபத்தில், சாலையோரக் கிணற்றுக்குள் கார் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்.கோவை மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் தன்னுடைய மனைவி ராதாமணி மற்றும் உறவினர்கள் 5 பேருடன் உடுமலைப்பேட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.


மாணவியின் உயிரைப் பறித்த புதுமணத் தம்பதி!
[Wednesday 2018-03-14 17:00]

சென்னையில் கார் ஓட்டிப் பழகியபோது, பள்ளி மாணவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு, வன்னியர் 2-வது தெருவைச் சேர்ந்தவர், துரைவேலன். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது மகள் பவித்ரா. 7 வயதாகும் இவர், அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவருகிறார். நேற்றிரவு 9 மணியளவில், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அந்தப் பகுதியைச் சேர்ந்த டேனி என்பவர், சென்னை ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்க்கிறார். இவருக்கும் ப்ரீத்தி என்பவருக்கும் சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது.


விஷம் கலந்த கிணற்று நீரை குடித்ததால் 14 பேர் உயிரிழப்பு!
[Wednesday 2018-03-14 07:00]

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தின் கிணற்று நீரை குடித்ததால் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவத்மால் என்ற கிராமத்தில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் இருக்கும் நீரில் நச்சு கலக்கப்பட்டுள்ளது. இந்த நீரைக் குடித்ததால் கடந்த 24 மாதங்களில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நீரை குடித்ததால் பலருக்குச் சிறுநீரகப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.


பிள்ளையின் அன்புக்காக ஏங்கும் ஷமி: - மனைவியின் அடுத்தடுத்த புகாரால் கேள்விக்குறியான கிரிக்கெட் எதிர்காலம்
[Tuesday 2018-03-13 16:00]

இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ட்விட்டரில் தன் மகள் புகைப்படத்தைப் பகிர்ந்து உருக்கமாகக் கேப்ஷன் கொடுத்துள்ளது அவரின் ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முகமது ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரின் மனைவி ஹாசின் ஜஹான் குற்றம்சாட்டியுள்ளது ஷமியின் கிரிக்கெட் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. ஷமி பல பெண்களுடன் சாட் செய்ததை ஆதாரங்களுடன் ஷமியின் மனைவி அண்மையில் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.


காவல் துறையை பதறவைத்த 200 பெண்கள்: சினிமாவை விஞ்சிய நிஜ சம்பவம்
[Tuesday 2018-03-13 16:00]

காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடையவரைப் பிடிக்கச் சென்ற காவலர்களை, 200 பெண்கள் சுற்றிவளைத்துக்கொண்ட சம்பவம், புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி வைத்திக்குப்பத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான மாறன், கடந்த 6-ம் தேதி படுகொலைசெய்யப்பட்டார். இது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி மூர்த்தி, அவரது மனைவி திலகா, வினோத் உள்ளிட்ட 8 பேர் கும்பல்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.


மகன்களுக்கு நீச்சல் பயிற்சி கற்று கொடுத்த போது உயிரிழந்த தந்தை: - நீச்சல் குளத்தில் நடந்த சோகம்
[Tuesday 2018-03-13 16:00]

சென்னையில், மகன்களுக்கு நீச்சல் பயிற்சி கற்றுக்கொடுத்தபோது தந்தை பலியான சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாரிமுனை, தம்புசெட்டி தெருவைச் சேர்ந்தவர், அபிபுல்லா. இவர், புதுப்பேட்டையில் உள்ள கடையில் மேனேஜராகப் பணியாற்றிவந்தார். இவருக்கு அமதுல்லா, அப்துல்லா என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க சென்னை மெரினா நீச்சல் குளத்துக்கு இன்று காலை அழைத்துச் சென்றுள்ளார் அபிபுல்லா.


தேனி தீ விபத்து இயற்கையானதா அல்லது செயற்கையானதா? - சத்யராஜ் கேள்வி
[Tuesday 2018-03-13 16:00]

நடிகர் சத்யராஜ், தேனி தீ விபத்து இயற்கையானதா அல்லது செயற்கையானதா என்பதை அரசு ஆராய வேண்டும் என தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் சத்யராஜ் இந்த தீ விபத்து குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.


மக்கள் நீதி மய்யத்திலிருந்து எனக்கு ஒரு மெயில் வந்திருக்கு! - கமலை கலாய்த்த தமிழிசை
[Tuesday 2018-03-13 07:00]

மக்கள் நீதி மய்யத்திலிருந்து தனக்கு மெயில் வந்திருப்பதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இணையதளம் வாயிலாக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு மெயில் மூலம் கட்சியில் இணைந்ததற்கானத் தகவல் அனுப்பப்படும்.


முறை தவறிய உறவை கண்டித்த கணவன்: - அடியாட்களை வைத்து கொன்ற மனைவி
[Tuesday 2018-03-13 07:00]

தமிழ்நாட்டில் முறைதவறிய உறவை கண்டித்த கணவனை மனைவி அடியாட்களை வைத்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆயப்பாக்கம் வ.வு.சி.நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் மனைவி சந்திரமதி. தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.செல்வம் திங்கட்கிழமை காலை அங்குள்ள வயல்வெளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.


தமிழக அரசின் பதில் பொறுப்பற்றது: - சீமான்
[Tuesday 2018-03-13 07:00]

குரங்கணி தீ விபத்தை முன்னிறுத்தி, காட்டுப் பகுதிக்குள் யாரையும் செல்லவிடாமல் தடுத்து, நியூட்ரினோ பணிகளை ஆரம்பித்து விடுவார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.


பண ஆதாயத்துக்காக கூலிப்படையை ஏவி ராஜீவ் காந்தியை கொன்று விட்டார்கள்: - சுப்பிரமணியசாமி
[Monday 2018-03-12 16:00]

எனது தந்தை ராஜீவ் காந்தியை கொன்ற கொலையாளிகளை நாங்கள் மன்னித்து விட்டோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். காலங்கடந்த அவரது இந்த கருத்து அரசியல் ஆதாயத்துடன் வெளியிடப்பட்டதாக தமிழ்நாட்டை சேர்ந்த தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், ராஜீவ் காந்தியை பண ஆதாயத்துக்காக கூலிப்படையை ஏவி கொன்று விட்டார்கள் என பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியசாமி தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.


திருமணமான நாளை கொண்டாடச் சென்று காட்டுத்தீக்கு இரையாகிய புதுமணத் தம்பதி!
[Monday 2018-03-12 12:00]

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கிணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஈரோட்டைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினரும் அடங்குவர். துபாயில் வேலை செய்து வந்த விவேக், ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்தவர். விவேக்கிற்கும் கோபிச்செட்டிபாளையத்தில் கல்லூரி விரிவுரையாளராக பணி செய்து வந்த திவ்யாவிற்கும் கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் ஆகியுள்ளது.


முருகனுக்கு ஐபோன் 6 வழங்கி அதிர்ச்சியில் ஆழ்த்திய பக்தர்!
[Monday 2018-03-12 11:00]

தமிழ்க் கடவுளாம் முருகனுக்கு, `ஐபோன் 6


ராஜீவ் கொலை வழக்கில் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்: - தமிழக முதல்வர்
[Monday 2018-03-12 07:00]

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இருந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். தற்போது ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பேரறிவாளனின் மனுவிற்கு எதிராக மத்திய அரசு வாதாடி வருகிறது.


ராகுல் காந்தி பேசுவதை எந்தத் தமிழரும் நம்ப மாட்டார்கள்: - இல.கணேசன்
[Monday 2018-03-12 07:00]

`ராஜீவ் கொலையில் மலிவு விளம்பரம் தேடுகிறார் ராகுல்காந்தி' என பா.ஜ.க-வின் பாராளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் கடுமையாக விமர்சித்துள்ளார். சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு 5 நாள் சுற்றுப் பயணமாகச் சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிங்கப்பூர் ஐ.ஐ.எம் முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது

Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா