|
|
கண்ணிவெடி அகற்றும் பணிகள் இந்த ஆண்டில் நிறைவடையும்!
[Sunday 2024-04-07 04:00]
|
இவ்வருட இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் பெண்களை ஈடுப்படுத்திய நாடு என்ற பெருமையை இலங்கை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
|
|
|
இலங்கை- அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சு!
[Saturday 2024-04-06 19:00]
|
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் பிராந்திய பாதுகாப்பு குறித்து இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
|
|
|
கச்சத்தீவு விவகாரத்தை வைத்து தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை பெறுவதற்கு முயற்சி!
[Saturday 2024-04-06 19:00]
|
இந்தியாவில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் கச்சத்தீவு விவகாரத்தை வைத்து தமிழ்நாட்டு மக்களுடைய வாக்குகளை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
|
|
|
கட்டைக்காட்டில் கரைவலையில் சிக்கிய டொல்பின்கள்!
[Saturday 2024-04-06 19:00]
|
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நேற்று கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் மீண்டும் கடலில் விடப்பட்டன.
|
|
|
கல்வியங்காடு விபத்தில் முதியவர் பலி!
[Saturday 2024-04-06 19:00]
|
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் கல்வியங்காடு இலங்கை நாயகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
|
|
|
2028 வரை கடன்களை மீளச் செலுத்துவதை இடைநிறுத்த இணக்கம்?
[Saturday 2024-04-06 19:00]
|
இலங்கை அதன் கடன்களை மீள செலுத்துவதை 2028ம் ஆண்டு வரை இடைநிறுத்துவது குறித்த இறுதிப் பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் ஈடுபட்டுள்ளதாக நிக்கேய் ஏசியா தெரிவித்துள்ளது.
|
|
|
கிளிநொச்சியில் 18 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!
[Saturday 2024-04-06 19:00]
|
கிளிநொச்சியில் 18 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னாரில் உள்ள போதை ஒழிப்பு விசேட பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
|
|
|
சுதந்திரக் கட்சித் தலைமையகத்திற்குள் நுழைவதற்குத் தடை!
[Saturday 2024-04-06 19:00]
|
கோப்புகள் சில காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
|
|
|
கோணேசப் பெருமானைக் காவிய சுற்றுலாவிகள்!
[Saturday 2024-04-06 19:00]
|
வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரம் அருள் மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமானின் வருடாந்த மகோற்சம் நடைபெற்று வருகின்றது.
இந்த உற்சவத்தின் போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் இந்து மத கலாச்சார உடையுடன் வருகை தந்து பக்தியுடன் சாமி தூக்கினர்.
|
|
|
ஓமந்தையில் கப் மீது மோதியது ரயில்! - சாரதி படுகாயம்.
[Saturday 2024-04-06 19:00]
|
வவுனியா - ஓமந்தை பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கப் வாகனம் ஒன்று, ரயிலுடன் மோதிய விபத்தில், படுகாயமடைந்த சாரதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
|
|
|
செம்மணியில் 18 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!
[Saturday 2024-04-06 19:00]
|
யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் 18 கிலோ கேரள கஞ்சாவினை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
சாவகச்சேரி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இருவரிடம் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் செம்மணி பகுதியில் இன்று 18 கிலோ கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
|
|
|
டக்ளசை ஓட ஓட விரட்டிய பொன்னாவெளி மக்கள்!
[Saturday 2024-04-06 06:00]
|
கிளிநொச்சி - பொன்னாவெளியில் நேற்று சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால், மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றுள்ளார்.
|
|
|
ரொறன்ரோவில் ரயில் நிலையத்தில் பெண்ணைத் தாக்கிய தமிழர் கைது!
[Saturday 2024-04-06 06:00]
|
கனடாவில் பெண்ணொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் தமிழ் குடும்பஸ்தரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
|
|
|
முருகன் உள்ளிட்டவர்களை பலாலிக்கு அனுப்ப மறுத்த இந்திய அதிகாரிகள்!
[Saturday 2024-04-06 06:00]
|
இந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கைக்கு கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாட்டுடனேயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.
|
|
|
இலங்கையின் சொத்து கையிருப்பு அதிகரிப்பு!
[Saturday 2024-04-06 06:00]
|
கடந்த மார்ச் மாதத்தில் நாட்டில் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 9.5% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
|
|
|
சுதந்திரக் கட்சியின் முக்கிய ஆவணங்கள் மாயம்!
[Saturday 2024-04-06 06:00]
|
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
|
|
|
எங்களின் சுதந்திரத்தில் தலையிடுகிறது சீனா!
[Saturday 2024-04-06 06:00]
|
திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய்லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை சீனா தடுக்கின்றது என இலங்கையை சேர்ந்த பௌத்த மதகுரு ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
|
|
|
வடக்கு, கிழக்கிற்கு வெப்ப எச்சரிக்கை!
[Saturday 2024-04-06 06:00]
|
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களுக்கும் மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கும் வெப்பமான வானிலை குறித்து
வளிமண்டலயவில் திணைக்களம் எச்சரிக்கை வௌியிட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு மனித உடலால் உணரப்படும் வெப்பம், கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|
|
|
வட்டுக்கோட்டையில் மதிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்! - தொழில்நுட்பக் கல்லுரி மாணவர்கள் காயம்.
[Saturday 2024-04-06 06:00]
|
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை துணவி பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிளொன்று மதில் மற்றும் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்தனர்.
|
|
|
அலைபேசி விலை சரிந்தது!
[Saturday 2024-04-06 06:00]
|
டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலை 18% - 20% வரை குறைந்துள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
|
|
|
அனுரவுடன் சுமந்திரன் சந்திப்பு!
[Saturday 2024-04-06 06:00]
|
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமாரவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
|
|
|
கீரிமலையில் பொதுமக்களின் காணிகளை சுவீரிக்க முயற்சி! - எதிர்ப்பினால் நிலஅளவீடு நிறுத்தம்.
[Friday 2024-04-05 16:00]
|
யாழ்ப்பாணம்- கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டுப்பணி இன்று முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
|
|
|
ஆறு மொட்டு எம்.பிக்கள் சஜித்தின் கூட்டணியில் இணைவு!
[Friday 2024-04-05 16:00]
|
பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளனர்.
|
|
|
கனேடிய தமிழ் காங்கிரஸ் உலகத் தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்!
[Friday 2024-04-05 16:00]
|
தமிழர்களுக்கு எதிராக எந்த விதமான இனப்படுகொலையும் நடைபெறவில்லை என்பதை கனடிய தமிழர் பேரவை (CTC) தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கனேடியத் தமிழர் கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளதுடன், கனடிய தமிழர் பேரவை தொடர்பாக விமர்சனங்களையும் முன்வைத்துள்ளது.
|
|
|
ரணிலுடன் பசில் மீண்டும் சந்திப்பு!
[Friday 2024-04-05 16:00]
|
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
|
|
|
பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் - இரு யுவதிகள் படுகாயம்!
[Friday 2024-04-05 16:00]
|
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் பஸ் ஒன்றும் ,மோட்டார் சைக்கிளும் இன்று காலை நேருக்கு நேர் மோதியதில் இரு யுவதிகள் காயமடைந்துள்ளனர்.
|
|
|
ஒரே நாளில் இரண்டு தேர்தல்கள் - நடைமுறைச் சாத்தியம் இல்லை!
[Friday 2024-04-05 16:00]
|
ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டின் தேர்தல் நடத்தும் முறைப்படி அது நடைமுறைச் சாத்தியம் இல்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
|
|
|
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 3 நாள் விவாதம்!
[Friday 2024-04-05 16:00]
|
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
|
|
|
|