|
|
கணேமுல்லையில் துப்பாக்கிச் சண்டை - அதிரடிப்படை உள்ளிட்ட இருவர் காயம்!
[Thursday 2024-03-21 05:00]
|
கணேமுல்லையில் உள்ள வீடொன்றை இன்று இரவு சோதனையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது நபரொருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதன்போது விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் பொலிஸ் அதிரடிப் படையின் பதில் தாக்குதலில் குறித்த நபரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
|
|
|
ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிர்ப்பு - காலியாகும் கோப் குழு கூடாரம்!
[Thursday 2024-03-21 05:00]
|
கோப் எனப்படும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிலிருந்து விலகுவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
|
|
|
பௌத்த பிக்குகளின் பேரரசியல் அபிலாஷைகளைத் தடுக்காத வரை பிரச்சினைகள் தொடரும்!
[Wednesday 2024-03-20 19:00]
|
நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளிக்குமாறு, அரசாங்கம் அனைத்து தரப்பினரையும் வலியுறுத்த வேண்டும் எனவும், பௌத்த பிக்குகளின் பேரரசியல் அபிலாஷைகளைத் தடுக்காத வரை, வெடுக்குநாறிமலை போன்ற சம்பவங்கள், தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும், சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக் குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் தெரிவித்துள்ளார்.
|
|
|
வெடுக்குநாறிமலை அராஜகங்கள் - பல்கலை. மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
[Wednesday 2024-03-20 19:00]
|
வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பொலிஸ் அராஜகங்கள் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
|
|
|
கனடாவுக்குப் புறப்பட்டார் அனுரகுமார!
[Wednesday 2024-03-20 19:00]
|
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று மாலை கனடாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
|
|
|
சேந்தாங்குளம் கடலில் நீராடிய இருவர் சடலங்களாக மீட்பு!
[Wednesday 2024-03-20 19:00]
|
யாழ்ப்பாணம் - இளவாலை சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சேந்தாங்குளம் கடற்கரையில் இன்று நீராட சென்ற மூவரில் இருவர் காணாமல் போன நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
|
|
|
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸ் தாக்குதல்! - 33 பேர் கைது.
[Wednesday 2024-03-20 19:00]
|
கொழும்பு -புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் , தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தியதையடுத்து பதற்ற நிலை ஏற்பட்டது.
|
|
|
கடல் காவலர்கள் படையணியை உருவாக்குவது இந்திய மீனவர்களுடன் மோதலை ஏற்படுத்தும்!
[Wednesday 2024-03-20 19:00]
|
இந்திய இழுவைமடிப் படகு தொடர்பான பிரச்சினைக்கு இந்திய அரசாங்கத்துடன் பேசி தீர்வை எட்டுவதை விட்டு கடல் காவலர்கள் எனும் பெயரில் புதிய படையணியை உருவாக்குவது கடலில் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
|
|
|
வெளிநாட்டில் உள்ள 6 எம்.பிக்கள், அமைச்சர்களை அவசரமாக நாடு திரும்ப உத்தரவு!
[Wednesday 2024-03-20 19:00]
|
வெளிநாட்டில் இருக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
|
|
|
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் - 128 ஆவது இடத்துக்கு இறங்கியது இலங்கை!
[Wednesday 2024-03-20 19:00]
|
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஏழாவது முறையாக மீண்டும் 'பின்லாந்து' முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
அதைத் தொடர்ந்து டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், இஸ்ரேல், நெதர்லாந்து, நோர்வே, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.
|
|
|
பருத்தித்துறையில் குப்பைக்கு வைத்த தீ கடையைக் காவு கொண்டது!
[Wednesday 2024-03-20 19:00]
|
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில் இன்று காலை தீப்பரவல் காரணமாக சிறிய கடையொன்று எரிந்து சேதமானது.
|
|
|
பொன்னாலை இளைஞன் கொலை - 5ஆவது சந்தேக நபரை அடையாளம் காட்டினார் மனைவி!
[Wednesday 2024-03-20 17:00]
|
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளவர்களில் ஐந்தாவது சந்தேகநபரை கொல்லப்பட்டவரின் மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.
|
|
|
தமிழ்ச் சமூகத்தை வழிநடத்த தீர்க்கதரிசனமும் ஆளுமையும் கொண்ட தலைமை இல்லை!
[Wednesday 2024-03-20 07:00]
|
தமிழ்ச் சமூகத்தை வழிநடத்தத் தீர்க்கதரிசனமும் ஆளுமையும் கொண்ட, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தேசியத் தலைமை இன்று இல்லாமையால் சகல துறைகளுமே தகுந்த தலைமைத்துவங்கள் இன்றித் தள்ளாடுவதாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
|
|
|
கோப் குழுவின் தலைவர் நியமனத்துக்கு எதிர்ப்பு - 7 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதவி விலகல்!
[Wednesday 2024-03-20 07:00]
|
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழுவின் (கோப்) தலைவராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோப் குழுவில் இருந்து எதிர்க்கட்சிகளின் 07 உறுப்பினர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.
|
|
|
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 61.5 மில்லியன் டொலரை வழங்குகிறது இந்தியா!
[Wednesday 2024-03-20 07:00]
|
காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
|
|
|
கனேடியத் தமிழர் கூட்டின் மக்கள் சந்திப்பு!
[Wednesday 2024-03-20 07:00]
|
கனேடியத் தமிழர் கூட்டின் மக்கள் சந்திப்பு (Town hall meeting) வரும் சனிக்கிழமை, 23ஆம் திகதி மார்ச் மாதம், 2024 அன்று பிற்பகல் 1.00 மணியிலிருந்து 4.00 மணிவரை தமிழிசை கலா மன்றத்தில் (1120 Tapscott Road, Unit #3, Scarborough, Ontario, M1X 1E8) நடைபெறவுள்ளது.
|
|
|
அன்னைப் பூபதியின் உண்ணாவிரத போராட்ட நினைவு நாள் ஆரம்பம்!
[Wednesday 2024-03-20 07:00]
|
அன்னை பூபதியின் உண்ணாவிரதம் ஆரம்பித்த 36 வது ஆண்டு நினைவு நாள் நேற்றுக் காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
|
|
|
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது பாராளுமன்றத்திற்கான அரசவை உறுப்பினர்கள் தேர்தல்!- கனடா
[Wednesday 2024-03-20 07:00]
|
நா.க.த அரசாங்கமானது தனது முதன்மை கொள்கையான
“புலம் பெயர் தமிழ் மக்களால் சனநாயக முறையில் தமது அரசியல் குரலாக தெரிவு செய்யப்பட்ட நா.க.த.அரசாங்கமானது, சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசை மீளவும் நிறுவப் பாடுபடும்”
என்பதற்கேற்ப சனநாயக ரீதியில் உலகளாவிய விழுமியங்களை கடைப்பிடிக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒருமுறை பொதுத் தேர்தல்களை நடத்திவருகிறது.
|
|
|
10 கோடி ரூபா நகைகளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய யாழ்ப்பாண வாசி!
[Wednesday 2024-03-20 07:00]
|
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான நகைகளுடன் டுபாயிலிருந்து வந்த இரு பயணிகளை இலங்கை சுங்க கண்காணிப்பு பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர் என சுங்க ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட சுங்க பணிப்பாளர் சிவலி அருங்கொட தெரிவித்தார்.
|
|
|
மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதற்கு சுமந்திரன் பொறுப்புக்கூற வேண்டும்!
[Wednesday 2024-03-20 07:00]
|
மாகாண சபைத் தேர்தல் முறைமை திருத்த விவகாரத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எம்.ஏ.சுமந்திரன் கடும் அழுத்தம் பிரயோகித்தார். மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளமைக்கு எம்.ஏ.சுமந்திரன் பொறுப்புக்கூற வேண்டும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
|
|
|
அனுரவுடன் ஜப்பானிய தூதுவர் சந்திப்பு! - ஜனாதிபதி தேர்தல் குறித்தும் ஆராய்வு
[Wednesday 2024-03-20 07:00]
|
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோசி ஹிடேக்கி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் சந்திப்பு, நேற்று மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
|
|
|
தமிழ் எம்.பிக்களின் போராட்டம் - நாடாளுமன்றில் பதற்றம்!
[Tuesday 2024-03-19 16:00]
|
சிவராத்திரி அன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சமய வழிபாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இன்று சபையில் போராட்டம் நடத்தியதையடுத்து பாராளுமன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
|
|
|
இந்தியத் தூதரகம் முன் உண்ணாவிரதப் போராட்டம்! - விரட்டியடித்த பொலிஸ்.
[Tuesday 2024-03-19 16:00]
|
யாழ். மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து இன்று காலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
|
|
|
வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை!- வழக்கும் தள்ளுபடி.
[Tuesday 2024-03-19 16:00]
|
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த போது, பொலிசாரால் கைது செய்யப்பட்ட எட்டுப் பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
|
|
|
கோட்டாவின் கொமாண்டோ பயிற்றுவிப்பாளர் ஹெரோயினுடன் கைது!
[Tuesday 2024-03-19 16:00]
|
ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படையில் லான்ஸ் கோப்ரல் ஆக பணியாற்றிய முன்னாள் சிப்பாய் ஒருவர் இரண்டு கிராம் ஹெரோய்னுடன் கைது செய்யப்பட்டதாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
|
|
|
வடக்கில் கடும் வெப்பம் - செப்ரெம்பர் வரை காத்திருக்கும் ஆபத்து!
[Tuesday 2024-03-19 16:00]
|
வடமாகாணத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
|
|
|
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!
[Tuesday 2024-03-19 16:00]
|
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது குறித்த பரீட்சைக்கான நேர அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
|
|
|
விஸ்வமடுவில் குழந்தையைக் கொன்றதாக தாய் கைது!
[Tuesday 2024-03-19 16:00]
|
முல்லைதீவு - விஸ்வமடு இளங்கோபுரம் பகுதியில் தகாத உறவினால் பிறந்த குழந்தையை கொன்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
|
|
|
|