|
|
மொஸ்கோ தாக்குதலின் பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு!
[Sunday 2024-03-24 08:00]
|
ரஷ்யா - மொஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி மண்டபம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அவசரகால சேவை பணியாளர்கள் கட்டிடத்தின் இடிபாடுகளில் தொடர்ந்தும் தேடுதல்களை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
|
|
|
ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிரடியாக நாடு கடத்தப்படும் இலங்கைத் தமிழர்கள்!
[Sunday 2024-03-24 08:00]
|
அண்மைக்காலமாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கையர்கள் நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து கோரிய அதிகளவான இலங்கையர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். இலங்கையில் போர் அபாயம் இல்லாத நிலையில், இவ்வாறு நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
|
|
|
56 கனேடியர்களுக்கு ரஷ்யா விதித்த அதிரடி தடை!
[Sunday 2024-03-24 08:00]
|
கனடாவில் உள்ள 56 குடிமக்களுக்கு ரஷ்யாவானது அதிரடி தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ரஷ்யா இந்த தடையை விதித்துள்ளதாக மாஸ்கோ வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.குறித்த பட்டியலில் உள்ளவர்கள் "OUN-UPA மற்றும் கலீசியா பிரிவைச் சேர்ந்த ஹிட்லரின் ஆதரவாளர்களை புகழ்ந்து பேசும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என ரஷ்யா காரணம் வெளியிட்டுள்ளது.
|
|
|
ரஷ்ய இசை நிகழ்ச்சி தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம்!
[Saturday 2024-03-23 18:00]
|
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவுக்கு அருகே இசை நிகழ்ச்சி அரங்கு ஒன்றில் துப்பாக்கிக்காரர்கள் நடத்திய தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இசை நிகழ்ச்சி அரங்கு ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதுடன் 145 பேருக்கு மேல் காயமடைந்ததாக ரஷ்ய வேவுத்துறை தெரிவித்தது.
|
|
|
கனடாவில் வெளியிடப்படவுள்ள போரின் சாட்சியம் நூல்!
[Saturday 2024-03-23 18:00]
|
போர் காலத்தில் செய்தியாளராக கடமையாற்றிய சுரேன் கார்த்திகேசு என்பவரால் போரின் சாட்சியம் என்ற நூல் வெளியிடப்படவுள்ளது. குறித்த நூலானது கனடா வன்கூவர் நகரில் எதிர்வரும் 27ஆம் திகதியும் (27.04.2024) மே 12ஆம் திகதி (12.05.2024) சுவிட்சர்லாந்து நகரிலும் வெளியீடு செய்யப்படவுள்ளது.
|
|
|
பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை!
[Saturday 2024-03-23 18:00]
|
அமெரிக்காவில் முதன்முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சத்திரச்செய்கை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் இஜெனிசிஸ் என்ற மருந்து நிறுவனத்திடம் இருந்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பெற்று கடந்த 16 ஆம் திகதியன்று இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
|
|
|
ரஷ்யா இசை நிகழ்ச்சியில் தாக்குதல்: 60 பேர் பலி!
[Saturday 2024-03-23 18:00]
|
ரஷ்யாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் அரங்கிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தாக்குதலிற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது. ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குரோகஸ் சிட்டி ஹோல் என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், அங்கு பலர் கூடியிருந்தனர்.
|
|
|
கனேடிய மக்களுக்கு வெளியான எச்சரிக்கை!
[Saturday 2024-03-23 06:00]
|
கனடாவில் தற்போது நிலவிவரும் பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவானது மேலும் வலுவடையும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் டொராண்டோ பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், 50 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு காணப்படும் எனவும், பெப்ரவரி மாதத்தில் பதிவுசெய்யப்பட்ட 6.4 சென்டிமீட்டர் என்ற அளவிலும் காட்டிலும் அதிகம் என கூறப்பட்டுள்ளது.
|
|
|
ரஷ்யா - மொஸ்கோவில் ஆயுததாரிகள் தாக்குதல்!
[Saturday 2024-03-23 06:00]
|
ரஷ்யா - மொஸ்கோ புறநகர் பகுதியில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 40 வரை பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய உளவுத்துறை தெரிவித்துள்ளது. பெருந்திரலான மக்கள் நிரம்பியிருந்த குரோகஸ் சிட்டி இசைக்கச்சேரி அரங்கில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அந்நாட்டின் பாதுகாப்பு துறை கூறியுள்ளது.
|
|
|
பிரித்ததானிய இளவரசி புற்றுநோயினால் பாதிப்பு!
[Saturday 2024-03-23 06:00]
|
புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் தான் இருப்பதாக பிரித்தானியாவின் இளவரசி கெத்தரின் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் அதற்கான சிகிச்சைஅவர் கிரமமாக பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
|
|
|
கனடாவில் குடியேறுவோருக்கான முக்கிய அறிவுறுத்தல்!
[Friday 2024-03-22 18:00]
|
கனடாவில் குடியேறும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய அட்லாண்டிக் பேரவை குடியேறிகள் தொடர்பில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கனடாவிற்குள் குடியேறும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பிரஜைகளினால் வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என அந்தப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
|
|
|
ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த அமெரிக்கா!
[Friday 2024-03-22 18:00]
|
ஐபோன் வாடிக்கையாளர்கள் ஆண்டிராய்டு செல்போன்களுக்கு மாறுவதை கடினமாக்கியதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக அந்நிறுவனம் மீது அமெரிக்க அரசாங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.
|
|
|
நீல் ஆம்ஸ்ட்ராங் கால் தடம்: கண்டுபிடித்தது சந்திரயான்-2!
[Friday 2024-03-22 18:00]
|
நீல் ஆம்ஸ்ட்ராங் தடம் பதித்த இடத்தை சந்திரயான்-2 ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளதுடன், அந்த புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 54 ஆண்டுகளுக்கு முன்பு 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி முதன் முறையாக நாசா விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் அப்பல்லோ விண்கலம் மூலம் நிலவில் தரை இறங்கினார்.
|
|
|
சீனாவில் பல மருத்துவமனைகளில் மகப்பேறு சேவைக்கு பூட்டு!
[Friday 2024-03-22 18:00]
|
சீனாவில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பல மருத்துவமனைகள் மகப்பேறு சேவைகளை நிறுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கிழக்கு செஜியாங் மற்றும் தெற்கு ஜியாங்சி உட்பட பல மாகாணங்களின் மருத்துவமனைகள் கடந்த இரண்டு மாதங்களில் தமது மகப்பேறு பிரிவுகளை மூடுவது தொடர்பில் அறிவித்திருப்பதாக சர்வதேச ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
|
|
|
காசாவின் சுகாதார கட்டமைப்பை இலக்கு வைக்கும் இஸ்ரேலிய படை!
[Friday 2024-03-22 06:00]
|
பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்காக திட்டமிட்ட முறையில் காசாவின் சுகாதார கட்டமைப்பை இஸ்ரேலிய படையினர் அழித்துவருவதாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவை சேர்ந்த மருத்துவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்திற்கு தெரிவிக்கவுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
|
|
|
இலங்கையின் இனப்படுகொலை விசாரணையை புறக்கணிக்கும் பிரித்தானியா!
[Friday 2024-03-22 06:00]
|
கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கனடாவும், ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவும் தடைகளை விதித்திருக்கும் நிலையில், பிரித்தானிய எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்காமை அவற்றுக்கு முற்றிலும் முரணானதாக அமைந்திருக்கின்றது என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் எலியற் கோல்பேர்ன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். தடைகளை விதிப்பதன் மூலம் பொறுப்புக்கூறல் சார்ந்த அழுத்தத்தை வழங்கவேண்டும் எனவும், இலங்கையுடனான உறவை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் எனவும் அந்நாட்டு அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
|
|
|
கனடாவில் வங்கி வட்டி வீதங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!
[Friday 2024-03-22 06:00]
|
கனடாவில் வங்கி வட்டி வீதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் வட்டி வீதங்கள் குறைக்கப்படும் காலப்பகுதி குறித்த விபரங்களை கனேடிய மத்திய வங்கி அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
|
|
|
மூளைக்குள் பொருத்தப்பட்ட சிப் மூலம் கணினியை இயக்கிய இளைஞர்!
[Thursday 2024-03-21 18:00]
|
எலான் மஸ்க்கின் நியுரோலிங் நிறுவனம் வடிவமைத்த சிப்பை மூளைக்குள் பொருத்திய முதல் நபர், தமது சிந்தனை மூலம் கணிணியில் செஸ் விளையாடிய வீடியோவை நியுரோலிங் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
|
|
|
அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய மாணவன்: தந்தைக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்!
[Thursday 2024-03-21 18:00]
|
அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய மாணவனின் சிறுநீரகத்தை விற்பனை செய்யப்போவதாக அச்சுறுத்த விடுத்ததாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக கடந்த்தப்பட்ட , மாணவனின் தந்தை சலீம் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
|
|
|
"புதின் உடன் பேச்சு நடத்த வேண்டாம்" - உலக தலைவர்களிடம் நவால்னியின் மனைவி கோரிக்கை!
[Thursday 2024-03-21 18:00]
|
புதின் உடன் பேச்சு நடத்த வேண்டாம் என உயிர்ழந்த நவால்னியின் மனைவி , உலக தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரஷியாவில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் அபார வெற்றி பெற்றதை அடுத்து உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
|
|
|
விசா விதிகளை கடுமையாக்கும் அவுஸ்திரேலியா!
[Thursday 2024-03-21 18:00]
|
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிகளை கடுமையாக்க அவுஸ்திரேலியா அரசாங்கம் தீர்மனித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதன்படி இந்த வாரத்திலிருந்து விதிகள் கடுமையாக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
|
|
|
சுவிஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
[Thursday 2024-03-21 06:00]
|
பருவநிலை மாறிவரும் நிலையில், சில குறிப்பிட்ட பூச்சிகளால் ஏற்படும் நோய்களைத் தடுப்பதற்காக, தடுப்பூசி போட்டுக்கொள்ள சுவிட்சர்லாந்து அரசு வலியுறுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவிட்சர்லாந்தில் வெப்பம் அதிகரிக்கத்துள்ளதைத் தொடர்ந்து, உன்னிப்பூச்சிகள் எனும் ஒருவகை பூச்சிகள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.
|
|
|
கனடாவில் மேற்கொள்ளப்பட்ட நூதன மோசடி குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
[Thursday 2024-03-21 06:00]
|
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற நூதன மோசடி தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன. செற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கிறிப்டோ கரன்ஸி தொடர்பில் குறித்த மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த சம்பவத்தில் ரொறன்ரோவைச் சேர்ந்த நபர் ஒருவர் 17000 டொலர்களை இழந்துள்ளதோடு, செயற்கை நுண்ணறிவு செய்தி தளங்களின் மூலம் இந்த மோசடி இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.
|
|
|
உலகில் முதல் முறையாக விமான ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!
[Thursday 2024-03-21 06:00]
|
உலகில் முதல் முறையாக டுபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விமான நிலைய ஊழியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அமீரகத்தில் ரமழான் மாதம் தொடங்கி 10 நாட்கள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் அந்நாட்டில் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
|
|
|
ஒட்டவாவில் மற்றுமொரு கொடூர சம்பவம்!
[Tuesday 2024-03-19 15:00]
|
கனடா ஒட்டாவாவில் வசிக்கும் இந்தியர் மனைவியை கொலை செய்துவிட்டு இந்தியாவில் வசிக்கும் தாயிடம் வீடியோ காலில் கணவர் தகவல் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பில் உள்ள தனது தாயிடம் வீடியோ காலில் பேசிய ஜக்பிரீத் சிங், தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
|
|
|
வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிர்ச்சியளித்த பிரபல நிறுவனம்!
[Tuesday 2024-03-19 15:00]
|
வீட்டிலிருந்து பணி செய்யும் ஊழியர்கள் அல்லது ஹைப்பிரிட் முறையில் வீட்டிலும் அலுவலகத்திலும் வந்து மாறி மாறி பணி புரிந்து வருபவர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என டெல் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டெல் நிறுவனம் அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு உலகம் முழுவதும் கிளைகளை வைத்துள்ளது .
|
|
|
அமெரிக்காவில் ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு!
[Tuesday 2024-03-19 15:00]
|
அமெரிக்காவில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்ட 8 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பலரையும் கவலைக்குள்ளாக்கி உள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள மேடிசன்வில்லி என்ற நகரின் நார்த் ஹாப்கின்ஸ் பள்ளியில் மார்ச் 14ஆம் தேதி இரவு ஒரு நிதி திரட்டும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.
|
|
|
கனடாவில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!
[Tuesday 2024-03-19 15:00]
|
கனடாவில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பினை பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடா முழுவதிலும் சராசரி பெற்றோலின் விலை கடந்த மார்ச் மாதம் உயர்வடைந்துள்ளது. ரொறன்ரோவில் கூடுதல் அளவில் எரிபொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
|
|
|
|