Untitled Document
March 28, 2024 [GMT]


இரண்டாவது ராணுவக் கப்பலை வட கொரியாவுக்கு அருகில் நிறுத்திய அமெரிக்கா: - கொரிய தீபகற்பத்தில் பதற்றம்!
[Friday 2017-05-19 08:00]

அமெரிக்கா - வட கொரியா இடையில் பல மாதங்களாக பனிப் போர் நிலவி வருகிறது. பிரச்னைக்குத் தீர்வு எட்டுப்பட்டுவிடும் என்று நினைக்கும்போது, இரு நாடுகளில் ஏதாவது ஒன்று தனது துடுக்கத்தனமான நடவடிக்கையின் மூலம், சுமூகப் பேச்சுவார்த்தையை சீர்குலைத்துவிடுகின்றது. இரு நாட்டுக்கும் இடையிலான பிரச்னை ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்கா, 'கொரிய தீபகற்பத்தில் அனுமதியின்றி எந்தவித அணு ஆயுத சோதனையும் வட கொரியா செய்யக் கூடாது' என்று கறாராக கூறிவந்தது. ஆனால், இதைப் பொருட்படுத்தாமல் வட கொரியா, 'அமெரிக்காவின் பேச்சுக்கெல்லாம் கட்டுப்பட முடியாது. எங்கள் பாதுகாப்புக்காக நாங்கள் எந்தவித சோதனை வேண்டுமானாலும் நடத்துவோம்' என்று தொடர்ச்சியாக வல்லரசின் அச்சுறத்தலை புறந்தள்ளியது.


உலக மக்களை எச்சரிக்கும் பிரபல மருத்துவத்துறை நிபுணர்!
[Thursday 2024-03-28 18:00]

நம் வாழ்நாளிலேயே உலகம் இன்னொரு பெருந்தொற்றை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்று கூறும் மருத்துவத்துறை நிபுணர் ஒருவர், அப்படி எதுவும் நிகழாது என்பதுபோல நடந்துகொள்வது அறியாமையே என்கிறார். நம் வாழ்நாளில் இன்னொரு பெருந்தொற்றை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என எச்சரிக்கும் அந்த நபரின் பெயர் தேவி லலிதா ஸ்ரீதர்.


பால்டிமோர் கப்பல் விபத்து: நதியிலிருந்து இரண்டு பேர் சடலமாக மீட்பு!
[Thursday 2024-03-28 18:00]

பால்டிமோரில் கப்பல் விபத்துக்குள்ளான இடத்தில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் உள்ள படாப்ஸ்கோ ஆற்றில் சரக்கு வாகனம் மோதியதில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்தது. பாலம் இடிந்து விழுந்த இடத்தில் தண்ணீருக்கு அடியில் இருந்த சிவப்பு பிக்கப் டிரக்கில் இருந்து இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.


மீண்டும் நெருக்கடியில் பிரதமர் ரிஷி சுனக்!
[Thursday 2024-03-28 18:00]

சிறு படகுகளில் பிரித்தானியாவுக்கு குடிபெயரும் மக்களின் எண்ணிக்கை இந்த மூன்று மாதங்களில் பெருமளவு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தால் தற்போது பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் பிரதமர் ரிஷி சுனக். இந்த 3 மாதங்களில் மட்டும் 4,644 பேர்கள் சிறு படகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர்.


கனடாவில் நோய்த்தொற்று பரவுகை குறித்து அவசர எச்சரிக்கை!
[Thursday 2024-03-28 18:00]

கனடாவில் தட்டம்மை நோய்த் தொற்று பரவுகை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றது. கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலுக்கு பின் 143 பேர் மாயம்!
[Thursday 2024-03-28 06:00]

ரஷ்யாவில் கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பின் 140க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அறிக்கைகள் கிடைத்துள்ளன. மாஸ்கோ நகரில் கச்சேரி அரங்கில் கடந்த வாரம் கொடிய பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இறப்பு எண்ணிக்கை 140 ஆகவும், 360 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹமாஸ் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த அமெரிக்கா!
[Thursday 2024-03-28 06:00]

காசாவில் விமானங்களில் இருந்து பரசூட் மூலம் உதவிப்பொருட்களை விநியோகிப்பதை நிறுத்துமாறு ஹமாஸ் அமைப்பு கோரியுள்ளது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் இந்த கோரிக்கைக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. காசாவில் உணவுப் பற்றாக்குறையால் தவித்துவரும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக விமானங்களில் இருந்து பரசூட் மூலம் உதவிப்பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.


ஜேர்மன் பேர்லின் இருந்து சூரிச் சென்ற பஸ் விபத்து: ஐவர் பலி!
[Thursday 2024-03-28 06:00]

ஜேர்மனி - பெர்லினில் இருந்து சுவிட்சர்லாந்து நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று கிழக்கு ஜேர்மனியில் நெடுஞ்சாலையில் இருந்து புதன்கிழமை வந்ததில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி காலை 9.45 மணியளவில் (இரவு 7.45 AEDT) லீப்ஜிக் அருகே A9 நெடுஞ்சாலையில் விபத்து நடந்தது, இரு திசைகளிலும் சாலை மூடப்பட்டது.


உணவுக்காக ஓடி உயிரிழந்த காசா மக்கள்: பெரும் துயர நிலை!
[Wednesday 2024-03-27 18:00]

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் நீடித்து வரும் நிலையில், காசாமீது அமெரிக்கா, வான்வெளிஊடாக வீசப்பட்ட உதவிப்பொருட்கள் கடலில் விழுந்தவேளை அவற்றை எடுக்க முயன்ற 12 பேர் கடலில்மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் ஆறுமாத இராணுவநடவடிக்கை காரணமாக காசவில் பெரும் பட்டினிநிலை உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.


பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றிய அமெரிக்க கப்பல் விபத்தின் கடைசி நேர அழைப்பு!
[Wednesday 2024-03-27 18:00]

அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தின் மீது இடம்பெற்ற விபத்தில் பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றிய அழைப்பு தொடர்பில் மேரிலாண்ட் ஆளுநர் வெஸ் மூர் கருத்து வெளியிட்டுள்ளார். கப்பலானது அதன் செயல்திறனை இழந்தவுடன், அதன் அதிகாரிகள் ''கப்பல் மோதப்போகிறது. பாலத்தை நெருங்கி வருகிறது, அது திசைமாற்றி கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. "நாங்கள் அதைக் கட்டுப்படுத்தும் வரை, எல்லா போக்குவரத்தையும் நிறுத்த வேண்டும்."என்ற அழைப்பே பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றியுள்ளது.


முதன்முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்கும் சவுதி அழகி!
[Wednesday 2024-03-27 18:00]

பிரபஞ்ச அழகிப் போட்டியில் முதன்முறையாக சவுதி அரேபியா அழகி பங்கேற்கவுள்ளார். அந்த வகையில் மிக உயரிய அழகி போட்டியாக இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் முதன்முறையாக சவுதி அரேபியா நாட்டின் 27 வயதான மாடல் ரூமி அல்கஹ்தானி (Rumy Alqahtani பங்கேற்கவுள்ளார். உலகின் பல்வேறு நாடுகள் அழகிகளுக்கான போட்டிகளை நடத்துகின்றன. அதில் வெற்றிப்பெறும் பெண்ணுக்கு அந்நாட்டு அழகு பட்டம் கொடுக்கப்படுகிறது. அப்படி ஒவ்வொரு நாட்டு அழகிகளையும் கொண்டு உலக அழகி போட்டி நடைபெறும்.


ஒரு பாலினத் திருமண சட்டமூலத்துக்கு தாய்லாந்து அங்கீகாரம்!
[Wednesday 2024-03-27 18:00]

ஒரு பாலினத் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் சட்டமூலத்துக்கு தாய்லாந்து நாடாளுமன்ற கீழ் சபை இன்று அங்கீகாரம் வழங்கியது. இச்சட்டமூலத்துக்கு 399 எம்.பிகள் ஆதரவாகவும் 10 எம்.பிகள் எதிராகவும் வாக்களித்தனர். இதன்மூலம், தென்கிழக்காசியாவில் ஒருபாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கும் நாடாக தாய்லாந்து விளங்கவுள்ளது .


மாஸ்கோ தாக்குதலின் பின்னணி: புடின் முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு!
[Wednesday 2024-03-27 06:00]

மாஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் தீவிரவாத இஸ்லாமியக் குழு இருப்பதாக ரஷ்ய ஜனாிதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள குரோகஸ் நகர மண்டபத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய 11 பேர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


வடக்கு - கிழக்கில் புலம்பெயர் தமிழரின் முதலீட்டை தடுப்பதில் இரகசியமாக செயல்படும் முக்கிய நாடு!
[Wednesday 2024-03-27 06:00]

கனடா உள்ளிட்ட பல்வேறு புலம்பெயர் நாடுகளில் வாழும் வடக்கு - கிழக்கின் புலம்பெயர் தமிழர்களின் முதலீட்டை தடுப்பதில் இந்தியா இரகசியமாக செயற்பட்டு வருவதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆருஸ் தெரிவித்துள்ளார்.


கனடாவில் தமிழர்கள் உட்பட 28000 பேரை அதிரடியாக நாடு கடத்த உத்தரவு!
[Wednesday 2024-03-27 06:00]

கனேடிய விமான நிலையங்களில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, கனடா எல்லை சேவைகள் முகவரகம் தெரிவித்துள்ளது. Montreal Trudeau மற்றும் Toronto Pearson விமான நிலையங்களில் அதிகளவான வெளிநாட்டவர்கள் புகலிடம் கோரியுள்ளனர்.


அமெரிக்காவில் நடந்த பயங்கரம்: இலங்கை வந்த கப்பல் விபத்து!
[Tuesday 2024-03-26 18:00]

அமெரிக்காவின் மேரிலாந்த் பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலானது இலங்கை நோக்கி பயணித்த கப்பல் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த டாலி (Dali) என்ற பெயரிலான குறித்த சரக்கு கப்பல் பால்டிமோர் வழியாக இலங்கைக்கு பயணித்துக்கொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம்!
[Tuesday 2024-03-26 18:00]

ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜாவிக் தீபகற்பத்தில் எரிமலை வெடிப்பு தீவிரமடைந்துள்ளதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது எரிமலை எரிமலைக்குழம்புகளை கக்கி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அமெரிக்க மாகாணமொன்றில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!
[Tuesday 2024-03-26 18:00]

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் குழந்தைகளுக்கான சமூக வலைத்தளங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அது குறித்த சட்டத்தில் புளோரிடா மாகாண ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார்.


பிரான்சில் 130 பாடசாலைகளில் சைஃபர் தாக்குதல்!
[Tuesday 2024-03-26 18:00]

பிரான்சில் 130 பாடசாலைகளில் கடந்த வாரத்தில் இணையவழி ‘சைஃபர்’ தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் அண்மைய நாட்களில் இதுபோன்றை சைஃபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இம்மாத ஆரம்பத்தில் ‘பிரான்ஸ் திறவாய்’ இணையத்தளத்திலும், காப்புறுதி நிறுவங்களிலும் , பல அரச நிறுவனத்தின் இணையத்தளங்களிலும் சைஃபர் தாக்குதல்கள் பதிவான நிலையில், தற்போது பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.


தென் சீனக்கடலில் மோதல்: சீனாவுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் எடுத்த நடவடிக்கை!
[Tuesday 2024-03-26 06:00]

தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் ராணுவக் கப்பல் மீது சீன கடலோரக் காவல்படை நீர் தாக்குதல் நடத்தி 3 வீரர்கள் காயமடைந்ததாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிலிப்பைன்ஸ் அரசு பெய்ஜிங்கில் உள்ள தனது தூதரக அதிகாரியை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


54 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்!
[Tuesday 2024-03-26 06:00]

இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நிகழவிருக்கும் அபூர்வ சூரிய கிரகணம் குறித்து 54 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியன்று நிகழுவுள்ளதுடன் இது ஜோதிட மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவிக்கப்படுகின்றது.


மாஸ்கோ படுகொலைக்கான காரணத்தை நீதிமன்றில் வெளிப்படுத்திய குற்றவாளிகள்!
[Tuesday 2024-03-26 06:00]

ரஷ்யா-மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் 133 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, பணத்திற்காக மக்களை சுட்டுக்கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.


பிரேசிலை தாக்கிய பாரிய புயல்: 10 பேர் பலி!
[Monday 2024-03-25 06:00]

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய புயலினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக ரியோ டி ஜெனிரோவின் மலைப்பகுதிகளில்நேற்று முன்தினம் புயலின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


புற்றுநோய் பாதிப்பை அறிவிக்க தயங்கிய கேட் மிடில்டன்!
[Monday 2024-03-25 06:00]

இளவரசி கேட் மிடில்டன் தமது புற்றுநோய் பாதிப்பை வெளிப்படையாக அறிவிக்க தாமதப்படுத்தியதற்கான காரணம் வெளியாகியுள்ளது. தமது மூன்று பிள்ளைகளிடமும், குறித்த நோய் தொடர்பில் விளக்கி அவர்களுக்கு புரியவைக்க கேட் மிடில்டன் தயாராவதற்கே தாமதமானதாக கூறப்படுகிறது.


"ரஷ்ய தாக்குதலுக்கும் உக்ரைனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" - ஜெலன்ஸ்கி!
[Monday 2024-03-25 06:00]

ரஷ்யா- மொஸ்கோவில் நடந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மொஸ்கோவில் என்ன நடந்தது என்பது வெளிப்படையானது. இந்த தாக்குதலுக்கு புடினும். மற்றவர்களும் எங்கள் மீது குற்றம்சாட்ட முயற்சிக்கிறார்கள்.


அமெரிக்காவில் இடம்பெற்ற கார் விபத்தில் இந்திய இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!
[Sunday 2024-03-24 18:00]

அமெரிக்காவில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பென்சில்வேனியா மாநிலத்தில் கடந்த 21-ம் திகதி இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த 21வயதான அர்ஷியா ஜோஷி என்ற இளம்ப் பெண் உயிரிழந்துள்ளார்.


கனடாவில் வாகனக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கைது!
[Sunday 2024-03-24 18:00]

கனடாவின் ரொறன்ரோவில் வாகனக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 31 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒன்றாரியோ மற்றும் மொன்றியாலில் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அண்மைய நாட்களில் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.


ரஷியாவில் தாக்குதல்: 4 பயங்கரவாதிகள் உள்பட 11 பேர் கைது!
[Sunday 2024-03-24 18:00]

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ அருகே குரோகஸ் சிட்டி ஹால் என்ற இசை அரங்கில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 4 பேர் உள்பட தாக்குதலில் தொடர்புடைய 11 பேரை கைது செய்துள்ளதாக ரஷிய காவல்துறை தெரிவித்துள்ளது. 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இந்த அரங்கத்தில், பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.


ரொறன்ரோவில் கடன் அட்டை இயந்திர திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு
[Sunday 2024-03-24 18:00]

ரொறன்ரோவில் கடன் அட்டை இயந்திர திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. சிறு வியாபாரங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் அதிகளவில் இலக்கு வைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வங்கி அட்டைகள் மூலம் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு உதவும் இயந்திரங்கள் இவ்வாறு களவாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா