Untitled Document
April 24, 2024 [GMT]


வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்! - சம்பந்தன்
[Wednesday 2018-02-14 08:00]

உள்ளூராட்சித் தேர்தலில், அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கரங்கள் பலமடைந்துள்ளதாகவும் நாட்டு மக்கள், மீண்டும் அவரிடம் அதிகாரத்தை வழங்குவதற்கான அனுமதியை வழங்கியுள்ளனரெனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை! - அமெரிக்கா குற்றச்சாட்டு.
[Wednesday 2024-04-24 16:00]

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை அதேபோல 1988-89 ஜேவிபி கிளர்ச்சிகாலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக சஜித் அறிவிப்பு!
[Wednesday 2024-04-24 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.


உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைப்பு!
[Wednesday 2024-04-24 16:00]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது .


கைது செய்யத் தயாராக இருந்த இன்டர்போல்! - இலங்கை வராமலேயே நழுவிய ஈரான் அமைச்சர்.
[Wednesday 2024-04-24 16:00]

1994ம் ஆண்டு அர்ஜென்டினாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் தொடர்பில் இலங்கைக்கு ஈரான் ஜனாதிபதியுடன் விஜயம் மேற்கொள்ளவிருந்த ஈரானின் உள்துறை அமைச்சரை கைதுசெய்ய வேண்டும் என ஆர்ஜென்டினா வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.


மைத்திரி, விஜயதாச, துஷ்மந்தவுக்கு நீதிமன்றம் தடை!
[Wednesday 2024-04-24 16:00]

கடந்த 21ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராகவும் பதில் பொதுச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் சாரதி துஷ்மந்த ஆகியோருக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன்விதான இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.


நீதிபதி இளஞ்செயழியனின் பாதுகாப்பு அதிகாரி கொலை - விசாரணை தொடங்கியது!
[Wednesday 2024-04-24 16:00]

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவலாரான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி மீனவர் பலி!
[Wednesday 2024-04-24 16:00]

மன்னார் -முத்தரிப்புத்துறையில் இருந்து கடற் தொழிலுக்கு சென்றவேளை படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவராஜா பீரிஸ் மரணமடைந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!
[Wednesday 2024-04-24 16:00]

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.


சுதந்திரக் கட்சியில் இணைந்தவர் மொட்டு கட்சியில் இருக்க முடியாது!
[Wednesday 2024-04-24 16:00]

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் அங்கத்தவராக இருக்கும் நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவம் பெறுவது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபை விசாரணை நடத்தும் என கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.


சுற்றுலாப் பயணிகள் வருகை மந்தம்!
[Wednesday 2024-04-24 15:00]

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.


சீன அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக்குழு அனுரவுடன் சந்திப்பு!
[Wednesday 2024-04-24 05:00]

சர்வதேசத் திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு நேற்று ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தது.


ஈரானிய ஜனாதிபதிக்கு விசேட பாதுகாப்பு!
[Wednesday 2024-04-24 05:00]

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.


கனேடியத் தமிழர் பேரவையின் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ரவீனா ராஜசிங்கம்!
[Wednesday 2024-04-24 05:00]

கனேடியத் தமிழர் பேரவை'யின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரவீனா ராஜசிங்கம் அறிவித்துள்ளார். முழு நேர அரசியல் செயற்பாடுகளில் கவனம் செலுத்தும் முகமாக இம்முடிவை எடுத்ததாக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் விவாதம்!
[Wednesday 2024-04-24 05:00]

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது.


சுதந்திரக் கட்சியை 100 மில்லியன் ரூபாவுக்கு பேரம் பேசிய மைத்திரி!
[Wednesday 2024-04-24 05:00]

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ள பிரபல வர்த்தகர் ஒருவரிடம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஏலம் விடுவதற்கு 100 மில்லியன் ரூபா பேரம் பேசியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றஞ்சுமத்தினார்.


அனுரவுடன் விவாதம் - மாற்றுத் திகதிகளை முன்மொழித்த சஜித்!
[Wednesday 2024-04-24 05:00]

அரசியல் விவாதம் ஒன்றுக்காக தேசிய மக்கள் சக்தி முன்மொழிந்துள்ள நாட்களில் சஜித் பிரேமதாசவுக்கு வேறு அலுவல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து தவறான செயற்பாட்டில் ஈடுபடுத்திய கும்பல்!
[Wednesday 2024-04-24 05:00]

யாழ்ப்பாணத்தில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவரை கும்பல் ஒன்று தவறான செயற்பாட்டில் ஈடுபடுத்தியுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


அரகலயவின் அமைப்பு மாற்றத்தை கட்சியில் இருந்து தொடங்கும் நாமல்!
[Wednesday 2024-04-24 05:00]

அரகலய போராட்டத்தின் போது கோஷமாக மாறிய அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துதலை எமது கட்சியில் இருந்தே ஆரம்பிக்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்!
[Wednesday 2024-04-24 05:00]

2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளதோடு மே 06 ஆம் திகதி முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


ஆர்ப்பாட்டம் நடத்த தடை!
[Wednesday 2024-04-24 05:00]

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (24) நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வெலிக்கடை பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னர் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தையிட்டியில் தொடரும் திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்! Top News
[Tuesday 2024-04-23 16:00]

யாழ்ப்பாணம் - தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று ஆரம்பமாகி இன்றும் நடைபெறுகிறது.


பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க முயன்ற முதியவர் மாரடைப்பால் மரணம்!
[Tuesday 2024-04-23 16:00]

பாக்கு நீரிணையை கடக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.


வலம்புரி ஆசிரியரிடம் விசாரணை- யாழ்.ஊடக அமையம் கண்டனம்!
[Tuesday 2024-04-23 16:00]

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் முன்னணி நாளிதழ்களுள் ஒன்றான வலம்புரி நாளிதழது பிரதம ஆசிரியர் ந.விஜயசுந்தரம் வடக்கு ஆளுநரின் முறைப்பாட்டின் பேரில் இன்று திங்கட்கிழமை இலங்கை காவல்துறையின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்.ஊடக அமையம் தனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்துகொள்கின்றது.


சஜித் - அனுர விவாதம் - நாள் குறித்தது தேசிய மக்கள் சக்தி!
[Tuesday 2024-04-23 16:00]

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.


தியத்தலாவ கார் பந்தய விபத்து - இராணுவ விசாரணைக்கு உத்தரவு!
[Tuesday 2024-04-23 16:00]

தியத்தலாவ ஃபொக்ஸ் ஹில் கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது. மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாக மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.


பதவி விலகுகிறார் மைத்திரி?
[Tuesday 2024-04-23 16:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஆறுகால்மடத்தில் பட்டா வாகனம் மோதி முச்சக்கரவண்டி சேதம்! - சாரதி படுகாயம்.
[Tuesday 2024-04-23 16:00]

யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் சந்தியில் இன்று முச்சக்கர வண்டி பட்டாரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


புங்குடுதீவு கண்ணகியம்மனின் சேவை 16 இலட்சம் ரூபாவுக்கு ஏலம்!
[Tuesday 2024-04-23 16:00]

புங்குடுதீவு கண்ணகியம்மன் ஆலய தேர்த்திருவிழாவில், அம்மனின் சேலை 16 இலட்சம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா