Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 22, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
ஒரு கோடி சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு குடியுரிமை வழங்க அமெரிக்க செனெட் ஒப்புதல்!
[Wednesday, 2013-05-22 19:09:35]

2 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்கள் உள்ளிட்ட ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க உள்ளது. இதற்கான முக்கிய மசோதாவுக்கு, செனட் சபை குழு ஒப்புதல் அளித்தது.அமெரிக்க நாட்டில் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்தியர்கள் ஆவார்கள். இவர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்து, முழுமையான குடியுரிமை சீர்திருத்தம், எல்லை பாதுகாப்பு, பொருளாதார வாய்ப்பு மற்றும் குடியுரிமை நவீனமய சட்ட மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, அமெரிக்க செனட் சபையின் நீதித்துறை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.


சீன வெடிபொருள் தொழிற்சாலையில் பாரிய வெடிவிபத்து - 23 பேர் பலி!
[Wednesday, 2013-05-22 19:05:36]

சீனாவின் ஷண்டாங் பகுதியில் உள்ள வெடிப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 23 பேர் பலியாகியுள்ளனர். அதில் பலியானவர்களில் 10 பேரை அவர்களது டி.என்.ஏ.வை கொண்டு அடையாளம் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து தரை மட்டமாகி உள்ளது. இதில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


காந்தியின் இரத்தம் கடைச்சரக்கா? - கொதிக்கிறார் கொள்ளுப்பேரன்!
[Wednesday, 2013-05-22 18:49:57]

மகாத்மா காந்தியின் ரத்த மாதிரி உள்ளிட்ட பொருட்கள் கடைசரக்காக ஏலம் விடுவதை தடுக்க முடியவில்லையே என என் ரத்தம் கொதிக்கிறது என காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தி வேதனையோடு கூறியுள்ளார். நேற்று, காந்தியின் ரத்தம், செருப்பு போன்ற உடமைகள் லண்டனில் சுமார் 3 இலட்சம் பவுண்டுக்கு ஏலத்தில் விற்கப்பட்டன. இது தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக கூறியுள்ளார் காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி. மேலும் அவர் கூறியதாவது. தேசப்பிதா காந்தியின் ரத்தம் வேற்று நாட்டில் கடை சரக்கைப் போல் ஏலம் விடப்பட்டதை அறிந்து எனது ரத்தம் கொதிக்கிறது.


சீனப்பிரதமர் வருகையால் பாகிஸ்தானில் செயலிழந்தன செல்போன்கள்!
[Wednesday, 2013-05-22 18:43:30]

சீனப் பிரதமர் இன்று பாகிஸ்தான் வருவதை முன்னிட்டு பாகிஸ்தான் அரசு தலைநகர் இஸ்லாமாபாத்திலும் அருகில் உள்ள ராணுவத்தளமான ராவல்பிண்டியிலும் அனைத்து செல்போன் சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு நிறுவனம் இன்று மதியம் அந்நாட்டு நேரப்படி 1 மணி வரை அனைத்து செல்போன் சேவைகளையும் நிறுத்தி வைக்குமாறு அறிக்கை விடுத்தது. போராளிகள் செல்போன்கள் மூலம் தாக்குதல்களைத் திட்டமிடுவதைத் தடுப்பதற்காகவே இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சொக்கலேட்டில் இரும்பு ஆணி - நட்டஈடு வழங்க காட்பரி நிறுவனம் இணக்கம்!
[Wednesday, 2013-05-22 18:39:09]

இங்கிலாந்தில் 1905 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காட்பரி நிறுவனத்தின் விற்பனை பொருட்கள் அனைத்தும் உலக பிரசித்தி பெற்றவை. பாலிலேயே செய்யப்படும் இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் சுவையும், தரமும் மிகுந்தவை. கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவைச் சேர்ந்த ஒருவர், தன்னுடைய மூன்று வயதுக் குழந்தைக்கு காட்பரிஸ் சாக்லேட் வாங்கிக் கொடுத்துள்ளார். அதனை அந்த குழந்தை சாப்பிட ஆரம்பித்தபோது, அதில் ஒரு இரும்பு ஆணி இருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனேயே நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் பதிவு செய்தார்.


கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - சிரியாவுக்கு இஸ்ரேலிய தளபதி எச்சரிக்கை!
[Wednesday, 2013-05-22 08:06:28]

இஸ்ரேலின் ஆதிக்கத்திற்குட்பட்ட கோலன் ஹய்ட்ஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவ ஜீப் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டது. அந்த ஜீப்பின் மீது குண்டுகளை வீசி சிரியா ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர். எங்களது எல்லைக்குள் இஸ்ரேல் ஜீப் நுழைந்ததால் நாங்கள் தாக்கினோம் என்று சிரியா விளக்கம் அளித்தது. இந்நிலையில், ஊடகங்களுக்கு பேட்டியளித்த இஸ்ரேல் ராணுவ தளபதி லெப்ட்டினென்ட் ஜெனரல் பென்னி கேண்ட்ஸ், எங்கள் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் ராணுவத்தின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சிரியா அரசு முயற்சித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.


காந்தியின் இரத்தம் 7 ஆயிரம் பவுண்டுக்கே ஏலம் - தேய்ந்து போன காலணி, ஜெபமாலை, உயிலை விட மதிப்புக் குறைவு!
[Wednesday, 2013-05-22 08:01:12]

மகாத்மா காந்தியின் கடைசி உயில், ஜெப மாலை, ரத்த மாதிரி, தேய்ந்த காலணி உள்ளிட்ட பொருட்கள் லண்டனில் நேற்று ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில், காந்தி தனது கைப்பட எழுதிய உயில் 40 ஆயிரம் பவுண்டுகள் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக 55 ஆயிரம் பவுண்டுகளுக்கு இந்த உயில் ஏலம் போனது. பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட அவரது ரத்த மாதிரி 10 ஆயிரம் பவுண்டுகள் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றம் அளிக்கும் வகையில் 7 ஆயிரம் பவுண்டுகளுக்கே ஏலம் போனது. காந்தியின் கைப்பட நூற்ற நூலில் இருந்து தயாரிக்கப்பட்ட சால்வை, 40 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. இது எதிர்பார்த்த தொகையை விட இரு மடங்கு அதிகமாகும்.


சீனப் பிரதமருக்கு நடுவானில் தடல்புடலான வரவேற்பு அளிக்க பாகிஸ்தான் ஏற்பாடு!
[Wednesday, 2013-05-22 07:51:33]

சீனாவின் "இரும்புச் சகோதரன்' என்று பாகிஸ்தானை வர்ணித்துள்ளார் அந்நாட்டு அதிபர் லீ கெகியாங். சீனப் பிரதமர் லீ கெகியாங் தனது மூன்று நாள் இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு, பாகிஸ்தானுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.இந்நிலையில் லீ கெகியாங் கூறியுள்ளதாக பாகிஸ்தானின் அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்காசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மை, பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய நடவடிக்கைகளில் பாகிஸ்தான் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றி வருகிறது. இதனை சீனா பாராட்டுகிறது.சர்வதேச சமூகமும் பாகிஸ்தானை ஆதரித்து, அதற்கு உரிய ஆதரவை வழங்க வேண்டும்.


ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபருக்குத் தடை!
[Wednesday, 2013-05-22 07:39:17]

ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு முன்னாள் அதிபருக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. ஈரான் அதிபர் தேர்தல் வரும் ஜுன் மாதம் 14-ம் தேதி நடக்கிறது. இதில் கன்சர்வேடிவ், சீர்திருத்த கட்சிகள் சார்பில் மொத்தம் ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் முன்னாள்அதிபர் அக்பர் ஹஸ்மி ரப்சன்ஜானி போட்டியிட தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. இதற்கான காரணம் வெளியிடபடவில்லை என அந்நாட்டு உள்துறை அமைச்சர் கூறினார். தற்போதைய அதிபர் முகமது அகமது நிஜாத்தும் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார்.


மின்னல் வேகத்தில் பறக்கும் புறா நான்கு இலட்சம் டொலருக்கு ஏலம்!
[Wednesday, 2013-05-22 07:09:13]

மின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் எனும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது. அந்த ஆண் புறா ஒரு சீன தொழிலதிபருக்கு நான்கு லட்சம் டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. ஒரு வயதாகும் அந்தப் புறா பெல்ஜியம் நாட்டில் வளர்க்கப்பட்டது.பெல்ஜியத்தில் போட்டிகளில் பறக்கும் வேகமான பறவைகள் ஏலம் விடப்பட்ட போதே இந்தப் புறாவை அந்த சீன தொழிலதிபர் வாங்கியுள்ளார். இந்த ஏலத்தில் பெரும்பாலான பறவைகளை சீனா மற்றும் தாய்வான் நாட்டிலிருந்தவர்களே வாங்கியுள்ளனர். இந்தப் புறாவை வளர்த்த லியோ ஹெரிமன்ஸ் பெல்ஜியப் புறாக்களை வளர்ப்பதில் பிரபலமானவர்.


கடும் மின் பற்றாக்குறையால் 20 மணிநேரம் வரை மின்தடையால் தவிக்கும் பாகிஸ்தான்!
[Tuesday, 2013-05-21 18:41:17]

பாகிஸ்தானில், கடும் மின் பற்றாக்குறையால், பல பகுதிகளில், 20 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பாகிஸ்தானில், தற்போது கடும் கோடை சுட்டெரிக்கிறது. எல்லா பகுதிகளிலும், 104 டிகிரிக்கு அதிகமான வெயில் வாட்டுகிறது. கடும் மின்சார பற்றாக்குறையினால், அலுவலகங்களில் ஏ.சி., பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. மக்கள், ஷூ அணியும் போது, சாக்ஸ் அணிய வேண்டாம் என, பாகிஸ்தான் அரசு, மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, பாகிஸ்தானில் போதிய மழை பெய்யாததால், நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன. நீர் மின்திட்டம் தடைப்பட்டுள்ளதால், பெரும்பாலான பகுதிகளில், 20 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.


நியூயோர்க்கில் மேலாடையின்றி திரியும் பெண்களுக்கு இனி அபராதம் இல்லையாம்!
[Tuesday, 2013-05-21 18:35:36]

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இனி மேலாடை அணியாமல் சுற்றித் திரியும் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை, மேலாடை அணியாமல் சுதந்திரமாக ஆபாசமாக சுற்றித் திரிந்த பெண்களை போலீசார் கைது செய்து அபராதம் விதிக்கும் நடைமுறை இருந்து வந்தது. இருந்தபோதும், இந்த கட்டுப்பாடு, அபராதம் இதயெல்லாம் மீறி வருடந்தோறும் ஆகஸ்ட் 21ம் தேதியன்று அமெரிக்காவின் பல நகரங்களில் மேலாடை அணியாத பல பெண்கள் பேரணி நடத்தி புரட்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது திடீரென, நியூயார்க் நகரில் மேலாடை அணியாமல் நடமாடலாம். அப்படி நடமாடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.


இனப்படுகொலை செய்த குவாதமாலா முன்னாள் இராணுவ ஆட்சியாளருக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்து!
[Tuesday, 2013-05-21 18:31:01]

குவாதமாலா நாட்டின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் எஃப்ரெய்ன் ரியோஸ் மோன்து இனப்படுகொலையில் ஈடுபட்டதாக குற்றங்காணப்பட்டு வழங்கப்பட்டிருந்த தீர்ப்பை அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மோன்து மீது கீழ் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் இறுதி வாரங்களில் வழங்கப்பட்டிருந்த சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1980களில் குவாதெமாலாவில் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் இக்ஸில் மாயா இனக்குழுவை சேர்ந்த சுமார் 1800 பேரைக் கொல்ல உத்தரவிட்டிருந்ததாக இம்மாதத்தில் முன்னதாக மொன்து மீது குற்றங்காணப்பட்டிருந்தது.


ஆயிரம் கோடி டொலர் வரிஏய்ப்பு செய்த ஆப்பிள் நிறுவனம் - செனெட் ஆய்வறிக்கையில் தகவல்!
[Tuesday, 2013-05-21 17:44:44]

உலகின் முன்னணி கணினி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் தனது இலாபத்தை பல்வேறு சகோதர நிறுவனங்களுக்கும் பகிர்ந்து கணக்கு காட்டிய விதத்தில் ஆயிரம் கோடி டொலர் கணக்கில் வரி செலுத்தாமல் தப்பித்துள்ளது என அமெரிக்க செனெட் ஆய்வறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் விதிமீறல் எதிலும் ஈடுபட்டதாக இந்த ஆய்வறிக்கை குற்றம்சாட்டவில்லை என்றாலும், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த துணை நிறுவனங்கள் பல வரி செலுத்துவதற்காக எந்த ஒரு நாட்டிலுமே பதியப்பட்டிருக்கவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அயர்லாந்தின் கோர்க் நகரில் பதியப்பட்டுள்ள இப்படியான ஒரு துணை நிறுவனம், கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழில் நிறுவனங்களுக்கான வருமான வரி என்று கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு டாலர் கூட செலுத்தியிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.


அமெரிக்காவில் 320 கி.மீ வேகத்தில் சுழன்றடித்த சூறாவளி - 91 பேர் பலி!
[Tuesday, 2013-05-21 17:32:56]

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் வீசிய மிகக் கடுமையான சூறாவளியில் சிக்கி 91 பேர் பலியாயினர். திங்கள்கிழமை மதியம் தாக்கிய இந்த சூறாவளியின் போது மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று சுழன்றடித்தது. திடீரென இந்த சூறாவளி வலிமை அடைந்து குடியிருப்புப் பகுதிகளை தாக்கியதால், பள்ளியில் இருந்து சிறுவர்கள் பலர் உயிரிழந்தனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. பல குடியிருப்புப் பகுதிகள் மொத்தமாகவே தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 51 என்றாலும், அதற்கும் மேற்பட்டு 40 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்படுள்ளதாக மாநில மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.


20 நொடிகளில் செல்போனை சார்ஜ் செய்யும் கருவி - அமெரிக்க வாழ் இந்தியப் பெண்ணின் அசத்தல் கண்டுபிடிப்பு!
[Tuesday, 2013-05-21 07:54:57]

அமெரிக்காவில் வசித்து வரும் 18 வயது இந்தியப் பெண்ணான ஈஷா காரே 20 நொடிகளில் செல்போனை சார்ஜ் செய்யும் கருவியைக் கண்டுபிடித்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சரடோகா பகுதியில் வசிப்பவர் ஈஷா காரே. இவர், செல்போன் பேட்டரியில் பொருத்தக் கூடிய சிறிய சாதனத்தைக் கண்டுபிடித்ததற்காக இண்டெல் நிறுவனத்தின் இளம் விஞ்ஞானி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். சூப்பர் கெபாசிட்டர் என்று அழைக்கப்படும் இந்தச் சிறிய சாதனம், 20 முதல் 30 நொடிகளில் செல்போன் பேட்டரியில் மின்சாரத்தை சேமித்துக் கொள்ள உதவுகிறது. அவ்வாறு சார்ஜ் செய்யப்படும் மின்சாரம் பல மணிநேரங்களுக்குப் பயன்படுகிறது.


நிலக்கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க, தேனீக்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சியில், குரோஷிய ஆராய்ச்சியாளர்கள்!
[Tuesday, 2013-05-21 07:47:10]

நிலக்கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க, தேனீக்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சியில், குரோஷிய ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஐரோப்பிய நாடான குரோஷியாவிற்கும், செர்பிய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே, 1991ல் நடந்த போரின்போது, ஏறக்குறைய, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், கண்ணிவெடியில் சிக்கி, 2,500க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த சண்டையின்போது, 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இந்தக் கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க, தேனீக்களை பயன்படுத்த, குரோஷிய ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.


ஹிலாரியை துப்பாக்கியால் சுட்டு, அவர் அனுபவிக்கும் வலியை ரசிக்க வேண்டுமாம் - வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளரின் விபரீத ஆசை!
[Tuesday, 2013-05-21 07:41:59]

அமெரிக்க முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டனை பிறப்பிறுப்பில் சுட்டு சித்ரவதை செய்து கொல்ல வேண்டும் என ஆபாசமாக விமர்சித்ததன் மூலம் பிரச்சனையில் சிக்கியுள்ளார் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர். அமெரிக்க வானொலி ஒன்றில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணியாற்றி வருபவர் பிட்டே சாண்டில்லி. இவர் ஒரு நிகழ்ச்சியின் போது ஹிலாரி கிளிண்டனை குறித்து தவறான கருத்துக்களைக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட லிபியாவின் பென்காசியில் உள்ள அமெரிக்க தூதரக தாக்குதலுக்கு காரணம் ஹிலாரி கிளிண்டனின் தவறான அணுகுமுறை தான் என தன்னிலை விளக்கம் வேறு கூறியுள்ளார் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் பிட்டே சாண்டில்லி.


47 ஆண்டுகளில் நடக்காத அதிசயம் - வெள்ளை மாளிகையில் பர்மிய அதிபர்!
[Tuesday, 2013-05-21 07:31:32]

மியான்மர் அதிபர் தெய்ன் சீன், அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வருகை புரிந்துள்ளார். மியான்மரில் ராணு ஆட்சி நடைபெற்றதால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை அந்நாட்டு அதிபருக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. அங்கு ஜனநாயக ஆட்சி ஏற்பட்டதையடுத்து அந்த தடை நீக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மியான்மருக்கு சென்றிருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, மியான்மர் அதிபரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்ற தெய்ன் சீன், அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு சென்றார்.


துருக்கியில் நடுவானில் பலூன்கள் மோதல் - இரு சுற்றுலாப் பயணிகள் பலி!
[Tuesday, 2013-05-21 07:14:25]

துருக்கி நாட்டில் கப்படோசியா மலைகள் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக விளங்குகின்றன. இங்கு கூம்பு வடிவில் ஏராளமான பாறைகள் பல்லாயிரம் கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பரந்து விரிந்துள்ளன. அந்த பாறைகளை குடைந்து பல நகரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியை சுற்றிப் பார்ப்பதற்காக பயணிகளுடன் வந்த 2 பலூன்கள் நேற்று ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதனால் பலூன்கள் கிழிந்து நிலை தடுமாறி கீழே விழுந்தன. இதில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு சுற்றுலா பயணி இறந்தார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு அங்கு இறந்தார்.


590 மில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசை வென்ற அதிஷ்டசாலியை தேடுகிறது அமெரிக்கா!
[Monday, 2013-05-20 17:25:34]

அமெரிக்க லாட்டரியில் 590.5 மில்லியன் டொலர் (3000 கோடி இந்திய ரூபா) ஜெயித்த அந்த அதிர்ஷ்டசாலி யார் என காண உலக மக்கள் ஆவலுடன் உள்ளனர். இதுவரை இல்லாத அளவு அமெரிக்க லாட்டரி வரலாற்றிலேயே முதல்முறையாக மிகப்பெரிய தொகையான 590.5 மில்லியன் டொலருக்கு, பவர்பால் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இதன் குலுக்கல் முடிவுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன. குறிப்பிட்ட இந்த லாட்டாரி சீட்டை புளோரிடா மாகாண செப்ரில்ஸ் நகரை சேர்ந்த ஒருவர் வாங்கியிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. ஆனால், இவ்வளவு பெரிய தொகையை ஜெயித்த அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.


டம்ப்ளர் இணையத்தளத்தை 1.1 பில்லியன் டொலருக்கு வாங்குகிறது யாகூ நிறுவனம்!
[Monday, 2013-05-20 17:18:32]

பிளாக்கிங் செய்ய உதவும் டம்ப்ளர் இணையத்தளத்தை யாகூ நிறுவனம் 1.1 பில்லியன் டொலருக்கு வாங்க இணங்கியுள்ளது. இன்டர்நெட்டில் 18 முதல் 24 வயதினரிடையே மிகப் பிரபலமாக உள்ள பிளாக்கிங் இணையத்தளமான டம்ப்ளரை வாங்குவதன் மூலம் இளம் வயதினரை ஈர்க்க யாகூ திட்டமிட்டுள்ளது. 2007ம் ஆண்டு நிறுவப்பட்ட டம்ப்ளர் இணையத்தளத்தில் 107 மில்லியன் பிளாக்குகள் உள்ளன.12 மொழிகளில் ஆன இந்த இணையத்தில் 50 பில்லியன் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 13 மில்லியன் டொலர்கள் வருவாய் ஈட்டியுள்ள இந்த நிறுவனம் இந்த ஆண்டில் 100 மில்லியன் டொலர்களை ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. வெறும் 175 ஊழியர்களைக் கொண்டு இந்த இணையத்தளம் இந்த சாதனையைச் செய்துள்ளது. இந்நிலையில் இதை வாங்க யாகூ திட்டமிட்டுள்ளது.


இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
[Monday, 2013-05-20 17:02:03]

இந்தியா வந்துள்ள சீனப் பிரதமர் - இந்திய பிரதமர் மற்றும் முக்கியத் துறை அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையின் முடிவில், இரு நாடுகளுக்கும் இடையே 8 ஒப்பந்தங்கள் கெயெழுத்தாகியுள்ளன.இரு நாட்டு தலைவர்களுடனான சந்திப்பின் போது, சீனப் பிரதமர் தனது முதல் சுற்றுப் பயணமாக இந்தியா வந்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்திய உள்ளட்டமைப்பில் சீனாவின் முதலீட்டை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.மேலும், சீன உற்பத்திப் பொருட்களுக்கு மிகச் சிறந்த சந்தையாக இந்தியா விளங்கவதாக சீனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.


இன்று ஈராக்கை அதிரவைத்த தொடர் கார் குண்டுவெடிப்புகள் - குறைந்தது 40 பேர் பலி!
[Monday, 2013-05-20 16:57:16]

ஈராக்கின் தலைநகர் பாக்தாத் மற்றும் பாஸ்ரா நகரப் பகுதிகளில் நடந்த தொடர் கார்குண்டு தாக்குதல்களில் குறைந்தது 40 பேர் பலியாகியுள்ளனர். இன்று பாக்தாத்தில் ஷியா முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் 9 இடங்களில் கார்க்குண்டுகள் வெடித்தன. இதில் 27 பேர் கொல்லப்பட்டதுடன் 116 பேர் காயமடைந்தனர். அதேவேளை ஈராக்கின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிகழ்ந்த இரு குண்டுத்தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டனர். பாஸ்ரா நகரப் பகுதியில், பேருந்து நிலையம் மற்றும் விடுதியருகே இரண்டு கார் குண்டுகள் வெடித்ததில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் 40 பேர் காயமடைந்தனர்.


மூன்றே நாட்களில் ஆறாவது ஏவுகணையை பரிசோதித்தது வடகொரியா - பான் கீ மூன் கண்டனம்!
[Monday, 2013-05-20 16:45:53]

குறுகிய தூர இலக்கை குறி வைத்து தாக்கவல்ல ஏவுகணையை வட கொரியா இன்று வெற்றிகரமாக சோதித்துள்ளது. ஜப்பான் கடற்கரைப் பகுதியில் ஏவுகணைச் சோதனை தளத்தில் இன்று நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைக்கு தென் கொரியா தலைவர்களும் ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூனும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களில், வடகொரியா நடத்தியுள்ள 6வது ஏவுகணைச் சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நாவினதும் அமெரிக்கா போன்ற நாடுகளின் எச்சரிக்கைகளையும் மீறி வடகொரியா ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருகிறது.


சீனப் பிரதமரின் இந்தியப் பயணத்துக்கு எதிராக திபெத் அமைப்புகள் போராட்டம்!
[Monday, 2013-05-20 08:07:25]

சீனப் பிரதமர் லீ கெகியாங்கின் இந்திய சுற்றுப் பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரு நாள்களுக்கு தொடர் போராட்டங்களை நடத்த இருப்பதாக திபெத் அமைப்புகள் அறிவித்துள்ளன. இதையடுத்து தில்லியில் போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். லீ கெகியாங் தங்கியுள்ள ஹோட்டல், சீன தூதரகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தில்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே திபெத்தியர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதால், திங்கள்கிழமை காலை 8 முதல் 10 மணி வரை 4 மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்படுகின்றன. லீ கெகியாங், அவருடன் வந்துள்ள குழுவினரின் பயணத்திட்டங்களுக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.


தபால் ஊழியர்கள் அதிகளவில் நாய்க்கடியால் பாதிக்கப்படும் நகரம் லொஸ்ஏஞ்சல்ஸ் தானாம்!
[Monday, 2013-05-20 08:03:17]

தபால் துறை ஊழியர்கள் நாய் கடியால் பாதிக்கப்படுவது லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில்தான் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.நாய்கள் ஜாக்கிரதை எச்சரிக்கை பலகை உலகளவில் பல வீடுகள், பங்களாக்களில் வைக்கப்படுகின்றன. தெரிந்தவர்களை, நன்றாக பழகியவர்களையே பல வேளைகளில் செல்ல நாய்கள் கடித்து வைக்கின்றன. அப்படி இருக்கும் போது, அரசு சீருடையில் வருபவர்களை பார்த்ததும் சும்மா இருக்குமா? குறிப்பாக நாய்களால் அதிகம் பாதிக்கப்படுவது தபால் துறை ஊழியர்கள்தான் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க தபால் துறை சேவை செய்தி தொடர்பாளர் ஈவா ஜேக்சன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:


எல்லையில் அமைதி குலைந்தால் இருதரப்பு உறவு பாதிக்கும் - சீனப் பிரதமரை எச்சரித்தாராம் மன்மோகன்சிங்!
[Monday, 2013-05-20 07:58:41]

எல்லைப் பகுதியில் அமைதி குலைந்தால் இருதரப்பு உறவு பாதிக்கும் என சீன பிரதமர் லீ கெகியாங்கிடம் பிரதமர் மன்மோகன் சிங் கண்டிப்புடன் கூறியுள்ளார். சீனப் பிரதமராகப் பொறுப்பேற்ற பின், லீ கெகியாங் முதல் வெளிநாட்டுப் பயணமாக தில்லி வந்தடைந்தார். மூன்று நாள் பயணமாக வந்துள்ள அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் கடந்த மாதம் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது குறித்த தனது கவலையை பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.

NIRO-DANCE-100213
Mahesan supramaniyam 031109
INNSYS-20120930
AJRwindows22.05.13
TDE_Computers2011
TamilsGuid-191012-2013
Suresh-remax-2013-01-01
Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
Canada Kanthasamy Kovil
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com