குதிரை ஓடிய பின்னர் லாயத்தை இழுத்துப் பூட்டிய சனாதிபதி சிறிசேனா! - நக்கீரன் | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
April 2, 2025 [GMT]

குதிரை ஓடிய பின்னர் லாயத்தை இழுத்துப் பூட்டிய சனாதிபதி சிறிசேனா! - நக்கீரன்
[Friday 2019-04-26 20:00]

குதிரை ஓடிய பின்னர் லாயத்தை இழுத்துப் பூட்டிய கதை போல உயிர்த்த ஞாயிறு அன்று கத்தோலிக்க தேவாலயங்கள், கோட்டல்கள் மீது பயங்கரவாதிகள் மின்னாமல் முழங்காமல் மேற்கொண்ட பயங்கரவாதக்குதலைத் தொடர்ந்தி சிறிலங்கா சனாதிபதி சிறிசேனா பொலிஸ் மா அதிபரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுமாறு கேட்டிருக்கிறார்.


  

தேவாலயங்கள் மற்றும் நான்கு கோட்டல்கள் மீது நடத்தப்பட்ட இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 45 சிறார்கள், 35 அயல்நாட்டவர் உட்பட 359 பொது மக்கள் இறந்து பட்டுள்ளார்கள். மொத்தம் 500 க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் எல்லோரும் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் உயிர்ப்பித்த ஞாயிறு (ஏப்ரில் 21) தொழுகையில் ஈடுபட்டிருந்த கிறித்தவர்கள். இறந்து பட்டவர்களில் பெரும்பான்மை தமிழர்கள் ஆவர்.

இந்தத் தாக்குதலில் தவ்ஜீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த 9 தற்கொலைதாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களில் ஒரு பெண் உட்பட 8 தாக்குதல்தாரிகள் அடையாளம் காணப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் படித்த செல்வந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையின் போது தெரியவந்துள்ளது. ஒருவர் இலண்டனில் படித்து பின்னர் ஒஸ்ரேலியா பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர்.

தற்கொலைக் குண்டுதாரிகள் ஒரே நேரத்தில் 3 மாவட்டங்களில் 8 இலக்குகளைக் குறிவைத்து தாக்கி பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளார்கள். இதுவரை 60 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதுபோன்ற சமகாலத் தாக்குதலை 30 ஆண்டுகாலம் நீடித்த உள்நாட்டுப் போரில் வி.புலிகள் கூட சாதித்ததில்லை என அரசாங்கமே கூறுகிறது. அவர்கள் பயன்படுத்திய குண்டுகள் அல் - கொய்தா, ஐஎஸ்ஐஸ் போன்ற உலகப் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் குண்டுகளை ஒத்தது எனக் கூறப்படுகிறது.

தற்கொலைக் குண்டுத் தாக்கலில் ஈடுபட்டவர்களின் தல் பயங்கவர வாதிகளின் புகைப் படத்தை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் 8 தீவிரவாதிகள் உள்ளனர். ஆயினும் ஏழு பயங்கரவாதிகள் இறந்ததாக அந்த அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அதில் தெளஹீத் ஜமாத் பயங்க வரவாதிகள் குழுமி நின்று குழு தலைவன் மெளலவி சஹ்ரன் ஹாஸிமின் கைமேல் கைகளை வைத்துச் சத்தியப்பிரமாணம் செய்யும் காட்சி உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவன் அபூபக்கர் அல்பக்தாதிக்கு விசுவாசமாக இருப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள்.

அபு ஒபைதா, அபு பாரா, அபு மொஹ்தார் ஆகியோர் சங்ரிலா, சினமன்கார்டன், கிங்ஸ்பெரி கோட்டல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அபு ஹம்ஸா, அபு ஹலீல், அபுமொஹமட் ஆகியோர் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு தேவாலயங்களிலும் கோட்டல்களிலும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அபு அப்துல்லா, தெமட்டகொட வீட்டில் குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்துள்ளான்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பூகோள பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஸ் உரிமை கோரியுள்ளது. தாக்குதல்களில் ஈடுபட்ட தற்கொலைத்தாரிகளது புகைப்படங்களையும் பெயர்களையும் அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது. இது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உள்ளூர் முஸ்லிம் பயங்கரவாதிகளாக இருந்தாலும் அவர்களுக்கும் இந்த ஐஎஸ்ஐஎஸ் என்ற பூகோள பயங்கரவாத அமைப்புக்கும் இடையில் தொடர்பு இருந்ததைக் காட்டுகிறது.

சிறிலங்காவில் மூன்றாவது சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் ஏன் நான்காவது சிறுபான்மை இனமான கத்தோலிக்க கிறித்தவர்களை இலக்கு வைக்க வேண்டும் என்பது புரியாத புதிராக இருக்கிறது. அதிலும் தமிழ்க் கத்தோலிக்கர்களை ஏன் இலக்குவைத்துக் கொல்ல வேண்டும் என்பது தெரியாமல் இருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் 15 ஆம் நாள் பிறன்ரன் தாறன்ட் என்ற ஒரு வெள்ளைநிற மேலாதிக்கவாதியால் இரண்டு நியூசீலந்து கிறிஸ்தவ மசூதிகள் தாக்குதலுக்கு இலக்கானது. அதில் 50 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். இந்தக் கொலைகளுக்குப் பதிலடியாகவே கத்தோலிக்க தேவாலயங்கள் மீது தவ்ஜீத் ஜமாத் தாக்குதலை மேற்கொண்டது எனச் சிலர் சொல்கிறார்கள். அப்படியிருந்தாலும் அந்த அமைப்பு அதற்கு முன்னரே குண்டுகள் தயாரிப்பது, தாக்குதல் பயிற்சியில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்க வேண்டும். மேலும் தமிழ்க் கத்தோலிக்கர்களை ஏன் கொல்ல வேண்டும்? கொழும்பில் உள்ள பிரபல கோட்டல்களை ஏன் தாக்க வேண்டும்? பொருளாதார இழப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற குறிக்கோள் அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும்.

கிறிஸ்ட்சேர்ச் மசூதித் தாக்குதலுக்கும் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கும் தொடர்பிருப்பதாக எவ்வித புலனாய்வுத் தகவல்களும் தமது அரசுக்குக் கிடைக்கவில்லை என்று நியூசிலாந்து பிரதமர் ஜெஸின்டா ஆர்டொன் அறிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக கண்டி, அலுத்கம, முல்லகம போன்ற நகரங்களில் வாழும் முஸ்லிம்கள், அவர்களது வர்த்தக நிறுவனங்கள் சிங்கள - பவுத்த மத தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி இருந்தன. அந்தத் தாக்குதல்களுக்கு பழி வாங்க நினைத்திருந்தால் சிங்கள - பவுத்த மக்களும் வியாபார நிலையங்களும் தாக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியொன்றும் நடைபெறவில்லை.

உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியான மெளலவி சஹ்ரான் ஹாசீம் காத்தான்குடி பள்ளிவாசல் ஒன்றி நிருவாகத்தின் தலைவராக இருந்திருக்கிறான். அதன் செயலாளராக அவனின் சகோதரன் ஜெய்னி ஹாசீம் இருந்திருக்கிறான். 2017ஆம் ஆண்டில் காத்தான்குடியிலுள்ள இஸ்லாமிய மதப்பிரிவினருக்கும், மெளலவி சஹ் ரான் ஹாசீம் தலைமையிலான தெளஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் இடையில் நடைபெற்ற மோதல் ஒன்றையடுத்து, சஹ்ரான் தலைமறைவாக இருந்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்கள் ஆயுதப் பயிற்சி பெற்று வருகின்றன அந்தக் குழுக்கள் எந்த நேரத்திலும் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்ற செய்திகள் கசிந்து வந்திருக்கின்றன. குறிப்பாக தவ்ஜீத் ஜமாத் குழுவின் பெயர் செய்திகளில் அடிபட்டு வந்திருக்கின்றன. அதனை முஸ்லிம் அரசியல்வாதிகள் பலமாக மறுத்து வந்திருக்கிறார்கள்.

கடந்த சனவரி மாதக் கடைசியில் மாவனல்ல பவுத்த கோயில்களில் இருந்த புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. அதற்குப் பின்னால் தீவிர முஸ்லிம்வாதிகள் இருந்திருக்கிறார்கள் என பொலீஸ் தெரிவித்தது. இதனால் முஸ்லிம் - சிங்கள சமூகங்களுக்கு இடையே பதட்டம் ஏற்பட்டது. பொலீசாரினால் பல முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் வசம் 100 கிலோ வெடிபொருட்களும் 100 வெடித்தூண்டிகளும் (detonators) கைப்பற்றப்பட்டன. ஆனால் செல்வாக்கு மிக்க ஒரு முஸ்லிம் அரசியல்வாதியின் தலையீடு காரணமாக அந்த சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்படி விடுவிக்கப்பட்ட ஒருவரே உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிர் இழந்துள்ளார். மாவனல்ல, கேகால மாவட்டத்தில் கேகாலைக்கும் கடுவன்னாவுக்கும் இடையில் காணப்படும் நகர் ஆகும்.

கடந்த வாரம் காத்தான்குடியை அண்டிய பகுதியில் தற்கொலைதாரி மோட்டார் சைக்கிளொன்றை வெடிக்க வைத்து ஒத்திகை பார்த்துள்ளதாகத் தெரியவந்திருகிறது. காத்தான்குடிப் பிரதேசத்தைப் பார்ப்பவர்கள் அது ஒரு குட்டி அரேபியா என நினைப்பார்கள். பேரீட்சை மரங்கள், அராபு மொழியில் பெயர்ப் பலகைகள் அங்கு காணப்படுகின்றன. காத்தான்குடி, கிழக்கு மாகாண ஆளுநரான எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாவின் கோட்டையாக இருந்து வருகிறது. இவர் கடந்த காலங்களில் நாடாளுமன்றில் உரையாற்றும் போது நாட்டில் இரத்த ஆறு ஓடும் என வெளிப்படையாகவே கூறி வந்திருக்கிறார். அப்படியெனில் உயிர்த்த ஞாயிறு நாளன்று இடம்பெற்ற படுகொலைகள் அவர் இரத்த ஆறு ஓடும் என்று கூறிய கருத்தின் எதிரொலியா என நாடாளுமன்றத்தில் ஞானமுத்து சிறீநேசன், பாஉ தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

இந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் பலராலும் அறியப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் மொகமது ஸகரானின் நடமாட்டத்தை கண்காணித்து வந்திருக்கிறார்கள். அவன் சிறிலங்காவிலும் தமிழ்நாட்டிலும் மாறி மாறி இருந்திருக்கிறான்.

ஏப்ரில் 4 ஆம் திகதி இந்திய உளவுத்துறை சிறிலங்காவிற்கு ஸகரான் மற்றும் அவனது கூட்டாளிகள் பற்றியும் அவர்களது அலைபேசி எண்கள் பற்றிய தகவல்களைக் கொடுத்திருந்தார்கள். குறிப்பாக அவர்கள் கத்தோலிக்க தேவாலயம் மற்றும் இந்திய தூதுவராலயம், இந்திய தூதுவராலய அதிகாரிகள் தாக்குதலுக்கு இலக்காகக் கூடும் என்ற தகவல்களைக் கொடுத்திருந்தது. அதனையடுத்து சிறிலங்காவின் பாதுகாப்புச் சேவை ஸகரானையும் அவனது கூட்டாளிகளையும் தங்கள் கண்காணிப்பில் வைத்திருந்ததாகத் தெரிகிறது.

ஏப்ரில் 11 ஆம் திகதி மீண்டும் துல்லியமான மேலதிக தகவல்களை இந்திய புலனாய்வுத்துறை பாதுகாப்பு அமைச்சுக்குக் கொடுத்துள்ளது. முஸ்லிம் பயங்கரவாதிகள் உயிர் நீத்த ஞாயிறு அன்று கிறித்தவ தேவாலயங்கள், கோட்டல்கள் மற்றும் இந்திய தூதுவராலயம் போன்றவற்றைத் தாக்கலாம் என்ற புலனாய்வுத் தகவல் பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரிவிக்கப் பட்டிருந்தது. அதில் ஸகரானின் சகோதரன் தனது மனைவி மக்களை இரவில் (2300 - 0400 மணி) சந்திப்பதாகவும் அந்த வீட்டின் சரியான எண் மற்றும் குறுக்குத் தெருவின் பெயர் போன்றவற்றை இந்திய புலனாய்வுத்துறை கொடுத்திருந்தது.

மூன்று பக்கம் கொண்ட இந்த எச்சரிக்கை ஆவணங்கள் துணை பொலீஸ் மா அதிபர் பிரியலால் திசநாயக்க ஏப்ரில் 11 அன்று தனது உயர் அதிகாரிக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் அமைச்சர்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருக்கும் அதிகாரிகளுக்கும், நீதித்துறைக்கும் இராசதந்திரிகளுக்கும் "அவசரம்" எனக் குறிப்பிட்டு அனுப்பி வைத்திருந்தார். அதில் நான்கு சந்தேக நபர்களின் பெயாகள் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நான்கு சந்தேக நபர்களில் ஒருவன் தற்கொலைத்தாக்குதல் நடத்தி இறந்துள்ளான். "உங்களது திணைக்களங்களில் உள்ள பிரமுகர்கள் மற்றும் இடங்கள் தொடர்பான பாதுகாப்பை பலப்படுத்துமாறு" அதி உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதில் சோகம் என்னவென்றால் இப்படியான தாக்குதல் இடம் பெறப்போகிறது என்பதை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவும், இந்திய புலனாய்வுப் பிரிவான றோவும் முன் கூட்டியே சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவித்திருந்தும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலீஸ் மா அதிபர் அதனை அலட்சியம் செய்துவிட்டார்கள். தாக்குதல் இப்படி உக்கிரமமாகவும் பரந்து பட்டும் இருக்கும் என தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சொல்கிறார்.

தாக்குதல் நடந்த நாளன்று சனாதிபதி சிறிசேனா நாட்டில் இல்லை. அவர் திருப்பதி சென்று வழிபாடு செய்துவிட்டு பின்னர் தனிப்பட்ட முறையில் சிங்கப்பூர் சென்றுவிட்டு திங்கட் கிழமைதான் நாடு திரும்பியிருந்தார். தான் நாட்டில் இல்லாத நேரில் தனது கடமைகளை செய்வதற்கு யாரையும் அவர் நியமிக்கவில்லை. மேலும் புலனாய்வுத்துறை அனுப்பிய புலனாய்வுத் தகவல் பிரதமர் இரணில் அவர்களுக்கோ, துணை பாதுகாப்பு அமைச்சர் கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு ஒக்தோபர் 26 இல் நடந்த எதிர்ப்புரட்சியின் பின்னர் பாதுகாப்பு சபைக் கூட்டங்களுக்கு பிரதமர் சரி, துணை பாதுகாப்பு அமைச்சர் சரி இருவருக்கும் அழைப்பில்லை. இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் பற்றி தனக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை எனப் பிரதமர் இரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய சுமந்திரன், நா.உ இந்த உயிரிழப்புகளுக்கு சனாதிபதியே பொறுப்பு எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த நான்கு சகாப்த காலத்தில் இஸ்லாம் உலகில் மாபெரும் மீள் எழுச்சி பெற்றுள்ளது. இதற்கு எண்ணெய் வளம் நிறைந்த மத்திய கிழக்கு நாடுகளின் பண பலம் ஒரு காரணமாகும். சவுதி அரேபியா வகாபிசம் எனச் சொல்லப்படும் அடிப்படைவாத இஸ்லாமிய கோட்பாடுகளை பரப்புவதில் முனைந்துள்ளது. பல இஸ்லாமிய நாடுகளில்

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி வேதமாகிய திருக் குர் ஆன் அந்த நாடுகளின் அரசியல் அமைப்புச் சட்டமாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. திருக்குர்ஆனில் இருந்தும் அல்-ஹதீஸ் (Hadith) என்னும் முகம்மது நபியின் வாழ்க்கை முறையில் இருந்தும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதே சரியா சட்டமுறை. இந்தச் சட்டமுறை காட்டுமிராண்டித்தனமான (கால் கைகளைத் துண்டித்தல், கல்லால் எறிந்து கொல்லுதல்) தண்டனைகளை விதிக்கிறது.

  
   Bookmark and Share Seithy.com


ஒரு இமாலய முட்டாள்தனம் Top News
[Tuesday 2024-01-02 09:00]

பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் மறுசீரமைப்புகளில் கால் இழுப்பதற்கு உலகத் தமிழர் பேரவை அரசாங்கத்திற்கு இன்னுமொரு காரணத்தை வழங்கியுள்ளது.


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.


Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Latika-Gold-House-2025
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா