ஒரு வீடுகளில் கூட சமைக்காத வினோத கிராமம்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
September 29, 2024 [GMT]

ஒரு வீடுகளில் கூட சமைக்காத வினோத கிராமம்!
[Thursday 2024-09-26 18:00]

இந்திய கிராமம் ஒன்றில் ஒரு வேளை கூட வீடுகளில் சமைத்து சாப்பிடாத நிலை உள்ளது. அந்த கிராமம் எங்குள்ளது என்பதை பார்க்கலாம். தற்போதைய காலத்தில் மூன்று வேளைகளிலும் உணவு டெலிவரி ஆப் மூலம் ஒர்டர் செய்து சாப்பிடும் நிலைமை ஒரு புறம் இருக்க, இந்தியாவில் உள்ள கிராமம் ஒன்றில் வீடுகளில் சமைக்காத நிலைமையும் மறுபுறம் உள்ளது.


  

இந்திய மாநிலமான குஜராத், மஹிசனா மாவட்டத்தில் சந்தன்கி கிராமத்தில் தான் வீடுகளில் சமைக்காத நிலை உள்ளது.

இந்த கிராமத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் அதிகமான மக்கள் உள்ளனர். அதில் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள் தான்.

இவர்களில் ஒருவரது வீடுகளில் கூட சமைப்பதில்லை. இதற்கு காரணம் என்னவென்றால் வயது முதிர்ந்தவர்களுக்கு தனிமை விரக்தி வந்துவிடக்கூடாது என்பதற்காக தான்.

முன்பு இந்த கிராமத்தில் மொத்தம் சுமார் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்துள்ளனர். ஆனால், அங்குள்ள இளைஞர்கள் படித்து வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்று விட்டனர். தற்போது இந்த கிராமத்தில் வயது முதிர்ந்தவர்கள் தான் உள்ளனர்.

இந்த கிராமத்தில் பொதுவாக ஒரு சமூக சமையல் கூடம் உள்ளது. இங்கு தான் அனைத்து மக்களுக்கும் சமையல் தயார் செய்யப்படுகிறது. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் நோக்கத்தில் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இதற்காக ஒரு நபர் மாதம் ரூ.2000 கொடுக்க வேண்டும். அதேபோல மாதம் ரூ.11,000 ஊதியத்தில் ஒரு சமையல் காரர் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர் ஆரோக்கியமான மற்றும் குஜராத்தி வகை உணவுகளை சமைத்துக் கொடுத்துவிடுவார்.

இந்தத் திட்டம் தொடங்கப்படுவதற்கு பூனம் பட்டேல் என்பவர் தான் முக்கிய காரணம். இதுகுறித்து அவர் பேசுகையில், "இந்த கிராமத்தில் உள்ள சமையல் கூடத்தில் உணவு பரிமாறப்படுகிறது. இங்கு வரும் மக்கள் அவர்களுடைய சுக, துக்கங்களை பரிமாறிக் கொள்வதால் பிணைப்பு உருவாகிறது" என்றார்.

  
   Bookmark and Share Seithy.com


கின்னஸில் இடம்பிடித்த உலகின் விலை உயர்ந்த உள்ளாடை!
[Saturday 2024-09-14 18:00]

உலகின் விலை உயர்ந்த உள்ளாடை என விக்டோரியாவின் சீக்ரெட் ஃபேண்டஸி ப்ரா கின்னஸில் இடம்பிடித்துள்ளது. உள்ளாடையின் மதிப்பு $15 மில்லியன் . இதில், 1,300 காரட் வைரம் மற்றும் மாணிக்கங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இதுவரை தயாரிக்கப்பட்ட மிக விலையுயர்ந்த உள்ளாடைகளுக்கான கின்னஸ் புத்தகத்தில் இந்த ப்ரா இடம்பிடித்தது.


கடவுளுக்கு தண்டனை கொடுக்கும் வினோத மாநிலம்!
[Tuesday 2024-09-10 18:00]

மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றாத கடவுள்களுக்கு இந்திய மாநிலம் ஒன்றில் தண்டனை வழங்கப்படுகிறது. பொதுவாகவே மனிதர்கள், தான் நினைத்தது ஏதாவது நடக்கவில்லை என்றாலோ, ஏதாவது ஒரு தேவை இருக்கிறது என்றாலோ, கஷ்ட காலம் ஏற்படும் போதெல்லாம் கடவுளிடம் தான் குறைகளை சொல்வார்கள். அதில் சில விடயங்கள் நடப்பதுண்டு, சில விடயங்கள் நடக்காமல் போகலாம். ஆனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் வேண்டுதல்களை நிறைவேற்றாவிட்டால் கடவுளுக்கு தண்டனை வழங்கும் வினோதமான பழக்கங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.


சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான் பொருள் கண்டுபிடிப்பு!
[Wednesday 2024-08-28 18:00]

பிரபஞ்சத்தில் சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான ஒளிரும் பொருளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமுடைய இந்த குவாசருக்கு J0529-4351 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை எங்கும் கண்டிராத அளவுக்கு இது மிகவும் பிரகாசமான உள்ளதாகவும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் VLT எனப்படும் மிகப்பெரிய தொலை நோக்கி மூலம் இதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


பிறப்புறுப்பு உட்பட உடல் முழுவதும் டாட்டூ: கின்னஸ் சாதனை படைத்த பெண்!
[Saturday 2024-08-24 06:00]

அமெரிக்க பெண் ஒருவர் அதிக எண்ணிக்கையில் பச்சை (Tattoo) குத்தி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அவரது உடலில் 99.98 சதவீதம் அவரது பச்சை குத்தல்களால் நிரம்பியுள்ளது. கைகள் மற்றும் கால்கள், உச்சந்தலை, நாக்கு, ஈறுகள், கண் இமைகளின் வெள்ளை வெளிப்புற அடுக்கு மற்றும் பிறப்புறுப்புகள் உட்பட உடலின் எந்த பாகத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை.


பிரித்தானியாவில் 17 ஆண்களை தாக்கிய பேய் பிடித்த மணப்பெண் பொம்மை!
[Friday 2024-08-23 06:00]

உலகின் பயங்கரமான பொம்மை இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயரில் உள்ள ரோதர்ஹாமில் உள்ளது. பேய் பிடித்த இந்த பொம்மை இதுவரை 17 பேரை தாக்கியுள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கணவரால் ஏமாற்றப்பட்ட எலிசபெத் என்ற மணமகளின் ஆவி இந்த பொம்மை இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த காரணத்திற்காக, இது மணப்பெண் பொம்மை (Bridal Doll) என்றும் அழைக்கப்படுகிறது.


கத்தரிக்கோல் காணாமல் போனதால் 36 விமானங்கள் இரத்து!
[Tuesday 2024-08-20 18:00]

ஜப்பான் விமான நிலையத்தில் கத்தரிக்கோல் ஒன்று ்காணாமல் போனதால் 36 விமானங்கள் பயணத்தை இரத்து செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை (17) ஜப்பானில் கொக்கைடோவின் நியூ சிட்டோஸ் விமான நிலையத்தின் உள் நுழையும் வாயிலின் அருகே இருந்த கடையொன்றில் கத்தரிக்கோல் காணாமல் போனதால் 36 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதோடு, 201 விமான சேவைகள் தாமதமடைந்துள்ளன.


கிணறு ஏன் வட்ட வடிவில் இருக்கிறது? பின்னணியில் இருக்கும் ஆச்சரிய காரணம்!
[Sunday 2024-08-18 16:00]

கிணறுகள் வட்ட வடிவில் ஏன் இருக்கிறது என்பதையும், அதற்கு பின்னணியில் இருக்கும் காரணத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம். பண்டைய காலங்களில் இருந்து கிணறுகளில் தண்ணீர் சேமிக்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் இன்றும் கிணறுகள் இருந்து வருகிறது. நகரங்களிலும் சில இடங்களில் நாம் கிணறுகளை பார்க்க முடியும்.


"வெறித்தனமாக காதலிக்கிறேன்" - மருமகளை திருமணம் செய்து கொண்ட மாமியார்!
[Wednesday 2024-08-14 18:00]

கணவரை விட்டு பிரிந்து தனது மருமகளை மாமியார் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இந்திய மாநிலமான பீகார், கோபால் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெல்வா கிராமத்தைச் சேர்ந்தவர் சுமன். இவருடைய சொந்த மருமகள் ஷோபா. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக மருமகள் மீது காதல் ஏற்பட்டுள்ளது.


18 ஆண்டுகளின் பின்னர் வானில் நடக்கவிருக்கும் சனிசந்திர கிரகணம் எப்போது தெரியுமா?
[Monday 2024-08-12 19:00]

சந்திர கிரகணம் என்பது பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது, பூமியின் காரணமாக சூரியனின் ஒளி சந்திரனை அடைய முடியாது. இதன் காரணமாக பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. இந்த வானியல் நிகழ்வு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி, ஒவ்வொரு மாதமும் சுக்கில பக்ஷத்தின் கடைசி தேதியில் முழு நிலவு ஏற்படுகிறது. ஆனால் சனி சந்திர கிரகணம் என்பது முற்றிலும் வேறுபட்டது. இது எவ்வாறு நிகழும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


ஏலியனுக்கு கோயில் கட்டி கும்பிடும் பக்தர்!
[Friday 2024-08-02 16:00]

குஷ்பு, ரஜினி உள்ளிட்டவர்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்டிய நிலையில், பக்தர் ஒருவர் ஏலியனுக்கு கோயில் கட்டி கும்பிட்டு வருகிறார். தமிழக மாவட்டமான சேலம், மல்லமூப்பம்பட்டியை அடுத்த ராமகவுண்டனூரைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர், வேற்றுகிரகவாசிகள் என்று கூறப்படும் ஏலியனுக்கு கோயில் அமைத்து வழிபாடு செய்து வருகிறார்.


 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா