வடக்கிற்கு அதிக நிதி- ஏனைய மாகாணங்களுக்கு இல்லையா? | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
February 21, 2025 [GMT]

வடக்கிற்கு அதிக நிதி- ஏனைய மாகாணங்களுக்கு இல்லையா?
[Wednesday 2025-02-19 05:00]

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 5000 மில்லியன் ரூபாவும், முல்லைத்தீவு பகுதியில் பாலம் நிர்மாணிப்புக்கு 1000 மில்லியன் ரூபாவும் என்ற அடிப்படையில் 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய மாகாணங்களுக்கு இவ்வாறு பாரிய நிதி ஒதுக்கப்படவில்லை. அனைத்து மாகாணங்களுக்கும் அபிவிருத்திக்கு சமமான வகையில் நிதி ஒதுக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.


  

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஐசிங் பூசிய கேக்கினை முன்வைத்துள்ளார். குறிப்பிட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் பிரச்சினைகள் மாத்திரமே மிகுதியாகும்.

நலன்புரி கொடுப்பனவுகள் அதிகரித்துள்ளதை வரவேற்கிறேன். பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மாஹாபொல கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.களனி பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தான் கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணிக்கு சார்பாக செயற்பட்டு கடந்த அரசாங்கங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். களனியில் இருந்து கொழும்புக்கு பேரணியாக வருவார்கள். ஆகவே தற்போது அதிகரித்துள்ள கொடுப்பனவை மேலும் அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எமது அரசாங்கத்தில் முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் 2000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. ஆனால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் 1000 ரூபாய் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு இது போதுமானதல்ல. இந்த தீர்மானத்தை மீளாய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 5000 மில்லியன் ரூபாவும், முல்லைத்தீவு பகுதியில் பாலம் நிர்மாணிப்புக்க 1000 மில்லியன் ரூபாவும் என்ற அடிப்படையில் 6000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய மாகாணங்களுக்கு இவ்வாறு பாரிய நிதி ஒதுக்கப்படவில்லை. அனைத்து மாகாணங்களுக்கும் அபிவிருத்திக்கு சமமான வகையில் நிதி ஒதுக்க வேண்டும்.

மக்கள் தமது குறைகளை எங்களிடம் குறிப்பிடுகிறார்கள். அந்த குறைகளை நாங்கள் அரசாங்கத்திடம் குறிப்பிடுவோம். அந்த குறைகளுக்கு முறையான தீர்வினை பெற்றுக் கொடுக்காவிடின் கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஏற்பட்ட கதியே நேரிடும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!
[Thursday 2025-02-20 16:00]

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


கணேமுல்ல சஞ்சீவ கதையை முடிக்க ஒன்றரைக் கோடி ரூபா பேரம்!
[Thursday 2025-02-20 16:00]

புதுக்கடை நீதிமன்றத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. டுபாயில் தலைமறைவாக உள்ள கெஹெல்பத்தர பத்மே என்ற நபரின் அறிவுறுத்தலின் பேரில், ஒன்றரை கோடி ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில், கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


துப்பாக்கிதாரி முஸ்லிம் அல்ல, சிங்களவர்!
[Thursday 2025-02-20 16:00]

புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக கைது செய்யப்பட்டவர் மஹரகம பகுதியைச் சேர்ந்த சமிந்து தில்சான் பியுமங்க கதனாராச்சி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


சஞ்சீவ உடலைத் துளைத்த தோட்டா மீட்பு!
[Thursday 2025-02-20 16:00]

அளுத்கடை நீதவான் நீதிமன்றக் கூண்டில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான கனேமுல்ல சஞ்சீவவின் இதயத்தை ஊடுருவிச் சென்று அவரது உடலில் நுழைந்த ஒரு தோட்டாவின் துண்டு, இன்று திறந்த நீதிமன்றத்தில் அரசாங்க பகுப்பாய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.


மீண்டும் எம்.பி ஆகிறார் ரணில்?
[Thursday 2025-02-20 16:00]

புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதிவான்!
[Thursday 2025-02-20 16:00]

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா இன்றைய தினம் பார்வையிட்டார். இதன்போது நல்லூர் பிரதேச செயலர், யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸார், முறைப்பாட்டாளர் மற்றும் பலர் உடனிருந்தனர். இந்த பகுதியில் 2011ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


முகமாலையில் கடை மீது பெற்றோல் குண்டு வீச்சு!
[Thursday 2025-02-20 16:00]

முகமாலை வடக்கு ஏ9 வீதியில் செ. நாகசெல்வம் என்பவரது கடை மீது இனம்தெரியாத நபர்களால் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் பெற்றோல் குண்டு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.


செவ்வந்தியைப் பிடிக்க உதவி கோரும் பொலிஸ்!
[Thursday 2025-02-20 16:00]

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய, பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.


மட்டக்களப்பு ரயிலுடன் மோதி 6 யானைகள் பலி!
[Thursday 2025-02-20 16:00]

கல்ஓயா பிரதேசத்தில் மீனகயா கடுகதி ரயில் மோதியதில் 6 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொரு காட்டு யானை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரயில் தடம் புரண்டுள்ளதாகவும், மட்டக்களப்பு-கொழும்பு ரயில் பாதையில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கஜேந்திரன், வேலன் சுவாமியை விசாரணைக்கு அழைத்தது பொலிஸ்!
[Thursday 2025-02-20 05:00]

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Latika-Gold-House-2025
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா