ஒரு நாள் கடவுச்சீட்டுக்கு மட்டுமே 24 மணிநேர சேவை! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
February 22, 2025 [GMT]

ஒரு நாள் கடவுச்சீட்டுக்கு மட்டுமே 24 மணிநேர சேவை!
[Friday 2025-02-21 16:00]

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தால் 24 மணி நேர ஒரு நாள் சேவை கடவுச்சீட்டுகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம் பி.எம்.டி. நிலுஷா பாலசூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


  

அவ்வறிக்கையில், “குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஒரே நாள் சேவையின் கீழ் விண்ணப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக மட்டுமே 24 மணி நேர சேவையை இயக்குகிறது.

“மேலும், இந்த சேவைக்கான பதிவு வாரத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10 மணி முதல் திறந்திருக்கும். வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இது மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


இப்போது விவாதிப்பது பொருத்தமல்ல - கஜேந்திரகுமாருக்கு கைவிரித்தார் சிவிகே!
[Saturday 2025-02-22 06:00]

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த கலந்துரையாடலுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பதிலளித்துக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தற்போதைய அரசாங்கம் மெத்தனப்போக்கைக் கடைப்பிடிப்பதாலும், அதற்கான முன்வரைவு எதனையும் சமர்ப்பிக்காத நிலையிலும் நாம் அரசியலமைப்பு வரைவு பற்றி இப்போது விவாதிப்பது பொருத்தமானதாக இருக்கும் எனக் கருதவில்லை என்றும், உரிய நேரம் வரும்போது இதுபற்றிக் கலந்துரையாடலாம் என்றும் தெரிவித்துள்ளது.


விலகிச் சென்றால் வரலாறு எம்மை மன்னிக்காது!
[Saturday 2025-02-22 06:00]

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தைப் பொறுத்தமட்டில், அரசாங்கம் எமக்கான தீர்வுத்திட்டத்தைத் தரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கமுடியாது. மாறாக நாமனைவரும் ஒன்றிணைந்து, தமிழர்கள் சார்ந்து ஒரு கூட்டுநிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.


கடந்தகால மோசடிகளுக்கு ஜேவிபியும் பொறுப்புக்கூற வேண்டும்!
[Saturday 2025-02-22 06:00]

அரசாங்கம் நாட்டில் இடம்பெறும் அனைத்து விடயங்களுக்கும் கடந்த கால அரசாங்கத்தை குறைகூறி தப்பிக்கொள்ள முயற்சிக்கிறது. ஆனால் கடந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளித்து வந்திருக்கிறது. அதனால் அந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகளுக்கு மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் சுஜிவ சேனசிங்க தெரிவித்தார்.


மாலைதீவு வெளியுறவு அமைச்சருடன் ஜனாதிபதி அனுர சந்திப்பு!
[Saturday 2025-02-22 06:00]

பொருளாதார நெருக்கடியிலிருந்து மாலைதீவை மீட்டெடுக்க இலங்கையிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டிருப்பதாக மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் தெரிவித்துள்ளார்.


கணேமுல்ல சஞ்சீவவின் உதவியாளரா கொலையாளி?
[Saturday 2025-02-22 06:00]

கணேமுல்லே சஞ்சீவவை சுட்டுக் கொன்ற நபரும் கணேமுல்லே சஞ்சீவவும் சிறிது காலம் நெருங்கிய நண்பர்களாக இருந்ததாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சஞ்சீவவின் போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய உதவியாளராகத் தான் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.


துப்பாக்கிதாரியின் காதலி கைது!
[Saturday 2025-02-22 06:00]

கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை சம்பவத்தில் துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் பெண் ஒருவரை மஹரகம பொலிசார் கைது செய்து கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்த பின்னர், துப்பாக்கிதாரி தனது காதலியுடன் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.


துப்பாக்கி இயங்காததால் தப்பினார் வர்த்தகர்!
[Saturday 2025-02-22 06:00]

நீர்கொழும்பு பகுதியில் நேற்று பிற்பகல் மற்றொரு கொலை முயற்சி தோல்வியடைந்துள்ளது. நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் காமச்சோடய சந்தைப் பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மிரிஸ் அந்தோணி என்கிற சமிந்தவின் மூத்த மகனை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்படவிருந்தது.


மித்தெனிய முக்கொலைகள்- தேடப்படும் இரண்டு இராணுவத்தினர்!
[Saturday 2025-02-22 06:00]

மித்தெனியவில் சுட்டுக் கொல்லப்பட்ட அருண விதானகமகே, அவரது மகள் மற்றும் மகனின் கொலையாளிகள் பற்றிய மேலும் பல தகவல்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த முக்கொலைகளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.


அரியாலை புதைகுழி - அரசாங்கம் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!
[Friday 2025-02-21 16:00]

அரியாலை சிந்துப் பாத்தி மயானத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் மனித எச்சங்கள் வெளிவந்த நிலையில் அது குறித்து யாழ்ப்பாண நீதிமன்றம் கவனம் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்க விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.


அர்ச்சுனா மீது சிறப்புரிமைகள் பற்றிய குழுவே நடவடிக்கை!
[Friday 2025-02-21 16:00]

பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக தன்னால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Latika-Gold-House-2025
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா