Untitled Document
September 28, 2024 [GMT]
ஹீமோகுளோபின் அளவை கூட்டும் பேரிச்சம்பழம் அல்வா!
[Monday 2024-09-23 17:00]

பொதுவாக குளிர்காலம் வந்து விட்டால் மாலை நேர டீக்கு ஏதாவது சுவிட்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அப்படி இருந்தால் சந்தேகமே இல்லாமல் கேரட் அல்வா, பருப்பு அல்வா, ரவை அல்வா என அல்வா வகைகளை செய்து சாப்பிடலாம். அந்த வரிசையில் ஒன்று தான் பேரீச்சம்பழ அல்வா. இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் சுவையுடன் சேர்த்து உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகின்றது.

பொதுவாக குளிர்காலம் வந்து விட்டால் மாலை நேர டீக்கு ஏதாவது சுவிட்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அப்படி இருந்தால் சந்தேகமே இல்லாமல் கேரட் அல்வா, பருப்பு அல்வா, ரவை அல்வா என அல்வா வகைகளை செய்து சாப்பிடலாம். அந்த வரிசையில் ஒன்று தான் பேரீச்சம்பழ அல்வா. இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் சுவையுடன் சேர்த்து உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகின்றது.

  

பேரீச்சம்பழத்தில் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம், ரிபோஃப்ளேவின், நியாசின், ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் குளிர்காலத்தில் உடலுக்கு தேவையான ஊட்டத்தை வழங்குகின்றது. இப்படி ஏகப்பட்ட பலன்களை பாரபட்சம் பாராமல் கொடுக்கும் பேரீச்சம்பழத்தை வைத்து எப்படி அல்வா செய்து என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பால் - ½ லிட்டர்

பேரிச்சம்பழம் - 200 கிராம்

சர்க்கரை - 100 கிராம்

துருவிய தேங்காய் - 2-3 டீஸ்பூன்

நெய் - 4-5 டீஸ்பூன்

முந்திரி - 10 முதல் 12

பாதம் - 10-12

திராட்சை - 10-12

ஏலக்காய் தூள்- சிறிது

செய்முறை:

கர்ஜூர் அல்வா எனப்படும் பேரீச்சம்பழ அல்வா தயாரிப்பதற்கு முதலில் பாலில் பேரீச்சம்பழத்தை சுமார் 6 முதல் 8 மணி நேரம் ஊறவைக்கவும்.

8 மணி நேரத்திற்கு பின்னர் பேரீச்சம்பழத்தை எடுத்து சுத்தமான மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும். பிறகு முந்திரி, பாதாம் மற்றும் பிற உலர் பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் அல்லது நெய் விட்டு சூடாக்கவும். அதில், அரைத்து வைத்திருக்கும் பேரீச்சம்பழ விழுதை கொட்டி நன்றாக கலந்து விடவும். விழுது பொன்னிறமாக வரும் வரை மெதுவாக கிளறிக் கொண்டே இருக்கவும்.

பேரீச்சம்பழ விழுதுவுடன் சர்க்கரை, பால் இரண்டையும் கொடுக்கப்பட்ட அளவில் கலந்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.

கெட்டியாவது போன்று உணர்ந்தால் அடுப்பை அணைத்து விட்டு பிசைந்து அல்வா பதத்திற்கு எடுக்கவும். இறுதியாக ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து பரிமாறினால் “கர்ஜூர் அல்வா”தயார்!

1. இரவில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இந்த பேரீச்சம்பழம் அல்வா நல்லது. தினமும் ஒரு மேசைக்கரண்டி அளவு பாலில் கலந்து கொடுத்து வந்தால் இந்த பழக்கம் நாளடைவில் இல்லாமல் போகும். அத்துடன் உடலை வெப்பமாக வைத்து கொள்ளும்.

2. குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் சில அடிக்கடி தொற்றுகளிடம் சிக்கிக் கொள்வார்கள். இந்த அல்வாவை தினமும் கொஞ்சமாக சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

3. இதய நோய் அபாயம் உள்ளவர்கள் இந்த அல்வா சாப்பிடலாம். இதிலிருக்கும் பேரீச்சம்பழம் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-அபோப்டோடிக் பண்புகளை கொண்டது. இது உங்களுக்கு மாரடைப்பு வராமல் தடுக்கும். அத்துடன் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனையுள்ளவர்களுக்கு நல்ல பலனை கர்ஜூர் அல்வா கொடுக்கின்றது.

  
   Bookmark and Share Seithy.com



நாய் வளர்ப்பதால் நோய் ஆபத்து குறையுமா?
[Saturday 2024-09-28 18:00]

நாய்களை வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. செல்லப்பிராணிகளை வளர்க்கும் போது அதனை பாராமரிப்பதும், பாதுகாப்பாக வைத்திருப்பதும் மிகவும் பொறுப்பான செயலாகும். சிலருக்கு இது ஒரு பொழுதுஆபோக்காக காணப்படுகின்றது. இதில் பலருக்ம் தெரியாத உண்மை உன்று உள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வில் நாய் வளர்ப்பதில் உள்ள நற்பலன்களை விவரித்துள்ளது.



சளி இருமலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காரசாரமான கொங்கு நாட்டின் செலவு ரசம்!
[Friday 2024-09-27 18:00]

பொதுவாக உணவுகள் பசிக்காகவும் சுவைய்யாகவும் சாப்பிடப்படுகின்றது. ஆனால் சில உணவுகள் நமத உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அந்த வகையில் தான் இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபியும். உணவுகளில் கொங்கு நாட்டு உணவு என்றால் இது மிகவும் சுவையாக இருக்கும். மிகவும் பிரபலமானவை.கொங்கு மாவட்டங்களில் செய்யப்படும் உணவு வகைகளுக்கு இன்றளவும் மிகுந்த சுவை இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் கொங்கு சமையல் உணவுகள் பல உலகளவிலும் பிரபலமானவையாக இருந்து வருகின்றன.



மதுபானம் அருந்தாவிட்டாலும் கல்லீரல் பாதிக்கப்படலாம்: காரணம் என்ன?
[Thursday 2024-09-26 18:00]

நாம் ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமான உணவுகளை உண்பது அவசியம். நாம் ஆரோக்கியமான உணவை உண்ணும் போது தான் நமது உடல் பாகங்களும் பாதுகாப்பாக இருக்கும். நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய பாகமாக கல்லீரலைக் கூறலாம். மிகவும் சென்ஸிட்டிவ்வான உறுப்பான கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பற்பல. சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும், புரத உற்பத்திக்கும் இது மிகவும் உதவிகரமாக உள்ளது. அதே நேரத்தில், கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கிறது.



மூளையின் ஆரோக்கியத்தை குறைத்து மந்தமாக்கும் ஆபத்தான பழக்கங்கள்!
[Wednesday 2024-09-25 18:00]

உடலில் மிக முக்கியமான பகுதி தான் நமது மூளையாகும். ஆனால் சில பழக்கவழக்கங்களால் இதன் செயற்பாடு மங்கிப்போகிறது. நமது மூளை சுறுசுறுப்பாக இருப்பதற்கு நமக்கு தேவை முதலில் காலை உணவு தான். நம்முடைய அன்றாட வேலைகளை சரியாக செய்வதற்கு மூளை சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் முக்கியம் என்பதால் அதற்குரிய சரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க நாம் உடல் மற்றும் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.



சிக்கன் குழம்பை இப்படி ஒருமுறை செய்து பாருங்க!
[Tuesday 2024-09-24 18:00]

பொதுவாககேவே சிக்கன் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும். சிக்கன் குழம்பை பல வகைகளில் சமைக்கலாம் என்பதுடன் இது எல்லா வகையான உணவுகளுடனும் சூப்பராக பொருந்துவது இதன் சிறப்பம்சமாகும். அந்த வகையில் அனைவரும் விரும்பும் படி காரசாரமான சிக்கன் கிரேவியை எளிமையான முயைில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



பிரியாணியை மிஞ்சும் சுவையில் கத்தரிக்காய் சாதம்!
[Sunday 2024-09-22 18:00]

பொதுவாகவே அனைவருக்கும் விதவிதமாக சமைத்து சாப்பிடுதில் அதிக ஆர்வம் இருக்கும். அதிலும் பிரியாணி பிடிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. கர்நாடக பாணியில் பிரியாணி சுவையை மிஞ்சும் அளவுக்கு அசத்தல் சுவையில் கத்திரிக்காய் சாதத்தை எப்படி எளிமையான முறையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



கொழுப்பை எரித்து 21 நாட்களில் இடுப்பழகை பெற வேண்டுமா?
[Saturday 2024-09-21 17:00]

உடல் எடை என்பது தற்போது இருக்கும் வாழ்க்கை முறைக்கு ஏற்றதாக இருக்கிறது. இந்த உடல் எடைப்பிரச்சனைக்கு முழுக்காரணம் நம்முடைய வாழ்க்கை முறை தான். நாம் ஒரு வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஒவ்வொரு பழக்கவழக்கமும் நம்முடைய ஆரோக்கியத்தில் முக்கித்துவம் வகிக்கிறது. உடல் எடை அதிகரிக்க நம்முடைய உணவுப்பழக்கவழக்கம் தான் முழுக்காரணமாகும். இந்த காரணத்தினால் நாம் தினமும் சாப்பிடம் உணவில் கவனம் வெலுத்த வேண்டும். ஆனால் உடல் எடை குறைப்பது அவவளவு சுலபமான விஷயம் அல்ல.



கைகளில் தோல் உரிய என்ன காரணம்?
[Friday 2024-09-20 18:00]

இருக்கே சருமத்தில் இறந்த செல்கள் வெளியேறாமல் தங்குவது, அழுக்குகள் சரும துவாரத்தில் தங்குவது சரும பளபளப்பை மங்க செய்துவிடும். சருமத்தில் எண்ணெய் சுரப்பிகளும் வற்றும் போது சருமம் வறட்சி ஆவதை நன்றாக உணர முடியும். இதனால் சருமத்தில் பல பிரச்சனைகள் உருவாகும். அதில் அரிப்பு, செதில்களாக இருக்கும். உலர்ந்த திட்டுகள் உருவாகும். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்றாலும் வறண்ட சருமம் என்பது எல்லா வயதினரையும் பாதிக்க கூடிய ஒன்று.



புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது?
[Thursday 2024-09-19 18:00]

எமது முன்னோர் புரட்டாசி மாதத்தை தெய்வத்திற்கு உரிய மாதமாக பார்க்கிறார்கள். பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி என்பதால் அசைவ உணவுகளுக்கு இடம் இருக்காது. மாறாக சைவ உணவுகளை தான் மாதம் முழுவதும் சாப்பிட வேண்டும். இப்படி இருந்து பெருமாளுக்கு வழிபாடு செய்வதால் வீட்டிலுள்ள கஷ்டங்கள் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும் என இன்றும் நம்பப்படுகின்றது. இந்த சாஸ்த்திரத்தை காலங்காலமாக இந்துக்கள் பின்பற்றி வருகிறார்கள். இதற்கு சாஸ்த்திரம் ரீதியாக காரணம் இருப்பது போல் ஒரு அறிவியல் காரணமாக இருக்கின்றது. அந்த வகையில் புரட்டாசி மாதம் அசைவ உணவுகளை தவிர்ப்பதற்கான காரணத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.



வழுக்கை தலையில் முடி வளர வைக்கும் ஆயுர்வேத வைத்தியம்!
[Wednesday 2024-09-18 17:00]

தற்போது இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு தரப்பினருமே இளம் வயதிலே தலைமுடி உதிர்வு பிரச்சினையால் அவஸ்தைப்படுகிறார்கள். முதுமைக்கு முன்னரே தலையில் உள்ள முடி உதிர்ந்து தலை வழுக்கையாக ஆரம்பிக்கின்றது. இது ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், மன அழுத்தம், மருந்து பாவனை, தூக்கமின்மை உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படுகின்றது. வழுக்கை பிரச்சினை பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் வருகின்றது. இந்த பிரச்சினை அனுபவிப்பவர்கள் ஆங்கில மருத்துவத்தில் முயற்சிப்பதை விட ஆயுள் வேத முறைப்படி வைத்தியம் பெறலாம்.



சூயிங்கம் சாப்பிடுவதில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கா?
[Tuesday 2024-09-17 18:00]

பொதுவாகவே சூயிங்கம் சாப்பிடுவதை தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். சூயிங்கம் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றத்துக்கு தீர்வு கிடைப்பதுடன் புத்துணர்வாக உணர முடிவதன் காரணமாக பலரும் சூயிங்கம் சாப்பிடுவதை அதிகம் விரும்புகின்றார்கள். ஆனால் சூயிங்கம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கும் வாய் சுகாதாரத்துக்கும் பெருமளவாக நன்மைகளை கொடுக்கும் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா? ஆம், சூயிங்கம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது. இது தொடர்பில் விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.



உணவை வேகமாக உண்ணும் போது உடலில் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன?
[Monday 2024-09-16 18:00]

நாம் அன்றாடம் உணவு உண்பது எமது உடலின் சக்திக்காகும். நாம் உணவை எடுத்துக்கொண்டால் மட்டுமே நமது உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் அதிக உணவு உண்ணுதலே தற்போது ஒரு ஆபத்தாக மாறி உள்ளது. அந்த வகையில் தற்போது இருக்கும் உணவு விடுதிகளில் மக்களை ஈர்ப்பதற்காக அதிக உணவு உண்ணும் போட்டியை ஆரம்பித்துள்ளனர். இந்த போட்டியில் குறுகிய நேரத்தில் அதிகளவன உணவை உண்ண வேண்டும்.



சக்கரை நோயாளிகள் சாக்லெட் சாப்பிடுவது நன்மை தருமா?
[Sunday 2024-09-15 18:00]

நீரிழிவு நோய் என்பது சரி செய்ய முடியாத உடல்நலப் பிரச்சனையாகும். ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க, நாம் அனைவரும் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த நோய் பொதுவாக நமது பழக்கவழக்கம் உணவு முறையால் வரக்கூடியதாகும். இதை தடுக்க ஒவ்வொருவரும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தில்அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த நோய் தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரு நோயாகும்.



கோழிக்கறி சுவையை மிஞ்சும் காய்கறி குருமா!
[Saturday 2024-09-14 18:00]

நாம் எப்போதும் சைவ உணவுகளை சாப்பிட மறுத்துவிடுவோம். அசைவ உணவுகள் என்றும் போது அதில் காய்கறிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பல வகையான காய்கறிகளை நாம் சாப்பிடுவது முக்கியமாகும்.தினசரி உணவில் காய்கறிகளை சேர்த்து சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இவை சரியான ஊட்டச்சத்தை வழங்குதல், செரிமானத்தை மேம்படுத்துதல் மற்றும் நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவும். அந்த வகையில் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட கூடிய காய்கறி குருமா குழம்பு எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.



ஆரோக்கியமான கூந்தலை கொடுக்கும் ஷாம்பு கட்டி பற்றி தெரியுமா?
[Friday 2024-09-13 16:00]

பொதுவாகவே அடர்த்தியான, உறுதியான கூந்தலைப் பெறவேண்டும் என்ற ஆசை ஆண், பெண் இருபாலாருக்குமே இருக்ககின்றது. ஆனால் பெரும்பாலாகவர்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சினைகள் இருக்கும். தற்காலத்தில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றுடன் சந்தைகளில் அதிகளவில் பெருகிப்போன இரசாயனம் கலந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது போன்ற காரணங்களினால் கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தல் வலுவிலக்கும் பிரச்சினைகள் அதிகமாகிவிட்டது.



பளபளக்கும் வெள்ளை பற்கள் வேண்டுமா? - எழிய வழிமுறைகள்!
[Wednesday 2024-09-11 18:00]

ஒருவரின் ஆளுமை அழகை வெளிக்காட்டுவது வெள்ளை மற்றும் பளபளப்பான பற்கள் ஆகும். முத்துக்களைப் போலப் பிரகாசிக்கும் பற்கள் இருந்தால் ஈர்க்க முடியும். அதே சமயம் மஞ்சள் மற்றும் அழுக்கு படிந்த பற்களால் பல சங்கடங்களைச் சந்திக்க நேரிடலாம். பற்கள் சுத்தமாக இல்லாவிட்டால், வெளிப்படையாக வாய்விட்டுச் சிரிக்க கூட முடியாது. இதற்கு காரணம் குட்கா மற்றும் வெற்றிலை உட்கொள்வது, புகைபிடித்தல், மோசமான வாய் பராமரிப்பு அல்லது தவறான உணவு முறை போன்ற பல காரணங்களாகும்.



கெட்ட கொலஸ்டராலை வெளியேற்ற உதவும் உணவுகள்!
[Tuesday 2024-09-10 18:00]

பொதுவாக மனித ஆரோக்கியத்தில் இதயம் முக்கிய இடம் பிடிக்கிறது. இதயம் சீராக இயங்க வேண்டுமெனின் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். எல்.டி.எல் எனப்படும் உயர் கொழுப்பு அல்லது கெட்ட கொழுப்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான இதய நோய்களை ஏற்படுத்தும். இவற்றை தடுப்பதற்கு மருந்து வில்லைகளை எடுத்து கொள்வதை விட நல்ல கொலஸ்ரோல் அடங்கிய உணவுகளை கொண்டு கெட்ட கொலஸ்ரோலை இல்லாமாக்குவது சிறந்த அணுகுமுறையாகும்.



ரத்த புற்றுநோயை குணமாக்கும் அருகம் புல் ஜூஸ்!
[Monday 2024-09-09 17:00]

பொதுவாக நம் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் பழக்கங்களில் முறையான உணவு பழக்கங்களும் ஒன்று. உணவு பழக்கங்கள் சீராக இருக்கும் பட்சத்தில் நோயின் தாக்கம் குறைவாக இருக்கும். முந்தைய காலத்திலுள்ள மக்கள் ஏதாவது தீராத நோய்கள் வந்தால் மாத்திரமே மருத்துவமனைக்கு செல்வார்களாம். நமது சூழலில் இருக்கும் காய்கறிகள் மற்றும் மூலிகைகளை வைத்து சில நோய்களை முழுமையான குணப்படுத்தியுள்ளார்களாம்.



நாவூறும் சுவையில் தேங்காய் மசாலா மீன் குழம்பு!
[Sunday 2024-09-08 17:00]

எப்போதும் உணவென்றால் சுவை நிறைந்ததாகவும் சத்துள்ளதாகவும் செய்ய வேண்டும். இதில் பல நாட்டு உணவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த உணவுகளை நாம் வீட்டில் செய்து சாப்பிடும் போது ஆரோக்கியம் அதிகமாகும். அந்த வகையில் எல்லோரது வீட்டிலும் மீன் குழம்பு என்பது இருக்கும். வாரத்தில் மூன்று நாட்களாவது மீன் குழம்பு வைப்பது ஒரு பழக்கமாக இருந்து வருகின்றது. மீன் குழம்கு என சொன்னால் அதில் பல வகையில் செய்வார்கள். மீன் குழம்பு பொதுவாக மசாலா அரைத்து வைக்கப்படும். இது ஒவ்வொரு இடத்திற்கு தகுந்ததை போல வைப்பார்கள். அந்த வகையில் கேரளா சுவையில் தேங்காய் மசாலா மீன்குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



சிறுநீரக நச்சுக்களை இல்லாமல் செய்யும் பழங்கள்!
[Saturday 2024-09-07 16:00]

சிறுநீரகத்தை சுத்தம் செய்ய நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களே முக்கியம் பெறுகின்றது. இதன் மூலம் இந்த சிறுநீரகத்தை நாம் சாப்பிடும் பழங்கழை வைத்தே சுத்தம் செய்யலாம். சிறுநீரகம் நமது உடலில் மிக முக்கியமான பகுதியாகும். ஏனெனில் சிறுநீரகம் நம் உடலில் நச்சுக்களை சுத்தம் செய்யும் வடிகட்டியாக செயல்படுகிறது. அப்படி கழிவு நீக்கம் செய்யும் நச்சுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.இதன் செயற்பாடு உடலில் சரிவர நடக்கவில்லை என்றால் உடல் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகும். அந்த வகையில் அது என்னென்ன பழங்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா