Untitled Document
February 26, 2025 [GMT]
கும்பகோணம் பாணியில் காரசாரமான தக்காளி சட்னி!
[Saturday 2025-02-08 19:00]

பொதுவாகவே தென்னிந்திய உணவுகளில் சட்னிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. சட்னி என்றாலே தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னி தான் பெரும்பாலானவர்களின் விருப்ப தெரிவாக இருக்கும். அப்படி வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் விரும்பி சாப்பிடும்,தக்காளி சட்னியை எப்போதும் வழக்கமான முறையில் செய்யாமல் சற்று வித்தியாசமான முறையில் அசத்தல் சுவையில் கும்பகோணம்  பாணியில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாகவே தென்னிந்திய உணவுகளில் சட்னிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. சட்னி என்றாலே தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னி தான் பெரும்பாலானவர்களின் விருப்ப தெரிவாக இருக்கும். அப்படி வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் விரும்பி சாப்பிடும்,தக்காளி சட்னியை எப்போதும் வழக்கமான முறையில் செய்யாமல் சற்று வித்தியாசமான முறையில் அசத்தல் சுவையில் கும்பகோணம் பாணியில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

  

தேவையான பொருட்கள்

தக்காளி - 4 (நறுக்கியது)

பூண்டு - 8 பல்

நல்லெண்ணெய் - 2 தே.கரண்டி

கடலைப் பருப்பு -2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு -1 மேசைக்கரண்டி

வரமிளகாய் - 4

கறிவேப்பிலை - 1 கொத்து

சீரகம் - 1/2 தே.கரண்டி

பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி

வெல்லம் - 1/2 தே.கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு தேவையானவை

நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1/2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி

கடலைப் பருப்பு - 1/2 தே.கரண்டி

வரமிளகாய் - 1

கறிவேப்பிலை - 1கொத்து

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரையில் நன்கு வறுத்து, அத்துடன் உளுத்தம் பருப்பு சேர்த்து, வாசனை வரும் வரையில் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து அதில் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி, வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதே பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை, புளி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அத்துடன் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 10 நிமிடங்கள் வரையில் வதக்கி, சீரகம் மற்றும் சிறிய துண்டு வெல்லத்தை சேர்த்து கிளறிவிட்டு இறக்கி ஆறவிட வேண்டும்.

அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில் வறுத்த கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் ஆகியவற்றுடன் வதக்கிய தக்காளியையும் சேர்த்து, ஓரளவு கொரகொரப்பான பதத்தில் அரைத்து, ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், நாவூரும் சுவையில் கும்பகோணம் தக்காளி சட்னி தயார்.

  
   Bookmark and Share Seithy.com



திருமண மோதிரத்தை எந்த கையில் அணிய வேண்டும்?
[Monday 2025-02-24 18:00]

திருமண நிகழ்வின் நிச்சயதார்த்தத்தின் போது அணியும் எந்த கையில் அணிய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். திருமணம் மற்றும் நிச்சயதார்த்த மோதிர விடயத்தில் அதிகமான குழப்பங்கள் எழுவதுண்டு. சிலர் பெண்கள் வலது கையில் தான் போட வேண்டும் என்றும் சிலர் இடது கையில் போட வேண்டும் என்று கூறுவார்கள். உண்மையில் திருமண மோதிரத்தினை எந்த கையில் அணிந்தால் அதிக நன்மைகளைப் பெறலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



முக அழகை கெடுக்கும் பழக்கங்கள்!
[Sunday 2025-02-23 17:00]

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி முகம் அழகாக வைத்து கொள்ள அதிகமான ஆர்வம் காட்டுவார்கள். ஏனெனின் முகம் தான் நாம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதனை காட்டும் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இரவு வேளைகளில் ஒரு சில தவறுகளை தொடர்ந்து செய்து வந்தால் நாம் என்ன தான் முயற்சி செய்தாலும் முகம் அழகாக இருக்காது என சரும மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.



ஆண்கள் தினமும் ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிட்டால் என்ன நடக்கும்?
[Friday 2025-02-21 18:00]

தற்போது உலர் திராட்சை நிறைய பேரின் விருப்பமான ஸ்நாக்ஸாக பார்க்கப்படுகின்றது. இந்த உலர் திராட்சையில் இரும்புச்சத்து, பொட்டாசியம், காப்பர், வைட்டமின் பி6, மாங்கனீசு போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. இவ்வளவு சத்துக்கள் கொண்ட உலர் திராட்சையை பாயாசம், கேசரி, சர்க்கரை பொங்கல் போன்ற உணவுகள் தயாரிக்கும் பொழுது சேர்ப்பார்கள். ஆனால் உலர் திராட்சையை இப்படி சாப்பிடுவதிலும் பார்க்க தனியாக ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.



ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் வரகரிசி உப்புமா!
[Thursday 2025-02-20 19:00]

சிறு தானிய வகையை சேர்ந்த வரகு அரிசியில் மாவுச்சத்து குறைவாக இருக்கும் என்பதால் அரிசி உணவுக்கு மாற்றாக எடுத்துகொள்ளவதற்கு இது சிறந்த தெரிவாகும். இந்த அரிசியில் கொழுப்பு அதிகம் இல்லை. இதில் இருக்கும் கொழுப்பும் நல்ல கொழுப்பு என்பதால் இதயத்துக்கு நன்மை செய்யகூடியது. மூளை செல்கள் சுறுசுறுப்பாக செயல்படவும் தசைகள், எலும்பு மஜ்ஜை, பல் எனாமல் போன்றவற்றை காக்கவும் இந்த வரகரிசியில் செறிந்துள்ள அமினோ அமிலங்களின் பெரிதும் துணைப்புரிகின்றது.



தொங்கும் தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா?
[Wednesday 2025-02-19 18:00]

பொதுவாகவே ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தற்காலத்தில் அதிகரித்த வேலைபளு, துரித உணவுகளின் அதிகமாக நுகர்வு, போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிப்பதுடன் பெரும்பாலானவர்கள் தொப்பை பிரச்சினையால் அவதிப்டுகின்றாகள்.



வாழை இலையில் சாப்பிட்டால் உடலில் நடக்கும் அற்புதங்கள்!
[Tuesday 2025-02-18 16:00]

பொதுவாகவே நமது முன்னோர்கள் செய்த ஒவ்வொரு விடயத்துக்கு பின்னும் நிச்சயம் வியக்க வைக்கும் நன்மைகள் நிறைந்திருக்கும் என்பது இன்று அறிவியல் ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழரின் விருந்தோம்பலில் வாழை இலை பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக காணப்பட்டுள்ளது. அதன் பின்னால் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தொடர்பில் முழுமையான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.



இரும்பு கடாயில் எந்த உணவுகளை சமைக்கக்கூடாது தெரியுமா?
[Monday 2025-02-17 19:00]

இரும்பு பாத்திரங்களில் என்னென்ன பொருட்களை சமைக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான வீடுகளில் நான்ஸ்டிக் பாத்திரங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பதினால் புற்றுநோய் அபாயம் ஏற்படுவதுடன், உடலுக்கு பல தீமைகளையும் கொடுக்கின்றது.



‘கருத்தடை மாத்திரைகளால் மாரடைப்பு’ - வெளியான அதிர்ச்சி தகவல்!
[Saturday 2025-02-15 16:00]

கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதால், மாரடைப்பு மற்றும் பக்கவாத பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, புகழ்பெற்ற பிரிட்டிஷ் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியாகவுள்ளது. 1996ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை 15-49 வயதுடைய 20 லட்சத்துக்கும் அதிகமாக பெண்களின் மருத்துவ அறிக்கையை ஆய்வுக்குட்படுத்தி ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கருத்தடை மாத்திரைகள் அடிக்கடி உட்கொள்வதால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



45 நாட்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் என்னவாகும்?
[Friday 2025-02-14 18:00]

அன்றாட வாழ்க்கையில் நாம் எடுத்துக் கொள்ளும் சர்க்கரையை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் சர்க்கரை எடுத்துக் கொள்ளாத வாழ்க்கைக்கு நகர்ந்து வருகின்றனர். சர்க்கரை எடுத்துக் கொண்டால் பார்வை கூர்மையாகும், சருமம் பளபளப்பாகும், எடையும் என்று கூறப்படுகின்றது.



சுவையான காபியை யாரெல்லாம் குடிக்க கூடாது?
[Thursday 2025-02-13 18:00]

சோர்வாக இருக்கும் போது, தூக்கம் வரும் போது, வேலை செய்யும் போது காபி குடிக்கும் பழக்கம் இருப்பது வழக்கம். சிலருக்கு காபி மீது அவ்வளவு ஏக்கம் இருப்பதால், அவர்கள் ஒரு நாளைக்கு நான்கைந்து முறை காபி குடிப்பார்கள். காபியில் காணப்படும் காஃபின் மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது நம் உடலில் டோபமைனின் அளவையும் மேம்படுத்துகிறது. ஆனால் இதை ஒரு சில பிரச்சனை இருப்பவர்கள் குடிக்க கூடாது அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



சிசேரியன் செய்த பெண்களுக்கு அதிகமாக இடுப்பு வலி ஏற்படுவது ஏன்?
[Wednesday 2025-02-12 18:00]

அறுவை சிகிச்சைக்கு பின்பு பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படுவதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அறுவை சிகிச்சைக்கு பின்பு பெண்களுக்கு சில உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் அறுவை சிகிச்சைக்கு பின்பு 5 முதல் 10 ஆண்டுகள் கழித்து இடுப்பு வலி ஏற்படும். மேலும் இதன் காரணமாக இடுப்பு எலும்பு மற்றும் குருத்தெலும்புகளில் தேய்மானமும் ஏற்படும். அதிக உடல்எடை, கடுமையான உடல் உழைப்பு, வயதுக்கு அதிகமான உடற்பயிற்சி இவையும் இடுப்பு வலிக்கு காரணமாக இருக்கும்.



புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் காலிஃப்ளவர் குருமா!
[Tuesday 2025-02-11 19:00]

காலிஃப்ளவரரில் ஆண்டி ஆக்ஸிடன்கள் செறிந்து காணப்படுகின்றது. இதில் வைட்டமின் சி, மாங்கனீஸ் உட்பட பல்வேறு சத்துக்களும் , பீட்டா கரோட்டீன் போன்ற வேதிப்பொருட்களும் கொண்ட சத்தான உணவாகும். இதில் அல்லிசின் அதிகமாக இருப்பதால், இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதம் மற்றும் பல இதய கோளாறுகளில் இருந்து பாதுகாப்பு கொடுக்கின்றது. காலிஃப்ளவர் மன அழுத்தம், இதய நோய்களை குணமாக்கும். புற்றுநோய் செல்களையும் கட்டுப்படுத்துகிறது. காலிஃப்ளவரில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா உள்ளது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொத்தமல்லி துவையல்!
[Monday 2025-02-10 18:00]

வைச சமையலாக இருந்தாலும் சரி அசைவ சமையலாக இருந்தாலும் சரி அதில் கொத்தமல்லி முக்கிய இடம் வகிக்கின்றது.இதற்கு முக்கிய காரணம் அதன் தனித்துவமான மணமும் சுவையும் தான். அன்றாட உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் கொத்தமல்லியில் ஏராளமான மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துக்களும் செறிந்து காணப்படுகின்றது. இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, நார்ச்சத்து, இரும்புச் சத்து, மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் கே, பாஸ்பரஸ் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கொத்தமல்லி இலையில் காணப்படுகின்றது.



இடுப்பு வரை அடர்த்தியான கருமையான கூந்தல் வேண்டுமா?
[Sunday 2025-02-09 18:00]

பொதுவாக எல்லோருக்கும் முடி கொட்டும் பிரச்சனை அதிகமாக இருக்கின்றது. தலைமுடி நீளமாக இல்லாவிட்டாலும் அதை அடர்த்தியாக வைத்திருப்பது அவசியம். இதில் சிலர் தலைமுடியை அடர்த்தியாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கு நாம் கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தியால் நல்ல பலன் கிடைக்கும்.



உலகிலேயே மிகவும் ஆபத்தான கொடிய மரங்கள்!
[Friday 2025-02-07 18:00]

மனித வாழ்க்கையில் மக்கியம் பெறும் மரங்களில் உலகிலேயே மிகவும் ஆபத்தான மரங்களும் இருக்கின்றன. அவை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். மஞ்சினீல் மரம் இந்த ஆப்பிள் போலவும் இருக்கும், ஆனால் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது.மஞ்சினீல் மரம் கரீபியன் கடற்கரைகளில் காணப்படுகின்றது. இது புளோரிடா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ போன்ற பகுதிகளில் காணப்படும். இந்த மரத்தின் பழங்கள் மரணத்தின் சிறிய ஆப்பிள் - என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது .



நடைபயிற்சியின் போது தண்ணீர் பருகலாமா?
[Thursday 2025-02-06 19:00]

நடைபயிற்சி செய்யும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தண்ணீர் மனிதர்கள் உயிர்வாழ மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. உடம்பில் வெப்பநிலையை சீராக வைப்பதற்கும், ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த சரியான அளவில் தண்ணீர் அருந்துவது மிகவும் மேலும் உடம்பில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதற்கும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், எடையைக் குறைக்கவும் செய்கின்றது.



ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கும் பன்னீர் முட்டை இட்லி!
[Wednesday 2025-02-05 18:00]

பொதுவாக ஆண்களுக்கும் சரி , பெண்களுக்கும் சரி உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். ஆனால் எத்தனை பேர் அதனை ஆரோக்கியமான முறையில் செய்ய நினைக்கின்றார்கள் என்பது கேள்விக்குறியே. ஜிம்மிற்கு செல்பவர்களாக இருந்தாலும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை தான் காலை வேளையில் சாப்பிட வேண்டும். அது எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அப்படி ஆரோக்கியமான முறையில் உடல் எடையை விரைவில் குறைக்க உதவும் பன்னீர் முட்டை இட்லியை அசத்தல் சுவையில் எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



பல பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் கருப்பு கொண்டைக் கடலை குழம்பு!
[Tuesday 2025-02-04 18:00]

கருப்பு கொண்டைக்கடலையில் அதிகளவான புரோட்டீன் காணப்படுகிறது. இதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் பெரும் வங்கு வகிக்கின்றது. கருப்பு கொண்டைக்கடலையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாத்து அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகின்றது. அதில் காணப்படும் புரோட்டின் செறிவு காரணமாக உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகின்றது.



தேயிலை கெட்டுப்போகும்னு உங்களுக்கு தெரியுமா?
[Monday 2025-02-03 18:00]

நம்மில் பெரும்பாலான நபர்கள் தேநீர் போடுவதற்கு பயன்படுத்தும் தேயிலை காலாவதியாகி கெட்டுப் போய்விட்டதை நாம் எவ்வாறு கண்டறியலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்களின் புதிய நாளின் முதல் தெரிவாக தேநீர் இருக்கின்றது. தேநீர் அருந்துவது புத்துணர்ச்சியாக காணப்படுவதாக கூறுகின்றனர்.



உச்சி முதல் பாதம் வரை ஆராக்கியம் தரும் பாகற்காய்!
[Sunday 2025-02-02 17:00]

பாகற்காயில் இருக்கும் கசப்பு சுவை காரணமாக அதனை பலரும் உணவில் இருந்து ஒதுக்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் பாகற்காய் சாப்பிடுவதால் சருமம் முதல் தலைமுடி வரையிலான ஒட்டு மொத்த உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கிறது. பாகற்காயை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. இது போன்று ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் பாகற்காயில் உள்ளது.


Latika-Gold-House-2025
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா