Untitled Document
March 14, 2025 [GMT]
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆயுர்வேத மருத்துவம்!
[Wednesday 2025-02-26 18:00]

பண்டைய காலம் முதல் இருந்துவரும் ஆயுர்வேத சிகிச்சை குறித்து முழுமையாக இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உடல் மற்றும் மனம் இரண்டில் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டது தான் இந்த ஆயுர்வேத மருத்துவ முறையாகும். பண்டைய காலம் முதலே இருந்து வரும் இந்த மருத்துவமானது, 5000 ஆண்டுகளுக்கு மேலாகவே நடைமுறையில் இருந்து வருகின்றது. ஆயுர்வேதம் என்பது சமஸ்கிருத மொழி. இது வாழ்க்கையின் அறிவு என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆயுர்வேதம் பொறுத்த வரை ஆரோக்கியம் என்பது உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலை என்று சொல்லலாம்.

பண்டைய காலம் முதல் இருந்துவரும் ஆயுர்வேத சிகிச்சை குறித்து முழுமையாக இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உடல் மற்றும் மனம் இரண்டில் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டது தான் இந்த ஆயுர்வேத மருத்துவ முறையாகும். பண்டைய காலம் முதலே இருந்து வரும் இந்த மருத்துவமானது, 5000 ஆண்டுகளுக்கு மேலாகவே நடைமுறையில் இருந்து வருகின்றது. ஆயுர்வேதம் என்பது சமஸ்கிருத மொழி. இது வாழ்க்கையின் அறிவு என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆயுர்வேதம் பொறுத்த வரை ஆரோக்கியம் என்பது உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலை என்று சொல்லலாம்.

  

ஆயுர்வேத மருத்துவ முறை குறித்த விழிப்புணர்வு இருந்தாலே மக்கள் ஆயுர்வேத மருத்துவத்தை நாடி வருவார்கள் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவ நிபுணர்கள். அதாவது ஆயுர்வேதத்தின் குறிக்கோள் என்பது நோய்களை எதிர்த்து போராவது இல்லை. நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும்.

அதாவது நோய் வெளிப்படுத்துபவர்களுக் ஆரோக்கியத்தினை மீட்டெடுப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவ முறை தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளிலிருந்து வேறுபடுகிறது. இது அறிகுறிகளை காட்டிலும் நோயின் மூல காரணத்தை அறிந்து தீர்வளிக்க உதவுகிறது.

ஆயுர்வேத மருத்துவம் என்பம் ஒவ்வொரு நபர்களின் உடல்வகையைக் கவனித்து அளிக்கப்படும் சிகிச்சை ஆகும். அதாவது ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு விதமான குணநலன்களை கொண்ட உடல் வகையைப் பெற்றிருப்பார்கள்.

காற்று, நெருப்பு, நீர், பூமி மற்றும் ஆகாயம் என ஐந்து அடிப்படை கூறுகள் கொண்டதாக மனிதர்களின் உடல் முழுவதும் பிரபஞ்சத்தை ஒத்திருப்பதாக ஆயுர்வேதம் பார்க்கிறது.

இந்த அடிப்படை கூறுகளை கொண்டு மனிதர்களில் மூன்று தோஷங்கள் அல்லது ஆற்றல்களாக குறிக்கப்படுகின்றன. அவை வாதம், பித்தம், கபம் என்று கூறப்படுகின்றது.

இதில் எதாவது ஒரு தோஷங்கள் உடலில் இருக்க வேண்டிய அளவை விட அதிகமாக இருந்தால் நமது உடல் சமநிலையை இழக்கின்றது.

நமது உடல் ஆரோக்கியம் மற்றும் சீரான வாழ்க்கை முறை இந்த மூன்று திரிதோஷங்களின் சமநிலையை பொறுத்து அமையும்.

இதில் ஒரு தோஷத்தை நமது உடல் அதிகமாக கொண்டிருந்தால், வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்து வழிகாட்டுதல் கொண்டு ஆயுர்வேத சிகிச்சை பரிந்துரைக்கின்றது.

இதில் ஒன்று அல்லது இரண்டின் ஆதிக்கமே மனிதர்களின் உடல் செயல்பாடுகளைத் தீர்மானிக்கின்றது.

அதாவது இரண்டு நபர்களுக்கு நோயின் வெளிப்புற அறிகுறிகள் ஒரே மாதிரியாக தோன்றினாலும், அவர்களின் ஆற்றல் அமைப்புகள் வித்தியாசமானதாகவே இருக்கும். அப்பொது சிகிச்சை முறைகளும் வேறுபடும்.

ஒருவருக்கு உடலில் இந்த தோஷ வகை அதிகமாக உள்ளது என்று தீர்மானிக்கப்பட்டாலும் தோஷங்களின் ஏற்ற இறக்கம் உடலில் மாறுகின்றன. தோஷ ஆதிக்கம் என்பது வயது, பகல், இரவு, பருவம் போன்றவற்றுடன் மாறுகிறது.

அக்னி என்பது நமது செரிமான மண்டலத்தை குறிக்கும். உள் மற்றும் வெளிப்புறங்களுக்கு இடையில் அக்னி உணவை உடல் திசு மற்றும் கழிவுகளாக மாற்றுகிறது. இது உணவில் இருக்கும் சத்துக்களை புரிந்து கழிவுகளை வெளியேற்றும் வரை உதவுகிறது.

உடலில் உட்புறம் மற்றும் வெளிப்புற அழுத்தங்கள் காரணமாக வெளிப்படும் நச்சுகளை உடல் ஜீரணிக்க ஆயுர்வேதம் படி அக்னி உடலை தூண்டுகிறது. இது உடல் மற்றும் மனநிலையின் உகந்த செயல்பாட்டை உறுதி செய்கிறது.

மூன்று அடிப்படை ஆற்றல்கள் - ரஜஸ், சத்வா மற்றும் தாமஸ்

பஞ்ச மகா பூதங்கள் - ஆகாயம், வாயு, அக்னி, நீர் மற்றும் பூமி போன்றவை ஐந்து அடிப்படை கூறுகள் ஆகும்.

திரி தோஷங்கள்- என்பது உடலில் வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவையாகும்.

சப்ததாதுஸ் - இது உடல் திசுக்களின் குறிப்பு ஆகும். ரச ( திரவம்) ரக்த (இரத்தம்) மாமிசம், மேதா -(கொழுப்பு) , அஸ்தி, சுக்கிலம்.

திரேயா தோஷா அக்னி - செரிமான தீக்களின் பதின்மூன்று வகைகள் ஜதாரக்னி ,சப்ததத்வாக்னி மற்றும் பஞ்சபுதக்கனி

திரிமாலாஸ் - மூன்று வகையான உடல் கழிவுகள் பூரிசா ( மலம்), முத்ரா (சிறுநீர்), மற்றும் ஸ்வேதா (வியர்வை)

ஆயுர்வேத சிகிச்சையின் எட்டு கிளைகள்

உள் மருத்துவம்

குழந்தை மருத்துவம்

உளவியல்

காது, மூக்கு, தொண்டை

அறுவை சிகிச்சை _ இன்று நடைமுறையில் இல்லை

முதியோர் மற்றும் புத்துணர்ச்சி

பாலுணர்வு சிகிச்சை மற்றும் கருவுறுதல் மற்றும் ஆலோசனை

ஆயுர்வேதத்தின் மிக முக்கியமான சிகிச்சை பஞ்சகர்மா. இது உடலை சுத்திகரித்து சக்தியை அதிகரிக்க செய்யும் சிகிச்சை ஆகும். பயனுள்ள சிகிச்சையான உள் சுத்திகரிப்பு பணியில் ஐந்து படிகளை கொண்டது.

இவை ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும் செய்கின்றது. உடலில் நச்சுக்களை வெளியேற்றி உடலின் உள் அமைப்புகளுக்கு புத்துயிர் அளிக்கவும், நோய்களின் அமைப்பிலிருந்து பாதுகாக்கவும் செய்கின்றது.

ஆயுர்வேதத்தில் நோயை அறிதலுக்கான முறைகள் மிகவும் எளிமையானதாகும். நோயை பற்றிய புரிதல் மனதுக்கும் உடலுக்கும் இடையிலான தொடர்புகளை பிரதிபலிப்பதுடன், நேர்மறையான ஆரோக்கியம் மற்றும் நோய் தடுப்பதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

சுகாதாரத்தை மேம்படுத்துதல், ஆரோக்கியமான உணவு ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியமாகும். அதாவது ஆயுர்வேதம் என்பது இயற்கையின் இயற்கையின் சுற்றுச்சூழல் அமைப்புடன் பொருந்தி இருக்கும் மருத்துவம் ஆகும்.

தனிநபரின் ஆன்மாவை அமைதிபடுத்தும் வகையில் ஆயுர்வேத முக்கியத்துவம் அளிக்கிறது.

மருந்துகளின் தேர்வு மற்றும் அளவு தோஷம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளை பொறுத்து சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

  
   Bookmark and Share Seithy.com



நீரின் மூலம் பரவும் நோய்கள்!
[Friday 2025-03-14 17:00]

பொதுவாக இந்த உலகம் நீர் இன்று அமையாது என்று தான் கூற வேண்டும். நீர் இல்லாமல் எந்தவொரு உயிரினமும் வாழமுடியாத ஒன்றாகும். அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய உந்து சக்தியாக இருக்கும் தண்ணீரை சுகாதாரமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். அசுத்தமான தண்ணீரை நாம் பருகுவதால் பல நோய்கள் மிகவும் எளிதாக தாக்குகின்றது. டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் நீரின் மூலம் மிகவும் எளிதாக பரவுகின்றது.



காலை உணவிற்கு வரகு அரிசி கீரை அடை!
[Thursday 2025-03-13 19:00]

கால்சியம் மற்றும் நார்ச்சத்து அடங்கிய வரகு அரிசி கீரை அடை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். பொதுவாக காலை உணவு என்பது ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியமாகும். அன்றைய நாளின் வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பதற்கான ஆற்றலை காலை உணவே அளிக்கின்றது. அவ்வாறு நாம் காலையில் எடுத்துக் கொள்ளும் உணவானது மிகவும் ஆரோக்கியம் நிறைந்ததாகவே இருக்க வேண்டும். அந்த வகையில் வரகு அரிசி கீரை அடை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



எங்கும் கிடைக்காத சுவையில் இலங்கையில் செய்யப்படும் கோழி கறி!
[Tuesday 2025-03-11 19:00]

பொதுவாக உலகில் எங்கும் கோழியை வைத்து பல ரெசிபிகளை செய்வார்கள். ஆனால் ஒரு சில நாடுகளில் சுவை வித்தியாசமாக செய்யப்படும். அதை அந்த இடத்திற்கு சென்று ருசிப்பதை விட இருக்கும் இடத்தில் இருந்து ரெசிபி தெரிந்துகொண்டு செய்யலாம். இந்த பதிவில் இலங்கையில் செய்யப்படும் பாரம்பரிய கோறிகறியின் செய்முறையை பார்க்கலாம்.



காய்ந்த நெஞ்சு சளியை அடியோடு வெளியேற்றும் தக்காளி மிளகு ரசம்!
[Sunday 2025-03-09 17:00]

பருவ நிலையில் மாற்றம் வரும் போது தான் நாம் எல்லோரும் பாரம்பரிய உணவின் பக்கம் செல்வோம். இந்த பாரம்பரிய உணவுகளால் மட்டும் தான் உடலில் உள்ள நோய்களை அப்படியே விரட்ட முடியும். பொதுவாக ரசம் என்றால் அதில் பல மூலிகை பொருட்கள் சேர்த்து செய்வார்கள். இதை சாப்பிடவோ அல்லது குடித்தாலோ உடலில் இருக்கும் சளியை அப்படியே வெளியேற்றும். இந்த பதிவில் நாம் இலங்கையின் பாரம்பரியத்தில் செய்யப்படும் காரசாரமான தக்காளி மிளகு ரசத்தின் செய்முறையை பார்க்கலாம்.



ஆளி விதைகளின் அதிசய ஆரோக்கியம்!
[Friday 2025-03-07 18:00]

ஆளி விதைகள் நார்ச்சத்து, ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். இதை உணவாக சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலில் பல பிரச்சனைகளுக்கு இது மருந்தாகும். இந்த ஆளிவிதைகளை உணவில் எப்படி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



என்றும் இளமையாகவே இருக்க வேண்டுமா?
[Thursday 2025-03-06 19:00]

பொதுவாகவே எல்லா பெண்களும் முகத்தை எப்போதும் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அதனை சீர்குலைக்கும் வகையில் சில பெண்களுக்கு முகத்தில் எண்ணெய் தன்மை அதிகமாக இருக்கும். இதனால் என்னதான் நல்ல மேக்கப் பொருட்களை பயன்படுத்தினாலும் குறுகிய நேரத்திலேயே முகம் சோர்வாகவும் பொலிவிழந்தும் காணப்படும். இந்த பிரச்சினைக்கு பணத்தை அதிகமாக செலவு செய்யாமல் வீட்டில் இருக்கும் ஒரு எளிமையான பொருளை கொண்டு எவ்வாறு சிறந்த தீர்வை பெறலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



கேரள பெண்களின் கூந்தல் ரகசியம்!
[Wednesday 2025-03-05 18:00]

ஒவ்வொரு பெண்ணும் நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தலைப் பெற விரும்புவது ஒருபோதும் தவறில்லை. சூழல் மாசுபாடு மோசமான உணவுப் பழக்கம், மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான பொருட்களைப் பயன்படுத்து காரணமாக முடி மிகவும் பலவீனமடைந்து வேகமாக உதிரத் தொடங்குகிறது. இது தவிர ஒருவருக்கு தொடர்ச்சியாக முடி உதிர்வு ஏற்பட்டால் அதே இடத்தில் முடி வளர்ச்சி நின்றுவிடும். இதற்கு பெண்கள் ஏன் ஆண்கள் கூட பல்வேறு வகையான முடி எண்ணெய்கள், மற்றும் ஷாம்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள்.



நோன்பு திறக்க நாவூரும் சுவையில் வட்டிலப்பம்!
[Tuesday 2025-03-04 20:00]

ரமலான் மாதத்தில் நோன்பு திறக்க குழந்தைகள் முதல் பொரிவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வட்டிலப்பத்தை இலங்கையர் பாணியில் வெறும் 3 பொருட்களை கொண்டு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



புற்றுநோய் முதல் இதய நோய்கள் வரை தீர்வு கொடுக்கும் மஞ்சள் பால்!
[Monday 2025-03-03 18:00]

குர்குமின் (curcumin) எனப்படும் ரசாயன கலவையை கொண்டிருப்பதால் மஞ்சள் மிகவும் மருத்துவ குணம் கொண்டதாகவும்,உடல் ஆரோக்கியத்திற்கு பயனுள்ள பொருளாகவும் பார்க்கப்படுகின்றது. மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றது. இதன் காரணமாக மஞ்சள் பால் சளி மற்றும் இருமலுக்கு எதிரான வீட்டு மருந்தாக தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. உண்மையில், நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பண்புகளின் காரணமாக தற்காலதத்தில் மஞ்சள் பால் உளகளாவிய ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.



காய்கறியே இல்லாத காரக்குழம்பு!
[Sunday 2025-03-02 16:00]

பொதுவாக விடுகளில் மதிய உணவிற்கு ஒரு அசத்தலான கறிவகை செய்தெ ஆக வேண்டும். இதில் முக்கிய இடம்பிடிப்பது புளிக்குழம்பு அல்லது சாம்பார் தான். ஆனால் காரக்குழம்பு பெரியளவில் யாரும் செய்வதில்லை. காரக்குழம்பு என்றால் அதில் காய்கறி சேர்த்து தான் செய்வது தான் வழக்கம். ஆனால் வெந்தயத்தை வைத்து மட்டும் காரக்குழம்பு செய்ய நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இந்த பதிவில் வெந்தய காரக்குழம்பு எப்படி எசய்யலாம் என்பதை தான் பார்க்கப்போகின்றோம். இதை சூடாட சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும். இதற்கு வெந்தய கார குழம்பு என்று பெயர். வாங்க செய்முறை பார்க்கலாம்.



இருதய பாதிப்பு உள்ளவர்கள் கீரை எடுத்துக் கொள்ளலாமா?
[Saturday 2025-03-01 16:00]

இருதய பாதிப்பு உள்ளவர்கள் தங்களது உணவில் கீரை எடுத்துக் கொள்ளலாமா என்பதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கீரை சாப்பிடக்கூடாது என்ற கருத்து மக்களிடையே இருந்து வரும் நிலையில், இதற்கு மருத்துவர் கூறும் பதிலை தற்போது தெரிந்து கொள்வோம்.



கலப்படம் இல்லாத கருப்பட்டியை எப்படி கண்டுபிடிப்பது?
[Friday 2025-02-28 18:00]

கருப்பட்டி ஒரிஜினலா அல்லது கலப்படமா என்பதை எவ்வாறு கண்டறியலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனீரிலிருந்து கருப்பட்டி எடுக்கப்படுகின்றது. பதனீரை காய்ச்சுவதம் மூலம் கிடைக்கும் கருப்பட்டியை பனைவெல்லம், பானாட்டு, பனை அட்டு என்றும் அழைக்கப்படுகின்றது.



வால் மிளகு அதிகம் சேர்த்தால் இவ்வளவு பிரச்சனையா?
[Thursday 2025-02-27 18:00]

வால் மிளகு என்பது இருவித்திலை தாவரமாகும். மிளகின் அடிப்பகுதியில் வால் போன்ற நீட்சியை கொண்டிருப்பதால் வால் மிளகு என அழைக்கப்படுகிறது. வால்மிளகு மரத்தில் படர்ந்து வளரும் பருவக் கொடித் தாவரம். இந்த தாவரம் ஜாவா, தாய்லாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவு போன்ற இடங்களில் பயிர் செய்யப்படுகின்றன. இது காரமும், சற்று கசப்பு சுவை கொண்டதாகவும் இருக்கிறது.



திருமண மோதிரத்தை எந்த கையில் அணிய வேண்டும்?
[Monday 2025-02-24 18:00]

திருமண நிகழ்வின் நிச்சயதார்த்தத்தின் போது அணியும் எந்த கையில் அணிய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். திருமணம் மற்றும் நிச்சயதார்த்த மோதிர விடயத்தில் அதிகமான குழப்பங்கள் எழுவதுண்டு. சிலர் பெண்கள் வலது கையில் தான் போட வேண்டும் என்றும் சிலர் இடது கையில் போட வேண்டும் என்று கூறுவார்கள். உண்மையில் திருமண மோதிரத்தினை எந்த கையில் அணிந்தால் அதிக நன்மைகளைப் பெறலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



முக அழகை கெடுக்கும் பழக்கங்கள்!
[Sunday 2025-02-23 17:00]

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி முகம் அழகாக வைத்து கொள்ள அதிகமான ஆர்வம் காட்டுவார்கள். ஏனெனின் முகம் தான் நாம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதனை காட்டும் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இரவு வேளைகளில் ஒரு சில தவறுகளை தொடர்ந்து செய்து வந்தால் நாம் என்ன தான் முயற்சி செய்தாலும் முகம் அழகாக இருக்காது என சரும மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.



ஆண்கள் தினமும் ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிட்டால் என்ன நடக்கும்?
[Friday 2025-02-21 18:00]

தற்போது உலர் திராட்சை நிறைய பேரின் விருப்பமான ஸ்நாக்ஸாக பார்க்கப்படுகின்றது. இந்த உலர் திராட்சையில் இரும்புச்சத்து, பொட்டாசியம், காப்பர், வைட்டமின் பி6, மாங்கனீசு போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. இவ்வளவு சத்துக்கள் கொண்ட உலர் திராட்சையை பாயாசம், கேசரி, சர்க்கரை பொங்கல் போன்ற உணவுகள் தயாரிக்கும் பொழுது சேர்ப்பார்கள். ஆனால் உலர் திராட்சையை இப்படி சாப்பிடுவதிலும் பார்க்க தனியாக ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.



ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் வரகரிசி உப்புமா!
[Thursday 2025-02-20 19:00]

சிறு தானிய வகையை சேர்ந்த வரகு அரிசியில் மாவுச்சத்து குறைவாக இருக்கும் என்பதால் அரிசி உணவுக்கு மாற்றாக எடுத்துகொள்ளவதற்கு இது சிறந்த தெரிவாகும். இந்த அரிசியில் கொழுப்பு அதிகம் இல்லை. இதில் இருக்கும் கொழுப்பும் நல்ல கொழுப்பு என்பதால் இதயத்துக்கு நன்மை செய்யகூடியது. மூளை செல்கள் சுறுசுறுப்பாக செயல்படவும் தசைகள், எலும்பு மஜ்ஜை, பல் எனாமல் போன்றவற்றை காக்கவும் இந்த வரகரிசியில் செறிந்துள்ள அமினோ அமிலங்களின் பெரிதும் துணைப்புரிகின்றது.



தொங்கும் தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா?
[Wednesday 2025-02-19 18:00]

பொதுவாகவே ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தற்காலத்தில் அதிகரித்த வேலைபளு, துரித உணவுகளின் அதிகமாக நுகர்வு, போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிப்பதுடன் பெரும்பாலானவர்கள் தொப்பை பிரச்சினையால் அவதிப்டுகின்றாகள்.



வாழை இலையில் சாப்பிட்டால் உடலில் நடக்கும் அற்புதங்கள்!
[Tuesday 2025-02-18 16:00]

பொதுவாகவே நமது முன்னோர்கள் செய்த ஒவ்வொரு விடயத்துக்கு பின்னும் நிச்சயம் வியக்க வைக்கும் நன்மைகள் நிறைந்திருக்கும் என்பது இன்று அறிவியல் ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழரின் விருந்தோம்பலில் வாழை இலை பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக காணப்பட்டுள்ளது. அதன் பின்னால் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தொடர்பில் முழுமையான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.



இரும்பு கடாயில் எந்த உணவுகளை சமைக்கக்கூடாது தெரியுமா?
[Monday 2025-02-17 19:00]

இரும்பு பாத்திரங்களில் என்னென்ன பொருட்களை சமைக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான வீடுகளில் நான்ஸ்டிக் பாத்திரங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பதினால் புற்றுநோய் அபாயம் ஏற்படுவதுடன், உடலுக்கு பல தீமைகளையும் கொடுக்கின்றது.


Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asayan-Salon-2022-seithy
Latika-Gold-House-2025
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா