Untitled Document
March 14, 2025 [GMT]
நீரின் மூலம் பரவும் நோய்கள்!
[Friday 2025-03-14 17:00]

பொதுவாக இந்த உலகம் நீர் இன்று அமையாது என்று தான் கூற வேண்டும். நீர் இல்லாமல் எந்தவொரு உயிரினமும் வாழமுடியாத ஒன்றாகும். அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய உந்து சக்தியாக இருக்கும் தண்ணீரை சுகாதாரமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். அசுத்தமான தண்ணீரை நாம் பருகுவதால் பல நோய்கள் மிகவும் எளிதாக தாக்குகின்றது. டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் நீரின் மூலம் மிகவும் எளிதாக பரவுகின்றது.

பொதுவாக இந்த உலகம் நீர் இன்று அமையாது என்று தான் கூற வேண்டும். நீர் இல்லாமல் எந்தவொரு உயிரினமும் வாழமுடியாத ஒன்றாகும். அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய உந்து சக்தியாக இருக்கும் தண்ணீரை சுகாதாரமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். அசுத்தமான தண்ணீரை நாம் பருகுவதால் பல நோய்கள் மிகவும் எளிதாக தாக்குகின்றது. டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் நீரின் மூலம் மிகவும் எளிதாக பரவுகின்றது.

  

நாம் குடிப்பதற்கும், சமையலுக்கும் பயன்படுத்தும் தண்ணீர் அசுத்தமாக இருந்தால் எளிதில் நோய்தொற்றுக்கு ஆளாகிவிடுவோம். அசுத்தமான தண்ணீரை குடிப்பதாலும், சமைப்பதாலும் தொற்று நோயின் தாக்கம் ஏற்படும். இத்தகைய தொற்று வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளால் ஏற்படலாம். இத்தகைய அசுத்தமான மூலங்களுடன் தொடர்புகொள்வது பல்வேறு நீர்வழி நோய்களை ஏற்படுத்துகிறது மற்றும் பரவுகிறது.

நீர்வழி நோய்கள்

நீர் வழியாக பல்வேறு நோய்கள் உள்ளது. அதாவது நோயை ஏற்படுத்தும் நோய்க்கிருமியைப் பொறுத்து மாறுபடும். ஆதலால் நாம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டும்.

டைபாய்டு

டைபாய்டு அல்லது டைபாய்டு காய்ச்சல் என்பது அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரின் மூலம் பரவும் பொதுவான நீர்வழி நோய்களில் ஒன்றாகும்.

சுத்தமான மற்றும் சுகாதாரமான தண்ணீர் கிடைக்காத இடங்களில் வசிக்கும் மக்கள் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.

டைபாய்டு மிகவும் தொற்றுநோயானது மற்றும் பாதிக்கப்பட்ட நபரால் அசுத்தமான தண்ணீருடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவலாக பரவுகிறது.

ஆனால் சுகாதார நடவடிக்கையினை எடுப்பதன் மூலமும், தேவையான தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதன் மூலம் இந்நோயிலிருந்து தப்பிக்கலாம்.

காலரா

நீரின் மூலம் பரவும் நோய்களில் காலராவும் ஒன்றாகும். இது பொதுவாக கிராமப்புற சமூகங்களில் ஏற்படுகிறது.

அதாவது கிராமப் புறங்களில் மக்கள் சரியான சுகாதாரத்தினை மேற்கொள்ளாததால் அதிகமாக வருகின்றது. தீங்கு விளைவிக்கும் இந்த நோய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காவிட்டால் மரணத்தையும் ஏற்படுத்தும்.

காலரா மாசுபட்ட தண்ணீரால் பரவுவதுடன், இதனால் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்புக்கு காரணமாகிறது, குறிப்பாக மோசமான சுகாதாரம் உள்ள பகுதிகளில் மற்றும் திறந்த நீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீரைப் பயன்படுத்துவதாலும் ஏற்படுகின்றது.

அதாவது சுத்தமாக இருத்தல், கைகளை நன்றாக கழுவுதல், குளித்தல் போன்றவற்றினை சரியாக செய்வதுடன், சுத்தமான தண்ணீரை பருகுவதாலும் இந்நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால் இந்நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் சில நாட்களுக்குள் அல்லது சில மணி நேரத்தில் கூட மரணத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

வயிற்றுப்போக்கு

நீர் வழியாக பரவும் மற்றொரு நோய் வயிற்றுப்போக்காகும். இவை ஷிகெல்லா பாக்டீரியா அல்லது அமீபாவால் ஏற்படுகின்றது.

அதாவது அசுத்தமான உணவு மற்றும் பானங்கள் மூலமாகவும், சரியான சுகாதாரம் இல்லாத இடத்தின் மூலமாகவும் பரவுகின்றது.

வயிற்றுப்போக்கு தொற்று குடல் அழற்சி மற்றும் வயிற்றுப்போக்கு இரத்தத்துடன் கலந்து, கடுமையான நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும் நோய்க்கிருமிகள் பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணிகளால் மாசுபடுத்தப்பட்ட உணவு மற்றும் நீரால் அல்லது மனித மலத்துடன் நேரடியாக தொடர்புகொள்வதன் மூலம் பரவுகிறது.

ஹெபடைடிஸ் ஏ

ஹெபடைடிஸ் என்பது கல்லீரல் நோயாகும், இது அதன் அடிப்படை காரணத்தைப் பொறுத்து வெவ்வேறு மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.

ஹெபடைடிஸ், குறிப்பாக ஹெபடைடிஸ் ஏ நீர் மூலம் பரவும் நோய், அசுத்தமான உணவு மற்றும் பானங்களை உட்கொள்வதன் மூலமோ அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக இருப்பதன் மூலமோ பரவுகின்றது.

முறையற்ற சுகாதாரம் இல்லாத இடங்களில் இந்த நோய் பெரும்பாலும் பரவுகிறது. ஹெபடைடிஸ் ஏ நோய்த்தொற்று சில வாரங்களில் சரியாகிவிடும்,

ஆனால் அந்த நிலை நீண்ட காலம் நீடிக்கலாம் அல்லது காலப்போக்கில் மோசமடையவும் செய்யலாம்.

ஜியார்டியா

நீர் மூலம் பரவும் நோய்களில் மிகவும் அரிதாக இருப்பது ஜியாரடியா என்பதாகும். இவை அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவின் மூலமாக பரவுகின்றது.

ஜியார்டியா என்பது ஜியார்டியா ஒட்டுண்ணியால் ஏற்படும் செரிமான கோளாறு ஆகும். சில வாரங்களில் தொற்று தானாகவே போய்விடும் என்றாலும், குடலில் ஏற்படும் விளைவுகள் நீண்ட காலத்திற்கு கூட நீடிக்குமாம்.

காலராவைப் போலவே, குளங்கள் மற்றும் ஓடைகள் போன்ற மாசுபட்ட திறந்த நீர் நிலைகள் மூலமாக பரவுகின்றது. நகரங்களில் நீச்சல் குளங்கள் போன்றவற்றிலிருந்து பரவுகின்றது.

மேலே கூறப்பட்ட நோய்கள் மட்டுமின்றி, ஒட்டுண்ணி, நோய்க்கிருமியால் நீர் வழி நோய்களாக அமீபிக் வயிற்றுப்போக்கு, அமீபியாசிஸ் மற்றும் ஷிகெல்லோசிஸ் ஆகியவையும் காணப்படுகின்றது.

காரணங்கள் என்ன?

நீர்வழி நோய்கள் பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற நோய்க்கிருமிகளால் ஏற்படுகின்றன.

மாசுபட்ட நீர் நிலைகள் அல்லது மலம் ஆகியவற்றுடன் நேரடி தொடர்பு, உணவு மற்றும் பானங்களைக் கையாளும் போது சரியான சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்காததால் பரவுகின்றன.

மேலும் பாதிக்கப்பட்ட மேற்பரப்புகளைத் தொடுவதன் மூலமும், பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாலும் பரவுகின்றது.

முறையான சுகாதாரத்தை கடைபிடிக்காததே தண்ணீரால் பரவும் நோய்கள் பரவுவதற்கு முக்கிய காரணம்.

நோய்களின் அறிகுறிகள்

டைபாய்டு: தசை வலி மற்றும் பலவீனத்துடன் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி

காலரா: நீரிழப்புக்கு வழிவகுக்கும், வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி, கடுமையான தசைப்பிடிப்பு, நிலையான சோர்வு

வயிற்றுக் கடுப்பு: காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி, மலம் வழியாக இரத்தம் வெளியேறும், வயிற்றுப்போக்கு, கடுமையான நீரிழப்பு, வயிற்று தசைப்பிடிப்பு மற்றும் வலி

ஹெபடைடிஸ் ஏ: மஞ்சள் காமாலை, திடீரென அதிக காய்ச்சல், ஒழுங்கற்ற குடல் இயக்கங்கள், களைப்பு, வயிற்று வலி, பசியின்மை ,எடை இழப்பு

ஜியார்டியா: வயிற்றுப்போக்கு, வீக்கம், குமட்டல், தொடர்ந்து வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வலி, எடை இழப்பு

சிகிச்சை

நீரினால் பரவும் நோய்களுக்கு பொதுவாக சிகிச்சை என்னவெனில், வயிற்றுப் போக்கினால் இழந்த திரவங்களை, குளுக்கோஸ் வழியாக உடம்பில் செலுத்தில் நீரேற்றத்தினை உறுதி செய்வது.

பாக்டீரியா மற்றும் பிற நோய்க்கிருமிகளால் ஏற்படக்கூடிய நோய்களுக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.

போதுமான ஓய்வு எடுப்பதும் சோர்வைத் தவிர்ப்பதும் முக்கியம்.

நோய்கள் வராமல் எவ்வாறு தடுப்பது?

ஒவ்வொரு முறை சாப்பிடுவதற்கு முன்பு கைகளை சோப்பு போட்டு சுத்தமான தண்ணீரைக் கொண்டு கழுவ வேண்டும். சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.

வெளியில் இருந்து வாங்கிவரும் காய்கறிகள் மற்றும் பழங்களை சமைப்பதற்கு முன்பு நன்றாக கழுவ வேண்டும். முடிந்தால் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுவது சிறந்தது.

ஹெபடைடிஸ் மற்றும் டைபாய்டு போன்ற நோய்களை தடுப்பதற்கு சரியான நேரத்தில் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

குழாய்களிலிருந்து நேரடியாக வரும் தண்ணீரை குடிப்பதை தவிர்க்கவும். குறித்த தண்ணீரை நன்றாக காய்ச்சி ஆறவைத்து குடிப்பது சிறந்தது.

சமைக்கப்படாத காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவற்றிலும் தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் இருப்பதால் நேரடியாக உடம்பில் சென்று தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைப்பதுடன், சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்நோயிலிருந்து தப்பிக்கலாம்.

  
   Bookmark and Share Seithy.com



காலை உணவிற்கு வரகு அரிசி கீரை அடை!
[Thursday 2025-03-13 19:00]

கால்சியம் மற்றும் நார்ச்சத்து அடங்கிய வரகு அரிசி கீரை அடை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். பொதுவாக காலை உணவு என்பது ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியமாகும். அன்றைய நாளின் வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பதற்கான ஆற்றலை காலை உணவே அளிக்கின்றது. அவ்வாறு நாம் காலையில் எடுத்துக் கொள்ளும் உணவானது மிகவும் ஆரோக்கியம் நிறைந்ததாகவே இருக்க வேண்டும். அந்த வகையில் வரகு அரிசி கீரை அடை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



எங்கும் கிடைக்காத சுவையில் இலங்கையில் செய்யப்படும் கோழி கறி!
[Tuesday 2025-03-11 19:00]

பொதுவாக உலகில் எங்கும் கோழியை வைத்து பல ரெசிபிகளை செய்வார்கள். ஆனால் ஒரு சில நாடுகளில் சுவை வித்தியாசமாக செய்யப்படும். அதை அந்த இடத்திற்கு சென்று ருசிப்பதை விட இருக்கும் இடத்தில் இருந்து ரெசிபி தெரிந்துகொண்டு செய்யலாம். இந்த பதிவில் இலங்கையில் செய்யப்படும் பாரம்பரிய கோறிகறியின் செய்முறையை பார்க்கலாம்.



காய்ந்த நெஞ்சு சளியை அடியோடு வெளியேற்றும் தக்காளி மிளகு ரசம்!
[Sunday 2025-03-09 17:00]

பருவ நிலையில் மாற்றம் வரும் போது தான் நாம் எல்லோரும் பாரம்பரிய உணவின் பக்கம் செல்வோம். இந்த பாரம்பரிய உணவுகளால் மட்டும் தான் உடலில் உள்ள நோய்களை அப்படியே விரட்ட முடியும். பொதுவாக ரசம் என்றால் அதில் பல மூலிகை பொருட்கள் சேர்த்து செய்வார்கள். இதை சாப்பிடவோ அல்லது குடித்தாலோ உடலில் இருக்கும் சளியை அப்படியே வெளியேற்றும். இந்த பதிவில் நாம் இலங்கையின் பாரம்பரியத்தில் செய்யப்படும் காரசாரமான தக்காளி மிளகு ரசத்தின் செய்முறையை பார்க்கலாம்.



ஆளி விதைகளின் அதிசய ஆரோக்கியம்!
[Friday 2025-03-07 18:00]

ஆளி விதைகள் நார்ச்சத்து, ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். இதை உணவாக சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலில் பல பிரச்சனைகளுக்கு இது மருந்தாகும். இந்த ஆளிவிதைகளை உணவில் எப்படி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



என்றும் இளமையாகவே இருக்க வேண்டுமா?
[Thursday 2025-03-06 19:00]

பொதுவாகவே எல்லா பெண்களும் முகத்தை எப்போதும் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அதனை சீர்குலைக்கும் வகையில் சில பெண்களுக்கு முகத்தில் எண்ணெய் தன்மை அதிகமாக இருக்கும். இதனால் என்னதான் நல்ல மேக்கப் பொருட்களை பயன்படுத்தினாலும் குறுகிய நேரத்திலேயே முகம் சோர்வாகவும் பொலிவிழந்தும் காணப்படும். இந்த பிரச்சினைக்கு பணத்தை அதிகமாக செலவு செய்யாமல் வீட்டில் இருக்கும் ஒரு எளிமையான பொருளை கொண்டு எவ்வாறு சிறந்த தீர்வை பெறலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



கேரள பெண்களின் கூந்தல் ரகசியம்!
[Wednesday 2025-03-05 18:00]

ஒவ்வொரு பெண்ணும் நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தலைப் பெற விரும்புவது ஒருபோதும் தவறில்லை. சூழல் மாசுபாடு மோசமான உணவுப் பழக்கம், மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான பொருட்களைப் பயன்படுத்து காரணமாக முடி மிகவும் பலவீனமடைந்து வேகமாக உதிரத் தொடங்குகிறது. இது தவிர ஒருவருக்கு தொடர்ச்சியாக முடி உதிர்வு ஏற்பட்டால் அதே இடத்தில் முடி வளர்ச்சி நின்றுவிடும். இதற்கு பெண்கள் ஏன் ஆண்கள் கூட பல்வேறு வகையான முடி எண்ணெய்கள், மற்றும் ஷாம்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள்.



நோன்பு திறக்க நாவூரும் சுவையில் வட்டிலப்பம்!
[Tuesday 2025-03-04 20:00]

ரமலான் மாதத்தில் நோன்பு திறக்க குழந்தைகள் முதல் பொரிவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வட்டிலப்பத்தை இலங்கையர் பாணியில் வெறும் 3 பொருட்களை கொண்டு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



புற்றுநோய் முதல் இதய நோய்கள் வரை தீர்வு கொடுக்கும் மஞ்சள் பால்!
[Monday 2025-03-03 18:00]

குர்குமின் (curcumin) எனப்படும் ரசாயன கலவையை கொண்டிருப்பதால் மஞ்சள் மிகவும் மருத்துவ குணம் கொண்டதாகவும்,உடல் ஆரோக்கியத்திற்கு பயனுள்ள பொருளாகவும் பார்க்கப்படுகின்றது. மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றது. இதன் காரணமாக மஞ்சள் பால் சளி மற்றும் இருமலுக்கு எதிரான வீட்டு மருந்தாக தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. உண்மையில், நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பண்புகளின் காரணமாக தற்காலதத்தில் மஞ்சள் பால் உளகளாவிய ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.



காய்கறியே இல்லாத காரக்குழம்பு!
[Sunday 2025-03-02 16:00]

பொதுவாக விடுகளில் மதிய உணவிற்கு ஒரு அசத்தலான கறிவகை செய்தெ ஆக வேண்டும். இதில் முக்கிய இடம்பிடிப்பது புளிக்குழம்பு அல்லது சாம்பார் தான். ஆனால் காரக்குழம்பு பெரியளவில் யாரும் செய்வதில்லை. காரக்குழம்பு என்றால் அதில் காய்கறி சேர்த்து தான் செய்வது தான் வழக்கம். ஆனால் வெந்தயத்தை வைத்து மட்டும் காரக்குழம்பு செய்ய நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இந்த பதிவில் வெந்தய காரக்குழம்பு எப்படி எசய்யலாம் என்பதை தான் பார்க்கப்போகின்றோம். இதை சூடாட சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும். இதற்கு வெந்தய கார குழம்பு என்று பெயர். வாங்க செய்முறை பார்க்கலாம்.



இருதய பாதிப்பு உள்ளவர்கள் கீரை எடுத்துக் கொள்ளலாமா?
[Saturday 2025-03-01 16:00]

இருதய பாதிப்பு உள்ளவர்கள் தங்களது உணவில் கீரை எடுத்துக் கொள்ளலாமா என்பதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கீரை சாப்பிடக்கூடாது என்ற கருத்து மக்களிடையே இருந்து வரும் நிலையில், இதற்கு மருத்துவர் கூறும் பதிலை தற்போது தெரிந்து கொள்வோம்.



கலப்படம் இல்லாத கருப்பட்டியை எப்படி கண்டுபிடிப்பது?
[Friday 2025-02-28 18:00]

கருப்பட்டி ஒரிஜினலா அல்லது கலப்படமா என்பதை எவ்வாறு கண்டறியலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனீரிலிருந்து கருப்பட்டி எடுக்கப்படுகின்றது. பதனீரை காய்ச்சுவதம் மூலம் கிடைக்கும் கருப்பட்டியை பனைவெல்லம், பானாட்டு, பனை அட்டு என்றும் அழைக்கப்படுகின்றது.



வால் மிளகு அதிகம் சேர்த்தால் இவ்வளவு பிரச்சனையா?
[Thursday 2025-02-27 18:00]

வால் மிளகு என்பது இருவித்திலை தாவரமாகும். மிளகின் அடிப்பகுதியில் வால் போன்ற நீட்சியை கொண்டிருப்பதால் வால் மிளகு என அழைக்கப்படுகிறது. வால்மிளகு மரத்தில் படர்ந்து வளரும் பருவக் கொடித் தாவரம். இந்த தாவரம் ஜாவா, தாய்லாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவு போன்ற இடங்களில் பயிர் செய்யப்படுகின்றன. இது காரமும், சற்று கசப்பு சுவை கொண்டதாகவும் இருக்கிறது.



ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆயுர்வேத மருத்துவம்!
[Wednesday 2025-02-26 18:00]

பண்டைய காலம் முதல் இருந்துவரும் ஆயுர்வேத சிகிச்சை குறித்து முழுமையாக இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உடல் மற்றும் மனம் இரண்டில் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டது தான் இந்த ஆயுர்வேத மருத்துவ முறையாகும். பண்டைய காலம் முதலே இருந்து வரும் இந்த மருத்துவமானது, 5000 ஆண்டுகளுக்கு மேலாகவே நடைமுறையில் இருந்து வருகின்றது. ஆயுர்வேதம் என்பது சமஸ்கிருத மொழி. இது வாழ்க்கையின் அறிவு என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆயுர்வேதம் பொறுத்த வரை ஆரோக்கியம் என்பது உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலை என்று சொல்லலாம்.



திருமண மோதிரத்தை எந்த கையில் அணிய வேண்டும்?
[Monday 2025-02-24 18:00]

திருமண நிகழ்வின் நிச்சயதார்த்தத்தின் போது அணியும் எந்த கையில் அணிய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். திருமணம் மற்றும் நிச்சயதார்த்த மோதிர விடயத்தில் அதிகமான குழப்பங்கள் எழுவதுண்டு. சிலர் பெண்கள் வலது கையில் தான் போட வேண்டும் என்றும் சிலர் இடது கையில் போட வேண்டும் என்று கூறுவார்கள். உண்மையில் திருமண மோதிரத்தினை எந்த கையில் அணிந்தால் அதிக நன்மைகளைப் பெறலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



முக அழகை கெடுக்கும் பழக்கங்கள்!
[Sunday 2025-02-23 17:00]

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி முகம் அழகாக வைத்து கொள்ள அதிகமான ஆர்வம் காட்டுவார்கள். ஏனெனின் முகம் தான் நாம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதனை காட்டும் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இரவு வேளைகளில் ஒரு சில தவறுகளை தொடர்ந்து செய்து வந்தால் நாம் என்ன தான் முயற்சி செய்தாலும் முகம் அழகாக இருக்காது என சரும மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.



ஆண்கள் தினமும் ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிட்டால் என்ன நடக்கும்?
[Friday 2025-02-21 18:00]

தற்போது உலர் திராட்சை நிறைய பேரின் விருப்பமான ஸ்நாக்ஸாக பார்க்கப்படுகின்றது. இந்த உலர் திராட்சையில் இரும்புச்சத்து, பொட்டாசியம், காப்பர், வைட்டமின் பி6, மாங்கனீசு போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. இவ்வளவு சத்துக்கள் கொண்ட உலர் திராட்சையை பாயாசம், கேசரி, சர்க்கரை பொங்கல் போன்ற உணவுகள் தயாரிக்கும் பொழுது சேர்ப்பார்கள். ஆனால் உலர் திராட்சையை இப்படி சாப்பிடுவதிலும் பார்க்க தனியாக ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.



ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் வரகரிசி உப்புமா!
[Thursday 2025-02-20 19:00]

சிறு தானிய வகையை சேர்ந்த வரகு அரிசியில் மாவுச்சத்து குறைவாக இருக்கும் என்பதால் அரிசி உணவுக்கு மாற்றாக எடுத்துகொள்ளவதற்கு இது சிறந்த தெரிவாகும். இந்த அரிசியில் கொழுப்பு அதிகம் இல்லை. இதில் இருக்கும் கொழுப்பும் நல்ல கொழுப்பு என்பதால் இதயத்துக்கு நன்மை செய்யகூடியது. மூளை செல்கள் சுறுசுறுப்பாக செயல்படவும் தசைகள், எலும்பு மஜ்ஜை, பல் எனாமல் போன்றவற்றை காக்கவும் இந்த வரகரிசியில் செறிந்துள்ள அமினோ அமிலங்களின் பெரிதும் துணைப்புரிகின்றது.



தொங்கும் தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா?
[Wednesday 2025-02-19 18:00]

பொதுவாகவே ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தற்காலத்தில் அதிகரித்த வேலைபளு, துரித உணவுகளின் அதிகமாக நுகர்வு, போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிப்பதுடன் பெரும்பாலானவர்கள் தொப்பை பிரச்சினையால் அவதிப்டுகின்றாகள்.



வாழை இலையில் சாப்பிட்டால் உடலில் நடக்கும் அற்புதங்கள்!
[Tuesday 2025-02-18 16:00]

பொதுவாகவே நமது முன்னோர்கள் செய்த ஒவ்வொரு விடயத்துக்கு பின்னும் நிச்சயம் வியக்க வைக்கும் நன்மைகள் நிறைந்திருக்கும் என்பது இன்று அறிவியல் ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழரின் விருந்தோம்பலில் வாழை இலை பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக காணப்பட்டுள்ளது. அதன் பின்னால் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தொடர்பில் முழுமையான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.



இரும்பு கடாயில் எந்த உணவுகளை சமைக்கக்கூடாது தெரியுமா?
[Monday 2025-02-17 19:00]

இரும்பு பாத்திரங்களில் என்னென்ன பொருட்களை சமைக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான வீடுகளில் நான்ஸ்டிக் பாத்திரங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பதினால் புற்றுநோய் அபாயம் ஏற்படுவதுடன், உடலுக்கு பல தீமைகளையும் கொடுக்கின்றது.


Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Latika-Gold-House-2025
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asayan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா