Untitled Document
May 20, 2026 [GMT]
மதுரை பாணியில் காரசாரமான சிக்கன் கொத்துக்கறி!
[Sunday 2026-05-03 19:00]

ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், நன்றாக சமைத்து சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று தான் அனைவதும் ஆசைப்படுவார்கள். அதிலும் அசைவ பிரியர்களின் வீட்டிலுள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் சிக்கனை விரும்பி சாப்பிடுவார்கள். எப்போதும் போல் சிக்களை குழம்பு அல்லது பொரியல் செய்யாமல் ஒரு முறை மதுரை பாணியில் காரசாரமாக கொத்து கறி செய்து பாருங்கள்.

ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், நன்றாக சமைத்து சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று தான் அனைவதும் ஆசைப்படுவார்கள். அதிலும் அசைவ பிரியர்களின் வீட்டிலுள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் சிக்கனை விரும்பி சாப்பிடுவார்கள். எப்போதும் போல் சிக்களை குழம்பு அல்லது பொரியல் செய்யாமல் ஒரு முறை மதுரை பாணியில் காரசாரமாக கொத்து கறி செய்து பாருங்கள்.

  

எவ்வாறு எளிமையாக படிடுறைகளில் சிக்கன் கொத்துகறி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம்

அரைத்த சின்ன வெங்காயம் - 1/2 கப்

இஞ்சி பூண்டு விழுது - 1 தே.கரண்டி

மிளகுத் தூள் - 1 தே.கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி

மல்லித்தூள் - 1 தே.கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 1/2 கப்

தேங்காய் எண்ணெய் - 1தே.கரண்டி

தாளிக்க தேவையானவை

தேங்காய் எண்ணெய் - 1 தே.கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

வர மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 தே.கரண்டி

மிளகாய்த்தூள் - 1 தே.கரண்டி

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

மிளகுத்தூள் - 1 தே.கரண்டி

கரம் மசாலா தூள் - 1/2 தே.கரண்டி

கொத்தமல்லி இலைகள் - சிறிது (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

முதலில் எலும்பில்லாத சிக்கனை நன்றாக கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து சின்ன வெங்காயத்தை கொரகொரப்பான விழுதாக அரைத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பிரஷர் குக்கரில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய சிக்கனைச் சேர்த்து, அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், கறிவேப்பிலை மற்றும் உப்பு ஆதியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

அதனையடுத்து அதில் அரைத்த சின்ன வெங்காய விழுது மற்றும் தண்ணீர் சேர்த்து, 5 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கி ஆறவிட வேண்டும்.

பிரஷர் வெளியேறியதும் மூடியைத் திறந்து, கரண்டியால் சிக்கனை நன்றாக மசித்து தனியாக வைக்கவும்.

பின்னர் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றவும். சூடானதும் அதில் சோம்பைச் சேர்த்து நன்றாக பெரியவிட வேண்டும்.

பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் உடைத்த வர மிளகாயைச் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, பின்னர் ஒரு கைப்பிடி அளவு நறுக்கிய புதிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்றாகக் கலந்துவிட வேண்டும்.

இப்போது சமைத்த சிக்கனைச் சேர்த்து வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக கிளறவும்.

அதன் பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள் மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக கிளறிவிட வேண்டும்.

பின்பு மசாலா சிக்கனில் நன்றாக கலக்கும் வரை நன்றாக கலந்துவிட்டு, கடைசியில் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்தால் அவ்வளவு தான், அசத்தல் சுசையில், சிக்கன் கொத்துக்கறி தயார்.

  
   Bookmark and Share Seithy.com



ரோட்டு கடை Egg Rice செய்வது எப்படி?
[Tuesday 2026-05-19 16:00]

ரோட்டு கடை ஸ்டைலில் சுவையான Egg Rice எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் சிறியவர்கள் கடைகளில் வாங்கும் உணவினை தான் அதிகமாக விரும்புகின்றனர். அதிலும் ஃபாஸ்ட் புட் வகைகள் அதிகமாகவே சாப்பிடுகின்றனர். ரோட்டு கடைகளில் விற்கப்படும் முட்டை ரைஸ்க்கு அதிக வரவேற்பு கிடைக்கின்றது. இதனை வீட்டில் செய்து சாப்பிடவும் பலரும் விரும்புகின்றனர். ஆனால் ரோட்டு கடையில் கிடைக்கும் ருசி வீட்டு சமையலில் கிடைப்பதில்லை. இவை உடம்பிற்கு கெடுதல் ஏற்படுத்தும் என்றாலும் அதன் சுவை நமது நாவை கட்டிப் போட்டு வைத்துள்ளது.



தினமும் துளசி கஷாயம் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
[Monday 2026-05-18 18:00]

மருத்துவ குணங்கள் நிறைந்த துளசியை தினமும் கஷாயம் வைத்து குடித்தால் உடலுக்கு என்ன நன்மை என்பதை பார்க்கலாம். துளசியில் வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளன. மேலும், இது வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளையும் கொண்டுள்ளது. இதைத் தினமும் உட்கொள்வது, நோய்களை எதிர்த்துப் போராடும் உங்கள் உடலின் திறனை அதிகரித்து, அடிக்கடி நோய் ஏற்படுவதைத் தடுக்கும். துளசி ஒரு சிறந்த அடாப்டோஜென் ஆகும்.



மாலையில் இந்த உணவுகளை கட்டாயம் எடுக்காதீங்க!
[Sunday 2026-05-17 07:00]

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிடுவது கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மாலை நேரங்களில் நாம் சாப்பிடும் உணவில் சற்று கவனம் எடுக்க வேண்டும். குறிப்பாக குளிர்காலம் என்றால் பஜ்ஜி, சமோசா, பீட்சா போன்ற உணவுகளை விரும்புகின்றனர். ஆனால் எண்ணெய்யில் பொரித்த உணவுகள் செரிமானத்தை கடுமையாக பாதிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.



நீரிழிவு நோய்க்கு நடைப்பயிற்சி எப்போது மிகவும் நன்மை தரும்?
[Saturday 2026-05-16 18:00]

நீரிழிவு நோய் இருந்தால் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நடைப்பயிற்ச்சி செய்தால் அது நன்மை தரும் என்பதை பார்க்கலாம். நீரிழிவு நோயாளிகள் தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடக்க வேண்டும். நீங்கள் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்றாலும், இரத்தச் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுக்க, உணவுக்குப் பிறகு நடப்பது மிகவும் அவசியம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.



பற்களை பாதுகாக்க இயற்கையான வீட்டு வைத்தியம்!
[Friday 2026-05-15 17:00]

பற்களை பாதுகாப்பதற்கு நம்மில் பலருக்கும் தெரியாத சில டிப்ஸ்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பல் பிரச்சனை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கின்றது. முந்தைய காலங்களில் சற்று வயதான பின்பே பல்பிரச்சனை வந்த நிலையில், தற்போது குழந்தையிலேயே பிரச்சனை வந்துவிடுகின்றது.



இந்த உணவுப்பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாதாம்!
[Thursday 2026-05-14 17:00]

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் எந்தெந்த பொருளுக்கு காலாவதி தேதி இல்லை என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு உணவுப்பொருளுக்கும் காலாவதி தேதி கொடுத்திருப்பார்கள். ஆனால் இயற்கையில் சில பொருட்கள் பாக்டீரியா தாக்குதல்களை தாங்கும் திறன் கொண்டுள்ளது. இந்த பொருட்களில் குறைவான ஈரப்பதும், அதிக அமிலத்தன்மை மற்றும் இயற்கையான பாதுகாப்பு பூச்சு இருப்பதால் இவைகள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படுகின்றது.



கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?
[Wednesday 2026-05-13 16:00]

வெயில் காலத்தில் கரும்பு ஜுஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வெயில் காலம் வந்துவிட்டாலே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கஷ்டப்படுகின்றனர். உடலில் வெப்பம் அதிகரித்துவிடுவதுடன், நீர்ச்சத்தும் குறைந்து விடுகின்றது. ஆதலால் வெயில் காலங்களில் எலுமிச்சை, தர்பூசணி, கரும்பு இவற்றினை ஜுஸாக எடுத்துக் கொள்ளலாம். இதில் எலுமிச்சை மற்றும் கரும்பு ஜுஸ் விலை மலிவாகவே கிடைக்கின்றது.



ஏழு நாட்களுக்குத் தினமும் பீட்ரூட் சாறு குடித்தால் என்ன பலன்?
[Tuesday 2026-05-12 16:00]

பீட்ரூட் சாறு ஒரு வாரத்திற்கு தொடர்ந்து குடித்தால் உடலுக்கு என்ன நன்மை என்பதை பார்க்கலாம். பீட்ரூட் சாறு (Beetroot Juice) நைட்ரேட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான பானமாகும். இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தடகள செயல்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், இது சரும பொலிவு மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.



நெய்யில் வறுத்த பூண்டை தினமும் சாப்பிடுங்க - என்னென்ன நன்மைகள் தெரியுமா?
[Monday 2026-05-11 16:00]

பூண்டில் அதிக மருத்துவ குணங்கள் நிறைய உள்ளது. இதை நெய்யில் வறுத்து சாப்பிட்டால் உடலுக்கு பல நனடமைகள் கிடைக்கும். பூண்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் மற்றும் உடல் எடையைக் குறைத்தல் போன்ற பல மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள அல்லிசின் (Allicin) சத்து கொலஸ்ட்ராலைக் குறைத்து, பாக்டீரியா தொற்றுக்களை எதிர்த்துப் போராடி, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.



இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க சிறந்த உடற்பயிற்சி எது?
[Sunday 2026-05-10 16:00]

உடலில் ரத்த சக்கரை அளவு குறைய நாம் எந்த உடற்பயிற்ச்சி செய்ய வேண்டும் என்பதை பதிவில் பார்க்கலாம். உடற்பயிற்சி ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது மட்டுமல்ல, அது வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தையும் குறைக்கக்கூடும். வழக்கமான உடல் செயல்பாடு, தசைகளை இன்சுலினுக்கு அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றுவதன் மூலம் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் ஆற்றலுக்காக குளுக்கோஸைப் பயன்படுத்தும் உடலின் திறனையும் அதிகரிக்கிறது.



நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் நெல்லிக்காய் தொக்கு!
[Saturday 2026-05-09 15:00]

பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவான விலையில் கிடைக்கூடியது தான் நெல்லிக்காய். இதில் அளப்பரிய ஆரோக்கிய நன்மைகளும் மருத்துவ குணங்களும் காணப்படுகின்றது. நெல்லிக்காயில் விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கல்சியம், மெக்னீசியம் போன்றன சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சித்த மருத்துவம்மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளில் நெல்லிக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது. தினசரி உணவில் நெல்லிக்காய் சேர்த்துக்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிப்பதுடன், கண்பார்வை கூர்மையாகும்.



நொடியில் காலியாகும் காரசாரமான சிக்கன் ஊறுகாய்!
[Friday 2026-05-08 16:00]

பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் சிக்கன் முக்கிய இடம் வகிக்கின்றது. அந்தளவுக்கு சிக்கன் எல்லா உணவு வகைகளுடனும் அசத்தலாக சுவையை கொடுக்கக்கூடியது என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் சிக்கன் பிரியர்கள் ஏராளாம். அப்படி வீட்டில் உள்ள அனைவரையும் குஷியாக்கும் வகையில், காரசாரமான சுவையில் சிக்கன் ஊறுகாய் எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.



மத்தி மீனை உணவில் கட்டாயம் எடுத்துக்கோங்க!
[Thursday 2026-05-07 16:00]

கடல் உணவுகளில் முக்கியமாக இருக்கும் மீன் உணவுகளில் மத்தி மீனின் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மீன்களில் பலவகைகள் உள்ள நிலையில், கடல்வகை உணவுகள் அனைத்தும் உடம்பிற்கு அதிக ஆரோக்கியத்தினை அளிக்கின்றது. அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகம் இருக்கும் மீனை பல வகைகளில் சமைத்து சாப்பிடுகின்றோம். குழம்பு, வறுவல், சைனிஸ் வகைகள் என செய்து சாப்பிடும் நமக்கு எந்தெந்த மீன்களில் எவ்வளவு சத்து உள்ளது என்பது அவ்வளவாக தெரிவதில்லை.



கொளுத்தும் வெயிலுக்கு இதமாக வெண்டைக்காய் தயிர் குழம்பு!
[Wednesday 2026-05-06 16:00]

அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தால் ,கொளுத்தும் வெயிலில் நிறைய பேர் உடல் சூடு பிரச்சனையை சந்திப்பார்கள். மேலும் கோடை காலத்தில் காரசாரமாக சாப்பிடவும் பிடிக்காது. இந்நிலையில் சற்று காரம் குறைவாகவும், அதே சமயம் உடல் சூட்டை தணிக்கும் வகையிலும் ஏதாவது சுசையாக சாப்பிட வேணடும் என்று தான் ஆசையாக இருக்கும். அப்படியான நிலையில், வீட்டில் வெண்டைக்காயும், தயிரும் இருந்தால், போதும் அவற்றைக் கொண்டு அசத்தல் சுவையில் மோர் குழம்பு செய்யலாம்.வெறும் பத்தே நிமிடத்தில் அசத்தலான மோர் குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்தால் உடல் எடை குறையுமா?
[Tuesday 2026-05-05 15:00]

நெல்லிக்காயில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இதை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதிக பலன் கிடைக்கும். ஆயுர்வேதத்தின்படி, நெல்லிக்காய் சாறு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பல உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்க நெல்லிக்காய் சாறு அருந்துவது ஆயுள்வேதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி நெல்லிக்காய் சாற்றை சரியான அளவிலும் சரியான முறையிலும் சேர்த்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும்.



கோடை வெயிலிலிருந்து தப்பிக்க வேண்டுமா?
[Monday 2026-05-04 16:00]

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் பாதாம் பிசினின் எண்ணற்ற நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக கோடை காலங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்பதால், உடலை குளிர்ச்சியாக வைப்பது மிகவும் அவசியம் ஆகும். உடலைக் குளிர்விப்பதற்கு மக்கள் பல இயற்கை மற்றும் செயற்றை பானங்களை விரும்புகின்றனர். ஆனால் செயற்கை பானங்கள் எந்தவொரு பயனும் அளிப்பதில்லை. இயற்கை பானங்கள் மட்டுமே மனிதர்களின் உடம்பை நீரோற்றமாக வைத்திருக்கின்றது.



ஜப்பானியர்களின் இந்த உணவு உங்களுக்கு தெரியுமா?
[Saturday 2026-05-02 08:00]

ஜப்பானியர்களின் விருப்ப உணவான ரைஸ் கேக் என்று அழைக்கப்படும் மோச்சி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.



கிர்ணி பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
[Friday 2026-05-01 18:00]

கிர்னி பழத்தால் நமக்கு என்னென்ன பயன் என்று இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். பழ வகைகளில் ஒன்று தான் கிர்ணி, இது நமக்கு நுரையிரல், கண்பார்வை போன்ற பல மருத்துவ குணங்களை அள்ளித் தருகிறது. பொதுவாக நாம் உடல் சூட்டை குறைக்க நாம் பல்வேறு பழங்கள் சாப்பிடுவோம். அதே வகையில் கிர்ணி பழம் கோடைகாலத்தில் நமக்கு குளிர்ச்சியை தரும்.



தினமும் வேகவைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டால் என்ன நன்மை?
[Thursday 2026-04-30 16:00]

நெல்லிக்காயில் அதிக சத்து இருக்கிறது. அந்த வகையில் தினமும் அவித்த ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலுக்கு என்ன நன்மை என்பதை பதிவில் பார்க்கலாம். நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு அமிர்தமாக விளங்குகிறது. பண்டைய காலத்தில் இந்த நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைக்கு ஒரு புராணக்கதையே உள்ளது. அதியமான் மன்னன் ஔவையார் நூறு வருடங்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக ஒரு நெல்லிகாய் வழங்கிய கதை எல்லாம் இருக்கிறது.



காலை உணவிற்கு மொறுமொறுப்பான சோள மா தோசை!
[Wednesday 2026-04-29 16:00]

தோசை என்றாலே பலருக்கும் வாயில் எச்சில் ஊறும். நீங்கள் உளுந்து மற்றும் அரிசியில் செய்யப்பட்ட தோசைகளை ஏராளமாகச் சாப்பிட்டிருக்கலாம், ஆனால் மொறுமொறுப்பான சோளமாவு தோசையை சாப்பிட்டு இருக்கீங்களா?. இந்த சோள மாவு தோசையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது உடலை நீண்ட நேரம் ஆற்றலுடன் வைத்திருக்கும். பாரம்பரிய தோசை செய்வதற்கு அரிசி மற்றும் பருப்பை ஊறவைத்து புளிக்க வைக்கும் சிரமம் இருக்கும். ஆனால் சோள மாவு தோசை வெறும் 10-15 நிமிடங்களில் செய்து விடலாம்.


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா