Untitled Document
July 3, 2024 [GMT]
மாட்டிறைச்சி சந்தையை குறி வைத்தே ஜல்லிக்கட்டு தடை செய்யப்படுகின்றதா....?
[Sunday 2016-01-17 08:00]

கடந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாததால் 80 ஆயிரம் காளைகள் விற்கப்பட்டதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மாட்டிறைச்சி சந்தையை குறி வைத்தே ஜல்லிக்கட்டு தடை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.இந்தத் தடையால் நாட்டு மாடுகள் அடியோடு அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.ஏர் பூட்டி நடத்தப்படும் விவசாயம் முற்றிலுமாகக் கைவிடப்பட்டு, டிராக்டர் மூலம் உழுகிற விவசாயத்துக்குக் காளை மாடுகள் பயன்படுத்தப்படுவது இல்லாமல் ஆகிவிட்டது. அதேபோல காளை மாட்டு வண்டிகளும் அடியோடு மறைந்துவிட்டன.இந்த நிலையில், இன விருத்திக்காக மட்டுமே ஜல்லிக்கட்டு காளைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை அழிக்கப்பட்டால், இன விருத்திக்கான காளைகளுக்கு நாம் ஐரோப்பிய நாடுகளை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

கடந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாததால் 80 ஆயிரம் காளைகள் விற்கப்பட்டதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மாட்டிறைச்சி சந்தையை குறி வைத்தே ஜல்லிக்கட்டு தடை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.இந்தத் தடையால் நாட்டு மாடுகள் அடியோடு அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.ஏர் பூட்டி நடத்தப்படும் விவசாயம் முற்றிலுமாகக் கைவிடப்பட்டு, டிராக்டர் மூலம் உழுகிற விவசாயத்துக்குக் காளை மாடுகள் பயன்படுத்தப்படுவது இல்லாமல் ஆகிவிட்டது. அதேபோல காளை மாட்டு வண்டிகளும் அடியோடு மறைந்துவிட்டன.இந்த நிலையில், இன விருத்திக்காக மட்டுமே ஜல்லிக்கட்டு காளைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை அழிக்கப்பட்டால், இன விருத்திக்கான காளைகளுக்கு நாம் ஐரோப்பிய நாடுகளை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

  

தமிழகத்தில், மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவை தவிர, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு வட மாவட்டங்களில் எருதுவிடுதல் என்னும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இப்போட்டிகளுக்கு முழுக்க, முழுக்க உள்ளூர் காளை மாடுகளே பயன்படுத்தப்படுகின்றன. போட்டிகளுக்காக அந்த மாடுகள் கன்று பருவத்திலிருந்தே தயார் செய்யப்படுகின்றன.இப்போது ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், ஜல்லிக்கட்டு மாடுகள் மட்டுமின்றி, அந்த நோக்கத்துக்காக தயாராகும் ஆயிரக்கணக்கான மாடுகள் கன்று பருவத்திலேயே இறைச்சிக்காக விற்கப்பட்டு வருகின்றன.

இனவிருத்திக்குப் பயன்படுத்தப்படும் காளை இனங்கள் இப்படி விற்கப்படுவதன் மூலம் நம்முடைய மாட்டு இனங்கள் வேரோடு அழிந்துவிடும் நிலை உருவாகியுள்ளது.நாட்டு மாடு இறைச்சிக்கு வரவேற்பு: வெளிநாடுகளில் நாட்டு மாடு இறைச்சிக்கு பெரும் வரவேற்பு உள்ளது. நம் நாட்டு மாடுகள் இயற்கையான முறையில் நோய் தடுப்பு ஊசிகள், மாத்திரைகள் இல்லாமல் வளர்க்கப்படுகின்றன. எனவே, இதன் இறைச்சிக்கு வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதால், வணிகப் போட்டியில் நம் நாட்டு மாடுகள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.இறைச்சிக்காக நாட்டு காளைகள் அழிக்கப்பட்டுவிட்டால், பின்பு வெளிநாட்டு இனங்களை இந்தியாவுக்கு எளிதாக இறக்குமதி செய்ய முடியும். பின்பு, வெளிநாட்டு மாட்டு இனங்களை வளர்ப்பதற்கான மருந்துகளையும் இங்கு விற்பனை செய்ய முடியும்.இதுகுறித்து சேனாபதி காங்கயம் காளைகள் ஆராய்ச்சி மையத்தின் (திருப்பூர்)

நிர்வாக இயக்குநர், கார்த்திகேயா சிவசேனாபதி கூறியது: ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரும் விலங்குகள் நல அமைப்பு, புளூ கிராஸ், "பீட்டா' ஆகிய அமைப்புகள் நம் பாரம்பரிய இனங்களை அழிப்பதற்காக வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி மனு தாக்கல் செய்தபோது 40 மூத்த வழக்கறிஞர்கள் உள்பட 70 பேர் சென்று இருக்கின்றனர். இவர்களுக்கு ரூ.2.50 கோடி வரை சம்பளமாக செலவாகும். அவை அவ்வளவு வசதியான அமைப்புகளா? அல்லது அவர்களுக்கு அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? அல்லது யார் இதற்கு முதலீட்டாளர்? இதனை தமிழக அரசு விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும்.தமிழகத்தில் 6 மாட்டு இனம் உண்டு. அதில் 4 மாட்டு இனங்கள். காங்கயம், புளியக்குளம், மலமாடு, ஒம்பலச்சேரி ஆகியவை முக்கிய நாட்டு மாடு இனங்கள். ஜல்லிக்கட்டை முடக்குவதன் மூலம் இரண்டு விதமான லாபங்கள் உள்ளன. நாட்டு மாடு இனங்களை அழித்துவிட்டால் ஐரோப்பிய மாட்டு இனங்களான ஜெர்ஸி, சுவிஸ்ப்ரோ, ஹோல்ஸ்டின் போன்ற மாடுகளை இந்தியாவுக்கு கொண்டு வந்துவிடலாம்.

இரண்டாவது லாபம், ஐரோப்பிய மாடுகளை நம்மால் தடுப்பூசி போடாமல் வளர்க்க முடியாது, பின்பு அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் இங்கு வரும். இதற்கான முன்னேற்பாடுகளே ஜல்லிக்கட்டு மீதான தடை. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நடத்துபவர்கள் பெரும் பணக்காரர்கள். இவர்கள் ஏழை விவசாயிகளிடம் சண்டை போடுகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்காட ரூ.2 கோடி வேண்டும், விவசாயிகளால் எப்படி முடியும்? ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியின்போது ஒரு மனிதன் 15 முதல் 30 வினாடிகள்தான் காளையுடன் தொடர்பில் இருப்பான், இது ஒரு ஏறு தழுவுதல். இது எப்படி காளைகளை துன்புறுத்துவதாகும்? மாட்டைக் கொல்வதற்கு வாயை மூடிக்கொண்டு இருக்கும் அமைப்புகள் 30 விநாடிகள் விளையாட்டை சகித்துக்கொண்டு இருக்க முடியாதது ஏன்? ஒவ்வொரு கிராமத்திலும் கோயில் காளைகள் இருக்கும்.விவசாயிகளால் காளையைப் பராமரிக்க முடியாது. எனவே கோயில் காளைகளை பலரும் சேர்ந்து பராமரிப்பார்கள், அந்தக் கோயில் காளைகளைத்தான் இனப்பெருக்கத்துக்கு உபயோகிப்பார்கள்.எனவே இந்த இனப்பெருக்க காளையை அழித்தால்தான், நாட்டு மாடு இனத்தை அழிக்க முடியும். இது நமது மாட்டு இனத்தை அழிப்பதற்காக நடக்கும் சர்வதேச சதி என புரிந்துகொள்ள வேண்டும். மத்திய அரசும் மாநில அரசும் இதனைத் தடுக்க வேண்டும் என்றார் கார்த்திகேயா சிவசேனாபதி.

குறைந்து வரும் காங்கயம் மாடுகள்!1990-ஆம் ஆண்டில் தமிழகத்தில் காங்கயம் இன மாடுகளின் எண்ணிக்கை 11 லட்சத்து 74 ஆயிரமாக இருந்தது. ஆனால், 2000-ஆம் ஆண்டில் இவை 4 லட்சத்து 40 ஆயிரமாக குறைந்து, இப்போது 1.25 லட்சம் காங்கயம் மாடுகள் மட்டுமே இருக்கின்றன என்பது வேதனைக்குரிய செய்தி.

  
   Bookmark and Share Seithy.com



மலேசிய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இந்தியாவின் புதிய திட்டம்!
[Wednesday 2024-07-03 06:00]

மலேசிய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக இந்திய அரசு புதிய விசா திட்டத்தை தொடங்கியுள்ளது. மலேசிய சுற்றுலா பயணிகளுக்காக இந்திய அரசு இரட்டை நுழைவுக்கான இலவச மின்னணு சுற்றுலா விசா (e-Tourist visa) திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த முயற்சி இரு நாடுகளுக்கிடையே சுற்றுலாத் துறையை மேம்படுத்த நோக்கம் கொண்டுள்ளது.



மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 87 பேர் பலி: மேலும் உயரலாம் என அச்சம்!
[Wednesday 2024-07-03 06:00]

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், 87 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமம் ஒன்றில் மத சத்சங் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.



6 பெண்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த பேருந்து: ஒருவர் பலி!
[Wednesday 2024-07-03 06:00]

உத்தரகாண்டில் நடந்த பேருந்து விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தரகண்டில் இன்று மாலை வேகமாக வந்த பஸ் 6 பெண்களை மோதி விபத்து ஏற்படுத்தியது. CCTV காட்சிகளில், பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ ரிக்க்ஷாக்காக காத்திருந்த பெண்களை மோதி விபத்துக்குள்ளானது தெளிவாக தெரிந்தது.



இமய மலையின் 16,500 அடி உயரத்தில் ஏரியில் 800 எலும்புக்கூடுகள்: பல ஆண்டுகளாக நிலவும் மர்மம்!
[Tuesday 2024-07-02 18:00]

இமய மலையின் 16,500 அடி உயரத்தில் காணப்படும் ஒரு ஏரி, எலும்புக்கூடுகளின் ஏரி என்றே அழைக்கப்படுகிறது. காரணம், அந்த ஏரிக்கரையில் ஏராளமான எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன. அவ்வளவு உயரத்தில் அத்தனை எலும்புக்கூடுகள் எப்படி வந்தன என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.



பிரித்தானியா நாடாளுமன்ற தேர்தல்: தமிழ் உறவுகளுக்கு கோரிக்கை வைத்த சீமான்!
[Tuesday 2024-07-02 18:00]

பிரித்தானியாவில் வரும் ஜூலை 4 -ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பிரித்தானியாவில் தற்போது பிரதமராக ரிஷி சுனக் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அங்கு வரும் ஜூலை 4 -ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.



"மோடி உலகில் உண்மையை அழிக்கலாம், ஆனால்!" - அவைக்குறிப்பில் நீக்கப்பட்ட கருத்துக்கு ராகுல் காந்தி பதில்!
[Tuesday 2024-07-02 18:00]

மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசிய கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார். மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசிய கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அவர் பேசுகையில், "மோடியின் உலகில் உண்மையை அழிக்கலாம். ஆனால் எதார்த்தமான உலகில் அப்படி அல்ல, உண்மையை ஒருபோதும் அழிக்க முடியாது.



பல துறைகளில் கால் பதித்தவர் - தற்போது தமிழக மருத்துவத்துறை செயலாளர்: யார் அவர்?!
[Tuesday 2024-07-02 18:00]

தமிழகத்தில் புதிய மருத்துவத்துறை செயலாளராக சுப்ரியா சாஹு ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம். தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் சுப்ரியா சாஹு ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளராக பதவி வகித்த நிலையில், தமிழகத்தின் புதிய மருத்துவத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.



கீழடியில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு!
[Tuesday 2024-07-02 06:00]

கீழடி 10 ஆம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட 2 பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கீழடி 10ஆம் கட்ட அகழாய்வில் அகழாய்வுக்குழி எண் YW11/3 இல் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் முறையே 58 செ.மீ மற்றும் 96 செ.மீ ஆழத்தில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட இரண்டு பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.



‘மத மோதல்களைத் தூண்டினால் குண்டர் சட்டம்’ - உயர்நீதிமன்றம்!
[Tuesday 2024-07-02 06:00]

மத மோதல்களைத் தூண்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.



தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
[Tuesday 2024-07-02 06:00]

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காகச் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.



பள்ளிகளுக்கிடையே மோதல்: முட்டிக்கொள்ளும் மாணவர்கள் - கதிகலங்கும் கோட்டைமேடு!
[Monday 2024-07-01 18:00]

கோவை மாவட்டம் கோட்டைமேடு அருகே உள்ள வின்சென்ட் சாலைப் பகுதியில்.. சிட்டி பள்ளி, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, கோட்டைமேடு பள்ளி என மூன்று பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் கோவை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே, இந்த மூன்று பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குள் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக சொல்லப்படுகிறது.



நாடாளுமன்றத்தை அதிர வைத்த இந்து மத விவகாரம்!
[Monday 2024-07-01 18:00]

நாடாளுமன்றத்தில் இந்து மதம் குறித்து ராகுல் காந்தி பேசியதும், அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்ததும் மக்களவையே அதிர வைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் நீட் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால், அதனை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை.



497 மதிப்பெண்கள் எடுத்தும் விழாவுக்கு அழைக்காத விஜய்: காரணம் தெரியாமல் தவிக்கும் மாணவி!
[Monday 2024-07-01 18:00]

10 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 3 வது இடம் பிடித்த மாணவியை விஜய் கல்வி விருது விழாவுக்கு அழைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் விழா கடந்த 28 -ம் திகதி நடைபெற்றது.



5 மாத குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் ஆத்திரத்தில் அடித்துக்கொன்ற தந்தை!
[Monday 2024-07-01 18:00]

5 மாத குழந்தையின் அழுகையை ஏற்க முடியாமல் ஆத்திரத்தில் தந்தையே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான நீலகிரி, ஓல்டு ஊட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் பிரேம் (31) மற்றும் ரம்யா (21). இவர்களுக்கு ஏஞ்சல் என்ற 5 மாத பெண் குழந்தை இருந்தது.



“முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும்” - இ.பி.எஸ். வலியுறுத்தல்!
[Monday 2024-07-01 06:00]

முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகச் செய்திகள் வந்த நிலையில், அதனைத் திருப்பூர் மாவட்ட காவல்துறை மறுத்து செய்தி வெளியிட்டது.



முன்னாள் கவுன்சிலர் கொலை: கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் சூறை!
[Monday 2024-07-01 06:00]

கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் என்பவர் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள், அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது!
[Monday 2024-07-01 06:00]

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.



15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
[Sunday 2024-06-30 18:00]

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



தொடர் கனமழையால் இடிந்து விழுந்த பாலம்!
[Sunday 2024-06-30 18:00]

நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் மணிப்பூர் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இம்பால் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் திடீரென உடைந்தது. இது தொடர்பான காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.



"விஜய் பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை" - தொல். திருமாவளவன்!
[Sunday 2024-06-30 18:00]

தவெக தலைவர் விஜய் மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என்று கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு தவெக சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் நடைபெற்றது.


NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா