Untitled Document
September 21, 2024 [GMT]
உங்களுக்காக உழைக்க மீண்டும் எனக்கு வாய்ப்பு தாருங்கள்: - ஜெயலலிதா
[Saturday 2016-05-07 10:00]


சட்டப் பேரவைத் தேர்தலில், அதர்மமும், சந்தர்ப்பவாதமும், நாடகமும் தோற்க வேண்டும் என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா கூறினார்.ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் அவர், காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, கொடுங்கையூர் எழில் நகர் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியது:2015ஆம் ஆண்டு தேர்தலில் மகத்தான வெற்றி பெறச் செய்தீர்கள். இந்தத் தொகுதி மக்கள் எனது நெஞ்சில் நீங்காத இடம்பெற்றுள்ளீர்கள். இப்போதைய தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறேன். கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் பெருமழை கடந்த ஆண்டு கொட்டித் தீர்த்தது. சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது.

சட்டப் பேரவைத் தேர்தலில், அதர்மமும், சந்தர்ப்பவாதமும், நாடகமும் தோற்க வேண்டும் என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா கூறினார்.ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் அவர், காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, கொடுங்கையூர் எழில் நகர் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியது:2015ஆம் ஆண்டு தேர்தலில் மகத்தான வெற்றி பெறச் செய்தீர்கள். இந்தத் தொகுதி மக்கள் எனது நெஞ்சில் நீங்காத இடம்பெற்றுள்ளீர்கள். இப்போதைய தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறேன். கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் பெருமழை கடந்த ஆண்டு கொட்டித் தீர்த்தது. சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது.

  

இந்தத் தொகுதியில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. ஆர்.கே.நகரில் பாதிக்கப்பட்ட 97,411 குடும்பங்களுக்கு ரூ.48 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கட்டணமில்லாமல் இணையதள இணைப்பு வசதியும் வழங்கப்படும்.மகப்பேறு நிதியுதவி ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும். 100 யூனிட் மின்சாரத்துக்கு கட்டணம் இல்லை. அரசு கேபிள் தொலைக்காட்சி இணைப்பு பெற்றோருக்கு செட்-டாப் பாக்ஸ் விலையில்லாமல் அளிக்கப்படும். பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, ஆட்டோக்கள் வாங்க மானியம் கொடுக்கப்படும்.

மக்கள்தான் என் மூச்சு: மக்களால் நான், மக்களுக்காகவே நான், உங்களால் நான், உங்களுக்காகவே நான். என் மீது உங்களுக்கு நம்பிக்கை. உங்கள் மீது எனக்கு அளவற்ற நம்பிக்கை. தர்மம் வெல்ல, அதர்மம் தோற்க, சத்தியம் வெல்ல, சந்தர்ப்பவாதம் தோற்க, நாடு வளம் பெற, நயவஞ்சகக் கூட்டம் அழிந்திட, நம்பிக்கை வெற்றி பெற, நாடகம் தோற்க மகத்தான வெற்றியை வழங்க வேண்டும்.மக்கள் தான் என் மூச்சுக் காற்று. உங்களுக்காக உழைக்க மீண்டும் எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்றார் ஜெயலலிதா."மழை-வெள்ளம் தேங்காமல் இருக்க வடிகால் வசதி அமைக்கப்படும்'மழை- வெள்ளம் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.பிரசாரத்தின்போது அவர் பேசியது:ஆர்.கே.நகர் தொகுதிக்குள்பட்ட காசிமேடு பகுதியில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகம் புனரமைக்கப்பட்டு அனைத்து நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.கத்திவாக்கம், காக்ரேன் பேசின் சாலை ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. வடக்கு பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே நேரு-எழில் நகர்களை இணைக்கும் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பவர்குப்பத்தில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு தொழில்பயிற்சி நிலையமும், கலை-அறிவியல் கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளன. 30,593 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.எவ்வளவு பெருமழை பெய்தாலும் அந்த நீர் தேங்காத வகையில், மழைநீர் வடிகால் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் ஜெயலலிதா.

  
   Bookmark and Share Seithy.com



'மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம்' - ராமதாஸ் வலியுறுத்தல்!
[Saturday 2024-09-21 07:00]

மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக உருவெடுத்துள்ள சிக்கல்களில் முதன்மையானது மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளப்படாதது ஆகும். தமிழகத்தின் பல மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில், அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு இதுவரை தெளிவான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது.



பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி: பாஜக முக்கிய நிர்வாகி மீது போலீசில் புகார்!
[Saturday 2024-09-21 07:00]

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து வெளியான தகவல் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரசாத லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது குறித்தும், கடந்த ஆட்சியின்போது லட்டு தயாரிப்பில் நடந்த தவறுகள் குறித்தும் இன்று (20.09.2024) மாலைக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலருக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். திருப்பதி ஏழுமையான் கோயிலின் மாண்பு, பக்தர்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளுக்கு இடையூறு விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



மாணவன் மீது பிளேடால் தாக்குதல்: பள்ளியில் நிகழ்ந்த விபரீதம்!
[Saturday 2024-09-21 07:00]

பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், சக மாணவர் பிளேடால் கிழித்ததில் மாணவர் ஒருவர் வெட்டு காயத்துடன் மருத்துமனையில் அனுமதி. வேலூர் மாவட்டம் அரியூர் அடுத்த ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில பிரில் படிக்கும் இரு மாணவர்களிடையே பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட தகராறில் (திலீப் குமார்) என்ற மாணவனை சக மாணவன் பிளேடால் சரமாரியாக கிழித்துள்ளார். இதில் மாணவனுக்கு (திலீப் குமார்) தலை, முதுகு மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.



பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு? - தமிழக அரசு கொடுத்த விளக்கம்!
[Friday 2024-09-20 18:00]

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியான சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்நிலையில், பழனி முருகன் கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்படும் நெய்யில் பன்றி இறைச்சி கொழுப்பு கலப்படம் செய்யப்படுவதாகவும் தகவல் பரவியது.



பள்ளி மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போல ரீல்ஸ்: ஆசிரியர் மீது நடவடிக்கை!
[Friday 2024-09-20 18:00]

அரசு மகளிர் பள்ளியில் 12 -ம் வகுப்பு மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போல ரீல்ஸ் வீடியோ எடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான வேலூர், காட்பாடி பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவிகளில் சிலர், சக மாணவி ஒருவருக்கு வளைகாப்பு நடத்துவது போன்று அழைப்பிதழை செல்போனில் தயார் செய்துள்ளனர்.



2024-ல் இந்தியாவின் மதிப்புமிக்க பிராண்டுகள் எவை தெரியுமா?
[Friday 2024-09-20 18:00]

2024-ம் ஆண்டில் பொதுமக்கள் பலரால் விரும்பப்படும் இந்திய பிராண்டுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2024 -ம் ஆண்டின் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் தரவரிசையில் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டாக டிசிஎஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உள்ளது.



நெடுஞ்சாலையின் பெரிய பள்ளத்திற்கு எலி தான் காரணம்: அதிகாரியின் பதிலால் உடனே பணிநீக்கம்!
[Friday 2024-09-20 18:00]

டெல்லி - மும்பைக்கு இடையே போடப்பட்ட நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பள்ளத்திற்கு எலி காரணம் என்று கூறிய அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி - மும்பைக்கு இடையே 1,386 கிலோமீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலை போடப்பட்டு வருகிறது. இந்த நெடுஞ்சாலை அமைத்தால் டெல்லியில் இருந்து மும்பைக்கு செல்வதற்கு 24 மணிநேரம் என்பதில் இருந்து 12 முதல் 14 மணிநேரமாக குறையும்.



கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!
[Friday 2024-09-20 06:00]

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த 8ஆம் தேதி (08.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



திருந்தாத பைக் திருடன்: சுருட்டி அள்ளிய கீரமங்கலம் போலீஸ்!
[Friday 2024-09-20 06:00]

புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.விலையுயர்ந்த பைக்களை கஞ்சா கடத்தல் கும்பல்கள் திருடி கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திவிட்டு சில ஆயிரங்களுக்கு விற்றுவிட்டு வேறு பைக்களை திருடிக் கொள்கின்றனர். அதேபோல் சிசி குறைவான பைக்களை திருடும் கும்பல் விலை குறைவாக விற்றுச் செல்கின்றனர்.



'கிழிந்த ஓலைக் குடிசை; அனல் கக்கும் ஆஸ்பெட்டாஸ் சீட்'-வேதனையளிக்கும் அங்கன்வாடிகள்!
[Friday 2024-09-20 06:00]

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிழிந்த ஓலைக் கொட்டகையிலும், அனல் கக்கும் ஆஸ்பெட்டாஸ் கொட்டகையிலும் சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடிகள் செயல்பட்டு வருகிறது வேதனை அளிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கொத்தக்கோட்டை ஊராட்சியில் சிறு குழந்தைகள் பயிலும் 4 அங்கன்வாடி மையங்கள் உள்ளது. இதில் கொத்தக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒரு பகுதியில் 1997-1998 ம் ஆண்டு கட்டிடம் கட்டி பிரகதம்பாள்புரம் அங்கன்வாடி மையம் செயல்பட்டுள்ளது.



வள்ளலார் தெய்வ நிலைய நிலம் ஆக்கிரமிப்பு: 269 பேரையும் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு!
[Thursday 2024-09-19 18:00]

வடலூரில் சர்வதேச வள்ளலார் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் பல்வேறு வழக்குகள் சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகிறது.



பிரசவத்தின் போது வயிற்றில் துணிவைத்து தைத்த மருத்துவர்கள்!
[Thursday 2024-09-19 18:00]

பிரசவத்தின் போது வயிற்றில் துணிவைத்து மருத்துவர்கள் தைத்ததால் மூன்று மாதங்களுக்கு பிறகு அதனை அகற்றியுள்ளனர். இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், அம்லா பகுதியில் காயத்ரி ராவத் என்ற பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், கடுமையான வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



சென்னையில் பயங்கரம்: பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த இளைஞர்!
[Thursday 2024-09-19 18:00]

சென்னை துரைப்பாக்கத்தில் இன்று அதிகாலை பெண் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து அடைக்கப்பட்ட சூட்கேஸ் கிடைத்துள்ளது. சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு அருகே துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. மேலும் அதில் இருந்து ரத்தம் வழிந்தோடியதால் அங்கிருந்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு: சந்திரபாபு நாயுடு பகீர் குற்றச்சாட்டு!
[Thursday 2024-09-19 18:00]

ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதத்தில், விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது மங்களகிரியில் நடைபெற்றது.



வக்ஃப் போர்ட்டின் புதிய சேர்மன் யார்?
[Thursday 2024-09-19 06:00]

தமிழ்நாடு வஃக் போர்டின் புதிய சேர்மனாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ்கனியை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. நவாஸ்கனி, ராமநாதபுரம் எம்.பி.யாக இருக்கிறார். தலைவராக இருந்த அப்துல் ரஹ்மான் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய தலைவராக திமுகவை சேர்ந்த ஒரு முஸ்லீம் பிரமுகருக்கு தர வேண்டும் திமுக தலைமையிடம் காய்கள் நகர்த்தப்பட்டிருந்தன.



பள்ளி மாணவிக்கு பிறந்த குழந்தை இறந்தது: போலீசார் தேடிய வாலிபர் கைது!
[Thursday 2024-09-19 06:00]

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் உள்ள ஒரு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அருகாமை கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவி பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 15 ந் தேதி மாலை வீட்டில் இருந்த மாணவிக்கு திடீர் வயிற்றுவலி ஏற்பட்டதால் அவரது தாயார் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.



விஏஓ கொலை வழக்கு: நீதிமன்றத்தை நாடிய குற்றவாளிகள்!
[Thursday 2024-09-19 06:00]

கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் ஜாமீன் மற்றும் தண்டனை ரத்து செய்யக்கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்துள்ள முறப்பநாடு கோவில்பத்து கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அலுவலகத்திலேயே வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.



"உதயநிதிக்கு பிறகு இன்பநிதி என தெரிந்தது தான்" - சீமான் காட்டம்!
[Wednesday 2024-09-18 17:00]

தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்கவுள்ளார் என்று தகவல் பரவி வருவது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று சில மாதங்களாக தகவல்கள் பரவி வருகிறது. இதனை சில திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களும் கூறி வருகின்றனர்.



‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
[Wednesday 2024-09-18 17:00]

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்தக் குழு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்ப்பித்தது.



இஸ்ரோவின் அடுத்த இலக்கு - ரெட் சிக்னல் கொடுத்த மத்திய அமைச்சரவை!
[Wednesday 2024-09-18 17:00]

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய கடந்த ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தொடர் முயற்சியால் இறுதிக்கட்டத்தை எட்டி, திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தில் 14/09/2023 அன்று இறங்கி சாதனை படைத்தது. இதனால் நிலவில் தென் துருவத்தில் முதன் முதலில் கால் பதித்து சாதித்து காட்டியது இஸ்ரோ.


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா