Untitled Document
May 29, 2024 [GMT]
அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!
[Sunday 2024-05-12 16:00]

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. பல பகுதிகளில் மாலை வேளையில் பலத்த காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. பல பகுதிகளில் மாலை வேளையில் பலத்த காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

  

சென்னை வானிலை மைய அறிவிப்பின்படி மே 13ஆம் தேதி தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மே 14ம் தேதி தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மே 15ஆம் தேதி தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 16ஆம் தேதி கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், திருப்பூர், சேலம், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகபட்சமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பொதுவான இயல்பை ஒட்டிய வெப்பநிலை இருக்கும்.

உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு அல்லது மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக வெப்பநிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்சமாக 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும். இதர மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் 37 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவ வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



பழனிக்குச் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!
[Wednesday 2024-05-29 06:00]

பழனி முருகன் கோயிலில் செயல்பட்டு வரும் ரோப் கார் சேவை ஒரு நாள் நிறுத்தம் செய்வது குறித்து கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் எளிதாக மலைக்குச் சென்று முருகனை வழிபட கம்பிவட ஊர்தி (Rope Car) வசதி செய்யப்பட்டுள்ளன. இந்த வசதியை ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.



பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு போக்குவரத்துத்துறை முக்கிய அறிவுறுத்தல்!
[Wednesday 2024-05-29 06:00]

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 6 ஆம் தேதி திறக்கப்படும் எனப் பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி (06.06.2024) அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளையும் திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கூறப்படுகின்றது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.



திராவிட இயக்க வரலாறு குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி விமர்சனம்!
[Wednesday 2024-05-29 06:00]

நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள ராஜ்பவனில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களின் 2 நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டைப் பல்கலைக்கழகங்களின் வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி (27.05.2024) தொடங்கி வைத்தார். இதனையடுத்து மாநாட்டின் தொடக்கத் தொடக்க உரையாற்றினர். மேலும் இந்த மாநாட்டில் உயர்கல்வித்துறையின் செயல்பாடு, உயர்கல்வியில் ஆராய்ச்சியின் சிறப்பம்சம், கல்வி நிறுவன மேம்பாடு, தொழில்முனைவோரை ஊக்குவித்தல், பேராசிரிய உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய மனித விழுமியங்களை ஊக்குவித்தல் போன்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.



மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி!
[Tuesday 2024-05-28 18:00]

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில், 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து, இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி அன்று நடைபெறும். ஏழாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிரத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.



ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான பணம், தங்க நகைகள் பறிமுதல்!
[Tuesday 2024-05-28 18:00]

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாகக் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம், ஐந்தாம் கட்டம் மற்றும் ஆறாம் கட்டம் என வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதன்படி இன்னும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



கன்னியாகுமரியில் 3 நாட்கள் தியானம் செய்கிறார் மோடி!
[Tuesday 2024-05-28 18:00]

மக்களவை தேர்தல் முடியும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வந்து அங்குள்ள விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் மேற்கொள்கிறார். இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இறுதிகட்ட தேர்தல் ஜூன் 1 -ம் திகதி நடைபெறவிருக்கிறது.



மடிக்கணினி சார்ஜ் செய்யும்போது பெண் மருத்துவருக்கு நேர்ந்த விபரீதம்!
[Tuesday 2024-05-28 18:00]

தமிழக மாவட்டம் நாமக்கல்லில் பயிற்சி பெண் மருத்துவர், தனது மடிக்கணினிக்கு சார்ஜ் செய்யும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாமக்கல்லின் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் சரணிதா (32). இவர் கோவையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.



போதை ஊசியால் சிறுவன் உயிரிழப்பு: இருவர் கைது!
[Tuesday 2024-05-28 06:00]

சென்னை புளியந்தோப்பு மன்னார் சாலை பகுதியைச் சேர்ந்த அமீர் என்பவரது மகன் ஜாகிர் (வயது 17). இந்தச் சிறுவன் 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் எலெக்ட்ரீசியன் வேலைக்குச் சென்று வந்துள்ளார். இத்தகைய சூழலில்தான் கடந்த 26 ஆம் தேதி வேலைக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு தனது நண்பரின் வீட்டுக்கு சிறுவன் சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து இந்தச் சிறுவன் போதை ஊசி செலுத்திக் கொண்டதாக கூறபடுகிறது.



பிரதமர் மோடி தமிழகம் வருகை!
[Tuesday 2024-05-28 06:00]

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாகக் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம், ஐந்தாம் கட்டம் மற்றும் ஆறாம் கட்டம் என வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது.



படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடல் அடக்கம்!
[Tuesday 2024-05-28 06:00]

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜா (வயது 35) மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் கடந்த 20 ஆம் தேதி (20.05.2024) மதியம் 02:00 மணியளவில் தான் திருமணம் செய்து கொள்ளும் பெண் மற்றும் அவரது தோழிகளுடன் சேர்ந்து கேடிசி நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலுக்குச் சாப்பிட சென்றுள்ளார். அதன் பின்னர் தனது வாகனத்தை எடுப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் ஒன்று தீபக் ராஜாவைச் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதில் சம்பவ இடத்திலேயே தீபக் ராஜா துடிதுடித்து உயிரிழந்தார்.



‘குரூப் - 4 தேர்வர்கள் கவனத்திற்கு’ - டி.என்.பி.எஸ்.சி. முக்கிய அறிவிப்பு!
[Monday 2024-05-27 19:00]

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வுக்கு http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.



துடிக்க துடிக்க மருமகளை உயிருடன் எரித்துக்கொன்ற மாமனார்!
[Monday 2024-05-27 19:00]

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே அமைந்துள்ளது முத்துவிஜயபுரம் கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ஜேசு. இவரது மகன் ஆரோக்கிய பிரபாகர். இவருக்கும் தட்டான் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த உமா என்பவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு மரியஜெலினா, ஜெமிதெரசா என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த குடும்பம் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.



ஜுன் 1 முதல் அமுலுக்கு வரும் விதிகள்!
[Monday 2024-05-27 19:00]

வரும் ஜுன் 1 -ம் திகதி முதல் இந்தியாவில் அமுலுக்கு வரவுள்ள சில விடயங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை கருத்தில் கொண்டும், ஒவ்வொரு மாதத்தின் ஒன்றாம் திகதியை வைத்தும் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன.



பலத்த காற்றுடன் கரையை கடந்தது ரீமல் புயல்!
[Monday 2024-05-27 19:00]

வங்கக்கடலில் நிலவிய ரீமல் புயலானது மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் - வங்கதேசத்தின் கெப்புபாரா இடையே கரையைக் கடந்தது. ரீமல் புயலானது கரையை கடந்தாலும் கொல்கத்தாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த புயலானது கரையைக் கடந்தபோது மணிக்கு 135 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் மேற்கு வங்கத்தில் பாதிப்பு ஏற்பட்டது. அப்பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பங்கள் துண்டிக்கப்பட்டு, குடிசை வீடுகள் இடிந்தது உள்பட பல்வேறு சேதங்கள் ஏற்பட்டது.



ரயில் பயணிகளுக்கு கொலை மிரட்டல்: போலீசார் அதிரடி!
[Monday 2024-05-27 06:00]

சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு விரைவு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை அடைந்ததும் மதுபோதையில் இருந்த சில இளைஞர்கள் முன்பதிவு பெட்டியில் ஏறியுள்ளனர். இந்த இளைஞர் ரயிலில் புகைபிடித்தபடியும், சத்தமாகப் பாட்டு படியப்படியும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.



‘வெளிநாட்டு வேலை’ - அயலக தமிழர் நலத்துறை எச்சரிக்கை!
[Monday 2024-05-27 06:00]

பல்வேறு வேலை வாய்ப்புகளுக்காக தமிழ்நாட்டு இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக தகவல் தொழில்நுட்ப பணி என்ற பெயரில், கம்போடியா. தாய்லாந்து, மியான்மர் (பர்மா) ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சென்றவுடன் சட்டவிரோதமான இணையதள நடவடிக்கைகளில் ஈடுபடும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அம்மாதிரி சட்டவிரோதமான இணையதள பணிகளை செய்ய மறுக்கும் நபர்களைக் கடுமையாக துன்புறுத்துகிறார்கள். இதுவரை மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து கடந்த வருடம் மட்டும் 83 தமிழர்களை அயலகத் தமிழர் நலத்துறை மீட்டு வந்துள்ளது.



பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
[Monday 2024-05-27 06:00]

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ரிமால் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது வங்காள தேசம் மற்றும் அதையொட்டிய மேற்குவங்க மாநில கடற்கரை இடையே இன்று (26.05.2024) நள்ளிரவு ரிமால் புயல் கரையைக் கடக்கிறது. அதாவது சாகர் தீவுக்கும் கெபுபாராவுக்கும் இடையே இந்த புயல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது.



ரிமால் புயல்: களத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர்!
[Sunday 2024-05-26 18:00]

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ரிமால் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது வங்காள தேசம் மற்றும் அதையொட்டிய மேற்குவங்க மாநில கடற்கரை இடையே இன்று (26.05.2024) நள்ளிரவு ரிமால் புயல் கரையைக் கடக்கிறது.



நிலச்சரிவில் சிக்கிய கிராமம்: 670 பேர் மண்ணில் புதைந்த பேரதிர்ச்சி!
[Sunday 2024-05-26 18:00]

பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 670 பேர் மண்ணில் புதைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான தகவலை அதிகாரப்பூர்வமாக ஐ நா அமைப்பு வெளியிட்டுள்ளது.



சிலந்தி அணைக்கு எதிர்ப்பு: தமிழக விவசாயிகள் போராட்டம்!
[Sunday 2024-05-26 18:00]

சிலந்தி ஆற்றின் அருகே கேரள அரசு தடுப்பணைக் கட்டுவதாக வெளியான தகவலையடுத்து தமிழக எதிர்க்கட்சிகள் இதற்கு தெரிவித்திருந்தது. இதன் காரணமாக அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறையும் எனப் பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா