Untitled Document
September 28, 2024 [GMT]
“பட்டியலினத்தவர்கள் ஊழல்வாதிகளாக முத்திரை குத்தப்படுகிறார்கள்” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
[Friday 2024-05-24 18:00]

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டங்களாக 430 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, நாளை (25-05-24) ஆறாம் கட்டமாக 57 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிந்தது. மேலும், ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் கடைசி கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டங்களாக 430 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, நாளை (25-05-24) ஆறாம் கட்டமாக 57 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிந்தது. மேலும், ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் கடைசி கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

  

அந்த வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா பஞ்ச்குலா பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “பதவியில் இருக்கும் இரண்டு முதல்வர்கள் கைது செய்யப்பட்டனர், முதலில் சிறைக்குச் சென்ற ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்னும் சிறையில் இருக்கிறார். ஏனென்றால் அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். மாயாவதி ஊழல்வாதி ஆனால் நவீன் பட்நாயக் அல்ல. லாலு யாதவ் ஊழல்வாதி. யாராவது பழங்குடியினர் அல்லது பட்டியலினத்தவர் என்றால், அவர் தானாகவே கட்டமைக்கப்படுகிறார்.

பிரதமரின் வீட்டிற்கு, எனது பாட்டி, அதன் பின்னர் தந்தை பிரதமராகவும், பின்னர் டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராகவும் இருந்தபோது, ​​நான் செல்வது வழக்கம். எனவே எனக்கு உள்ளே இருந்து அமைப்பு தெரியும். இந்த அமைப்பு தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக ஒரு முக்கிய வழியில் ஒவ்வொரு மட்டத்திலும் இணைக்கப்பட்டுள்ளது என்று நான் கூறுகிறேன். நான் ஜூன் 19, 1970 இல் பிறந்ததிலிருந்து அமைப்பின் உள்ளே இருக்கிறேன். அதனால் அதன் அமைப்பை நீங்கள் என்னிடமிருந்து மறைக்க முடியாது.

பட்டியலினத்தவர்கள், ஓபிசிகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் உட்பட நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நாட்டின் அதிகார அமைப்பில் பிரதிநிதித்துவம் பெறவில்லை. பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் ஓபிசிகளின் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஊடகங்களில் மூத்த அறிவிப்பாளர்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள், ஊடக உரிமையாளர்கள் அல்லது மேலாளர் பதவிகளில் பிரதிநிதித்துவம் இடம்பெறவில்லை” எனத் தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநில முதல்வராகப் பதவி வகித்து வந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, அவர் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. அதன்படி கடந்த ஜனவரி 31 ஆம் தேதி (31.01.2024) ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



சொந்த வீடு இருந்தும் ஹொட்டலில் தங்கும் செந்தில் பாலாஜி!
[Saturday 2024-09-28 18:00]

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியில் வந்ததும் ஹொட்டலில் தங்கி வருகிறார். கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்தது. பின்னர், கடந்த ஆண்டு ஜூன் 14 -ம் திகதி விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.



தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறிப்பு: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!
[Saturday 2024-09-28 18:00]

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



வீட்டின் முற்றத்தில் கணவரை கொன்று புதைத்த மனைவி: 30 ஆண்டுகளுக்கு பிறகு அம்பலமானது எப்படி?
[Saturday 2024-09-28 18:00]

30 ஆண்டுகளுக்கு முன்பாக தனது மகன்களுடன் சேர்ந்து தனது கணவரை மனைவி கொன்று புதைத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஹத்ரஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் பஞ்சாபி சிங் (39). இவர், தனது தாய் மற்றும் 2 சகோதரர்கள் இணைந்து 30 வருடங்களுக்கு முன்பு தந்தையை கொலை செய்ததாக பொலிஸில் புகார் அளித்துள்ளார்.



தீபாவளி பரிசாக இந்திய அரசு கொடுக்கப்போவது என்ன?
[Saturday 2024-09-28 18:00]

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மத்திய அரசு இந்திய மக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. தசரா மற்றும் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டின் இறுதியில் மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.



நாமக்கல் என்கவுன்டர் சம்பவம்: 67 லட்சம் ரூபாய் பறிமுதல்!
[Saturday 2024-09-28 07:00]

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற பகுதியைச் சுற்றியுள்ள 3 ஏ.டி.எம்.களில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் கேரளாவில் கொள்ளையடித்துவிட்டு பணத்துடன் கண்டெய்னரில் தப்பிய ஏ.டி.எம். கொள்ளையர்கள் தமிழகத்தில் பிடிபட்டுள்ளனர்.



'என் உயிர் உங்கள் காலடியில்' - செந்தில்பாலாஜி உருக்கம்!
[Saturday 2024-09-28 07:00]

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 471 நாட்கள் சிறைக்கு பிறகு உச்சநீதிமன்றம் கொடுத்த நிபந்தனை ஜாமீனில் நேற்று வெளியே வந்துள்ளார்.



'ஆபரசேன் அகழி' - ரெய்டில் சிக்கிய பணம், நகை!
[Saturday 2024-09-28 07:00]

திருச்சி மாவட்டம், மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி, திருச்சி மாவட்ட (எஸ் பி) காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் இணைந்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்.



இந்தியாவில் விரும்பி குடியேறிய அமெரிக்க பெண்!
[Friday 2024-09-27 18:00]

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவில் உள்ள டெல்லியில் குடியேறி வசித்து வருகிறார். படிப்பு, வேலை, வசதியான வாழ்க்கை உள்ளிட்ட பல காரணங்களால் பலருக்கும் அமெரிக்காவில் வாழ வேண்டும் என்று தான் ஆசை இருக்கும். ஆனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டன் பிஷ்ஷர் என்ற பெண் ஒருவர் கடந்த 2022 -ம் ஆண்டு முதல் அங்கிருந்து இந்தியாவில் உள்ள டெல்லியில் குடியேறி வாழ்ந்து வருகிறார்.



தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
[Friday 2024-09-27 18:00]

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த பரிசு!
[Friday 2024-09-27 18:00]

பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்ற நிலையில் அவருக்கு பரிசு கொடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார். பின்னர், டெல்லி சென்றவுடன் சாணக்கியாபுரத்தில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கினார்.



சிறார்களுக்கென கொண்டாடப்பட்ட விழாவில் துயரம்: சடலமாக மீட்கப்பட்ட 46 பேர்!
[Friday 2024-09-27 18:00]

கிழக்கு இந்தியாவின் பீகாரில் சிறார்களுக்காக கொண்டாடப்பட்ட மத விழா ஒன்றில் 37 சிறார்கள் உடொஅட 46 பேர்கள் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில் 15 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.



சரியும் பவானிசாகர் நீர்மட்டம்: வேதனையில் விவசாயிகள்!
[Friday 2024-09-27 06:00]

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.



வயநாடு நிலச்சரிவுக்கு ரூ.2 கோடி நிவாரணம் வழங்கிய பஜாஜ் பின்சர்வ்!
[Friday 2024-09-27 06:00]

கேரள மாநிலம் வயநாட்டில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியானதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களுக்கான நிவாரண நிதியாக 2 கோடி ரூபாயை பஜாஜ் பின்சர்வ் நிறுவனம் வழங்கியது. மேலும் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் கடன் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகியவை வயநாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.



விடுதியில் துப்பாக்கி: வடமாநில நபரை தேடும் போலீசார்!
[Friday 2024-09-27 06:00]

ஈரோடு சத்தி சாலையில் தனியார் லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. அந்த லாட்ஜில் நேற்று மாலை வடமாநில நபர் தங்கியிருந்த அறையை, லாட்ஜ் ஊழியர் சுத்தம் செய்ய உள்ளே சென்றனர். அப்போது படுக்கையில் தலையணைக்கு அடியில்‌ துப்பாக்கியும், தோட்டக்களும் இருந்தது.



இது தான் தியாகமா? - சீமான் ஆவேசம்!
[Thursday 2024-09-26 18:00]

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.



தியாகம் பெரிது: செந்தில் பாலாஜியை வரவேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
[Thursday 2024-09-26 18:00]

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்தது. பின்னர், கடந்த ஆண்டு ஜூன் 14 -ம் திகதி விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.



முகேஷ் அம்பானி, நீதா அம்பானிக்கு சொந்தமான 5 விலையுயர்ந்த சொத்துக்கள் எவை தெரியுமா?
[Thursday 2024-09-26 18:00]

இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ஆடம்பர சொத்துக்கள் ஆண்டு முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அவரது 27-மாடி மும்பை இல்லம், ஆண்டிலியா, இங்கிலாந்தில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமையான ஹோட்டல் வரை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளரின் ஆடம்பர வாழ்க்கை குறித்து தெரிந்துக்கொள்ள மக்கள் பெரும்பாலும் ஆவலுடன் இருக்கிறார்கள்.



471 நாட்கள் கழித்து ஜாமினில் வெளிவருகிறார் செந்தில் பாலாஜி!
[Thursday 2024-09-26 18:00]

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமினில் வெளிவருகிறார். கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து கடந்த 2016 -ம் ஆண்டில் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.



காருக்குள் இறந்து கிடந்த குடும்பத்தினர்: நகர சிவமடத்தை தேர்வு செய்தது ஏன்?
[Thursday 2024-09-26 06:00]

புதுக்கோட்டையில் சிவமடத்தின் வாசலில் காரில் ஒரு குடும்பத்தினர் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சாலையில் நமணசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட இளங்குடிப்பட்டி வயல்வெளியில் உள்ள நகர சிவமடம் எதிரே ஒரு காரில் சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் குடும்பத்தினர் 5 பேர் குடும்பத்துடன் இறந்து கிடந்ததுள்ளனர்.



வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று வந்தவருக்கு அதிர்ச்சி!
[Thursday 2024-09-26 06:00]

ஈரோட்டில் நகை திருட்டில் ஈடுபட்ட கொரியர் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளி தலைவர் நகர் 2 -வது தளத்தில் வசித்து வருபவர் மதன் (31). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவிக்கு திருச்செங்கோட்டில் வளைகாப்பு விழா நடந்தது. வளைகாப்பு விழாவில் பங்கேற்ற மதன் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா