Untitled Document
September 15, 2024 [GMT]
நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி!
[Monday 2024-09-02 19:00]

திருச்சி அரியமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அம்பிகாபுரம் காந்திஜி தெருவில் வசிப்பவர் ஜான் ஜுடிமெயில். இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மகள், திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  இந்த நிலையில் நேற்று (01-09-240 இரவு சிறுமி வழக்கம்போல் நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு இரவு படுத்து தூங்கியுள்ளார். காலையில் அவர் கண் விழிக்காததால் அவரது பெற்றோர் எழுப்பி பார்த்தபோது அவர் கண் விழிக்காததால் பதற்றம் அடைந்தனர். பின்னர் அருகில் உள்ள ஒரு மருத்துவரை அழைத்து சோதித்துப் பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரியவந்தது.

திருச்சி அரியமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அம்பிகாபுரம் காந்திஜி தெருவில் வசிப்பவர் ஜான் ஜுடிமெயில். இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மகள், திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (01-09-240 இரவு சிறுமி வழக்கம்போல் நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு இரவு படுத்து தூங்கியுள்ளார். காலையில் அவர் கண் விழிக்காததால் அவரது பெற்றோர் எழுப்பி பார்த்தபோது அவர் கண் விழிக்காததால் பதற்றம் அடைந்தனர். பின்னர் அருகில் உள்ள ஒரு மருத்துவரை அழைத்து சோதித்துப் பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரியவந்தது.

  

இதனால் அதிர்ச்சியடைந்த ஜான் ஜுடிமெயில் தங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து இறுதி சடங்கு செய்வதற்குரிய பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், சிறுமி இறப்பில் சந்தேகம் உள்ளது என அரியமங்கலம் போலீசாருக்கு மர்ம நபர்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்ற பொழுது, ஜான் ஜுடிமெயில் உறவினர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் செய்வதறியாது விழித்த அரியமங்கலம் போலீசார் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து சட்டரீதியாக பிரேதத்தை கைப்பற்ற முடிவு எடுத்தனர். பின்னர், அவர்களது உறவினர்களிடம் சுமுகமாக பேசி, ‘எங்களுக்கு புகார் வந்துள்ளது, அதன் அடிப்படையில் நாங்கள் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் கொடுக்க முடியும். இன்று மாலை 5 மணிக்குள் மருத்துவமனையில் கொண்டு சென்றால்தான் சிறுமியின் உடலை உங்களுக்கு பிரேத பறிசோதனை செய்து கொடுக்க முடியும்’ எனக் கூறி அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இது குறித்து அவரது உறவினர்கள் நம்மிடம் தெரிவிக்கையில், ‘சிறுமிக்கு நூடுல்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்டதால் அடிக்கடி நூடுல்ஸ் வாங்கி தானே சமைத்து சாப்பிடுவார். அந்த வகையில் தான் ஆன்லைனில் நூடுல்ஸ் ஆர்டர் போட்டு வாங்கி நேற்று இரவு சமைத்து சாப்பிட்ட பிறகு குளிர்பானம் ஒன்றை வாங்கி அருந்தினார். அதன் பின்னர் அவர் படுக்கைக்கு சென்று விட்டார். விடிந்து பார்த்தபோதுதான் அவர் பிரேதமாக இருந்ததை அறிய முடிந்தது.

பின்னர், எங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, அடக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட போது தான் போலீசார் எங்களது பெண்ணின் உடலை பறித்து சென்றனர்’ என்றனர். இதுகுறித்து அப்பகுதியில் சிலர் தெரிவிக்கையில், ‘சிறுமியை நேற்று இரவு பார்க்கும்போது நல்ல நிலையில் திடகாத்திரமாக இருந்தார். காலையில் அவர் இறந்து விட்டார் என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிறுமி குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது. இதனால் இவர் உயிரிழந்திருக்கலாம்’ என அச்சம் எங்களுக்கு என தெரிவித்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



“உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கியவர்கள் தமிழகம் திரும்புவது எப்போது?” - தமிழக அரசு தகவல்!
[Sunday 2024-09-15 18:00]

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான், அம்மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்குத் தமிழகத்தில் இருந்து சிலர் புனித பயணம் மேற்கொண்டனர். இதற்கிடையில், தவாகாட் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், புனித பயணம் மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மலைப்பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவித்து வந்தனர்.



“திமுகவுடன் கூட்டணி தொடருமா?” - தொல். திருமா பேட்டி!
[Sunday 2024-09-15 18:00]

திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “மது ஒழிப்பில் மத்திய, மாநில அரசுகளுக்குத் தான் பொறுப்பு உள்ளது என்பது போல ஒரு பார்வை இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 47 அதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருகிறது. இது தொடர்பாக இரண்டாவது ஐந்தாண்டுக் காலத்திலும், மூன்றாவது ஐந்தாண்டுக் காலத்திலும் விரிவாகக் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலே பேசப்பட்டிருக்கிறது.



உத்தரகாண்ட் நிலச்சரிவு: 30 தமிழர்கள் மீட்பு!
[Sunday 2024-09-15 18:00]

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான், அம்மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்குத் தமிழகத்தில் இருந்து சிலர் புனித பயணம் மேற்கொண்டனர். இதற்கிடையில், தவாகாட் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், புனித பயணம் மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மலைப்பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவித்து வந்தனர்.



'இட்லி உண்ணும் போட்டி' - ஒருவர் உயிரிழப்பு!
[Sunday 2024-09-15 18:00]

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அண்மையில் கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கு மேற்பட்டோர் உயிரிழந்தது இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் பல இடங்களில் ஓணம் திருவிழா கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சில இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கி இருக்கிறது.



முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
[Sunday 2024-09-15 07:00]

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் அவியனூரில் உள்ள ஸ்ரீஅர்த்த மூர்த்திஸ்வரசுவாமி சிவன் கோயிலில் சுற்றுச்சவர் எழுப்புவதற்காக கோயில் வளாகத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் எடுத்த போது சுமார் 3 1/2 அடி ஆழத்தில் ஒரு பலகை கல் கிடைத்தது. அந்த பலகை கல்லில் கல்வெட்டுகள் உள்ளதாக விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் ரமேஷ், ரங்கநாதன் மற்றும் ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.



மாந்திரீகத்தில் ஈடுபட்ட 2 பெண்கள்: அடித்தே கொன்ற கிராமத்தினர்!
[Sunday 2024-09-15 07:00]

மேற்கு வங்க மாநிலம், பீர்பம் மாவட்டம் ஹரிசாரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லோக்கி கிஷு மற்றும் டோலி சோரன் என்ற இளம்பெண்கள். இவர்கள் இருவரும் மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, நேற்று இரவு வீட்டில் இருந்த இருவரையும் கிராமத்தினர் வீட்டில் இருந்து வெளியே வரவழைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.



பட்டியலின சிறுவனை நிர்வாணப்படுத்தி நடனமாட வைத்து வீடியோ எடுத்த கொடூரம்!
[Sunday 2024-09-15 07:00]

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 12 வயது பட்டியலின சிறுவன் ஒருவன், வயர்களை திருடியதாக குற்றஞ்சாட்டி அவனை நிர்வாணப்படுத்தி நடனமாடச் சொல்லி காலணிகளால் தாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



மாற்றுத்திறனாளி பெண்ணின் நீண்ட கால தேவையை நிறைவேற்றிய தமிழக வெற்றி கழகம்!
[Saturday 2024-09-14 18:00]

மாற்றுத்திறனாளி பெண்ணின் நீண்ட கால தேவையை நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் நிறைவேற்றியுள்ளனர். தமிழக மாவட்டமான புதுக்கோட்டை, கொட்டாய்க்கார தெருவை சேர்ந்தவர் புவனேஸ்ரி. இவர் ஒரு மாற்றுத்திறனாளி பெண். இவருடைய அம்மா, அப்பா, கணவர் ஆகிய மூவரும் இறந்துவிட்டனர். இதனால் இந்த பெண் கஷ்டத்தில் இருந்து வருகிறார். இவரது வீட்டில் கழிவறை கூட கிடையாது. வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சனையை எதிர்கொண்டு வந்துள்ளார்.



ஒரு டீயின் விலை 340 ரூபாய்: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு!
[Saturday 2024-09-14 18:00]

கொல்கத்தா விமான நிலையத்தில் விற்கும் டீயின் விலையை பார்க்கும்போது, தமிழ்நாட்டை விட மேற்கு வங்கம் மாநிலத்தில் பணவீக்கம் அதிகமாக உள்ளது என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம், கொல்கத்தா விமான நிலையத்தில் டீயின் விலை 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.



எதிரிகளை தாக்க ரூ.2,500 கோடியில் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்: ஒப்புதல் அளித்த இந்திய அரசு!
[Saturday 2024-09-14 18:00]

ரூ.2,500 கோடி மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் இந்திய கடற்படையின் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. உலக நாடுகளின் போர் தாக்குதலில் ஆளில்லா சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், ஆளில்லா சாதனைங்களை உருவாக்க இந்திய கடற்படை முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில், ரூ.2,500 கோடி மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் இந்திய கடற்படையின் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.



முடி வெட்டிய தொழிலாளிக்கு பரிசுப்பொருட்கள் அனுப்பிய ராகுல் காந்தி!
[Saturday 2024-09-14 18:00]

முடிவெட்டிய சவர தொழிலாளிக்கு 3 மாதங்கள் கழித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பரிசுப்பொருட்கள் அனுப்பியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் கடந்த மே மாதம் 13 -ம் திகதி ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள பிரிஜேந்திர நகரில் உள்ள சலூன் கடைக்கு சென்று தனக்கு முடிவெட்டிக் கொண்டார்.



அன்னபூர்ணா உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை!
[Friday 2024-09-13 16:00]

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹொட்டல் உரிமையாளர் மன்னிப்பு கோரிய விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரியுள்ளார். கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் அன்னப்பூர்ணா குழுமத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அவர், "காரத்திற்கும் இனிப்பிற்கும் வெவ்வேறு ஜிஎஸ்டி உள்ளது. இனிப்பிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி, காரத்திற்கு 12 சதவீத வரி இருக்கிறது.



அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்ட விவகாரம்: கொந்தளித்த ராகுல் காந்தி!
[Friday 2024-09-13 16:00]

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹொட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்கும்படியான வீடியோ பரவிய நிலையில் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் அன்னப்பூர்ணா குழுமத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் கலந்து கொண்டார்.



"கள்ளத்தோணியில் இலங்கை பயணம் முதல் மனைவியின் மரணம் வரை" - ஆ.ராசா பகிர்ந்த குடும்ப ரகசியம்!
[Friday 2024-09-13 16:00]

தன்னுடைய மனைவி புற்றுநோயால் இறந்தது தொடர்பாகவும், குடும்ப விடயங்கள் தொடர்பாகவும் ஆ.ராசா எம்பி உணர்ச்சி பூர்வமாக பேசியுள்ளார். திமுக எம்பி ஆ.ராசா பேட்டி ஒன்றில் உணர்ச்சி பூர்வமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், "வீட்டில் என்னை எல்லோரும் ராஜா என்று தான் அழைப்பார்கள். கலைஞர் கருணாநிதியும் என்னை ராஜா என்று தான் அழைப்பார். ஆனால், தமிழ் மீது கொண்ட பற்று காரணாமாக ராசா என்றே நான் கையெழுத்து போடுவேன். அதுவே எனக்கு அரசியலிலும் நிலைத்தது.



நிர்மலா சீதாராமனிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா ஹொட்டல் உரிமையாளர்?
[Friday 2024-09-13 16:00]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமானிடம் அன்னபூர்ணா ஹொட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்கும்படியான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கடி பல்வேறு தொழிலதிபர்களுடன் ஆலோசனைகளை மேற்கொள்வார். அப்போது, வரிவிதிப்பு பிரச்சனைகள் குறித்து விவாதம் செய்யப்படும். அந்த வகையில் கோவை கொடிசியாவில் வைத்து ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அன்னப்பூர்ணா குழுமத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் பேசியது சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.



‘சடலமாக தாய்; பள்ளியில் இருந்து காணாமல் போன குழந்தை’ - வழக்கில் திடீர் திருப்பம்!
[Friday 2024-09-13 06:00]

நாகை மாவட்டம் கரியாப்படினத்தைச் சேர்ந்த விஜயகுமாரின் மனைவி நீலாவதி. இவர் கணவரைவிட்டுப் பிரிந்து வந்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சந்திரசேகரனுடன் சென்று விட்டார். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ராஜாதோப்பு பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு வாடகை வீட்டில் 7 வயது பெண் குழந்தையுடன் தங்கி இருந்த நீலாவதி (வயது 28) தங்கி இருந்தார். மணமேல்குடியில் தங்கியிருந்த நீலாவதி வீட்டிற்கு சந்திரசேகரும், கோட்டைப்பட்டனத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்ற நபரும் அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.



மீண்டும் அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன்!
[Friday 2024-09-13 06:00]

பாஜகவின் செயற்குழு உறுப்பினராக இருந்தவரும், முன்னாள் எம்.பி.யுமான மைத்ரேயன் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் மீண்டும் இணைந்தார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், மைத்ரேயன் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.



“பதவி விலகத் தயார்” - மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!
[Friday 2024-09-13 06:00]

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த 8ஆம் தேதி (08.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



மனைவியை வைத்து சூதாடிய கணவன்: 7 ஏக்கர் நிலம், நகைகள் பறிப்போன அவலம்!
[Thursday 2024-09-12 06:00]

இந்தியாவில் மனைவியை வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த கணவர் ஒருவர் சூதாட்டத்திற்கு அடிமையான நிலையில், இறுதியில் தன்னுடைய மனைவியை வைத்தே சூதாடியுள்ளார். மனைவியை வைத்து சூதாடியதோடு தன்னுடைய மனைவியை நண்பர்கள் பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் செய்யவும் அனுமதித்துள்ளார்.



உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்தில் பிரதமர் மோடி!
[Thursday 2024-09-12 06:00]

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 7ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நேற்று (11.09.2024) நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதே சமயம் பலரும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.


NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா