Untitled Document
March 31, 2025 [GMT]
தங்க மணல்: வித்தியாசமான மோசடியில் ஈடுபட்ட நபர்கள்!
[Friday 2025-03-28 18:00]

கேரளாவில் ஒரு வீட்டில் தங்கியிருந்த சிலர், தங்களிடம் தங்கம் கலந்த மண் இருப்பதாகக் கூறி தமிழ்நாட்டிலுள்ள பொற்கொலர்கள் சிலரை தொடர்புகொண்டுள்ளாரக்ள். இந்த பொற்கொல்லர்கள் கேரளாவிலுள்ள கொச்சிக்கு செல்ல, தங்க மண் வைத்திருப்பதாகக் கூறிய நபர்கள் அவர்களை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளர்கள்.  தாங்கள் வைத்திருந்த மண் மூட்டையிலிருந்து சிறிது மண்ணை எடுத்துக்கொள்ள அவர்கள் கூற, இந்த பொற்கொல்லர்கள் ஐந்து கிலோ மண்ணை ஒரு பையில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கேரளாவில் ஒரு வீட்டில் தங்கியிருந்த சிலர், தங்களிடம் தங்கம் கலந்த மண் இருப்பதாகக் கூறி தமிழ்நாட்டிலுள்ள பொற்கொலர்கள் சிலரை தொடர்புகொண்டுள்ளாரக்ள். இந்த பொற்கொல்லர்கள் கேரளாவிலுள்ள கொச்சிக்கு செல்ல, தங்க மண் வைத்திருப்பதாகக் கூறிய நபர்கள் அவர்களை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளர்கள். தாங்கள் வைத்திருந்த மண் மூட்டையிலிருந்து சிறிது மண்ணை எடுத்துக்கொள்ள அவர்கள் கூற, இந்த பொற்கொல்லர்கள் ஐந்து கிலோ மண்ணை ஒரு பையில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

  

அந்த பையை எடை போட்டபின் அதை அந்த பொற்கொல்லர்கள் சோதனையிட, உண்மையாகவே அதற்குள் தங்கத் துகள்கள் இருந்துள்ளன.

ஆகவே, தங்களுக்கு ஐந்து டன் மண் வேண்டும் என்று சொல்லி, 50 லட்சம் ரொக்கமும், 18 லட்சத்துக்கான காசோலையும் கொடுத்துள்ளார்கள் அந்த பொற்கொல்லர்கள்.

ஆனால், அந்த சிறிய பையில் அதிக அளவில் தங்கத்துகள்கள் இருந்ததால் பொற்கொல்லர்களுக்கு சற்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதாவது, தங்க நகைகள் செய்யும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து அந்த மண்ணை எடுத்ததாக மண் விற்றவர்கள் நபர்கள் கூறியுள்ளார்கள்.

ஆனால், அப்படி தொழிற்சாலையில் இருந்து எடுத்தாலுமே மண்ணில் இந்த அளவுக்கு தங்கம் இருக்காது.

ஆகவேதான் அந்த பொற்கொல்லர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர்கள் கொச்சி பொலிசாரிடம் சென்று விவரத்தைக் கூற, பொலிசார் ‘தங்க மண்’ விற்ற ஐந்து பேரை கைது செய்துள்ளார்கள். அந்த ஐந்து பேரும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.

உண்மை என்னவென்றால், அந்த சாக்கு மூட்டைகளில் இருந்தது வெறும் மண்தான். அதை அந்த பொற்கொல்லர்களேதான் அள்ளி இருக்கிறார்கள்.

ஆனால், அதிலிருந்து ஐந்து கிலோ மண்ணை எடைபோடும்போது, அந்த எடை போடும் இயந்திரத்திலும், அந்த இயந்திரத்தை வைத்திருந்த மேசையிலும் சிறிய துவாரம் போட்டு வைத்திருக்கிறார்கள் அந்த மோசடியாளர்கள்.

அந்த மேசைக்குக் கீழே ஒளிந்திருந்த ஒருவர், ஊசி மூலம், தங்க முலாம் பூசும் கரைசலை அந்த அந்த எடை போடும் இயந்திரத்திலுள்ள துவாரம் மூலம் அந்த பைக்குள் செலுத்தியிருக்கிறார்.

ஆக, மண்ணை சோதிக்கும்போது அதில் தங்கத் துகள்கள் கலந்திருப்பதுபோலவே இருந்திருக்கிறது.

என்றாலும், அவர்கள் பொற்கொல்லர்கள் என்பதாலோ என்னவோ, இந்த அளவுக்கு மண்ணில் தங்கத் துகள்கள் இருக்குமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆக, மோசடியாளர்கள் ஐந்து பேரும் வகையாக பொலிசில் சிக்கிகொண்டார்கள்!

  
   Bookmark and Share Seithy.com



ஓய்வை அறிவிக்க உள்ளாரா பிரதமர் மோடி?
[Monday 2025-03-31 18:00]

பிரதமர் மோடி ஓய்வு பெற உள்ளதாக வெளியான தகவலுக்கு மகாராஷ்டிரா முதல்வர் விளக்கமளித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்று 11 ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.



ஒன்றரை ஆண்டுகளில் மூன்று முறை வெளியே வந்துள்ளார்: விஜயை விமர்சித்த அண்ணாமலை!
[Monday 2025-03-31 18:00]

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பாஜகவை விமர்சித்த நிலையில் அண்ணாமலை அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "களத்தில் நின்று தினமும் போராடுவதே அரசியல். கட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டுகளில் மூன்று முறை வெளியே வருவது ஒரு அரசியல்.



கும்பமேளா மோனலிசாவுக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது!
[Monday 2025-03-31 18:00]

மகா கும்பமேளாவில் வைரலான மோனலிசாவுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டடுள்ளார். இயக்குனர் சனோஜ் மிஸ்ராவால் மகா கும்பமேளாவில் வைரலான மோனலிசாவுக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அவர் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளார். டெல்லி நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்ததை அடுத்து அவர் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.



விமான நிலைய கழிவறையில் குழந்தை பெற்றுக்கொண்டு குப்பை தொட்டியில் வீசிய மாணவி!
[Monday 2025-03-31 18:00]

மும்பை விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் இருந்த குப்பை தொட்டியில் குழந்தை ஒன்றின் உடல் இருந்துள்ளது. மும்பை விமான நிலையத்தில் உள்ள கழிவறை குப்பை தொட்டியில் குழந்தையின் உடல் கிடந்ததை பார்த்த துப்புரவு தொழிலாளி, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் 4 நாட்களுக்கு முன்பாக நடந்தது.



“வரலாறு காணாத வெற்றியை காண்போம்” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
[Monday 2025-03-31 06:00]

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்த தொகுதிக்குக் கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி. சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிட்டனர். முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, தேசிய கட்சியான பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்டவை இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்தன. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டது.



15ஆம் நூற்றாண்டு பெருமாள் சிலை கண்டுபிடிப்பு!
[Monday 2025-03-31 06:00]

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுக் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் காளிதாஸ், பேராசிரியர் சாலை கலையரசன் ஆகியோர் கொண்ட குழுவினர் புதுக்கோட்டை வடமலாப்பூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பெருமாள் சிலை ஒன்றைக் கண்டறிந்தனர். இவ்வூரைச் சேர்ந்த கருப்பையா என்பவர் கொடுத்த தகவலாவது, இச்சிலை ஆவாண்டு என்னுமிடத்தில் இருந்ததாகவும், தற்பொழுது சாலை ஓரத்தில் கிடப்பதாகவும் கூறினார்.



எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்!
[Monday 2025-03-31 06:00]

தென் மண்டல எல்.பி.ஜி. டேங்க் லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழகத்தில் நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் இணைந்துள்ளனர். மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களில் இருந்து எரிவாயு நிரப்பும் மையங்களுக்கு எரிவாயுவை டேங்கர் மூலம் வாடகை ஒப்பந்தம் அடிப்படையில் இயக்கி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்க லாரிகள் எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள் முன்பு வேலை நிறுத்தத்தைத் தொடங்க அறிவித்திருந்தது.



பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!
[Sunday 2025-03-30 17:00]

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாகத் தொடக்கப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வுகள் வரும் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி வரை நடைபெற இருந்தது.



லிப்ட் மெக்கானிக் கொலை: ஏரியில் வீசப்பட்ட சடலம்!
[Sunday 2025-03-30 17:00]

திருவள்ளூர் அருகே லிப்ட் மெக்கானிக் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள சின்னம்பேடு பகுதியில் வசித்து வருபவர் சங்கர் (30). திருமணம் ஆகாத நிலையில் லிப்ட் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மெக்கானிக் சங்கர் இரவு வரை வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பல இடங்களில் அவரை அவரது குடும்பத்தார் தேடி வந்தனர்.



'தமிழ் படித்தவர்களுக்கு வேலை இல்லையா?' - பாமக ராமதாஸ் ஆதங்கம்!
[Sunday 2025-03-30 17:00]

'தமிழ் படித்தவர்களுக்கு வேலை இல்லையா? அரசு பள்ளிகளில் தமிழ் கற்பிக்க தமிழாசிரியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தமிழை முதன்மைப் பாடமாகத் தேர்வு செய்து பட்டப்படிப்பு (பி.ஏ), பட்ட மேற்படிப்பு (எம்.ஏ), இளம் முனைவர்(எம்.பில்), முனைவர் (பி.எச்டி) படிப்புகளையும், அவற்றுடன் கல்வியியல் (பி.எட்) பட்டமும் பெற்ற 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலைவாய்ப்பின்றியும், தகுதிக்கு குறைவான பணிகளை பார்த்துக் கொண்டும் அவதிப்பட்டு வருகின்றனர். பலர் பட்டம் பெற்று 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அவர்களின் அவல நிலைக்கு தமிழக அரசு கடைபிடித்து வரும் அன்னைத் தமிழுக்கு எதிரான கொள்கைகள் தான் காரணம் ஆகும்.



விஜய் முதலில் திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும்: தமிழிசை!
[Sunday 2025-03-30 17:00]

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுகவை எதிர்ப்பதை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தவெக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் விஜய் பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் தவெக - திமுக இடையேதான் போட்டி என கூறியதை தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசியதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.



மத்திய அரசு மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்!
[Sunday 2025-03-30 07:00]

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGA) எனப்படும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய ரூ.4 ஆயிரத்து 34 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டைத் தொடர்ச்சியாக வஞ்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா 2 இடங்களில் (29.03.2025) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இது தொடர்பான புகைப்படங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.



தர்ப்பூசணி பழத்தில் கலப்படம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
[Sunday 2025-03-30 07:00]

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அடையார் மண்டலம் இந்திரா நகர் தொடக்கப் பள்ளியில் கோடைகால வெப்ப அலை பாதிப்பு மற்றும் வெப்பவாத தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (29.03.2025) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் துணை மேயர் மு. மகேஷ் குமார், கூடுதல் ஆணையர் வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ் எனப் பலரும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்ந்தித்து பேசினார்.



மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தி.மு.க. பதிலடி!
[Sunday 2025-03-30 07:00]

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ‘மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை தமிழில் கொண்டு வராததால் திமுக அரசு தமிழர்களுக்கு எதிரானது’ என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். இந்த கருத்தை எக்ஸ் சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.



குழந்தை வேண்டும் என்பதற்காக மந்திரவாதி உதவியுடன் இளைஞரை நரபலி கொடுத்த நபர்!
[Saturday 2025-03-29 18:00]

பீஹாரில், தனக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக மந்திரவாதி ஒருவரின் உதவியுடன் இளைஞர் ஒருவரை நரபலி கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பீஹாரிலுள்ள ஔரங்கபாதைச் சேர்ந்த யுகல் யாதவ் என்னும் இளைஞர் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் பொலிசார் அவரைத் தேடிவந்துள்ளார்கள். அப்போது, Banger என்னும் கிராமத்தில் ஒரு இடத்தில் சாம்பலுக்குள் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



ரஷ்ய எண்ணெய் கப்பலை திருப்பி அனுப்பிய இந்தியா!
[Saturday 2025-03-29 18:00]

ஆவணங்கள் குறைபாடு காரணமாக ரஷ்ய எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஹோண்டுராஸ்(Honduras) கொடி ஏற்றப்பட்ட "அந்தமான் ஸ்கைஸ்"(Andaman Skies) என்ற பழமையான ரஷ்ய எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த கப்பல் சுமார் 7,67,000 பேரல் ரஷ்ய கச்சா எண்ணெயை ஏற்றி வந்த நிலையில், இந்திய துறைமுகமான வாடினாரில்(Vadinar) நுழைய மறுப்பு தெரிவிக்கப்பட்டது.



"தொண்டர்களை உற்சாகப்படுத்தவே விஜய் இவ்வாறு பேசியுள்ளார்" - எடப்பாடி பழனிச்சாமி!
[Saturday 2025-03-29 18:00]

தவெக தொண்டர்களை உற்சாகப்படுத்தவே விஜய் இவ்வாறு பேசியுள்ளார் என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆவேசமாக உரையாற்றினார். அப்போது அவர், "2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி.



முட்டை வியாபாரிக்கு ₹6 கோடி ஜிஎஸ்டி வரி: வருமான வரித்துறை அறிவிப்பால் அதிர்ச்சி!
[Saturday 2025-03-29 18:00]

கோடிக்கணக்கான வரி கட்டச் சொல்லி ஏழை வியாபாரிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் முட்டை விற்பனையாளர் மற்றும் ஜூஸ் விற்பனையாளர் ஆகிய இருவருக்கு, கோடிக்கணக்கான ரூபாய்களை வரி கட்டச் சொல்லி வருமான வரித்துறை அனுப்பிய அறிவிப்பால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.



தாட்கோவிற்கு புதிய தலைவர் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு!
[Saturday 2025-03-29 06:00]

தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி, வருமானம் ஈட்டுவதற்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் கடந்த 1974ஆம் ஆண்டு தாட்கோ (TAHDCO - தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு வாரியம்) ஆரம்பிக்கப்பட்டது. இந்த இந்நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துதல், இளைஞர்களுக்கு வேலை மற்றும் சுய வேலைவாய்ப்புக்காகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குதல், அரசாங்கத்தால் ஒப்படைக்கப்பட்ட கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.



பிரதமர் மோடியுடன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. சந்திப்பு!
[Saturday 2025-03-29 06:00]

சிவகங்கை மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிரதமர் மோடியை (28.03.2025) சந்தித்துப் பேசியுள்ளார். இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அதிகரித்து வரும் தெருநாய்களால் ஏற்படும் உடல்நல பாதிப்பு மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த கவலைகள் குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக, இன்று நாடாளுமன்றக் கட்டட அலுவலகத்தில் பிரதமரைச் சந்தித்தேன்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Latika-Gold-House-2025
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா