Untitled Document
June 26, 2024 [GMT]
எங்களுடைய முதலமைச்சராகவே இருக்க வேண்டும் ! - கால்கட்டுப் போடும் மாகாணசபை உறுப்பினர்கள்
[Thursday 2016-01-14 20:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சராகவே நீங்கள் செயற்பட வேண்டும். இந்தப் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு வேறு தளங்களில் நீங்கள் இயங்குவதை நாம் விரும்பவில்லை. எங்களுடைய முதலமைச்சராகவே இருக்க வேண்டும் இவ்வாறு வடக்கு மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எடுத்துரைத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சராகவே நீங்கள் செயற்பட வேண்டும். இந்தப் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு வேறு தளங்களில் நீங்கள் இயங்குவதை நாம் விரும்பவில்லை. எங்களுடைய முதலமைச்சராகவே இருக்க வேண்டும் இவ்வாறு வடக்கு மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எடுத்துரைத்துள்ளனர்.

  

"உங்களை யாரோ சிலர் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். இதிலிருந்து விடுபட்டு நீங்கள் மீண்டும் எங்களின் முதலமைச்சராக எங்களோடு இணைந்து பணியாற்றவேண்டும்" என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கும், ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல், முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அமைச்சர்கள், அவைத் தலைவர் தவிர்த்து ஏனைய ஆளும் கட்சி உறுப்பினர்களால் நேற்றுமுன்தினம் இரண்டாவது தடவையாகவும் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் செயலகத்தில் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக, யாழ்.நகரிலுள்ள தனியார் விடுதியில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தனித்துக் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர். அதன் பின்னரே முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

கடந்த கூட்டத்தின் அறிக்கை முதலமைச்சரினால் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் முதலில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் திருத்தங்கள் சில உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டன. மேலும், அமைச்சரவையின் செயற்திறனின்மை அதனால் வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கிய நிதி திரும்பிச் சென்றமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டன.

மேலும் முன்னைய பிரதம செயலாளர் வேறு திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை, உறுப்பினர்களுக்கு அதிகரித்து வழங்க ஏற்பாடு செய்திருந்தார். இப்போது அவ்வாறு செய்ய முடியாது என்று தெரிவிக்கப்படுகின்றது. உறுப்பினர்களுக்கு அதிகரித்த நிதி வழங்கப்படவேண்டும். உறுப்பினர்களுக்குரிய கெளரவம் வழங்கப்படவேண்டும் என்பதை உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாகாண சபை உறுப்பினர்கள் பங்குபற்றும் நிகழ்வுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைக்கலாம் என்றும், அதில் எந்தத் தவறும் இல்லை எனவும் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஒவ்வொரு உறுப்பினர்களையும் அவர்களுடைய பிரதேசம் சார்ந்து நியமிக்கவுள்ளேன். இது தொடர்பில் மத்திய அரசின் அதிகாரிகள் - மாகாண அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்துவேன். இதனூடாக உங்களுடைய பகுதிகளின் அபிவிருத்திப் பணிகளை நீங்களே முன்னெடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது தொடர்பில் வெளியாகிய செய்திகள் தொடர்பிலும் பேசப்பட்டது. "முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது தொடர்பிலான சிந்தனையே எம்மிடம் இல்லை. நாங்கள் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை ஆதரவு தெரிவிக்கவே இங்கு ஒன்றாகக் கூடியுள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் என்ற பெயரைப் பயன்படுத்திக் கொண்டு வேறு தளங்களில் இயங்குவது சரியாகத் தென்படவில்லை.

நீங்கள் எங்களின் முதலமைச்சராக - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சராகப் பணியாற்றவேண்டும். உங்களை யாரோ சிலர் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். இதிலிருந்து விடுபட்டு நீங்கள் மீண்டும் எங்களின் முதலமைச்சராக எங்களோடு இணைந்து பணியாற்றவேண்டும்" என்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எங்களின் முதலமைச்சராக இருந்து கொண்டு, எங்கள் ஒருவருக்கும் தெரியாமல், முதலமைச்சர் என்ற பெயரைப் பயன்படுத்தி வேறு அமைப்புகளின் கூட்டங்களுக்குச் சென்றமை மனவேதனையாக இருக்கின்றது என்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இதன்போது தங்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, உறுப்பினர்களின் குற்றச்சாட்டுக்கள் - கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு நேரம் போதாமையினால், முதலமைச்சர் எதிர்வரும் 17 ஆம் திகதி மீளவும் கூட்டத்தைக் கூட்டி பதில் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் அன்றைய தினம் அமைச்சர்களையும் அழைத்து வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



வங்குரோத்தில் இருந்து மீண்டதாக அறிவிக்கவுள்ளார் ரணில்!
[Wednesday 2024-06-26 06:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.



ரணிலுக்கு ஆதரவளிப்பார் சம்பந்தன்!- வஜிர நம்பிக்கை.
[Wednesday 2024-06-26 06:00]

இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எடுப்பார் என்று நம்புகின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.



நீதிபதிகள் இருவரை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவுக்கு அழைக்க வேண்டும்!
[Wednesday 2024-06-26 06:00]

பாராளுமன்றத்தில் நான் தெரிவித்த கருத்தொன்று தொடர்பில் நீதிச்சேவை சங்கத்தின் தலைவர் மாவட்ட நீதிபதி ருவன் திஸாநாயக்க மற்றும் செயலாளர் இசுரு நெத்திகுமாரகே ஆகிய இருவரும் பகிரங்கமாக கருத்து தெரிவித்து ஒழுக்கயீனமாக செயற்பட்டுள்ளனர். இந்த இரண்டு நீதிபதிகளையும் பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள்தொடர்பான குழுவுக்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.



நீதித்துறையில் தலையிடக் கூடாது!
[Wednesday 2024-06-26 06:00]

பாராளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில், நீதித்துறை மற்றும் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் விவகாரங்களில் தலையிடுவதை பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.



யாழ்., கிளிநொச்சிக்கு பதில் மாவட்டச் செயலாளர்கள் நியமனம்!
[Wednesday 2024-06-26 06:00]

கொழும்பு, களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நான்கு புதிய மாவட்டச் செயலாளர்களை பிரதமர் தினேஷ் குணவர்தன நியமித்துள்ளார்.



இன்று பிற்பகலுக்குப் பின்னர் வடக்கில் மழை!
[Wednesday 2024-06-26 06:00]

இன்று பிற்பகலுக்கு பின்னர் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ. பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளரும் வானிலையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.



பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலா தகவல் மையம்! Top News
[Wednesday 2024-06-26 06:00]

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்சினால் செவ்வாய்க்கிழைமை திறந்து வைக்கப்பட்டது.



விஜயதாஸவுக்கு தடை நீடிப்பு!
[Wednesday 2024-06-26 06:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக ஏற்றுக்கொள்வதை தடுத்து விடுக்கப்பட்டுள்ள இடைக்கால தடை, ஜூலை 9ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.



சட்டமா அதிபரின் பதவிக்காலத்தை நீடித்தார் ஜனாதிபதி!
[Wednesday 2024-06-26 06:00]

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அனுமதியை வழங்கியுள்ளார். சட்டமா அதிபரின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.



மூதூரில் குளவி கொட்டி 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
[Wednesday 2024-06-26 06:00]

மூதூரிலுள்ள பாடசாலையொன்றில் மாலை நேர வகுப்புக்குச் சென்ற மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகினர். 30 மாணவர்கள் உடனடியாக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களே குளவி கொட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.



ரொறன்ரோ இடைத்தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி 590 வாக்குகளால் தோல்வி!
[Tuesday 2024-06-25 17:00]

ரொறன்ரோ சென்.போல்ஸ் நாடாளுமன்றத் தொகுதியில் நேற்று நடந்த இடைத் தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி வேட்பாளர் தோல்வியடைந்துள்ளார்.



ஜூலை 2ஆம் திகதி அவசரமாக கூட்டப்படுகிறது நாடாளுமன்றம்!
[Tuesday 2024-06-25 17:00]

எதிர்வரும் 2ஆம் திகதி பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு சபாநாயர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தல் விடுத்துள்ளார்.



இந்திய மீனவர்களை கைது செய்ய முயன்ற கடற்படை சிப்பாய் பலி- படகும் சேதம்.
[Tuesday 2024-06-25 17:00]

வடக்கு கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குறித்த இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது கடற்படை அதிகாரி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.



வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம்!
[Tuesday 2024-06-25 17:00]

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை 10மணிக்கு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.



முன்னர் ஐஸ் கிறீமுக்குள் தேரை, இப்போது மிக்சருக்குள் பொரிந்த பல்லி! Top News
[Tuesday 2024-06-25 17:00]

வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் அமைந்துள்ள கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட மிக்சரில் பல்லி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



அச்சுவேலியில் வீட்டை உடைத்து கொள்ளை!
[Tuesday 2024-06-25 17:00]

யாழ்ப்பாணம்- அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



இலங்கைக்கு 150 மில்லியன் டொலர்- உலக வங்கி ஒப்புதல்!
[Tuesday 2024-06-25 17:00]

இலங்கைக்கு 150 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இலங்கைக்கான ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



குடிசை மீது விழுந்தது பனைமரம்- சிறுவன் காயம்.
[Tuesday 2024-06-25 17:00]

திடீர் சூறைக்காற்றினால் காரைநகர் களபூமியில் உள்ள ஓலைக் குடிசை மீது பனை முறிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.



ஒசாலா ஹேரத்தும் களமிறங்குகிறார்!
[Tuesday 2024-06-25 17:00]

டயனா கமகேயிற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த சமூக செயற்பாட்டாளர் ஒசாலா ஹேரத் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். புதிய சுதந்திர முன்னணி கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



200 கிலோ போதைப்பொருளுடன் படகு சிக்கியது!
[Tuesday 2024-06-25 17:00]

மேற்கு கடற்பரப்பில் 200 கிலோ கிராம் போதைப்பொருளுடன் படகு ஒன்றை கைப்பற்றி இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். சுமார் 121 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையில் இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.


Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா