Untitled Document
June 24, 2024 [GMT]
காரைதீவில் அடுத்த சோகம்- உகந்தைக்கு சென்று திரும்பிய வைத்தியர் கடலில் விழுந்து மரணம்!
[Sunday 2024-06-16 05:00]


அம்பாறை - காரைதீவில்  நேற்று  இரவு  வைத்தியர் ஒருவர் கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். உகந்தைமலை முருகன் ஆலயத்தில் இருந்து வருகின்ற வழியில் பாணமை கடலில் தவறி வீழ்ந்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறை - காரைதீவில் நேற்று இரவு வைத்தியர் ஒருவர் கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். உகந்தைமலை முருகன் ஆலயத்தில் இருந்து வருகின்ற வழியில் பாணமை கடலில் தவறி வீழ்ந்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  

சம்பவத்தில், அம்பாறை, காரைதீவைச் சொந்த இடமாகக் கொண்ட வைத்தியர் இ.தக்சிதன் என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

, உயிரிழந்தவரின் சடலம் பிரதே பரிசோதனைக்காக பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இருந்து இம்முறை மருத்துவத்துறைக்குத் தெரிவான காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் நேற்றுமுன்தினம் லகுகல கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பில் போராட்டம்! Top News
[Monday 2024-06-24 17:00]

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தலைமையில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.



இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதாக தொழிற்கட்சி வாக்குறுதி!
[Monday 2024-06-24 17:00]

பிரிட்டனின் தொழிற்கட்சி இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது.



கல்முனையை முடக்கிய போராட்டம் - போக்குவரத்து தடை, அரச செயலகங்கள் முடக்கம், விமானம் வட்டமடிப்பு! Top News
[Monday 2024-06-24 17:00]

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயங்களுக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதால், மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு தடைப்பட்டதுடன், அரச செயலகங்களும் முற்றுகையிடப்பட்டன.



ரணிலுடன் இணைந்து போட்டியா?- மஹிந்தவின் தீர்மானம்.
[Monday 2024-06-24 17:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து பின்னர் தீர்மானிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



இந்தியா- இலங்கை இடையே தரைப்பாலம் - பேராயர் கடும் எச்சரிக்கை!
[Monday 2024-06-24 17:00]

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டால் இலங்கையின் இறைமைக்கும் சுதந்திரத்திற்கும் ஆபத்து என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகிவிடும் என அவர் எச்சரித்துள்ளார்.



சரத் பொன்சேகாவிற்கு எதிராக இந்த வாரம் நடவடிக்கை!
[Monday 2024-06-24 17:00]

முன்னாள் இராணுவ தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவிற்கு எதிராக கட்சி இந்த வாரம் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.



காய்ச்சல் ஏற்பட்ட பெண் மரணம்!
[Monday 2024-06-24 17:00]

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று , மருந்தை உட்கொண்ட பெண் நேற்று ர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் , சாவற்காட்டு பகுதியை சேர்ந்த 63 வயதுடைய விஜயகுமார் குணராணி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்



வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி!
[Monday 2024-06-24 17:00]

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.



தள்ளுபடி விலையில் ஹெரோயின் விற்ற ஆசிரியை, கணவன் கைது!
[Monday 2024-06-24 17:00]

தாங்கள் ஆரம்பித்த சட்டவிரோதமான வர்த்தகத்துக்கு ஒருவருடம் நிறைவடைவதை முன்னிட்டு, வருட தள்ளுபடி கொடுத்த ஆசிரியையும், அவருடைய கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



முச்சக்கரவண்டி விபத்தில் சாரதி படுகாயம்!
[Monday 2024-06-24 17:00]

மானிப்பாய் - கோப்பாய் பிரதான வீதியில் உரும்பிராய் சந்திக்கு அருகில் முச்சக்கர வண்டி விபத்துக்குளானதில் ஒருவர் காயமடைந்தார்.



10 நாட்களுக்குள் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்!
[Monday 2024-06-24 05:00]

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.



காதலால் வந்த மோதல் - கிளிநொச்சி இளைஞனின் கை துண்டிப்பு!
[Monday 2024-06-24 05:00]

கிளிநொச்சி -விநாயகபுரம் பகுதியில்நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற தகராற்றில் கை துண்டாடப்பட்டு படுகாயமடைந்த நிலையில் இளைஞன் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



புதன்கிழமை ஜனாதிபதியின் விசேட உரை!
[Monday 2024-06-24 05:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



பறவைக்காய்ச்சல் பரவிய நாடுகளில் இருந்து இறக்குமதிக்குத் தடை!
[Monday 2024-06-24 05:00]

பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ள எந்தவொரு நாட்டிலிருந்தும் விலங்குகள் அல்லது விலங்கு சார்ந்த உற்பத்தி பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.



சர்வஜன அதிகாரத்தின் வேலைத்திட்ட முதல் வரைவு 27ஆம் திகதி!
[Monday 2024-06-24 05:00]

சர்வஜன அதிகாரம் தமது வேலைத்திட்டத்தை உள்ளடக்கிய முதலாவது வரைவை ஜூன் 27ஆம் திகதி மக்களிடம் சமர்ப்பிக்கும் என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மக்களின் கருத்துகளைப் பெற்று அதன் இரண்டாவது வரைவையும் தாயாரிக்கவுள்ளதாக அவர் கூறினார்.



தொலைபேசி கம்பங்களை சாய்த்த கப் வாகனம்!
[Monday 2024-06-24 05:00]

கிளிநொச்சி - கனகபுரம் வீதியில் நேற்று அதிகாலை சாரதியின் கட்டுப்பாட்டை மீறிய கப்ரக வாகனம் ஒன்று தொலைதொடர்பு தூண்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் வாகன சாரதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - வவுனியாவில் ஒருவர் கைது!
[Monday 2024-06-24 05:00]

வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார், தெரிவித்தனர்.



நெடுந்தீவு கொலை சந்தேக நபர்களை பிடிக்க பொலிசாருடன் பொதுமக்களும் தேடுதல்!
[Monday 2024-06-24 05:00]

யாழ்ப்பாணம், நெடுந்தீவு இளைஞன் படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவரை கைது செய்வதற்கு பொலிஸாருடன் இணைந்து ஊர் இளைஞர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.



கொழும்பு சிறுவன் யாழ். பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்!
[Monday 2024-06-24 05:00]

தனது தாயும் சித்தப்பாவும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகக் கூறி கொழும்பை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளான் .



ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டி!
[Monday 2024-06-24 05:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்ற அடையாளம் கிடைக்காது விட்டாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி.விஜயதாச ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.


Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா