Untitled Document
June 26, 2024 [GMT]
வழக்கை முடிவுறுத்துவதற்கு தமிழ் அரசுக் கட்சி மத்திய குழுவில் தீர்மானம்!
[Sunday 2024-06-16 18:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

  

தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை இடம்பெற்றது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி. தவராசா உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர், ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் வழக்கு தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பான விளக்கம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

கடந்த தவணையில் எதிராளிகளாக பெயரிடப்பட்ட ஏழு பேருடன் கிளிநொச்சியை சேர்ந்த ஜீவராஜா என்பவர் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு விண்ணப்பம் செய்திருந்தார்.

அவரது விண்ணப்பம் தொடர்பாக ஆட்சேபனைகள் இருப்பின் அந்த ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்காக, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் யோகேஸ்வரன் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி அவகாசம் வழங்குமாறு தவணை கேட்டிருந்தார். நானும் அப்படி கேட்டிருக்கின்றேன். அதனையடுத்து எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதிக்கு வழக்கு அழைக்கப்படவுள்ளது.

அந்த வகையில், கடந்த தவணைக்கு முன்பாக கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கமைய வழக்கை முடிவுறுத்திக்கொள்வது தொடர்பாக நீதிமன்றிலே நான் கூறியிருக்கின்றேன். எதிராளிகள் அழைத்துள்ள ஆட்சேபனைகள் தொடர்பாக வழக்காளி தன் நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் என்ற காரணத்துக்காகவே கடந்த தவணை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதுபோன்ற சிவில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும்போது அதில் பல படிமுறைகள் உள்ளது. அவற்றை கடந்த பின்னரே வழக்கு விசாரணைக்கு நியமிக்கப்படலாம். சாதாரணமாக இவ்வாறான வழக்கில் ஒரு வருடத்துக்கு பின்னரே முதலாவது விளக்கத்துக்கான திகதி குறிக்கப்படும். ஆனால், இந்த வழக்கில் வழக்கை முடிவுறுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக நாங்கள் குறுகிய தினத்தை கேட்டிருக்கின்றோம்.

அன்றைய தினம் வழக்காளி நீதிமன்றிலே தெரிவித்த விடயத்துடன், எதிராளிகள் ஏழு பேரும் அழைத்திருக்கின்ற ஆட்சேபனைகளின் அடிப்படையில் மூன்று வித்தியாசமான நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டது.

குறிப்பாக, நானும் கட்சியின் பொதுச்செயலாளரும் நிர்வாக செயலாளரும் ஒரு நிலைப்பாட்டையும், மாவை சேனாதிராஜா மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் வேறொரு நிலைப்பாட்டையும் சிறிதரன், குகதாசன் ஆகியோர் இன்னொரு நிலைப்பாட்டையும் எடுத்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் கட்சி ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுக்காத சூழ்நிலையில் நாங்கள் எப்படி எமது நிலைப்பாட்டை இதற்கு தெரியப்படுத்துவது என்று அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இருப்பினும், கட்சி தற்போது ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது. வழக்காளி கோரும் நிவாரணங்களை வழங்கி தெரிவுகளை மீள செய்வதற்கு நான் இணங்குகின்றேன் என்று சிறிதரன் கூறியிருந்தார். அதனை நீதிமன்றிலே நான் சொல்லியிருக்கின்றேன்.

இப்போது நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ள காரணத்தினால் நாங்கள் ஏழு பேரும் எட்டாவது எதிராளியான ரத்தின வடிவேலும் இணைந்து, வழக்கிலே எமது மறுமொழியை ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்காக வழக்காளியோடு இணக்கப்பாட்டுக்கு வருகிறோம் என்று கூறி வழக்கை முடிவுறுத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்காக வழக்காளியின் சட்டத்தரணியோடு நான் பேசியிருக்கின்றேன். ஏனையவர்களின் சட்டத்தரணிகளுடன் பேசி பொது நிலைப்பாட்டுக்கு இணங்கிக்கொள்வதுடன், எதிர்வரும் மாதம் 14ஆம் திகதி வவுனியாவில் மத்திய குழு மீண்டும் கூடி அந்த மறுமொழியின் வரைபை மத்திய செயற்குழுவுக்கு சமர்ப்பித்து அதன் அங்கீகாரத்தை பெறவேண்டும்.

அதனையடுத்த தவணையில் நீதிமன்றில் சமர்ப்பித்து, அதன் பின்னர் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரலாம் என்று தீர்மானித்திருக்கின்றோம் என்றார்

  
   Bookmark and Share Seithy.com



ரொறன்ரோ இடைத்தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி 590 வாக்குகளால் தோல்வி!
[Tuesday 2024-06-25 17:00]

ரொறன்ரோ சென்.போல்ஸ் நாடாளுமன்றத் தொகுதியில் நேற்று நடந்த இடைத் தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி வேட்பாளர் தோல்வியடைந்துள்ளார்.



ஜூலை 2ஆம் திகதி அவசரமாக கூட்டப்படுகிறது நாடாளுமன்றம்!
[Tuesday 2024-06-25 17:00]

எதிர்வரும் 2ஆம் திகதி பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு சபாநாயர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தல் விடுத்துள்ளார்.



இந்திய மீனவர்களை கைது செய்ய முயன்ற கடற்படை சிப்பாய் பலி- படகும் சேதம்.
[Tuesday 2024-06-25 17:00]

வடக்கு கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குறித்த இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது கடற்படை அதிகாரி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.



வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம்!
[Tuesday 2024-06-25 17:00]

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை 10மணிக்கு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.



முன்னர் ஐஸ் கிறீமுக்குள் தேரை, இப்போது மிக்சருக்குள் பொரிந்த பல்லி! Top News
[Tuesday 2024-06-25 17:00]

வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் அமைந்துள்ள கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட மிக்சரில் பல்லி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



அச்சுவேலியில் வீட்டை உடைத்து கொள்ளை!
[Tuesday 2024-06-25 17:00]

யாழ்ப்பாணம்- அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



இலங்கைக்கு 150 மில்லியன் டொலர்- உலக வங்கி ஒப்புதல்!
[Tuesday 2024-06-25 17:00]

இலங்கைக்கு 150 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இலங்கைக்கான ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



குடிசை மீது விழுந்தது பனைமரம்- சிறுவன் காயம்.
[Tuesday 2024-06-25 17:00]

திடீர் சூறைக்காற்றினால் காரைநகர் களபூமியில் உள்ள ஓலைக் குடிசை மீது பனை முறிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.



ஒசாலா ஹேரத்தும் களமிறங்குகிறார்!
[Tuesday 2024-06-25 17:00]

டயனா கமகேயிற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த சமூக செயற்பாட்டாளர் ஒசாலா ஹேரத் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். புதிய சுதந்திர முன்னணி கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



200 கிலோ போதைப்பொருளுடன் படகு சிக்கியது!
[Tuesday 2024-06-25 17:00]

மேற்கு கடற்பரப்பில் 200 கிலோ கிராம் போதைப்பொருளுடன் படகு ஒன்றை கைப்பற்றி இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். சுமார் 121 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையில் இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.



பொது வேட்பாளரை நிறுத்த குத்துவிளக்கு கூட்டணி ஆதரவு! Top News
[Tuesday 2024-06-25 04:00]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சார்பில் ஒரு கொள்கை முடிவாக இருந்த நிலையில் திங்கட்கிழமை அது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அதனை முன்னெடுத்துச் செல்வதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.



தீவிபத்தில் நாசமாகியது வவுனியா தொழிற்சாலை! Top News
[Tuesday 2024-06-25 04:00]

வவுனியா, மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலை ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.



பல்கலைக்கழகங்களின் பாதுகாப்புக்கு இராணுவத்தை அழைக்கிறது அரசாங்கம்!
[Tuesday 2024-06-25 04:00]

அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.



முருங்கன் விபத்தில் இளம் குடும்பத் தலைவர் பலி!
[Tuesday 2024-06-25 04:00]

மன்னார் - முருங்கன் ரயில் கடவை பகுதியில் நேற்று மாலை பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.



இனக்குரோதத்தை தூண்டும் அரச அதிபர், கல்முனை தெற்கு பிரதேச செயலர்!
[Tuesday 2024-06-25 04:00]

மாவட்ட அரசாங்க அதிபர் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே இனக்குரோதத்தை வளர்த்துவிடுகின்ற முகமாகத்தான் திட்டமிட்டு தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றார். அவ்வாறே கல்முனை தெற்கு பிரதேச செயலாளரும் இரு இனங்களுக்குள் இனக்குரோதங்களை ஏற்படுத்தும் விதமாக சட்டத்துக்கு முரணாக இந்த அலுவலகங்களின் விவகாரத்தில் தலையிட்டு அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.



நான் ஜனாதிபதியாவேன்! - அடித்துச் சொல்கிறார் விஜேதாச.
[Tuesday 2024-06-25 04:00]

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சீரழிப்பவர்களின் சதித்திட்டங்களை விரைவில் அம்பலப்படுத்துவேன். நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவேன் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.



வவுனியாவில் தாக்குதல்- தந்தை, மகன் காயம்!
[Tuesday 2024-06-25 04:00]

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளைஞர் குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



பாகிஸ்தானில் இருந்து வந்த பொதியில் 4 கிலோ ஐஸ்!
[Tuesday 2024-06-25 04:00]

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதியில் 4 கிலோ ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் இந்த சந்தேகத்திற்கிடமான பொதி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதன் பெறுமதி சுமார் 400 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



பணவீக்கம் வீழ்ச்சி!
[Tuesday 2024-06-25 04:00]

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் தரவுகளின் அடிப்படையில், இலங்கையின் பணவீக்கம் ஏப்ரல் 2024 இல் 2.7% காணப்பட்டதுடன், அது மே 2024 இல் 1.6% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.



சிறுமி பாலியல் பலாத்காரம் - குற்றவாளிக்கு 35 வருட சிறைத்தண்டனை!
[Tuesday 2024-06-25 04:00]

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா