Untitled Document
June 26, 2024 [GMT]
இனப்படுகொலையாளிகள் மீது நம்பிக்கை வைக்க தமிழர்கள் தயாராக இல்லை!
[Sunday 2024-06-16 18:00]


இனப்படுகொலையாளிகள் மீது நம்பிக்கை வைக்க தமிழர்கள் தயார் இல்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இன்று  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலையாளிகள் மீது நம்பிக்கை வைக்க தமிழர்கள் தயார் இல்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

  

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடு ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கி கொண்டிருக்கையில் தெற்கின் வேட்பாளர்களாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளோரில் பிரதானமானவர்களாக கருதப்படுவோர் தமது தேர்தல் களச் சந்தையை வடக்கிலும் விரித்து தமது முகவர்களோடு இரகசிய பேச்சு வார்த்தை நடத்துவதோடு திறந்த வெளியில் ஊடக சந்திப்புகள் நடாத்தி வடக்கு கிழக்கு தமிழ் மக்களை மதி மயங்கச் செய்யவும் வாக்கு சாவடிக்குள் அனுப்பவும் முயலுவதாக தோன்றுகிறது. இவர்களின் சதி வலைக்குள் சிக்க வேண்டாம் என தமிழ் தேச உணர்வாளர்களை கேட்டுக் கொள்கின்றோம்.

வடகிழக்கில் தமிழர்கள் மத்தியில் பேரினவாத கட்சிகளின் நேரடி முகவர்களாக செயற்படுவோரை மக்கள் அறிவர். தமிழர் தேசத்தில் தேசியத்தின் ஊற்று என்றும் தாமே சுயநிர்ணயத்தின் தோற்றுவாய் எனவும் பகிரங்கமாக மேடையமைத்து கொக்கரிக்கும் கூட்டம் தற்போது இனப்படுகொலையாளர்களுக்கு துணை முகவர்களாக பொதுவெளியில் செயற்பட தொடங்கி விட்டனர்.

அத்தோடு கூட்டாக ஊடகங்களில் தோன்றி இது நட்பு ரீதியான பேச்சு வார்த்தை, சுமூக பேச்சு வார்த்தை, நம்பிக்கை தருகின்ற பேச்சு வார்த்தை, தொடர வேண்டிய பேச்சு வார்த்தை என கூறுவது யாரை ஏமாற்றுவதற்கு?

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பிலான கலந்துரையாடல்கள் வலுப்பெற்று வரும் களச்சூழலில் அதற்கு "எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். பிரச்சாரம் செய்வேன்" என சூளுரைத்தவரும் அவரின் கட்சியினரும் தமிழர் வாக்குகளை இரண்டாவது தெரிவிற்கு விட்டு தள்ளுவதற்கு நேரடியாகவே முயற்சி எடுப்பதாக தோன்றுகின்றது. இது தோற்கடிக்கப்படல் வேண்டும்.

தெற்கில் ஜனாதிபதி வேட்பாளர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள அத்தனை பேரும் பேரினவாதிகளே. யுத்த குற்றவாளிகளே. இவர்களே தமிழர்களை முள்ளிவாய்க்கால் வரை இழுத்து வந்து இனப்படுகொலை செய்தவர்கள்.

இனியும் இவர்களில் நம்பிக்கை வைக்க முடியாது. தமிழர்கள் நாம் சுயநிர்ணய உரிமையுடையவர் இதனை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் யுத்த குற்றங்களுக்கு இந்த குற்றங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு தண்டனை கொடுக்க வேண்டும் அதுவே அரசியல் நீதி என ஒட்டுமொத்த தமிழர்களின் சிந்தித்துக் கொண்டிருக்கையில் "வடகிழக்கு தமிழர்கள் அரசியல் அதிகாரத்தை எம்மிடமே கொடுத்துள்ளார்கள்" எனக் கூறுவோர் இனப்படுகொலையாளர்களுடன் சல்லாபம் புரிவது எவ்வாறு? இதற்காக உங்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள்?

தமிழர்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்று தமிழர்களின் அரசியலுக்கு துரோகம் செய்து கொண்டிருப்பவர்கள் உங்கள் நாடாளுமன்ற நட்பு அரசியலை நாடாளுமன்றத்தில் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் கொழும்பின் நட்சத்திர ஹோட்டல்களுக்கும் விடுதிகளுக்கும் மட்டுப்படுத்தி கொள்ளுங்கள் தமிழர்களின் தேச அரசியலுக்கு நீங்கள் ஏற்கனவே அடையாளப்படுத்தி விட்டோம் அதற்கான தீர்ப்பினை ஜனாதிபதி தேர்தலிலும் அதற்கு அடுத்து பொதுத் தேர்தலிலும் ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்துவோம்.

வடக்கிற்கு அரசியல் நச்சு சுற்றுலா மேற்கொண்டுள்ள பிரதான வேட்பாளர்கள் மூவரும் 13 அமுல்படுத்துவோம் எனக் கூறி உள்ளனர். ரணில் ஜனாதிபதி அதிகாரத்தில் நின்று அதற்கான அனுமதி தொடர்பில் நாடகமாடியவர். தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார "13 போதாது என்பதே நாம் அறிவோம். அதற்கு அப்பால் தொடர்ந்து பேசுவோம்" எனக் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் "சர்வதேச விளையாட்டரங்கை அன்பளிப்புகள் மூலம் உருவாக்கி தருவேன்" என சபதம் எடுத்து உள்ளார். தமிழர்கள் இவற்றை எல்லாம் கேட்கவில்லை என்று மீண்டும் கூறுகின்றோம் எமக்கு எதிரான கருத்தை எமக்கு இடையே மீண்டும் மீண்டும் கூறி சிதைக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் தெளிவாக கூறுகின்றோம்.

வடகிழக்கு தமிழர்கள் இனப்படுகொலைக்கு முகம் கொடுத்து அதன் வலிகளோடு சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை சர்வதேசத்திடம் முன்வைக்கையில் இவர்கள் 13 என்பதும் 13 பிளஸ் என்பதெல்லாம் தமிழர்களின் வாக்குகளை சிதறிப்பதறடிப்பதற்கே.

அது மட்டுமல்ல இந்தியாவை அமைதிபடுத்தி அவர்களின் கைக்கூலிகளை தமதாக்கி தமது அரசியலை தமிழ் மண்ணில் தொடரவே முயற்சிக்கின்றனர். நாம் கேட்கின்றோம் கூறும் 13 கருத்தினை உங்ளுடைய பொது மேடைகளிலும் நீங்கள் ஆதரவு தேடும் சிங்கள பௌத்த பிக்குகள் இடமும் பகிரங்கமாக கூறுங்கள்.

தமிழகத்தில் உள்ள அரசியல் கூத்தாடிகள் சலுகைகளுக்காகவும் பதவிகளுக்காகவும் உங்களை பின் தொடரலாம் ஆனால் தமிழ் மக்கள் சலுகைகளுக்கும் நிவாரணங்களுக்கும் பாட்டு வார்த்தைகளுக்கும் சோகம் போக மாட்டார் யுத்தம் பாதிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 15 வருட காலமாக எம்மை ஏமாற்றியது போதும் இம்முறை தேர்தல் தேர்தலில் சர்வதேசம் கண் திறக்க வேண்டும். அதற்கான அரசியல் உறுதியே மக்கள் சக்தி.

தமிழர்கள் மத்தியில் காணப்படும் அரசியல் புல்லுருவிகள் அகற்றப்பட வேண்டும்.தெற்கின் பேரினவாத இனப்படுகொலையாளர்களின் அரசியல் முகவர்கள் அரசியலில் இருந்து வரும் நீக்கப்பட்டு அவர்களின் முகாம்களும் தமிழரின் தேசத்திற்கு வெளியே தள்ள வேண்டும். இல்லையேல் ஜனாதிபதி தேர்தல் மட்டுமல்ல எதிர்காலமே முள்ளிவாய்க்காலாக அமையலாம்.

இதற்கு ஜனாதிபதி தேர்தலுக்கான பொது கட்டமைப்பு மட்டும் போதாது. அதற்கப்பால் மக்களை அரசியல் மயமாக்கி அரசியலில் தொடர்ந்து பயணிப்பதற்கான தெளிவான வழி வரைபடம் உருவாக்கி முன்வைக்க வேண்டும். உருவாக்குவாக்கிகள் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையும் ஏற்பட வேண்டும். கடந்த பதினைந்து வருட காலத்தில் அத்தகைய நம்பிக்கைகள் எல்லாம் சீரழிக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை.

  
   Bookmark and Share Seithy.com



வங்குரோத்தில் இருந்து மீண்டதாக அறிவிக்கவுள்ளார் ரணில்!
[Wednesday 2024-06-26 06:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.



ரணிலுக்கு ஆதரவளிப்பார் சம்பந்தன்!- வஜிர நம்பிக்கை.
[Wednesday 2024-06-26 06:00]

இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எடுப்பார் என்று நம்புகின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.



நீதிபதிகள் இருவரை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவுக்கு அழைக்க வேண்டும்!
[Wednesday 2024-06-26 06:00]

பாராளுமன்றத்தில் நான் தெரிவித்த கருத்தொன்று தொடர்பில் நீதிச்சேவை சங்கத்தின் தலைவர் மாவட்ட நீதிபதி ருவன் திஸாநாயக்க மற்றும் செயலாளர் இசுரு நெத்திகுமாரகே ஆகிய இருவரும் பகிரங்கமாக கருத்து தெரிவித்து ஒழுக்கயீனமாக செயற்பட்டுள்ளனர். இந்த இரண்டு நீதிபதிகளையும் பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள்தொடர்பான குழுவுக்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.



நீதித்துறையில் தலையிடக் கூடாது!
[Wednesday 2024-06-26 06:00]

பாராளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில், நீதித்துறை மற்றும் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் விவகாரங்களில் தலையிடுவதை பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.



யாழ்., கிளிநொச்சிக்கு பதில் மாவட்டச் செயலாளர்கள் நியமனம்!
[Wednesday 2024-06-26 06:00]

கொழும்பு, களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நான்கு புதிய மாவட்டச் செயலாளர்களை பிரதமர் தினேஷ் குணவர்தன நியமித்துள்ளார்.



இன்று பிற்பகலுக்குப் பின்னர் வடக்கில் மழை!
[Wednesday 2024-06-26 06:00]

இன்று பிற்பகலுக்கு பின்னர் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ. பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளரும் வானிலையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.



பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலா தகவல் மையம்! Top News
[Wednesday 2024-06-26 06:00]

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்சினால் செவ்வாய்க்கிழைமை திறந்து வைக்கப்பட்டது.



விஜயதாஸவுக்கு தடை நீடிப்பு!
[Wednesday 2024-06-26 06:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக ஏற்றுக்கொள்வதை தடுத்து விடுக்கப்பட்டுள்ள இடைக்கால தடை, ஜூலை 9ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.



சட்டமா அதிபரின் பதவிக்காலத்தை நீடித்தார் ஜனாதிபதி!
[Wednesday 2024-06-26 06:00]

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அனுமதியை வழங்கியுள்ளார். சட்டமா அதிபரின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.



மூதூரில் குளவி கொட்டி 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
[Wednesday 2024-06-26 06:00]

மூதூரிலுள்ள பாடசாலையொன்றில் மாலை நேர வகுப்புக்குச் சென்ற மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகினர். 30 மாணவர்கள் உடனடியாக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களே குளவி கொட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.



ரொறன்ரோ இடைத்தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி 590 வாக்குகளால் தோல்வி!
[Tuesday 2024-06-25 17:00]

ரொறன்ரோ சென்.போல்ஸ் நாடாளுமன்றத் தொகுதியில் நேற்று நடந்த இடைத் தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி வேட்பாளர் தோல்வியடைந்துள்ளார்.



ஜூலை 2ஆம் திகதி அவசரமாக கூட்டப்படுகிறது நாடாளுமன்றம்!
[Tuesday 2024-06-25 17:00]

எதிர்வரும் 2ஆம் திகதி பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு சபாநாயர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தல் விடுத்துள்ளார்.



இந்திய மீனவர்களை கைது செய்ய முயன்ற கடற்படை சிப்பாய் பலி- படகும் சேதம்.
[Tuesday 2024-06-25 17:00]

வடக்கு கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குறித்த இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது கடற்படை அதிகாரி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.



வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம்!
[Tuesday 2024-06-25 17:00]

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை 10மணிக்கு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.



முன்னர் ஐஸ் கிறீமுக்குள் தேரை, இப்போது மிக்சருக்குள் பொரிந்த பல்லி! Top News
[Tuesday 2024-06-25 17:00]

வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் அமைந்துள்ள கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட மிக்சரில் பல்லி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



அச்சுவேலியில் வீட்டை உடைத்து கொள்ளை!
[Tuesday 2024-06-25 17:00]

யாழ்ப்பாணம்- அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



இலங்கைக்கு 150 மில்லியன் டொலர்- உலக வங்கி ஒப்புதல்!
[Tuesday 2024-06-25 17:00]

இலங்கைக்கு 150 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இலங்கைக்கான ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



குடிசை மீது விழுந்தது பனைமரம்- சிறுவன் காயம்.
[Tuesday 2024-06-25 17:00]

திடீர் சூறைக்காற்றினால் காரைநகர் களபூமியில் உள்ள ஓலைக் குடிசை மீது பனை முறிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.



ஒசாலா ஹேரத்தும் களமிறங்குகிறார்!
[Tuesday 2024-06-25 17:00]

டயனா கமகேயிற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த சமூக செயற்பாட்டாளர் ஒசாலா ஹேரத் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். புதிய சுதந்திர முன்னணி கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



200 கிலோ போதைப்பொருளுடன் படகு சிக்கியது!
[Tuesday 2024-06-25 17:00]

மேற்கு கடற்பரப்பில் 200 கிலோ கிராம் போதைப்பொருளுடன் படகு ஒன்றை கைப்பற்றி இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். சுமார் 121 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையில் இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா