Untitled Document
June 28, 2024 [GMT]
புதன்கிழமை ஜனாதிபதியின் விசேட உரை!
[Monday 2024-06-24 05:00]


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  

ஜனாதிபதியின் அறிவிப்பால் இலங்கை மக்களுக்கு பல நிவாரணங்கள் கிடைக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



வெறும் கையுடன் திரும்புகிறது இலங்கை குழு!
[Friday 2024-06-28 06:00]

ரஷ்ய இராணுவத்தில் பணிக்கமர்த்தப்பட்டுள்ள இலங்கையர்கள் விவகாரத்தில் அவர்களின் பிரச்சனைகள் மற்றும் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக இருதரப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு செயற்குழுவை அமைப்பதற்கு இலங்கை முன்மொழிந்துள்ளது. இரு தரப்பினரும் இவ்விடயங்களில் ஈடுபாட்டுடன் செயற்பாடுகளைத் தொடர ஒப்புக் கொண்டுள்ளனர்.



கடன் மறுசீரமைப்பு உடன்பாட்டில் சிக்கல்கள்!
[Friday 2024-06-28 06:00]

சர்வதேச நாணய நிதிய திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து பல விடயங்கள் புதன்கிழமை வெளிப்படுத்தப்பட்டன. கடன் மறுசீரமைப்பு செயல்முறை நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றால், அதற்கு ஆதரவை வழங்குவோம். என்றாலும் நேற்றைய தினம் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.



வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இளைஞன் சடலமாக மீட்பு!
[Friday 2024-06-28 06:00]

வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



மாணவர்களின் கல்வியை பாழாக்காதீர்கள்!
[Friday 2024-06-28 06:00]

ஜனாதிபதியின் நற்செய்தியை திசை திருப்பவே மக்கள் விடுதலை முன்னணியின் ஆசிரியர் சங்கம் போராட்டம் நடத்தியது. நீதிமன்ற உத்தரவை மீறியதாலே பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டனர் என ஜனாதிபதியின் தொழில் உறவுகள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.



மூன்றாவது நாளாகத் தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு!
[Friday 2024-06-28 06:00]

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் புதன்கிழமை ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு, மூன்று நாட்களுக்கு தொடரும் என அறிவித்துள்ளனர்.



அநாதரவாக நின்ற கார் மீட்பு!
[Friday 2024-06-28 06:00]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 13ஆம் இலக்க நுழைவாயில் முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினை யாழ்ப்பாண பொலிஸார் மீட்டு சென்றுள்ளனர்.



நிதி மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியப் பிரஜைகள் கைது!
[Friday 2024-06-28 06:00]

இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தலங்கம, மாத்திவெல மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் இணையத்தின் மூலம் மோசடியில் ஈடுபட்ட நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



எதிர்க்கட்சிகளுக்கு கெட்ட செய்தி!
[Friday 2024-06-28 06:00]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நற்செய்தியுடன் தடைப்பட்டிருந்த நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் முன்னெடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அத்துடன் வங்குராேத்து நிலையிலிருந்த நாடு மீண்டும் சாதாரண நிலைமைக்கு மாறியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.



சீனாவுக்குப் பறந்தார் மஹிந்த!
[Thursday 2024-06-27 16:00]

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு தங்கியிருக்கும் போது சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.



கடன் மறுசீரமைப்பு உடன்பாடு- வரவேற்கிறது ஜப்பான்!
[Thursday 2024-06-27 16:00]

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கும் இந்தியா ஜப்பான் பிரான்ஸ் தலைமையிலான உத்தியோகபூர்வ கடன்வழங்குநர் குழுவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை ஜப்பான் வரவேற்றுள்ளது.



ஒரு படி முன்னேறியுள்ளது இலங்கை!
[Thursday 2024-06-27 16:00]

இலங்கை அதற்கு கடன்வழங்கிய முக்கிய நாடுகளுடன் கடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது.



ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும்! - ஜனாதிபதி எச்சரிக்கை.
[Thursday 2024-06-27 16:00]

நாட்டின் பிள்ளைகளின் கல்விக்காக ஆசிரியர்கள் காலை வேளையில் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது என்றும், ஏதேனும் காரணங்களுக்காக எதிர்வரும் காலங்களில் அவ்வாறு நடக்காமல் இருக்கமாயின் பாடசாலை மாணவர்களின் கல்வியை இழப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என்பதால், ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என கண்டி - அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் ஸ்ரீ வரகாகொட ஞானரதன தேரரை சந்தித்த போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.



விசர்நாய்க் கடிக்கு இலக்கான 4 வயது சிறுமி மரணம்!
[Thursday 2024-06-27 16:00]

விசர்நாய்க் கடிக்கு இலக்கான நான்கு வயது சிறுமியொருவர் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.



விடத்தல்தீவில் இறால் பண்ணைக்கு நிலம் - வர்த்தமானிக்கு தடை உத்தரவு!
[Thursday 2024-06-27 16:00]

வில்பத்துவை அண்மித்துள்ள விடத்தல்தீவு வனத்தின் ஒரு பகுதியினை இறால் வளர்ப்புக்கு ஒதுக்கி வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக அமுல்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.



மகாநாயக்கர்களிடம் ஆசி பெற்ற ஜனாதிபதி ரணில்!
[Thursday 2024-06-27 16:00]

கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார்.



மன்னார் காற்றாலை மின் திட்டத்தில் பாரிய மோசடி!
[Thursday 2024-06-27 16:00]

இந்தியாவின் அதானி நிறுவனம் முன்னெடுத்துள்ள மின் உற்பத்தி திட்டங்களில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.



உடுவிலில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள்!
[Thursday 2024-06-27 16:00]

யாழ்ப்பாணம் - உடுவில் தெற்கு பிள்ளையார் கோயில் அருகே உள்ள காணியில் மோட்டார் சைக்கிளொன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் புதன்கிழமை இரவு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



பால் புரைக்கேறி குழந்தை மரணம்!
[Thursday 2024-06-27 16:00]

யாழ்ப்பாணம், இணுவில் கிழக்கு பகுதியில், பிறந்து 40 நாட்களான பெண் குழந்தை பால் புரைக்கேறியதில் உயிரிழந்துள்ளது. இணுவில் பிரதேசத்தை சேர்ந்த தாயொருவர் நேற்று தனது மகளுக்கு தாய்ப்பால் கொடுத்து படுக்கையில் வைத்துள்ளார் . சிறிது நேரத்தின் பின்னர் குழந்தை அசைவற்றுக் கிடப்பதனை அவதானித்த பெற்றோர் மகளை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர் .



இலங்கை வென்று விட்டதாக அறிவித்தார் ஜனாதிபதி!
[Thursday 2024-06-27 05:00]

இலங்கையின் பிரதான உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் புதன்கிழமை காலை கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் பீஜிங்கில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டதோடு அது அதற்கான முறையான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.



சீனாவுடனும் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
[Thursday 2024-06-27 05:00]

இலங்கை நேற்று முற்பகல் பரிஸ் நகரில் தனது முக்கிய உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதுடன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி இணக்கப்பாட்டை எட்டியுள்ளது.


Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா