Untitled Document
June 30, 2024 [GMT]
ஒற்றையாட்சி ஒழிக்கப்படும் வரை முன்னணியின் புறக்கணிப்பு நிலைப்பாடு மாறாது!
[Thursday 2024-06-27 05:00]


தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவொரு தீர்வையும் நிராகரிப்பதுடன்,  தமிழர் தேசத்தை அங்கீகரித்து தமிழர்கள் ஒருபோதும் இழக்கமுடியாத சுயநிர்ணய உரிமையை, அனுபவிக்கக் கூடியதுமான ஒரு சமஸ்டித் தீர்வுக்கான ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என பொதுநலவாய அமைப்பின் தென் ஆசிய பகுதிக்குப் பொறுப்பதிகாரியான லெஸ்லி கிறேக்  அம்மையார் மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதுவர் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பா.உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவொரு தீர்வையும் நிராகரிப்பதுடன், தமிழர் தேசத்தை அங்கீகரித்து தமிழர்கள் ஒருபோதும் இழக்கமுடியாத சுயநிர்ணய உரிமையை, அனுபவிக்கக் கூடியதுமான ஒரு சமஸ்டித் தீர்வுக்கான ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என பொதுநலவாய அமைப்பின் தென் ஆசிய பகுதிக்குப் பொறுப்பதிகாரியான லெஸ்லி கிறேக் அம்மையார் மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதுவர் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பா.உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

  

யாழ்ப்பாணம் நகரிலுள்ள ஜெற்விங் விடுதியில் பொதுநலவாய அமைப்பின் தென் ஆசியப் பகுதிக்குப் பொறுப்பதிகாரியான Lesley Craig அம்மையார் மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதுவர் ஆகியோருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்குமிடையில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்வாறு வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்

கடந்த 75 வருடங்களாக இலங்கை அரசு கடைபிடித்துவரும் கொள்கைகளும், தீர்க்கப்படாமல் நீண்டு செல்லும் இனப்பிரச்சினையுமே இலங்கையின் இன்றைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்குப் பிரதான காரணங்களாகும். இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் பொருளாதாரத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது.

இலங்கையில் இனப்பிரசினைக்கான அடிப்படை காரணியாக அமைந்தது இலங்கையிலிருக்கும் 'ஒற்றையாட்சி' அரசியல் அமைப்பாகும். சிறிலங்கா அரசியலமைப்பில் 13 ம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு முற்றுமுழுதாக நடைமுறையில் இருக்கும்போதே தமிழ்த் தேசம் மீதான இலங்கை அரசின் இனவழிப்பு நடைபெற்றிருந்தது.

யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு புரிந்த இனவழிப்புக்குற்றங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை போன்றவற்றிற்கும் இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் தமிழர் தேசம் மீதான கட்டமைப்புசார் இனவழிப்பும் தீவிரமடைந்து மீண்டும் இனமுரண்பாடுகள் வலுவடைந்து செல்வதற்கும் அடிப்படைக் காரணம் இதே ஒற்றையாட்சி அரசியல் கட்டமைப்பேயாகும்.

13 ம் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து, அதன் அதிகாரங்கள் குறித்து சிறிலங்காவின் மீயுயர் நீதிமன்றுகளில் ஏறத்தாழ 30 வழக்குகள் விசாரிக்கப்பட்டு அதன் தீர்ப்புகள் அனைத்தும், அரச கட்டமைப்பு ஒற்றையாட்சியாக இருக்கும் வரைக்கும், அனைத்து அதிகாரங்களும் , கொழும்பை மையப்படுத்திய மத்திய அரசிடமே இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது, அதிகார பகிர்வுக்கு எதிராகவே நீதிமன்றங்கள் தீர்ப்புகளை அளித்திருக்கிறன.

உச்ச நீதிமன்று 13ம் திருத்த அதிகாரங்கள் குறித்து இதுவரைகாலமும் வழங்கிய தீர்ப்புக்களின் அடிப்படையிலும், 13 ம் திருத்தமானது, சிறிலங்காவின் சட்ட வரம்புகளின் பிரகாரம் அது 'முழுமையாக' அமுல்படுத்தப்பட்டே உள்ளது.

இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதற்கான வரைபைத் தயாரிக்கும் பணிகள் கடந்த 2016இல் ஆரம்பித்து - 2019 சனவரியில் நிறைவடைந்தது. அந்த வரைபானது தற்போதுள்ள ஒற்றையாட்சிக் கட்டமைப்பினை விடவும் மிகவும் இறுக்கமான ஒற்றையாட்சி கட்டமைப்புக்கான வரைபாகும். அரச கட்டமைப்பு ஒற்றையாட்சி அரசமைப்பாக இருக்கும் வரையில், அர்த்தமுள்ள சுயாட்சியை அனுபவிக்கவோ அல்லது சுயநிர்ணய உரிமையை உரியமுறையில் பிரயோகிக்கவோ முடியாது.

இந்த காரணிகளின் அடிப்படையிலே எமது அமைப்பானது, 13 ஆம் திருத்தினைத் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாகவேனும் கருத்திலெடுக்க கூடாதெனும் நிலைப்பாட்டினை ஆரம்பம் முதல் உறுதியாகவுள்ளது.

ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவொரு தீர்வையும் தமிழர்கள் நிராகரிப்பதுடன், தமிழர் தேசத்தை அங்கீகரித்து அதைப் பாதுகாக்கின்ற வகையிலானதும், தமிழர்கள் ஒருபோதும் இழக்கமுடியாத தங்களது சுயநிர்ணய உரிமையை, அனுபவிக்கக் கூடியதுமான ஒரு சமஷ்டி தீர்வுக்கான தன் ஆதரவை வெளிப்படுத்தவேண்டும் எனவும் எமது அமைப்பு பிரித்தானியாவை கோரிநிற்கின்றது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குள் கடந்த 12 ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் விவகாரத்தினை அங்கிருந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்

ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர் ஒருவரை இலங்கையின் பெயர்குறித்து வடக்கு கிழக்கு நிலைமைகள் தொடர்பான அறிக்கையிடலுக்காக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்

கடந்த 14 ஆண்டுகளாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதான அமர்வுகளில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீதான இடையீட்டு விவாதங்களின்போதான எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பு யார் என்பதுபற்றி இதுவரை வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதுடன் ஆனால் கடந்த 2024 மார்ச் 1 திகதி ஐநா மனித உரிமைகள் பேரவையில் மியன்மார் நாடு குறித்து பிரித்தானியா சமர்ப்பித்த அறிக்கையில் 6 தடவைகள் றோகின்யா இனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே எதிர்காலத்தில் ஐ.ந மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானங்களில் பாதிக்கப்பட்ட தரப்பு தமிழ்கள் என்பதனைத் தெளிவாக குறிப்பிட பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேவேளைப் போரினால் அழிவடைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் கடந்த 15 ஆண்டுகளாக இலங்கை அரசினால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தினை போரால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாகப் பிரகடனம் செய்யவும் இப்பிரதேச அபிவிருத்திக்கென சர்வதேச நிதி உதவியைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்

தமிழர் தாயகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள சிங்களமயமாக்கல்களையும் பௌத்த மயமாக்கல்களையும் தடுத்து நிறுத்த உடனடி அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டுமெனவும்.

கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் கைது செய்யப்படுவதும் சிறையிலடைக்கப்படுவதும் பொய் வழக்குகள் தொடர்வதும் இன்னமும் தொடர்கின்றது. இக்கொடிய சட்டத்தை நீக்கப் பிரித்தானிய அரசு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 15 – 29 வருடங்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் 11 பேரும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும். என்ற விடயங்கள் வலியுறுத்தப்பட்டது.

அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கேட்கப்பட்டபோது அதற்கு மாறி மாறி ஆட்சிப்பீடமேறும் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் கட்டமைப்புசார் இனவழிப்பையும் தீவிரப்படுத்திவரும் நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பதென எமது அரசியல் இயக்கம் தீர்மானித்துள்ளது என்பதனையும் ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்படும் நிலையிலேயே முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் என்பதனையும் தெளிவுபடுத்தப்பட்டடது என அவர் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



தேர்தலுக்கு தயாராகுமாறு அரச செயலகங்களுக்கு அறிவிப்பு!
[Sunday 2024-06-30 17:00]

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அரச நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமான அறிவிப்பினை விடுத்துள்ளது.



மொட்டுவின் முடிவுக்காக காத்திருக்கும் தம்மிக்க பெரேரா!
[Sunday 2024-06-30 17:00]

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முடிவுக்காகவே காத்துக் கொண்டிருக்கின்றேன் என்று தொழிலதிபரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.



போதைப்பொருள் வர்த்தகத்திற்கு உதவிய கடற்படை புலனாய்வு அதிகாரிகள் கைது!
[Sunday 2024-06-30 17:00]

பாரிய போதைப்பொருள் வர்த்தகத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் கடற்படை அதிகாரிகள் இருவரை கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட உள்ளக விசாரணையின் பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.



இன்று இரவு எரிபொருள் விலை திருத்தம்!
[Sunday 2024-06-30 17:00]

எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மாதாந்திர எரிபொருள் திருத்தத்தின் படி இந்த திருத்தம் இடம்பெறும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



வான் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி!
[Sunday 2024-06-30 17:00]

மோட்டார் சைக்கிள் - வான் விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பதுளை வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.



வாக்கெடுப்பில் பங்கேற்பது குறித்து பின்னரே முடிவு!
[Sunday 2024-06-30 17:00]

கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் குறித்த விவாதத்தில் பங்கேற்போம் என்று அறிவித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வாக்கெடுப்பு தொடர்பில் இறுதி நேரத்திலேயே தீர்மானிக்கும் என்றும் அறிவித்துள்ளது.



மிளகாய் ஐஸ்கிரீம் - கொஞ்சம் காரம், கொஞ்சம் இனிப்பு!
[Sunday 2024-06-30 17:00]

நாட்டில் முதன்முறையாக மிளகாயில் இருந்து ஐஸ்கிரீமை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள விவசாய துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி பங்களிப்பின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.



கடலில் மர்ம திரவம் அருந்திய ஐந்தாவது மீனவரும் மரணம்!
[Sunday 2024-06-30 17:00]

சர்வதேச கடலில் ஆபத்தான நிலையில் இருந்த 6 மீனவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய மீனவரை காப்பாற்ற கடற்படை வைத்தியர் உட்பட கடற்படை குழு முயற்சித்து வருவதாக கடற்படை பேச்சாளர் ​கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.



இரணைமடுக் குளத்தில் காணாமல்போன சிறுவன் சடலமாக மீட்பு!
[Sunday 2024-06-30 17:00]

கிளிநொச்சி - இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 14 வயதுடைய செல்வரத்தினம் றுசாந்தன் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது!
[Sunday 2024-06-30 16:00]

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சாவினை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஒருவரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.



தமிழ் தேசிய பேரவையை உருவாக்க முடிவு!
[Sunday 2024-06-30 05:00]

தமிழ் தேசிய கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச் சபையும் இணைந்து தமிழ் தேசிய பேரவை என்ற பொது கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக தமிழ் மக்கள் பொதுச்சபை உறுப்பினர் நிலாந்தன் தெரிவித்தார்.



சுதந்திரக் கட்சியின் புதிய கூட்டணியில் வியாழேந்திரன்! விமல் கட்சியும் உடைந்தது.
[Sunday 2024-06-30 05:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியும் இணைந்து முன்னெடுக்கும் பொதுக்கூட்டத்தொடரின் இரண்டாவது பொதுக்கூட்டம் சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய நகரில், பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.



பட்டப்பகலில் வாள்களுடன் நடமாட முடியுமென்றால் பொலிசார் என்ன செய்கின்றனர்?
[Sunday 2024-06-30 05:00]

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நடமாட முடியும் என்றால் யாழ்ப்பாணத்தில் சிவில் நடவடிக்கைகள்,பொலிஸார், இராணுவம், கடற்படை, விமானப்படை செயற்பாடுகள் எவ்வாறு இருக்கிறது என்பதை பார்க்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.



திருகோணமலையில் காணாமல்போன இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி மீட்பு!
[Sunday 2024-06-30 05:00]

இஸ்ரேல் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் சுற்றுலா பயணி 3 நாட்களுக்கு முன்பு திருகோணமலையில் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், அப்பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.



இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு!
[Sunday 2024-06-30 05:00]

ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



இந்தியர்களை அடுத்து சீனர்கள் - தெற்கில் தொடர்கிறது வேட்டை!
[Sunday 2024-06-30 05:00]

ஒன்லைன் மூலம் மோசடி செய்த 30 சீன பிரஜைகளை நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.



வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர்!
[Saturday 2024-06-29 17:00]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர். எனவே தமிழ் பொது வேட்பாளரை இறுக பற்றி பிடித்து இந்த மண்ணில் தமிழ் இனம் யார் என்பதை காட்டும் சந்தர்ப்பம் இதுவே என தமிழரசு கட்சின்பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.



மாங்குளம் விபத்தில் படுகாயமடைந்தவர் மரணம்!
[Saturday 2024-06-29 17:00]

முல்லைத்தீவு மாங்குளத்துக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 48 வயதான கந்தசாமி கருணாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.



மடு விபத்தில் இளைஞன் பலி!
[Saturday 2024-06-29 17:00]

மன்னா் - மடு இரண்டாம் கட்டைப் பகுதியில் இன்று அதிகாலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் காயங்களுடன் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.



ரஷ்ய பிரஜைகளாக மாறிய இலங்கை கூலிப்படையினர்!
[Saturday 2024-06-29 17:00]

உக்ரைனிற்கு எதிராக போரிடும் இலங்கையை சேர்ந்த கூலிப்படையினரில் ரஸ்ய பிரஜைகளாக மாறியுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா