Untitled Document
July 5, 2024 [GMT]
அமைதியாக ஒன்றுகூடும் உரிமையைப் பாதிக்கும் சட்டங்கள், கட்டுப்பாடுகள்!
[Wednesday 2024-07-03 05:00]


2023 ஜனவரி முதல் 2024 ஜனவரி வரையான ஒரு வருடகாலத்தில் இலங்கை உள்ளடங்கலாக பல்வேறு நாடுகளில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையைப் பாதிக்கக்கூடிய வகையிலும், அதனை மட்டுப்படுத்தக்கூடிய விதத்திலும் சட்டங்களும், வழிகாட்டல்களும் உருவாக்கப்பட்டிருப்பதாக அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் க்ளெமென்ற் நியலெற்றொஸி வோல் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023 ஜனவரி முதல் 2024 ஜனவரி வரையான ஒரு வருடகாலத்தில் இலங்கை உள்ளடங்கலாக பல்வேறு நாடுகளில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையைப் பாதிக்கக்கூடிய வகையிலும், அதனை மட்டுப்படுத்தக்கூடிய விதத்திலும் சட்டங்களும், வழிகாட்டல்களும் உருவாக்கப்பட்டிருப்பதாக அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் க்ளெமென்ற் நியலெற்றொஸி வோல் சுட்டிக்காட்டியுள்ளார்.

  

கடந்த மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடர் அமர்வுகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

அதன்படி இக்கூட்டத்தொடரில் அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரத்துக்கான உரிமை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் க்ளெமென்ற் நியலெற்றொஸி வோலினால் உலகளாவிய ரீதியில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறைகள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய 21 பக்க அறிக்கை கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டது.

உலகளாவிய ரீதியில் சிவில் சமூக இடைவெளி மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களையும், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களையும் தடுப்பதற்கு அவசியமான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குச் சகல தரப்பினரையும் ஒன்றிணையுமாறு க்ளெமென்ற் நியலெற்றொஸி வோல் அவ்வறிக்கையில் அறைகூவல் விடுத்துள்ளார்.

அதேபோன்று சர்வதேச மற்றும் பிராந்திய மனித உரிமைகள் சட்டங்களின் கீழும், பெரும்பாலான நாடுகளின் அரசியலமைப்புக்களின் ஊடாகவும் அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரத்துக்கான உரிமை பாதுகாக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இவ்வுரிமையானது ஜனநாயகத்தின் முக்கிய கூறாகவும், சிவில், அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார உரிமைகளை வலுப்படுத்துவதற்கான உந்துசக்தியாகவும் திகழ்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை 2023 ஜனவரி முதல் 2024 ஜனவரி வரையான 12 மாதகாலப்பகுதியில் அங்கோலா, பொஸ்னியா, ஹேர்ஸெகோவினா, சீனா, கிர்கிஸ்தான், நிகரகுவா, ரஷ்யா, இலங்கை, சுவீடன், வெனிசூலா மற்றும் சிம்பாவே ஆகிய நாடுகளில் அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரத்துக்கான உரிமையை பாதிக்கக்கூடிய வகையிலும், அதனை மட்டுப்படுத்தக்கூடிய விதத்திலும் முன்மொழியப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் தொடர்பில் தனியாகவோ அல்லது கூட்டாகவோ 26 அறிக்கைகள் மற்றும் கடிதங்களை வெளியிட்டிருப்பதாகவும் விசேட அறிக்கையாளர் க்ளெமென்ற் நியலெற்றொஸி வோல் குறிப்பிட்டுள்ளார்.

'உலகளாவிய ரீதியில் அநேக நாடுகள் ஒன்றுகூடுவதற்கான உரிமையை மட்டுப்படுத்தக்கூடிய சட்ட உருவாக்கங்களையும், வரையறை விதிப்புக்களையும் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய மட்டுப்பாடுகள் அதற்குரிய பிரத்தியேக சட்டங்கள் வடிவிலோ அல்லது குற்றவியல் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் உள்ளடங்கலாக நடைமுறையில் உள்ள சட்டங்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் மூலமோ விதிக்கப்படுகின்றன' என தனது விரிவான அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள க்ளெமென்ற் நியலெற்றொஸி வோல், உலகளாவிய ரீதியில் அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரத்துக்கான உரிமையை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு அரசுகளும், ஏனைய தொடர்புடைய தரப்பினரும் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார்.

குறிப்பாக சிவில் இடைவெளி மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களைப் பாதுகாப்பதானது தற்கால சவால்களைக் கையாள்வதில் சிவில் சமூகத்தின் வகிபாகத்தை மேம்படுத்துவதற்கு இன்றியமையாததாகும் எனவும், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் உலகநாடுகளின் அரசாங்கங்கள் முன்னெடுக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழ் பெண் உமா குமரன் வெற்றி!
[Friday 2024-07-05 16:00]

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழ் பெண் உமா குமரன் வெற்றிபெற்றுள்ளார். ஸ்டிரபோர்ட் அன்ட் போவின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சென்றது சம்பந்தனின் உடல்!
[Friday 2024-07-05 16:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றையதினம் விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.



ஜனாதிபதியின் பதவிக்காலம் - அமைச்சரவையில் புதிய சட்டமூலம் குறித்து ஆலோசனை!
[Friday 2024-07-05 16:00]

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து 19 வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் குறித்து அமைச்சரவையில் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.



லொறி கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி!
[Friday 2024-07-05 16:00]

பதுளை - சொரனாதோட்டை வீதியில் வெலிஹித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.



நியமனங்களை வழங்கக்கூடாது - மாகாண ஆளுநர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு உத்தரவு!
[Friday 2024-07-05 16:00]

மாகாண ஆளுநர்களினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நியமனங்களை உடனடியாக இரத்துச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.



சுதந்திரக் கட்சி பொதுச்செயலாளராக வீதியில் பொறுப்பேற்றார் தயாசிறி!
[Friday 2024-07-05 16:00]

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை தான் வகிப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியின் தலைமையகத்துக்கு முன்பாக பதவியேற்றார்.



வரி இலக்கம் பெற்றவர்கள் அனைவரும் வரி செலுத்த தேவையில்லை!
[Friday 2024-07-05 16:00]

வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் இருந்து கடிதங்கள் அல்லது குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.



கெஹலிய குடும்பத்தினரின் நிலையான வங்கி வைப்புகள் முடக்கம்!
[Friday 2024-07-05 16:00]

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 6 குடும்ப உறுப்பினர்களின் நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளை 3 மாதங்களுக்கு முடக்கி வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.



முகநூலில் ஆசிரியருக்கு அவதூறு பரப்பிய கிராம அலுவலர் கைது!
[Friday 2024-07-05 16:00]

வவுனியாவில் ஆசிரியர் ஒருவருக்கு போலி முகநூலில் அவதூறை ஏற்படுத்தி தொலைபேசியில் மிரட்டல் விடுத்த கிராம அலுவலர் ஒருவர் கைதாகி நீதிமன்றத்தால் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.



பெண் பொலிஸ் குளிப்பதை படம் பிடித்த ஆண் பொலிஸ் கைது!
[Friday 2024-07-05 16:00]

பெண் பொலிஸார் தங்குமிட விடுதி குளியறையில் குளித்து கொண்டிருந்த பெண் பொலிஸ் ஒருவரை மறைந்திருந்து படம் பிடித்த ஆண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



ஜனாதிபதியின் பதவிக்காலம் - 5 நீதியரசர்கள் குழு திங்களன்று ஆராயும்!
[Friday 2024-07-05 06:00]

தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் தெளிவூட்டுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை திங்கட்கிழமை ஆராய்வதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.



13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்!
[Friday 2024-07-05 06:00]

தேசிய ஒருமைப்பாட்டுக்கான நமது பொறுப்பைக் கருத்திற்கொள்கையில் சம்பந்தன் போன்ற உன்னத, அகிம்சைவழி தலைவரின் மறைவு நாட்டுக்குப் பேரிழப்பாகும். இவ்வேளையில் நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வை எமது எதிர்கால சந்ததியினரிடம் நாம் ஒப்படைக்கக்கூடாது. மாறாக நாட்டின் அடிப்படை சட்டத்துக்கு மதிப்பளித்து, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்தவேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.



இறுதிச்சடங்கிற்கு அண்ணாமலை வருவார் - ஸ்டாலின் வருவதற்கும் வாய்ப்பு!
[Friday 2024-07-05 06:00]

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது.



தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை!
[Friday 2024-07-05 06:00]

ஜனாதிபதி தேர்தலையோ அல்லது வேறு எந்த தேர்தலையோ ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.



சம்பந்தனின் இறுதிச்சடங்கிற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து போக்குவரத்து வசதி!
[Friday 2024-07-05 06:00]

இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்வதற்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட இறுதி அஞ்சலி நிறைவின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிலையில் அவர் இதனை தெரிவித்தார்.



கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு - நேற்று ஆரம்பம்.
[Friday 2024-07-05 06:00]

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியானது நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



தமிழ் பொது வேட்பாளர் களமிறங்கினாலும் எனது பயணம் தடைப்படாது! - என்கிறார் சஜித்
[Friday 2024-07-05 06:00]

தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கும் உரிமை எந்தவொரு பிரஜைக்கும் உண்டு. அந்த வகையில் தமிழ் பொது வேட்பாளர் மாத்திரமின்றி, யார் தேர்தலில் களமிறங்கினாலும் அது எனது பயணத்துக்கு தடையாக அமையாது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



ஒரு கோடி ரூபா செலவில் ஒன்றரை மணிநேர கூட்டம்!
[Friday 2024-07-05 06:00]

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அவசரக் கூட்டத்தை நடத்துவதற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக பொறுப்பேற்றார் பிரதீபன்!
[Friday 2024-07-05 06:00]

யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபராக இருந்த மருதலிங்கம் பிரதீபன் நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.



குடத்தனையில் இராணுவம், பொலிஸ் சுற்றிவளைப்பு! - 6 பேர் கைது.
[Friday 2024-07-05 06:00]

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனையில் நேற்று அதிகாலையிலிருந்து மருதங்கேணி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மருதங்கேணி பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா