Untitled Document
October 5, 2024 [GMT]
ஜனாதிபதி தேர்தலை தடுக்கும் மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுக்கள் தாக்கல்!
[Saturday 2024-07-06 05:00]

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல்  தள்ளுபடி செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில்  இடையீட்டு மனுக்கள் சில தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுக்கள் சில தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

  

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சோசலிச இளைஞர் சங்கத்தின் எரங்க குணசேகர ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட குழுவினரும் இந்த இடையீட்டு மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் 03வது அத்தியாயத்தின் ஊடாக அரசியலமைப்பின் 30(2)வது சரத்து திருத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய, ஜனாதிபதியின் பதவிக்காலம் 06 வருடங்களில் இருந்து 05 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, அரசியலமைப்பின் படி, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் இந்த வருடத்துடன் முடிவடைவதால், இந்த வருடத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அவசியமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி உரிய மனுவை சமர்ப்பிக்கும் போது தவறான விடயங்களை நீதிமன்றத்தில் முன்வைத்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த மனுதாரர் முயற்சித்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மனுதாரர் தனது கோரிக்கையை நியாயப்படுத்த உதவும் எந்த சமர்ப்பணங்களையும் முன்வைக்கத் தவறிவிட்டார் என்றும் இடையீட்டு மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனடிப்படையில், இந்த மனு தொடர்பாக தலையிட்டு சமர்ப்பணங்களை முன்வைக்க தமக்கு அனுமதி வழங்குமாறும், தாங்கள் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்திற்கொண்டு உரிய மனுவை தள்ளுபடி செய்யுமாறும் இடையீட்டு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடையும் திகதி குறித்து உயர் நீதிமன்றம் விளக்கம் அளிக்கும் வரை, தற்போது திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு தொழிலதிபரான சி.டி.லெனவ என்பவரால் இந்த மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



தமிழரசில் போட்டியிட பெண்கள் தயக்கம் - வேட்பாளர் பட்டியலை இறுதி முடியாமல் நெருக்கடி! Top News
[Saturday 2024-10-05 17:00]

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவது கடினமாக உள்ளதுடன் நாளையும் வேட்பாளர் தெரிவு முடிவு பெறாது என தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.



அரச புலனாய்வு பணிப்பாளர் பதவியில் இருந்து தூக்கப்பட்டார் சுரேஸ் சாலே!
[Saturday 2024-10-05 17:00]

அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே ஓய்வு பெற்றதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.



யாழ். மாவட்ட “சைக்கிள்” வேட்பாளர்கள் கையெழுத்து! Top News
[Saturday 2024-10-05 17:00]

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவில் கையொப்பமிட்டனர்.



122 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின!
[Saturday 2024-10-05 17:00]

நேற்று வரை 122 சுயேச்சைக் குழுக்கள் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. நேற்றைய தினத்தில் மாத்திரம் 36 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



நாங்களும் தனித்துப் போட்டி - வரிசை கட்டுகிறது ஈரோஸ்!
[Saturday 2024-10-05 17:00]

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி வடகிழக்கில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயற்குழு கூட்டம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.



குத்துவிளக்கு கூட்டணியும் வவுனியாவில் ஆலோசனை!
[Saturday 2024-10-05 17:00]

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உயர்மட்ட குழுக் கூட்டம் வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி முதலான முக்கிஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.



யாழ்ப்பாணத்தில் உண்ணிக் காய்ச்சலினால் யுவதி மரணம்!
[Saturday 2024-10-05 17:00]

உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதியொருவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மானிப்பாயைச் சேர்ந்த 19 வயது இளம் யுவதியே உயிரிழந்தவர் ஆவார்.



இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது!
[Saturday 2024-10-05 17:00]

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமாக இலங்கைப் நிலப்பரப்பு ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.



அரசியல் முகமூடி கொள்ளையர்களிடம் தப்பித்தால் மட்டுமே எமது அரசியல் கௌரவத்தை தற்காத்துக் கொள்ளலாம்!
[Saturday 2024-10-05 16:00]

அரசியல் தீர்மானம் எடுத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அரசியல் கைதிகளுக்கும் தமிழ் மக்களுக்குமான அரசியல் கௌரவமாகும். ஆனால் அதனை செய்ய எள்ளளவும் துணிய மாட்டார்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.



ஜெய்சங்கர் வருகையால் 50 இந்திய மீனவர்கள் விடுதலை!
[Saturday 2024-10-05 16:00]

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 50 பேர் தமிழக மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.



தென்னிலங்கை தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலையாகும்!
[Saturday 2024-10-05 06:00]

ஊழல் எதிர்ப்பு, கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகும் என யாழ். பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.



13 ஐ நடைமுறைப்படுத்தக் கோரினார் ஜெய்சங்கர்!
[Saturday 2024-10-05 06:00]

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை ஜனாபதியுடன் இலங்கையின் அரசியலமைப்பின் 13 வது திருத்தம், மீனவர்கள் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.



வன்னியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் சீலாரத்ன தேரர்!
[Saturday 2024-10-05 06:00]

வன்னிமாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதலாவது வேட்பு மனுவினை பத்தரமுல்லே சீலரத்தினதேரர் தாக்கல் செய்தார். எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஜனசெத பெரமுன தனது வேட்புமனுவினை வெள்ளிக்கிழமை தாக்கல்செய்துள்ளது.



ஹரிணி, ரணில், சஜித்தையும் சந்தித்தார் ஜெய்சங்கர்! Top News
[Saturday 2024-10-05 06:00]

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் நேற்று பிற்பகல் உயர் மட்ட அதிகாரிகள் பலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.



சாள்சை மீண்டும் இழுத்து வந்தார் சுமந்திரன்! - வன்னியில் தமிழரசின் வங்குரோத்து நிலை.
[Saturday 2024-10-05 06:00]

பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் ஆகியோர் போட்டியிடுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.



நீர்வேலியில் மதுபானசாலை திறக்கப்படுவதற்கு எதிராக போராட்டம்! Top News
[Saturday 2024-10-05 06:00]

யாழ்ப்பாண நீர்வேலிப்பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலையினை எதிர்த்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.



மாமுனையில் விபத்து - இருவர் படுகாயம்!
[Saturday 2024-10-05 06:00]

வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்தனர். மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமுனை இறக்கச் சந்தியில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு!
[Saturday 2024-10-05 06:00]

பொதுமக்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மீளப்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. துப்பாக்கிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவை என்ன என்பதை ஆராய்ந்த பின்னர் மீண்டும் உரிமையாளர்களுக்கு கையளிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.



சுதந்திரக் கட்சியின் நிமல் அணி சிலிண்டரில் போட்டி!
[Saturday 2024-10-05 06:00]

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா தரப்பினர் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளனர். இன்று பிற்பகல் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்தார்.



கொழும்பு வந்தார் ஜெய்சங்கர்! Top News
[Friday 2024-10-04 16:00]

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளார். ஜெய்சங்கர் இலங்கை ஜனாதிபதி உட்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.


Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா