Untitled Document
October 5, 2024 [GMT]
தொழிற்கட்சியின் வெற்றி ஈழத்தமிழர் நலனில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்!
[Sunday 2024-07-07 05:00]


பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிற்கட்சியின் அமோக வெற்றி ஈழத்தமிழர் நலனில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், எதிர்வருங்காலங்களில் இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் தொடர்பான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன முன்னேற்றகரமான மட்டத்தை நோக்கி நகரும் எனவும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிற்கட்சியின் அமோக வெற்றி ஈழத்தமிழர் நலனில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், எதிர்வருங்காலங்களில் இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் தொடர்பான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன முன்னேற்றகரமான மட்டத்தை நோக்கி நகரும் எனவும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

  

சர்வதேச மட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பிரிட்டன் பொதுத்தேர்தலில் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிற்கட்சி அமோக வெற்றியீட்டியிருக்கும் நிலையில், இவ்வெற்றி இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதிலும் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த பல வருடங்களாக தொழிற்கட்சி உறுப்பினர்கள் பலர் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவேண்டும் எனவும், நீதி நிலைநாட்டப்படவேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதுடன் அதனை முன்னிறுத்தி சர்வதேச தளங்களில் அழுத்தங்களையும் பிரயோகித்துவருகின்றனர். அதுமாத்திரமன்றி இம்முறை பொதுத்தேர்தலில் பிரிட்டன்வாழ் ஈழத்தமிழ் பெண்ணான உமா குமாரனும் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருக்கின்றார்.

இவ்வாறானதொரு பின்னணியில் 14 வருடங்களுக்குப் பின்னர் பிரிட்டனில் நிகழ்ந்திருக்கும் இந்த ஆட்சிமாற்றம் ஈழத்தமிழர் நலனில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடுமென எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அதன்படி இதுபற்றிக் கருத்து வெளியிட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், பிரிட்டனில் தொழிற்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியமையை தமிழர்கள் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்தார். அத்தோடு கடந்த காலங்களில் தான் தொழிற்கட்சி உறுப்பினர்களைச் சந்தித்துப்பேசிய வேளைகளில் அவர்கள் தமிழ்மக்களின் பிரச்சினைகள் குறித்து நன்கறிந்திருந்ததாகவும், பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

'ஆங்கிலேயர்கள் இலங்கையைவிட்டு வெளியேறியபோது, வடக்கில் பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழர்களைக் கருத்திற்கொண்டு நியாயமானதொரு அதிகாரப்பகிர்வை வழங்காததன் காரணமாக, இவ்விடயத்தில் அவர்கள் பொறுப்புக்கூறவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். எனவே எதிர்வருங்காலங்களில் தொழிற்கட்சி தலைமையிலான அரசாங்கம் தமிழ்மக்களின் நலனை முன்னிறுத்தி குரலெழுப்பும் என நம்புகின்றேன். அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரிலும், அதன் பின்னரும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதை இலக்காகக்கொண்ட செயற்பாடுகளை அவர்கள் முனைப்புடன் முன்னெடுக்கவேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை பிரிட்டனின் புதிய பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் கெய்ர் ஸ்டார்மருக்கு தமிழ் மக்கள் சார்பில் வாழ்த்துத்தெரிவித்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், தொழிற்கட்சி உறுப்பினர்கள் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் சார்ந்து அக்கறையுடன் கருத்துக்களை வெளியிட்டுவந்திருப்பதன் காரணமாக, இனப்படுகொலை தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் நீதி என்பன எதிர்வருங்காலங்களில் முன்னேற்றகரமான நிலையை நோக்கி நகரும் என எதிர்பார்ப்பு வெளியிட்டார்.

அத்தோடு கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் பிரித்தானிய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தபோது அரசியல் தீர்வு குறித்த அவரது கேள்விக்கு, 'சமஷ்டி அடிப்படையிலான நியாயமான தீர்வு அவசியம்' எனத் தான் பதிலளித்ததாகவும், அதனை அவர் கரிசனையுடன் கேட்டுக்கொண்டதாகவும் சிறிதரன் தெரிவித்தார். ஆகவே எதிர்வருங்காலங்களில் சர்வதேச விசாரணையை ஊக்குவிக்கும் வகையிலும், இலங்கை தொடர்பான தீர்மானத்தைப் பாதுகாப்புச்சபைக்குக் கொண்டுசெல்லும் விதமாகவும் பிரிட்டன் நகர்வுகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் தொழிற்கட்சியைப் போன்றே கொன்சவேட்டிவ் கட்சியும் கடந்த காலங்களில் தமிழர் விவகாரத்தில் முனைப்புடன் செயலாற்றி வந்திருப்பதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கொண்டுவருவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டிய இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், எனவே தொழிற்கட்சியின் வெற்றியினால் மாற்றமொன்று நிகழுமெனில், அது தமிழர்களுக்கு மேலும் சிறந்த மாற்றமாகவே அமையும் என நம்பிக்கை வெளியிட்டார்.

  
   Bookmark and Share Seithy.com



தமிழரசில் போட்டியிட பெண்கள் தயக்கம் - வேட்பாளர் பட்டியலை இறுதி முடியாமல் நெருக்கடி! Top News
[Saturday 2024-10-05 17:00]

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவது கடினமாக உள்ளதுடன் நாளையும் வேட்பாளர் தெரிவு முடிவு பெறாது என தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.



அரச புலனாய்வு பணிப்பாளர் பதவியில் இருந்து தூக்கப்பட்டார் சுரேஸ் சாலே!
[Saturday 2024-10-05 17:00]

அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே ஓய்வு பெற்றதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.



யாழ். மாவட்ட “சைக்கிள்” வேட்பாளர்கள் கையெழுத்து! Top News
[Saturday 2024-10-05 17:00]

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவில் கையொப்பமிட்டனர்.



122 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின!
[Saturday 2024-10-05 17:00]

நேற்று வரை 122 சுயேச்சைக் குழுக்கள் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. நேற்றைய தினத்தில் மாத்திரம் 36 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



நாங்களும் தனித்துப் போட்டி - வரிசை கட்டுகிறது ஈரோஸ்!
[Saturday 2024-10-05 17:00]

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி வடகிழக்கில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயற்குழு கூட்டம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.



குத்துவிளக்கு கூட்டணியும் வவுனியாவில் ஆலோசனை!
[Saturday 2024-10-05 17:00]

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உயர்மட்ட குழுக் கூட்டம் வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி முதலான முக்கிஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.



யாழ்ப்பாணத்தில் உண்ணிக் காய்ச்சலினால் யுவதி மரணம்!
[Saturday 2024-10-05 17:00]

உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதியொருவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மானிப்பாயைச் சேர்ந்த 19 வயது இளம் யுவதியே உயிரிழந்தவர் ஆவார்.



இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது!
[Saturday 2024-10-05 17:00]

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமாக இலங்கைப் நிலப்பரப்பு ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.



அரசியல் முகமூடி கொள்ளையர்களிடம் தப்பித்தால் மட்டுமே எமது அரசியல் கௌரவத்தை தற்காத்துக் கொள்ளலாம்!
[Saturday 2024-10-05 16:00]

அரசியல் தீர்மானம் எடுத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அரசியல் கைதிகளுக்கும் தமிழ் மக்களுக்குமான அரசியல் கௌரவமாகும். ஆனால் அதனை செய்ய எள்ளளவும் துணிய மாட்டார்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.



ஜெய்சங்கர் வருகையால் 50 இந்திய மீனவர்கள் விடுதலை!
[Saturday 2024-10-05 16:00]

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 50 பேர் தமிழக மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.



தென்னிலங்கை தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலையாகும்!
[Saturday 2024-10-05 06:00]

ஊழல் எதிர்ப்பு, கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகும் என யாழ். பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.



13 ஐ நடைமுறைப்படுத்தக் கோரினார் ஜெய்சங்கர்!
[Saturday 2024-10-05 06:00]

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை ஜனாபதியுடன் இலங்கையின் அரசியலமைப்பின் 13 வது திருத்தம், மீனவர்கள் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.



வன்னியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் சீலாரத்ன தேரர்!
[Saturday 2024-10-05 06:00]

வன்னிமாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதலாவது வேட்பு மனுவினை பத்தரமுல்லே சீலரத்தினதேரர் தாக்கல் செய்தார். எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஜனசெத பெரமுன தனது வேட்புமனுவினை வெள்ளிக்கிழமை தாக்கல்செய்துள்ளது.



ஹரிணி, ரணில், சஜித்தையும் சந்தித்தார் ஜெய்சங்கர்! Top News
[Saturday 2024-10-05 06:00]

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் நேற்று பிற்பகல் உயர் மட்ட அதிகாரிகள் பலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.



சாள்சை மீண்டும் இழுத்து வந்தார் சுமந்திரன்! - வன்னியில் தமிழரசின் வங்குரோத்து நிலை.
[Saturday 2024-10-05 06:00]

பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் ஆகியோர் போட்டியிடுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.



நீர்வேலியில் மதுபானசாலை திறக்கப்படுவதற்கு எதிராக போராட்டம்! Top News
[Saturday 2024-10-05 06:00]

யாழ்ப்பாண நீர்வேலிப்பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலையினை எதிர்த்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.



மாமுனையில் விபத்து - இருவர் படுகாயம்!
[Saturday 2024-10-05 06:00]

வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்தனர். மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமுனை இறக்கச் சந்தியில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு!
[Saturday 2024-10-05 06:00]

பொதுமக்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மீளப்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. துப்பாக்கிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவை என்ன என்பதை ஆராய்ந்த பின்னர் மீண்டும் உரிமையாளர்களுக்கு கையளிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.



சுதந்திரக் கட்சியின் நிமல் அணி சிலிண்டரில் போட்டி!
[Saturday 2024-10-05 06:00]

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா தரப்பினர் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளனர். இன்று பிற்பகல் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்தார்.



கொழும்பு வந்தார் ஜெய்சங்கர்! Top News
[Friday 2024-10-04 16:00]

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளார். ஜெய்சங்கர் இலங்கை ஜனாதிபதி உட்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.


Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா